!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, January 28, 2011

சிறைகளில் செல்போன் - அபத்தமான தண்டனை - part 2



சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டால் சிறை அதிகாரிகள் பெரும்பாலும் அதற்காக வழக்கு போட விரும்புவதில்லை. மிக அபூர்வமாகத்தான் வழக்கு பதிவு செய்யப்படும். காரணம். இவ்வளவு கடுமையான கண்காணிப்பையும் மீறி எப்படி செல்போன் உள்ளே வருகிறது என்று மக்கள் கேள்வி கேட்ப்பார்கள். மக்கள் கேட்டுவிட்டு போகட்டும். அவர்கள் கருத்தையெல்லாம் இப்போது யாரும் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், நீதிபதிகள் நேரடியாக கேள்வி கேட்டு நக்கலடிப்பார்கள். அவமானமாக இருக்கும்.

Wednesday, January 26, 2011

சிறை அனுபவம்: சிறையில் செல்போன் புழங்க காரணம் என்ன...part 1

சிறையில் அடிக்கடி செல்போன் கைபற்றப்படுவதாக வரும் செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிறைத்துறையில் ஊழல் மலிந்து விட்டது, எனவேதான் கைதிகள் துணிச்சலாக செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் ஒருவகையில் உண்மைதான். ஆனால் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Tuesday, January 25, 2011

இனி நாம் தமிழன் என்று சொல்லவேண்டாம். தலை நிமிர்ந்து....


மீண்டும் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை படிக்கும்போது என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. நான் தமிழன் என்றும் அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்படவேண்டும் போலிருக்கிறது.

Monday, January 17, 2011

சிறை அனுபவம்: லஞ்சம். சாரி, ராமகிருஷ்ணன்...

சில தவறுகளை செய்யத்தூண்டும் அல்லது அதை நியாப்படுத்த கூடிய காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் எனது சிறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இதோ, எனக்கும் அப்படி ஒரு அனுபவம்...      

`நான் கோர்டுக்கு வருவேன். என்னை வந்து பாருங்கள்` என்று சிறை நண்பர் (கேரியர்) ஒருவர் மெசேஜ் சொல்லி அனுப்பியி ருந்ததால்,அவரை பார்க்க ஐகோர்ட் வளாகத்துக்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. அந்த நேரம் வனிதா விஜயகுமார் குடும்பநல கோர்ட்டுக்கு வந்தாரோ அல்லது கிளம்பி கொண்டிருந்தாரோ... பிளாஷ்கள்  மின்னி கொண்டிருந்தன.

Sunday, January 9, 2011

பொய் - சிறுகதை

அந்த ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் தேடி அமர்ந்தான்.காலையில் சாப்பிடாததால் பசி அதிகமாயிருந்த்தது.

எல்லாம் நேற்று நண்பர்களுடன் சினிமாவுக்கு போனதால் வந்த வினை. `ஆபீஸில் ஓவர்டைம், வர லேட்டாகும்`  என்று ஜனனியிடம்  பொய் சொல்லியிருந்தான். ஆனால், சினிமாவில் ஊன்றி போனவன், கால் வந்ததை கவனிக்கவில்லை. ஆபீஸுக்கு அவள் எதேச்சையாக போன் போட... குட்டு வெளிப்பட்டுவிட்டது.