!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, June 22, 2023

இவர்கள் திருந்தமாட்டார்கள்


எழுதும் ஆர்வம் போய்விட்டது. ஆனாலும் இந்த நீதித்துறை கனவான்கள் செய்யும் அட்டூழியங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. இது அந்த வகை பதிவு.

சமீபத்தில் தமிழ்நாட்டு ஐபிஸ் ஆபிஸர் ராஜேஷ் தாஸ் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். இதுதான் செய்தி. இதில் சந்தோசம் மற்றும் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மிக விரைவாக 3 ஆண்டுகளிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்.