தற்போது இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை எழுத நினைத்து நினைத்து நின்றுவிட்டது. இந்த முறை அதையும் பார்த்துவிடுவோம்.
அதாவது பெரும்பாலும் மனிதர்கள் வெளுத்ததெல்லாம் சுண்ணாம்பு என நினைக்கும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் நிதானமாக கவனித்தால் இங்கே நியாயம் இளையராஜா பக்கம் இருப்பது தெரியும்.
இங்கே வெளிப்படையாக தெரிவது இளையராஜா பக்கம் நியாயம் இல்லை என்பது. அதாவது அவர் இசையமைத்த படங்களுக்கு காப்புரிமை பெறவில்லையாம், எனவே அவருக்கு இப்படி பணம் கேட்க உரிமையில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் வாதம். ஆனால் இதைத்தாண்டி மனசாட்சி என்று ஓன்று இருக்கிறதல்லவா? சட்டம் சில விஷயங்களை வலியுறுத்தினாலும் பல விஷயங்களில் சட்டமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவறு செய்தவர்களை தண்டிக்காமல் விட்ட சம்பவங்களும் உண்டு. இது அந்த மாதிரியான வகை.
முதலில் பல அரைவேக்காடுகள், அதிபுத்திசாலிகள் மற்றும் பிரபல மேதாவிகள் சொன்ன ஒரு வார்த்தைக்கு பதிலளித்துவிடுகிறேன். ஒரு கொத்தனார் வீடு கட்டுவதற்கு காசு வாங்கி, கட்டிக்கொடுத்த பிறகு அந்த வீட்டின் மீது உரிமை கொள்ள முடியாதாம். எப்பேர்ப்பட்ட உண்மை! இவ்வளவு நாள் இது நமக்கு தெரியவில்லை.
சரி, இப்போது நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். கிரிக்கெட்டில் விளையாடும் எல்லா வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியம் சம்பளம் கொடுக்கிறது. அப்படி நடக்கும் ஒரு போட்டியில் ஒரு வீரர் நன்றாக விளையாடி, அவருடைய பங்களிப்பால்தான் அந்த போட்டியில் அந்த அணி ஜெயித்தால், அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்து அவருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பார்கள்.
இப்போது கிரிக்கெட் வாரியம், 'நான்தான் உனக்கு சம்பளம் கொடுத்துவிட்டேனே, அப்புறம் உனக்கெதுக்கு இந்த பரிசும் பணமும்' என்று பிடுங்குமா? செய்யமாட்டார்கள். ஏனென்றால் அது அநாகரிகம். ஆனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அடுத்தவர்கள் எச்சியில் வாழ்வை சுவைப்பவர்கள்.
பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றி படத்தின் இயங்குனருக்கு நடிகர் அல்லது தயாரிப்பாளர் கார் பரிசளிப்பதை படித்திருப்போம். இதெல்லாம் நாகரிகம்.
இளையராஜா இசையமைத்த பெரும்பாலான படங்கள் அவருடைய இசையால் ஓடியவை, எனவே அதற்குரிய காப்புரிமை நியாயமாக அவருக்குத்தான் போகவேண்டும். இங்கே அவர் அதை முறைப்படி வாங்கியிருக்கலாமே என்று கேட்கலாம். எதிர்காலம் இப்படியெல்லாம் மாறும் என யார் எதிர்பார்த்தார்கள்.
அது மட்டுமின்றி அவர் ஒரு தலித். நீண்டகாலமாக அடிமைப்பட்டு கொண்டு இருந்த ஒரு சமூகத்துக்கு இப்படி தீடீரென்று வந்த (சுமாரான) பணமும் புகழுமே மிகப்பெரிய போதை. அவர்களுக்கு வியாபார மொழி, வியாபார சிந்தனை இன்னும் வரவில்லை.
அரசியலில் திருமாவளவன் இப்படித்தான். எப்படி பேரம் பேசுவது என தெரியாமல் கொடுப்பதை கொடுங்கள் என அரசியலை ஒட்டிக்கொண்டிருக்கிறார். இளையராஜாவும் அதுபோல் அவருடைய இசையின் மதிப்பு அவருக்கே தெரியாமல் பணத்தையும், எதிர்காலத்தையும் கவனிக்காமல் கேட்பவர்களுக்கெல்லாம் பேரம் பேசாமல் இசையை போட்டுக்கொடுத்துவிட்டார். அதை இப்போதுதான் உணர்கிறார்.
உங்களுக்கு நோபல் பரிசு கொடுத்து உங்கள் திறமையை உயர்வாக பாராட்டி அப்படியே கைச்செலவுக்கு 1000 ரூபாய் கொடுத்தால் நீங்கள் அதை வாங்க போவீர்களா? எந்த அளவுக்கு புகழ் இருக்கிறதோ அதே அளவுக்கு பரிசு பணமும் இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த புகழை எவனும் சீண்டமாட்டான்.
இளையராஜாவின் கதை அதுதான். எந்த டீவியை பார்த்தாலும் இளையராஜாவின் அற்புதமான ராகம்/ இன்னிசை ராகம்/ அந்த ராகம் இந்த ராகம் என வானாளவ புகழ்ந்து 'இளையராஜா' என்ற பிராண்டை முன்னிலைப்படுத்தி காசாக்கிக் கொண்டு, கலெக்ஷனை மட்டும் இவர்களும் அந்த தயாரிப்பாளரும் பகிர்ந்துகொள்வார்களாம். இது எப்படி இருக்கு?
சரிப்பா, இளையராஜாவை நம்பி படம் எடுத்தவர்கள் நாசமாக போகவில்லை. இருந்தாலும் ஒருவேளை நஷ்டம் என வந்திருந்தால் அந்த தயாரிப்பாளர்கள்தானே நஷ்டப்பட்டிருப்பார்கள். எனவே இப்போது வரும் லாபம் நியாயமாக அவர்களுக்குத்தானே போகவேண்டும் என கேட்டால் அதுவும் நியாயம்தான். ஆனால் இங்கேதான் ஒரு முக்கியமான உண்மை மறைக்கப்படுகிறது.
இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும். நீங்கள் மிகப்பெரிய தோட்டம் வைத்திருந்தால் அதில் விளையும் காய்கறிகளை வியாபாரமாக விற்கலாம். அது சாத்தியம். ஆனால் உங்கள் வீட்டு தோட்டத்தில் விளையும் 2-3 கிலோ காய்கறிக்காக கடையா போடமுடியும். அது சாத்தியப்படாது.
இங்கே பக்கத்துக்கு வீட்டுக்காரன் எட்டிப்பார்த்து ஏதாவது சொன்னால் 'இந்தா நீ 1 கிலோ எடுத்துக்கோ' என பெருந்தமையாக கொடுத்துவிடுவீர்கள். அவனிடம் காசு கேட்க முடியாது. கேட்டால் உங்கள் மரியாதையை போய்விடும். இதுதான் எதார்த்தம். தயாரிப்பாளர்களுக்கு இதுதான் சிக்கல்.
இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையைத்திருக்கிறார். இந்த அத்தனை படங்களின் பாட்டையும் அவர் வியாபாரம் செய்ய நினைத்தால் அதற்காக ஒரு மேனேஜர், வழக்கறிஞர் என நியமித்து செயல்பட முடியும். ஆனால் தயாரிப்பாளர்கள் பலவிதமாக பிரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 10 படம் எடுத்திருப்பார். அதில் 10 பாட்டு காலத்தால் அழியாததாக இருக்கும். இருந்தாலும் அதை வணிக முறையில் விற்பது அவருக்கு சிரமம்.
எனவே யாராவது ஒரு புது தயாரிப்பாளர்/பிரபலமான தயாரிப்பாளர் வந்து 'உங்க படத்தின் பாட்டை நாங்க பயன்படுத்திக்கொள்கிறோம்' என பழைய தயாரிப்பாளர் அல்லது அவர்களின் வாரிசுகளிடம் கேட்டால், அவர்களும் தயாரிப்பாளர்கள் என்பதால், நட்புரீதியாக காசு வாங்காமல் கொடுக்கும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் இவர்கள் ஓசியில் மங்களம் பாடுகிறார்கள் என நான் நினைக்கிறன்.
எப்போதெல்லாம் இப்படி சர்ச்சை வருகிறதோ அப்போதெல்லாம் இந்த தயாரிப்பாளர்கள் 'நாங்கள் முறையாக அனுமதி பெற்றோம்' என சுருக்கமாக சொல்லிவிடுவார்கள். இது ஒரு வார்த்தை விளையாட்டு. யாரிடம் அனுமதி பெறப்பட்டது, முக்கியமாக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தை கேளுங்கள். எந்த நாயும் பதில் சொல்லமாட்டான்.
இங்கே இளையராஜா ஏமாந்துவிட்டார், அது அவரது அறியாமையே அல்லது தலித் என்பதால் அவருக்கு வியாபாரத்தின் நெளிவு சுளிவு தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அல்லது இந்த காப்புரிமை பணம் இளையராஜாவை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்குத்தான், அதுவும் கணிசமான தொகை அவர்களுக்கு போய் சேருகிறது என்றால், அதையும் நியாயம் என ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இளையராஜாவின் அறியாமையையும், பழைய தயாரிப்பாளர்களின் பெருந்தன்மையும் பயன்படுத்திக்கொண்டு, புதிய தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கும் ராயல்டி கொடுப்பதில்லை, அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் கொடுப்பதில்லை. இது தெரியாமல் பல அரைவேக்காடுகள் தயாரிப்பாளர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கின்றது என கருத்து கந்தசாமியாக வந்து நிற்கிறார்கள்.
ராயல்டி என்பது சிறு தொகையாக கூட இருக்கலாம். அது இந்த தயாரிப்பாளர்களுக்கு ஒன்றும் பெரிய தொகை அல்ல. இருந்தாலும் ஏன் இந்த அல்பத்தனம் என்பதுதான் புரியவில்லை.
0 comments:
Post a Comment