!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, August 4, 2025

ஆணவக்கொலை - ஏன், எதனால், என்ன செய்யவேண்டும்?



இது போன்ற செய்திகளை அதிகம் படித்தால் தலை சுற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கொஞ்சம் அதிகமாகவே சுற்றும். காரணம், நான் கொஞ்சம் எதார்த்தவாதி. இப்போதிருக்கும் பரபரப்பு பரதேசிகளான பத்திரிகையாளர்களை போல் இவர்தான் குற்றவாளி என்றும், இதுதான் நடந்தது என்றும் உடனடியாக நான் முடிவெடுத்துவிடுவதில்லை.

தற்போது யூடுப் பத்திரிகையாளர்கள் எனும் புது பரதேசிகள் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 10 மணிக்கு ஒரு சம்பவம் நடந்தால் 12 மணிக்கு உடனடியாக அதை பற்றி விவாதித்து, கருத்து எனும் பல வாந்திகளை எடுத்து நம்மை குழப்பி விடுவார்கள். உண்மை என்னவென்று கொஞ்சம் தாமதமாக வெளிவரும்போது, அதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவர்கள் வேறு ஒன்றில் வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.