!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, August 11, 2025

டிரம்பின் அட்ராசிட்டி


வர வர கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. நான் டிரம்ப் செய்யும் அட்ராசிட்டியைத்தான் சொல்கிறேன். நான் வேறு ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருக்கிறேன். இப்பதான் கொஞ்சநாளா அங்க ஏதோ பச்சை பச்சையா தெரியுது. இவர் அதுக்கும் ஆப்பு வச்சிடுவார் போலிருக்கிறது? காலையில் டீ சாப்பிடுகிறேனோ இல்லையோ, இன்னைக்கி இந்த ஆள் என்ன சொல்லியிருக்கார் என்று தெரிந்துகொண்டுதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் போலிருக்கிறது.

Monday, August 4, 2025

ஆணவக்கொலை - ஏன், எதனால், என்ன செய்யவேண்டும்?



இது போன்ற செய்திகளை அதிகம் படித்தால் தலை சுற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கொஞ்சம் அதிகமாகவே சுற்றும். காரணம், நான் கொஞ்சம் எதார்த்தவாதி. இப்போதிருக்கும் பரபரப்பு பரதேசிகளான பத்திரிகையாளர்களை போல் இவர்தான் குற்றவாளி என்றும், இதுதான் நடந்தது என்றும் உடனடியாக நான் முடிவெடுத்துவிடுவதில்லை.

தற்போது யூடுப் பத்திரிகையாளர்கள் எனும் புது பரதேசிகள் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 10 மணிக்கு ஒரு சம்பவம் நடந்தால் 12 மணிக்கு உடனடியாக அதை பற்றி விவாதித்து, கருத்து எனும் பல வாந்திகளை எடுத்து நம்மை குழப்பி விடுவார்கள். உண்மை என்னவென்று கொஞ்சம் தாமதமாக வெளிவரும்போது, அதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவர்கள் வேறு ஒன்றில் வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

Monday, May 19, 2025

துருக்கிக்கு ஏன் இந்த வேலை?



இந்த வாரம் செய்திகளில் அங்கே இங்கே என மேய்ந்ததில் கவனித்தவை இவை.

துருக்கி பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால், `பாய்காட் துருக்கி` என ஒரு நடவடிக்கை இந்திய தேசபக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்காக நம்ம ஆட்கள் செய்யும் அளப்பறைகள்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

பாகிஸ்தானில் அங்கே இருக்கும் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் ரொம்பவே கொழுப்பு உள்ளவர்கள் என இங்கே வட இந்திய மீடியாவில் வரும் கருத்தை கவனித்திருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

Tuesday, May 13, 2025

இந்தியா பாகிஸ்தான் போர் - யார் ஜெயித்தது?


இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். ஏனென்றால் இங்கே முதல் பலி உண்மை. பல உண்மைகள் சில ஆண்டுகளுக்கு பின்தான் வெளிவரும். நம்முடைய வேலை செய்திகளை படித்து, கவனித்து, உணர்ந்து குத்துமதிப்பாக கணிப்பதுதான். அதுதான் இங்கே.

எனக்கு முதல் குழப்பம் ஏற்பட்டது வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தை 3 சதவிகிதம் உயர்ந்ததுதான். அப்போது இரண்டு தரப்பிலும் சண்டை இருந்தது. இங்கே பாகிஸ்தான் பலவீனமாக இருந்தால் ஷேர் மார்க்கெட் ஏன் உயரப்போகிறது? இது புரியவில்லை. இந்தியாவில் இது இறங்குமுகமாக இருந்தாலும், அது எனக்கு போலியாகத்தான் தெரிந்தது.

Sunday, May 4, 2025

காஷ்மீர் மாறி வருகிறதா


சமீபகாலமாக பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இது குறித்து நிறைய கவனிக்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட செய்திகள் தெரிகிறது. அதில் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி, காஷ்மீரும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது மூன்று விஷயங்கள். இந்த மூன்றும் தன்னிச்சையாக அதன் போக்கில் நிகழ்ந்தவை. ஆனாலும் இந்த மூன்றும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையவை. இவற்றில் ஒரு தியரி வேலை செய்யவில்லை என்றால் மற்ற இரண்டு தியரியும் எந்த பயனும் தராது.

முதல் மாற்றம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இது மோடி செய்த மிகபெரிய நல்ல செய்தி. அங்கே மக்கள் சுதந்திர மற்றும் தீவிரவாத மனநிலையில் இருந்தார்கள். வளர்ச்சி வேண்டும் என்றால் வேலை வாய்ப்பு வேண்டும். அரசும் பொதுத்துறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது. அது முட்டாள்தனமும் கூட. எல்லை பகுதி மற்றும் சண்டைகள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் தனியார் வருவதும் சிரமம். காஷ்மீர்களிடமும் பணம் இல்லை. இது ஒரு சிக்கலான நிலை.