!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, September 6, 2025

(இரண்டு கால்) நாய்கள் ஜாக்கிரதை



இதுதான் தற்போதைய பரபரப்பு. நானும் இரண்டு தரப்பு வாதங்களையும் கவனித்தேன். நான் நேரடியாக கவனித்த சில அனுபவங்களும் ஞாபகத்துக்கு வந்தது. அவற்றையெல்லாம் இங்கே பார்ப்போம்.

இரக்கம் தேவைதான். ஆனால் அது யாரிடம் கட்டவேண்டும், எப்படி காட்டவேண்டும் என்பதில்தான் இங்கே சிக்கல் வருகிறது. இந்த நாய் ஆதரவாளர்கள் தங்கள் வருமானத்தை முதலில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்துவிட்டு அது போக மீதம் இருக்கும் தொகையைத்தான் இது போன்ற நாய் வளர்ப்பு அல்லது தெரு நாய்களுக்கு உணவளித்தல் என்ற புண்ணியத்தை செய்கிறார்கள்.

Monday, August 11, 2025

டிரம்பின் அட்ராசிட்டி


வர வர கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. நான் டிரம்ப் செய்யும் அட்ராசிட்டியைத்தான் சொல்கிறேன். நான் வேறு ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருக்கிறேன். இப்பதான் கொஞ்சநாளா அங்க ஏதோ பச்சை பச்சையா தெரியுது. இவர் அதுக்கும் ஆப்பு வச்சிடுவார் போலிருக்கிறது? காலையில் டீ சாப்பிடுகிறேனோ இல்லையோ, இன்னைக்கி இந்த ஆள் என்ன சொல்லியிருக்கார் என்று தெரிந்துகொண்டுதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் போலிருக்கிறது.

Monday, August 4, 2025

ஆணவக்கொலை - ஏன், எதனால், என்ன செய்யவேண்டும்?



இது போன்ற செய்திகளை அதிகம் படித்தால் தலை சுற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கொஞ்சம் அதிகமாகவே சுற்றும். காரணம், நான் கொஞ்சம் எதார்த்தவாதி. இப்போதிருக்கும் பரபரப்பு பரதேசிகளான பத்திரிகையாளர்களை போல் இவர்தான் குற்றவாளி என்றும், இதுதான் நடந்தது என்றும் உடனடியாக நான் முடிவெடுத்துவிடுவதில்லை.

தற்போது யூடுப் பத்திரிகையாளர்கள் எனும் புது பரதேசிகள் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 10 மணிக்கு ஒரு சம்பவம் நடந்தால் 12 மணிக்கு உடனடியாக அதை பற்றி விவாதித்து, கருத்து எனும் பல வாந்திகளை எடுத்து நம்மை குழப்பி விடுவார்கள். உண்மை என்னவென்று கொஞ்சம் தாமதமாக வெளிவரும்போது, அதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவர்கள் வேறு ஒன்றில் வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

Monday, May 19, 2025

துருக்கிக்கு ஏன் இந்த வேலை?



இந்த வாரம் செய்திகளில் அங்கே இங்கே என மேய்ந்ததில் கவனித்தவை இவை.

துருக்கி பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால், `பாய்காட் துருக்கி` என ஒரு நடவடிக்கை இந்திய தேசபக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்காக நம்ம ஆட்கள் செய்யும் அளப்பறைகள்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

பாகிஸ்தானில் அங்கே இருக்கும் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் ரொம்பவே கொழுப்பு உள்ளவர்கள் என இங்கே வட இந்திய மீடியாவில் வரும் கருத்தை கவனித்திருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

Tuesday, May 13, 2025

இந்தியா பாகிஸ்தான் போர் - யார் ஜெயித்தது?


இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். ஏனென்றால் இங்கே முதல் பலி உண்மை. பல உண்மைகள் சில ஆண்டுகளுக்கு பின்தான் வெளிவரும். நம்முடைய வேலை செய்திகளை படித்து, கவனித்து, உணர்ந்து குத்துமதிப்பாக கணிப்பதுதான். அதுதான் இங்கே.

எனக்கு முதல் குழப்பம் ஏற்பட்டது வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தை 3 சதவிகிதம் உயர்ந்ததுதான். அப்போது இரண்டு தரப்பிலும் சண்டை இருந்தது. இங்கே பாகிஸ்தான் பலவீனமாக இருந்தால் ஷேர் மார்க்கெட் ஏன் உயரப்போகிறது? இது புரியவில்லை. இந்தியாவில் இது இறங்குமுகமாக இருந்தாலும், அது எனக்கு போலியாகத்தான் தெரிந்தது.