இதுதான் தற்போதைய பரபரப்பு. நானும் இரண்டு தரப்பு வாதங்களையும் கவனித்தேன். நான் நேரடியாக கவனித்த சில அனுபவங்களும் ஞாபகத்துக்கு வந்தது. அவற்றையெல்லாம் இங்கே பார்ப்போம்.
இரக்கம் தேவைதான். ஆனால் அது யாரிடம் கட்டவேண்டும், எப்படி காட்டவேண்டும் என்பதில்தான் இங்கே சிக்கல் வருகிறது. இந்த நாய் ஆதரவாளர்கள் தங்கள் வருமானத்தை முதலில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்துவிட்டு அது போக மீதம் இருக்கும் தொகையைத்தான் இது போன்ற நாய் வளர்ப்பு அல்லது தெரு நாய்களுக்கு உணவளித்தல் என்ற புண்ணியத்தை செய்கிறார்கள்.