கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.
இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.
இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.