!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, May 19, 2025

துருக்கிக்கு ஏன் இந்த வேலை?



இந்த வாரம் செய்திகளில் அங்கே இங்கே என மேய்ந்ததில் கவனித்தவை இவை.

துருக்கி பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால், `பாய்காட் துருக்கி` என ஒரு நடவடிக்கை இந்திய தேசபக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்காக நம்ம ஆட்கள் செய்யும் அளப்பறைகள்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

பாகிஸ்தானில் அங்கே இருக்கும் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் ரொம்பவே கொழுப்பு உள்ளவர்கள் என இங்கே வட இந்திய மீடியாவில் வரும் கருத்தை கவனித்திருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

Tuesday, May 13, 2025

இந்தியா பாகிஸ்தான் போர் - யார் ஜெயித்தது?


இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். ஏனென்றால் இங்கே முதல் பலி உண்மை. பல உண்மைகள் சில ஆண்டுகளுக்கு பின்தான் வெளிவரும். நம்முடைய வேலை செய்திகளை படித்து, கவனித்து, உணர்ந்து குத்துமதிப்பாக கணிப்பதுதான். அதுதான் இங்கே.

எனக்கு முதல் குழப்பம் ஏற்பட்டது வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தை 3 சதவிகிதம் உயர்ந்ததுதான். அப்போது இரண்டு தரப்பிலும் சண்டை இருந்தது. இங்கே பாகிஸ்தான் பலவீனமாக இருந்தால் ஷேர் மார்க்கெட் ஏன் உயரப்போகிறது? இது புரியவில்லை. இந்தியாவில் இது இறங்குமுகமாக இருந்தாலும், அது எனக்கு போலியாகத்தான் தெரிந்தது.

Sunday, May 4, 2025

காஷ்மீர் மாறி வருகிறதா


சமீபகாலமாக பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இது குறித்து நிறைய கவனிக்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட செய்திகள் தெரிகிறது. அதில் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி, காஷ்மீரும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது மூன்று விஷயங்கள். இந்த மூன்றும் தன்னிச்சையாக அதன் போக்கில் நிகழ்ந்தவை. ஆனாலும் இந்த மூன்றும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையவை. இவற்றில் ஒரு தியரி வேலை செய்யவில்லை என்றால் மற்ற இரண்டு தியரியும் எந்த பயனும் தராது.

முதல் மாற்றம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இது மோடி செய்த மிகபெரிய நல்ல செய்தி. அங்கே மக்கள் சுதந்திர மற்றும் தீவிரவாத மனநிலையில் இருந்தார்கள். வளர்ச்சி வேண்டும் என்றால் வேலை வாய்ப்பு வேண்டும். அரசும் பொதுத்துறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது. அது முட்டாள்தனமும் கூட. எல்லை பகுதி மற்றும் சண்டைகள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் தனியார் வருவதும் சிரமம். காஷ்மீர்களிடமும் பணம் இல்லை. இது ஒரு சிக்கலான நிலை.

Wednesday, April 23, 2025

இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை


தற்போது இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை எழுத நினைத்து நினைத்து நின்றுவிட்டது. இந்த முறை அதையும் பார்த்துவிடுவோம்.

அதாவது பெரும்பாலும் மனிதர்கள் வெளுத்ததெல்லாம் சுண்ணாம்பு என நினைக்கும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் நிதானமாக கவனித்தால் இங்கே நியாயம் இளையராஜா பக்கம் இருப்பது தெரியும்.

இங்கே வெளிப்படையாக தெரிவது இளையராஜா பக்கம் நியாயம் இல்லை என்பது. அதாவது அவர் இசையமைத்த படங்களுக்கு காப்புரிமை பெறவில்லையாம், எனவே அவருக்கு இப்படி பணம் கேட்க உரிமையில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் வாதம். ஆனால் இதைத்தாண்டி மனசாட்சி என்று ஓன்று இருக்கிறதல்லவா?  சட்டம் சில விஷயங்களை வலியுறுத்தினாலும் பல விஷயங்களில் சட்டமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவறு செய்தவர்களை தண்டிக்காமல் விட்ட சம்பவங்களும் உண்டு. இது அந்த மாதிரியான வகை.

Thursday, April 17, 2025

தமிழ்நாட்டில் பிஜேபி ஏன் வளரமுடியவில்லை?


வரலாறுதான் காரணம். பொதுவாக நாம் படித்த வரலாறு ஒன்றாகவும், அதேசமயம் நடந்த வரலாறு மற்றும் நாம் கவனிக்காத வரலாறு வேறு விதமாக இருக்கும். இங்கே நாம் அந்த கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.

இங்கே பிஜேபியின் தலைவலிக்கு இரண்டே தியரிதான் காரணம். ஓன்று, வடமாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு. இந்துக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் இந்தியா இஸ்லாமியர்களின் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 900 ஆண்டுகள் அடிமையாக இருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் நடைமுறையில் இந்த உண்மை அப்படியே இல்லை. முக்கியமாக கடற்கரை பகுதிகளான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா பிரிசிடெண்சி என இந்த பகுதிகளை மட்டும் பிரிட்டிஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற பகுதிகளை அவர்கள் உள்ளூர் தலைகளுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள். அதாவது princely states என 500கும் மேற்பட்ட சிறிய, பெரிய என பல தலைகள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தன. மத்தியில் பிஜேபி அரசு, மாநிலத்தில் திமுக அரசு என்பதுபோல்.