பெரியார் குறித்த ஒரு பதிவு எழுத ஆரம்பித்த போது அவ்ருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்த பல விஷயங்களை கவனித்தேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் பெரியார் ஆதரவாளர்கள், தற்குறிகள் என பல விதமாக இருக்கிறார்கள். தற்குறிகள் என்றால், ஒருவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் தவறே செய்யவில்லை என மூடி மறைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.
நான் அப்படி அல்ல. இந்த வியாதி எல்லா சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடமும் இருக்கிறது. எனக்குத்தான் அதில் எதை நம்புவது என தெரியாமல் மண்டை காய்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல விஷயங்களை கவனித்ததில் முக்கியமாக எனக்கும் உறுத்தியது, முதிய வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததுதான்.
தற்போது நாம் பாதுகாப்பான, நாகரீகமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு அந்த திருமணம் அநாகரிகமாக தெரியலாம். ஆனால் நாம் பல விஷயங்களை எதார்த்தமாக கவனிப்பதில்லை. இங்கே நாம் கடந்தகால மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும்.