!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, December 30, 2011

லோக்பால் என்ற நாடகமும் சில கதம்ப செய்திகளும்

ரெண்டு நாளா பயங்கரமான லோக்பால் என்ற காமெடி படம் பார்த்தோம். காங்கிரஸ் இதை எப்படியாவது பாஸ் பண்ணிடும் என்று நான் நினைக்க, ஆனால் தொடர்ந்து நடந்த காட்சிகள் இது காங்கிரசின் டிராமா என்பதை உணர்த்திவிட்டது. ஆக படம் முடிந்துவிட்ட நிலையில், இனி நாம் கருத்து சொல்லலாம்.

இப்போதைக்கு லோக்பால் என்ற வீல் ஒரு வழியாக சுத்த ஆரம்பித்திருப்பது உண்மை. இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போல் முடங்கிவிடும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமில்லை. அடுத்த ஆண்டு ஏதோ கொஞ்சம் பலத்துடன் இது சட்டமாகும் வாய்ப்புதான் அதிகம். இந்த சட்டம் 40 வருடங்களாக தூங்கியது அபத்தம் என்றால், தற்போது திடீரென்று சட்டமாக்க முயற்சிப்பதும் அபத்தம்தான். காங்கிரசின் இந்த திடீர் வேகத்தின் காரணம் அன்னா மற்றும் வரவிருக்கும் தேர்தல்தான்.

Monday, December 26, 2011

யுவர் ஹானர், நீங்கள் முட்டாள்கள்தான்! அதாவது அரசு அப்படித்தான்...

இந்த பதிவை ஆரம்பித்ததே எனது சிறை அனுபவங்களையும், நமது சட்ட அமைப்பில் நான் கவனித்த குறைகளை எழுதவும்தான். ஆனால் பல காரணங்களால் அந்த ஆர்வம் குறைந்து போனது. முக்கியமாக அவ்வப்போதைய பரபரப்பான அரசியல் என்னை அங்கே இழுத்துப் போக, எழுத வேண்டும் என்று நினைத்த பல பதிவுகள் எண்ணத்திலேயே இருக்கிறது. இந்த முறை அந்த எண்ணங்களில் ஓன்று பதிவாக.

அரசியல் என்ற துறையை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாட பரபரப்பு செய்திகள் உங்களை பல துறைகளை ஆராய வைக்கும். சில மாதங்களுக்கு முன் அணுசக்தி குறித்த ஆராய்ச்சி என்றால், இப்போது அணைகள் குறித்த ஆராய்ச்சி. இவை அவ்வப்போது மாறினாலும், அரசியலோடு எப்போது தொடர்புடையது பத்திரிகை துறையும், நீதித்துறையும். எனவே அதை கவனிக்காமல் இருக்கவே முடியாது.

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறும், நாட்டை நாசமாக்கும் எழவு (தியரி)அரசியலும்.


எப்படியும் வாரம் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் ப்ரொபெஷனலாக மாறுவோம் என்று முயற்சித்தால் அது முடியவில்லை. இந்த வாரம் பிராட்பேண்ட் தலைவலி கொடுத்துவிட்டது. எனவே தகவலுக்காக தமிழக செய்திகளையே நம்ப வேண்டி இருந்தது. தேசிய சேனல்களுக்கோ இது பல முக்கிய செய்திகளில் ஓன்று.   

இங்கே முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்களையும், செய்திகளையும் கவனித்ததில் எனக்கு ஜெப்ரி ஆரச்சரின் ஒரு சிறுகதைதான்  ஞாபகத்துக்கு வந்தது. ஒரு வழக்கில் ஒரு வக்கீல் தனது சார்பாக ஒரு சாட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தி அவருடைய அருமை பெருமைகளை சொல்லி, `இப்படிப்பட்ட ஒரு நபரின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்` என்பார். ஆனால் அதே சாட்சி வேறு ஒரு வழக்கில் எதிர் தரப்புக்காக ஆஜராகும்போது, பல வாதங்களின் மூலம் `இப்படிப்பட்டவரின் கருத்தையா நீதிமன்றம் மதிக்கவேண்டும்` என்று எதிர் கேள்வி கேட்பார். இன்றைய அரசியல் அப்படித்தான் இருக்கிறது.

Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினை, என்ன செய்யலாம்?


முல்லைப் பெரியாறு அணைதான் தற்போதைய தலைவலி. இந்த பிரச்சினையை அலசும் முன் ஒரு அனுபவம்.

ஒரு ரயில் பயணம். (பம்பாயிலிருந்து அகமதாபாத்தோ அல்லது இங்கேயிருந்து அங்கேயோ) அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் அநியாயத்துக்கு கூட்டம். டாய்லெட்டில் கூட சில வியாபாரிகள் மூட்டைகளை அடுக்கி இருந்ததை கவனித்தேன். கூட்டம் நடை பாதையிலேயே உட்கார்ந்திருந்தது. அதிலும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். ஆனால் வழியில் உட்கார்ந்திருப்பவர்கள் அனுமதிக்கவில்லை. உள்ளே இடமில்லை என்கிறார்கள். அவர் காட்டு கத்தல் கத்துகிறார். நானும் டிக்கட் வாங்கி இருக்கிறேன் என்று உரிமை கீதம் பாடுகிறார். கடைசியில் அவருடைய கத்தலை சமாளிக்க முடியாமல் அவருக்கு வழி விடுகிறார்கள். அவரும் அந்த நெருக்கடியில் பயணிக்கிறார்.