!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label குற்றம். Show all posts
Showing posts with label குற்றம். Show all posts

Monday, February 24, 2020

அற்புதமான அறிவாளிகள்- பகுதி 2



சமீபகாலமாக கவனித்த சில `அறிவாளிகள்` சம்பவம்.

இது வோடபோன் கதை. திவாலாகப் போகிறதாம். எவ்வளவோ கோடி கட்ட வேண்டுமாம்! பக்கத்தில் நிறைய சைபர் இருப்பதால் மயக்கம் வருகிறது.

ஒரு மாணவன் பெயிலானால் அவனை மக்கு என்று சொல்லலாம். பெரும்பாலான மாணவர்கள் பெயில் என்றால்? சந்தைக்கு வந்த 90 சதவிகித மொபைல் இன்று காணாமல் போய்விட்டன. இங்கே எங்கேயோ அரசின் கொள்கை கணக்கு தப்பு என்றுதான் நினைக்கிறேன்.

சரி, ஒரு வேளை அவ்வளவு பணம் இல்லை என்றால் வோடபோன் என்ன செய்யும்? அவங்க நாட்டுக்கு போய் சின்னக்கவுண்டர் சுகன்யா செஞ்ச மாதிரி எல்லாருக்கும் சாப்பாடு போட்டு பிச்சை எடுத்து கடனை அடைப்பங்களா! நிச்சயம் கிடையாது. மஞ்ச கடுதாசி கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ல போட்டுகுனு போய்க்கினே இருப்பான் வோடபோன்காரன் . இதுதான் நடக்கப்போவுது.

வோடோபோனோ அல்லது ஆதித்ய பிர்லாவோ கவர்ன்மென்டை ஏமாற்றுபவர்களாக அல்லது நிர்வாக திறமை இல்லாதவர்களாகவோ தெரியவில்லை. அதற்கு பதிலா ஏதாவது ஸ்கீம் கொடுத்து அவர்களை காப்பாற்றலாம்.

இது தொடர்பா எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் ஒரு செய்தி படித்தேன்.

It (vodafone) has said it cannot immediately pay the $3.9 billion it owes and its ability to survive was contingent on the government agreeing a flexible payment schedule.

With 13,000 direct employees and loans from banks of about $3.8 billion,

கவர்மென்டுக்கே பணம் கட்ட முடியலை, இதுல இந்த லோன் என்னவாகும்?

இன்னொரு விஜய் மல்லையா?

கண்ணா உனக்கு இரண்டு லட்டு 

இனி உள்ளூர் அறிவாளிகள் கதை

இங்கே ஒரு நண்பர் வீட்டுக்கு பைப் மூலம் கேஸ் வாங்குகிறார். எவ்வளவு என்று கேட்டால் இரண்டு மாதத்துக்கு 200-300 ஆகும் என்கிறார். நம்ப முடியாமல் கேட்டால், பில் காட்டுகிறேன் என்கிறார். உண்மையாகத்தான் இருக்கக்கூடும். இருப்பினும் பலர் சந்தேகத்தோடு வாங்குவதில்லை.

இப்படி பைப் மூலம் கேஸ் கொடுக்க ஆரம்பித்தால், அட்லீஸ்ட் அரை பர்சென்ட் டிராபிக் குறையும். இடைநிலை கமிஷன் பெருமளவு தவிர்க்கப்படுவதால் விலையும்  கணிசமாக குறையும்.

ஆனால் இதை மக்களிடம் முறையாக மார்க்கெட் செய்வதில்லை. இது வாங்கிவிட்டால் மானிய விலை கேஸ் நின்றுவிடும் என்று சிலருக்கு பயம்.

இதில் இன்னொரு காமெடியையும் நான் கேள்விப்பட்டேன். ஒருவர் பைப்லைன் கேஸ் வாங்குகிறார்.அதேசமயம் எல்பிஜி கேசும் வாங்கி அதையும் பிளாக்கில் விற்கிறார்.

இரண்டும் கொடுப்பது ஒருவகை அரைவேக்காட்டுத்தனம். இன்னொருபக்கம் மக்களுக்கு இது தெரியாமல் பைப் கேஸ் வாங்குவது இல்லை.  இது எப்படி இருக்கு?

என்னதான் செய்வது?

சமீபத்தில் ஒரு (அகமதாபாத்) விஷேஷம். உள்ளூர் டைப் சாப்பாடு. அதாவது ஒரு தட்டை எடுத்தால் அதுதான் கணக்கு. Rs.150-200

நம் தமிழ் விசேஷங்களில் இலை போட்டால் அனைத்தையும் வைத்துவிடுவார்கள். பல சமயம் குழந்தைகள் கூட தனியாக என ஆடம் பிடிக்கும். இதில் பல விதங்களில் சாப்பாடு விரயமாகும். இந்த பஃபே சிஸ்டம் இதற்கு சரியான மாற்று என நினைத்தால் அங்கேயும் தலைவலி.

அதே மனிதர்கள். அதேபோல் குழந்தைகள். வீட்டில் `கொஞ்சமா சாப்பிட்டு அப்புறம் வைச்சிக்கோ` என்று இருப்பவர்கள், இங்கே அடுத்தவன் பணம்தானே என்று தாராளமாக இருக்கிறார்கள். அந்த தட்டுகளில் மீந்த உணவுகளை பார்க்கும்போது இதற்கு என்னதான் தீர்வு என்றே புரியவில்லை?                           


Sunday, August 26, 2012

லட்சம் கோடிகளை காப்பாற்ற, 300 கோடி போதும்


கடந்த வருடம்  `ஒரு கோடி பரிசு` என ஒரு பதிவு போட்டிருந்தேன். சமூகத்தில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றை அரசுக்கு தெரிவிப்பவர்களுக்கு (அப்படி தெரிவிப்பவர்களில் ஒருவருக்கு), அரசு ஒரு கோடி பரிசை வழங்கலாம் என்றும், அப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால், பணத்தாசை காரணமாக பலர் துப்பறியும் புலிகளாக மாறி, ஊழல் குறித்த தகவல்களை அரசுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தந்துவிடுவார்கள் என்று எழுதி இருந்தேன்.

தற்போதைய கிரானைட் ஊழலை பார்க்குபோது அது எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கு புரியும். அப்படி ஒரு நடைமுறை இருந்திருந்தால் கிரானைட் ஊழல் இந்த அளவுக்கு வந்திருக்காது. கோடிக்கு ஆசைப்பட்டு யாராவது ஒருவர் இதை அரசுக்கு முதலிலேயே போட்டுக் கொடுத்திருப்பார்.

Monday, December 26, 2011

யுவர் ஹானர், நீங்கள் முட்டாள்கள்தான்! அதாவது அரசு அப்படித்தான்...

இந்த பதிவை ஆரம்பித்ததே எனது சிறை அனுபவங்களையும், நமது சட்ட அமைப்பில் நான் கவனித்த குறைகளை எழுதவும்தான். ஆனால் பல காரணங்களால் அந்த ஆர்வம் குறைந்து போனது. முக்கியமாக அவ்வப்போதைய பரபரப்பான அரசியல் என்னை அங்கே இழுத்துப் போக, எழுத வேண்டும் என்று நினைத்த பல பதிவுகள் எண்ணத்திலேயே இருக்கிறது. இந்த முறை அந்த எண்ணங்களில் ஓன்று பதிவாக.

அரசியல் என்ற துறையை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாட பரபரப்பு செய்திகள் உங்களை பல துறைகளை ஆராய வைக்கும். சில மாதங்களுக்கு முன் அணுசக்தி குறித்த ஆராய்ச்சி என்றால், இப்போது அணைகள் குறித்த ஆராய்ச்சி. இவை அவ்வப்போது மாறினாலும், அரசியலோடு எப்போது தொடர்புடையது பத்திரிகை துறையும், நீதித்துறையும். எனவே அதை கவனிக்காமல் இருக்கவே முடியாது.

Tuesday, September 20, 2011

ஒரு நீதிக் கதை, ஒரு விளக்கம், ஒரு ஜோக்ஸ்.


இந்த கதையை ஒரு கென்ய பத்திரிகையில் படித்தேன். அரசியல்வாதிகளும், பிரபலமான மனிதர்களும் படிக்க வேண்டிய கதை. நீதிக் கதைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதையே நீங்கள் வேறு விதமாகவும் படித்திருக்கலாம். இருந்தாலும் நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே படியுங்கள்.

கென்யாவும் ஜனநாயக நாடு என்பதால், அங்கேயும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் புகார். அங்கே ஒரு கட்டுரையாளர் அவருடைய அரசியல் விமர்சனத்தில் இந்த கதையை சொன்னார்.

Saturday, August 6, 2011

சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part.2


சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part 1

இந்த பயணத்தில் மற்ற விஷயங்களை தொடும் முன் சிறை அனுபவத்தில் மேலும் சில விஷயத்தை பார்த்துவிடுவோம்.

ஏதாவது ஒரு விசேஷத்துக்கு அல்லது ஒரு முக்கிய நிகழ்வுக்காக நமக்கு அழைப்பு வந்தால், வருவோம் என்றோ அல்லது வர முடியாத சூழ்நிலையையோ நாம் அவர்களுக்கு தெரிவித்துவிடுவோம். அப்போதுதான் அவர்கள் அதற்கு தகுந்தாற் போல் திட்டமிட முடியும். ஆனால் நீதி மன்றத்தில் இந்த நாகரீகம் கடைபிடிக்கப்படுவதில்லை.

Saturday, July 30, 2011

எரிபொருள் சிக்கனம் - சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு...


இந்த வாரம் ஒரு காது குத்தும் நிகழ்சிக்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டி இருந்தது. ஆனால் நான் கோவிலுக்கு போவதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.

அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், பிரபஞ்சம் மற்றும் பல தியரிகளையும் படிக்கும் போது கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கான காரணங்கள் தெரியவில்லை. அதேசமயம், `நீ என்ன செய்தாய் எனக்கு, நான் உன்னை மதிப்பதற்கு` என்ற எனது கோவமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

Monday, May 2, 2011

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.



நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி ஆறு மாதம் ஆகிவிட்டது. சிறைகள் குற்றவாளிகளை தண்டிக்காமல்/திருத்தாமல், அவர்களை வளர்த்து விட்டுகொண்டிருந்ததை பார்த்த போது இதைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்ற வெறி இருந்தது. இந்தியாவில் தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதே அபூர்வம். அப்படியே தண்டனை கிடைத்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிக்கும் விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சிறையைப்பற்றி நாம் தெரிந்து கொண்டதை எழுதுவோம் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சிறையைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது எனக்கும் போரடித்தது. அத்துடன் தேர்தலும் வந்துவிட, எனது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. எனவே அரசியல் குறித்தும் எனது பார்வைகளை பகிர்ந்துகொண்டேன். தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் எனது சிறை வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். சிறை வாழ்கையில் எழுதுவதற்கு பல அனுபவங்கள் இருக்கிறது. அதில் ஓன்று இங்கே.

Tuesday, March 1, 2011

சிறை அனுபவம்: (ஜீவி செய்தி) சிறையில் ராசா எப்படி இருக்கிறார் (இருப்பார்)?

ஆ.ராசாவை, அவரது மனைவி பரமேஸ்வரி பார்த்து சொன்ன செண்டிமெண்ட் வார்த்தைகளை கேட்டு ராசா கண்கலங்க, பரமேஸ்வரியும் அழுதுவிட்டாராம். கொசுக்கடியால் ஆரம்ப நாட்களில் தூங்க முடியாமல் தவித்தாராம் ஆ. ராசா. குளிர்காலம் என்பதால், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே ராசாவுக்கும் ஏழு போர்வைகளை ஜெயில் நிர்வாகம் வழங்கியது. அவற்றில் இரண்டை கீழே விரித்தும் இரண்டை தன் உடலில் போர்த்திக்கொண்டும் தூங்குகிறாராம். ஒன்றை தலைக்கு வைத்துக்கொள்கிறார்.

ஆ. ராசா அடைக்கப்பட்டுள்ள அறையில் ஜன்னல் கிடையாது. 15 -க்கு 10 என்கிற அளவுள்ளது. காலையிலும் மாலையிலும் ரோல்கால் நடக்கிறது. அப்போது மற்ற கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நிற்கிறார். அந்த சமயங்களில் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த் பெஹுராவுடன் பேசுகிறார். ஆங்கிலப் பத்திரிக்கைகளை படிக்கிறார். தமிழ் பத்திரிகை கேட்டிருக்கிறாராம். அவரது அறையை சுற்றி மட்டும் வாக்கிங் போக அனுமதிக்கிறார்களாம்.

Monday, January 17, 2011

சிறை அனுபவம்: லஞ்சம். சாரி, ராமகிருஷ்ணன்...

சில தவறுகளை செய்யத்தூண்டும் அல்லது அதை நியாப்படுத்த கூடிய காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் எனது சிறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இதோ, எனக்கும் அப்படி ஒரு அனுபவம்...      

`நான் கோர்டுக்கு வருவேன். என்னை வந்து பாருங்கள்` என்று சிறை நண்பர் (கேரியர்) ஒருவர் மெசேஜ் சொல்லி அனுப்பியி ருந்ததால்,அவரை பார்க்க ஐகோர்ட் வளாகத்துக்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. அந்த நேரம் வனிதா விஜயகுமார் குடும்பநல கோர்ட்டுக்கு வந்தாரோ அல்லது கிளம்பி கொண்டிருந்தாரோ... பிளாஷ்கள்  மின்னி கொண்டிருந்தன.

Monday, November 29, 2010

சிறை அனுபவம்: குண்டர் (டுபாக்கூர்) சட்டம், சில விளக்கங்கள்

சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.

குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.

Sunday, November 14, 2010

சிறை அனுபவம்: முதல் இரவு

என்னோட முதல் இரவு அனுபவம் கிட்டத்தட்ட உங்கள்ல பல பேரோட அனுபவம் மாதிரி தான் இருந்தது. அந்த இரவு எப்படி இருக்குமோன்னு நான் படபடப்பா இருந்தேன். ஆனா நான் பயந்த மாதிரி ஒன்னும் ஆவல. அந்த சூழ்நிலை எனக்கு திருப்தியாவே இருந்தது. நானும் அந்த இரவு முழுக்க சரியா தூங்கல. இரவு ஒரு நேரத்துல கண் முழிச்சி பார்த்து, ஒருவிதமான பொசிஷன பார்த்துட்டு, இப்படியெல்லாம்  மனுஷங்க ................ ஆச்சர்யப்பட்டேன்.

Saturday, October 23, 2010

அபராதத்தை அதிகரியுங்கள்

தினமலர் 15-07-2009 இதழில் (சிறையில் இருந்தபோது )வெளியான கடிதம்.



`நீதிமன்றங்களில், லட்சகணக்கில் வழக்குகள் தேங்கி நிற்பதாலும், வழக்கை நடத்த செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும், ஏழை மக்களை பொறுத்தவரையில் நீதி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க, நாம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு பல் வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: குற்றம் சாட்டப்பற்றவர் கைது செய்யபட்ட பின் 15 நாட்களுக்கு ஒரு