!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, February 24, 2020

அற்புதமான அறிவாளிகள்- பகுதி 2



சமீபகாலமாக கவனித்த சில `அறிவாளிகள்` சம்பவம்.

இது வோடபோன் கதை. திவாலாகப் போகிறதாம். எவ்வளவோ கோடி கட்ட வேண்டுமாம்! பக்கத்தில் நிறைய சைபர் இருப்பதால் மயக்கம் வருகிறது.

ஒரு மாணவன் பெயிலானால் அவனை மக்கு என்று சொல்லலாம். பெரும்பாலான மாணவர்கள் பெயில் என்றால்? சந்தைக்கு வந்த 90 சதவிகித மொபைல் இன்று காணாமல் போய்விட்டன. இங்கே எங்கேயோ அரசின் கொள்கை கணக்கு தப்பு என்றுதான் நினைக்கிறேன்.

சரி, ஒரு வேளை அவ்வளவு பணம் இல்லை என்றால் வோடபோன் என்ன செய்யும்? அவங்க நாட்டுக்கு போய் சின்னக்கவுண்டர் சுகன்யா செஞ்ச மாதிரி எல்லாருக்கும் சாப்பாடு போட்டு பிச்சை எடுத்து கடனை அடைப்பங்களா! நிச்சயம் கிடையாது. மஞ்ச கடுதாசி கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ல போட்டுகுனு போய்க்கினே இருப்பான் வோடபோன்காரன் . இதுதான் நடக்கப்போவுது.

வோடோபோனோ அல்லது ஆதித்ய பிர்லாவோ கவர்ன்மென்டை ஏமாற்றுபவர்களாக அல்லது நிர்வாக திறமை இல்லாதவர்களாகவோ தெரியவில்லை. அதற்கு பதிலா ஏதாவது ஸ்கீம் கொடுத்து அவர்களை காப்பாற்றலாம்.

இது தொடர்பா எக்கனாமிக்ஸ் டைம்ஸ்ல் ஒரு செய்தி படித்தேன்.

It (vodafone) has said it cannot immediately pay the $3.9 billion it owes and its ability to survive was contingent on the government agreeing a flexible payment schedule.

With 13,000 direct employees and loans from banks of about $3.8 billion,

கவர்மென்டுக்கே பணம் கட்ட முடியலை, இதுல இந்த லோன் என்னவாகும்?

இன்னொரு விஜய் மல்லையா?

கண்ணா உனக்கு இரண்டு லட்டு 

இனி உள்ளூர் அறிவாளிகள் கதை

இங்கே ஒரு நண்பர் வீட்டுக்கு பைப் மூலம் கேஸ் வாங்குகிறார். எவ்வளவு என்று கேட்டால் இரண்டு மாதத்துக்கு 200-300 ஆகும் என்கிறார். நம்ப முடியாமல் கேட்டால், பில் காட்டுகிறேன் என்கிறார். உண்மையாகத்தான் இருக்கக்கூடும். இருப்பினும் பலர் சந்தேகத்தோடு வாங்குவதில்லை.

இப்படி பைப் மூலம் கேஸ் கொடுக்க ஆரம்பித்தால், அட்லீஸ்ட் அரை பர்சென்ட் டிராபிக் குறையும். இடைநிலை கமிஷன் பெருமளவு தவிர்க்கப்படுவதால் விலையும்  கணிசமாக குறையும்.

ஆனால் இதை மக்களிடம் முறையாக மார்க்கெட் செய்வதில்லை. இது வாங்கிவிட்டால் மானிய விலை கேஸ் நின்றுவிடும் என்று சிலருக்கு பயம்.

இதில் இன்னொரு காமெடியையும் நான் கேள்விப்பட்டேன். ஒருவர் பைப்லைன் கேஸ் வாங்குகிறார்.அதேசமயம் எல்பிஜி கேசும் வாங்கி அதையும் பிளாக்கில் விற்கிறார்.

இரண்டும் கொடுப்பது ஒருவகை அரைவேக்காட்டுத்தனம். இன்னொருபக்கம் மக்களுக்கு இது தெரியாமல் பைப் கேஸ் வாங்குவது இல்லை.  இது எப்படி இருக்கு?

என்னதான் செய்வது?

சமீபத்தில் ஒரு (அகமதாபாத்) விஷேஷம். உள்ளூர் டைப் சாப்பாடு. அதாவது ஒரு தட்டை எடுத்தால் அதுதான் கணக்கு. Rs.150-200

நம் தமிழ் விசேஷங்களில் இலை போட்டால் அனைத்தையும் வைத்துவிடுவார்கள். பல சமயம் குழந்தைகள் கூட தனியாக என ஆடம் பிடிக்கும். இதில் பல விதங்களில் சாப்பாடு விரயமாகும். இந்த பஃபே சிஸ்டம் இதற்கு சரியான மாற்று என நினைத்தால் அங்கேயும் தலைவலி.

அதே மனிதர்கள். அதேபோல் குழந்தைகள். வீட்டில் `கொஞ்சமா சாப்பிட்டு அப்புறம் வைச்சிக்கோ` என்று இருப்பவர்கள், இங்கே அடுத்தவன் பணம்தானே என்று தாராளமாக இருக்கிறார்கள். அந்த தட்டுகளில் மீந்த உணவுகளை பார்க்கும்போது இதற்கு என்னதான் தீர்வு என்றே புரியவில்லை?                           


2 comments:

KILLERGEE Devakottai said...

அலசலை ரசித்தேன் நண்பரே...

சிவானந்தம் said...

வாங்க கில்லர்ஜி, கருத்துக்கு நன்றி.

உண்மையில் வேறு ஒரு விஷயம் குறித்து பதிவு எழுதியிருந்தேன்.தப்பி தவறி சம்பந்தப்பட்ட நபர் படித்தால் என்ற பயம் வர, கடைசி நேரத்தில் பதிவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை என்று அதை எடுத்துவிட்டேன்.

Post a Comment