!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Saturday, August 6, 2011

சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part.2


சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part 1

இந்த பயணத்தில் மற்ற விஷயங்களை தொடும் முன் சிறை அனுபவத்தில் மேலும் சில விஷயத்தை பார்த்துவிடுவோம்.

ஏதாவது ஒரு விசேஷத்துக்கு அல்லது ஒரு முக்கிய நிகழ்வுக்காக நமக்கு அழைப்பு வந்தால், வருவோம் என்றோ அல்லது வர முடியாத சூழ்நிலையையோ நாம் அவர்களுக்கு தெரிவித்துவிடுவோம். அப்போதுதான் அவர்கள் அதற்கு தகுந்தாற் போல் திட்டமிட முடியும். ஆனால் நீதி மன்றத்தில் இந்த நாகரீகம் கடைபிடிக்கப்படுவதில்லை.

Sunday, February 6, 2011

சிறைக்குள் செல்போன்: அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!


சிறைக்குள் கைதிகள் அதிக பயமில்லாமல் செல்போனை பயன்படுத்த காரணம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டவுடன், சிறைக்குள் போனின் அவசியத்தையும் மற்றும் சிறைக்குள் நடக்கும் குற்றங்களுக்குக்கான தண்டனையில் தேவைப்படும் சீர்திருத்தங்களையும் சுருக்கமாக எழுதி தினமலர் `இது உங்கள் இடம்` பகுதிக்கு அனுப்ப நினைத்தேன்.

எனது கடிதங்கள் தினமலருக்கு போகாது என்று தெரியும். இருந்தாலும், சிறையில் சும்மா இருக்க முடியாதல்லவா. எனவே இதை ஒரு பயிற்சியாக அவ்வப்போது எனது கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். அதேசமயம் என் கையெழுத்து ரொம்ப மோசம் என்பதால், எனது கடிதங்களை சிறை நண்பர் (போதை கடத்தல்) ஒருவர் எழுதித்தருவார். அவருடைய கையெழுத்து அழகாக இருக்கும்.

எனவே அந்த நண்பரை அழைத்து இந்த கடிதத்தையும் எழுதித்தரச் சொன்னேன். இதை படித்த அந்த நண்பர் அதிர்ச்சியாகி, ` அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!` என்றார்.

Tuesday, February 1, 2011

சிறைகளில் செல்போன், தேவையற்ற வழக்குகள்- part 3



அந்த அபத்தத்தை படிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்.

நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ்காரரை யாரோ ரவுடிகள் வெட்டி குற்றுயிராய் போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தந்து அது வரும்வரை காத்திருப்பீர்களா, அல்லது உங்கள் காரிலேயே அந்த போலீஸ்காரரை ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வீர்களா?



Friday, January 28, 2011

சிறைகளில் செல்போன் - அபத்தமான தண்டனை - part 2



சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டால் சிறை அதிகாரிகள் பெரும்பாலும் அதற்காக வழக்கு போட விரும்புவதில்லை. மிக அபூர்வமாகத்தான் வழக்கு பதிவு செய்யப்படும். காரணம். இவ்வளவு கடுமையான கண்காணிப்பையும் மீறி எப்படி செல்போன் உள்ளே வருகிறது என்று மக்கள் கேள்வி கேட்ப்பார்கள். மக்கள் கேட்டுவிட்டு போகட்டும். அவர்கள் கருத்தையெல்லாம் இப்போது யாரும் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், நீதிபதிகள் நேரடியாக கேள்வி கேட்டு நக்கலடிப்பார்கள். அவமானமாக இருக்கும்.

Wednesday, January 26, 2011

சிறை அனுபவம்: சிறையில் செல்போன் புழங்க காரணம் என்ன...part 1

சிறையில் அடிக்கடி செல்போன் கைபற்றப்படுவதாக வரும் செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிறைத்துறையில் ஊழல் மலிந்து விட்டது, எனவேதான் கைதிகள் துணிச்சலாக செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் ஒருவகையில் உண்மைதான். ஆனால் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Monday, December 27, 2010

சிறை அனுபவம்: இலங்கை தமிழர்களும், போதைப்பொருள் கடத்தலும்...

சிறையில் பல விஷயங்களை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இது கொஞ்சம் ஓவர் ரகம். அரசியலில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு  எப்படி உங்களை அதிர்ச்சி அடைய வைக்கிறதோ, அதே போல் இதுவும் உங்களை திகைக்க வைக்கும் ரகம் .

இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டது சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு சில நாட்கள் முன்தான். தாம்பரம் கோர்ட் வாசலில் மதிய

Saturday, December 18, 2010

சிறை அனுபவம் 4 : அட்மிஷன் எனும் அடிமைகள்.

இது ஒரு தொடர் முதல் பதிவு: சிறை அனுபவம்: முதல் இரவு  

ஜெயிலை பொறுத்த வரையில் புதிதாக வருபவர்களுக்கு ஒரே பெயர்தான்: அட்மிஷன். ஏழை, பணக்கரான், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இவர்களிடம் கிடையாது. யாராயிருந்தாலும் இவர்களை பொறுத்த வரையில் அட்மிஷன்தான். `எத்தனை அட்மிஷன் இன்னைக்கி வந்திருக்கு?` `ஏம்பா. நேத்துதான் நிறைய அட்மிஷன் வந்துதே. இங்க ரெண்டு பேர அனுப்புப்பா.`  `அண்ணே! ரெண்டு அட்மிஷன் குறையுதுன்னே!` என்று ஒரே அட்மிஷன் மயம்தான். அட்மிஷன்களை கிட்டத்தட்ட அடிமை ரேஞ்சுக்குதான் இவர்கள் நடத்துவார்கள்.

ஆக நாங்கள், அதாவது அட்மிஷன்கள்,

Monday, November 29, 2010

சிறை அனுபவம்: குண்டர் (டுபாக்கூர்) சட்டம், சில விளக்கங்கள்

சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.

குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.

Sunday, November 14, 2010

சிறை அனுபவம்: முதல் இரவு

என்னோட முதல் இரவு அனுபவம் கிட்டத்தட்ட உங்கள்ல பல பேரோட அனுபவம் மாதிரி தான் இருந்தது. அந்த இரவு எப்படி இருக்குமோன்னு நான் படபடப்பா இருந்தேன். ஆனா நான் பயந்த மாதிரி ஒன்னும் ஆவல. அந்த சூழ்நிலை எனக்கு திருப்தியாவே இருந்தது. நானும் அந்த இரவு முழுக்க சரியா தூங்கல. இரவு ஒரு நேரத்துல கண் முழிச்சி பார்த்து, ஒருவிதமான பொசிஷன பார்த்துட்டு, இப்படியெல்லாம்  மனுஷங்க ................ ஆச்சர்யப்பட்டேன்.

Friday, November 5, 2010

சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.


சிறைக்கு சென்றவன் என்பதால் பரபரப்பான பல விஷயங்களை பற்றி நான் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் இங்கு பட்டும் படாமலும் சில விஷயங்களை குறிப்பிடுவேன். காரணம், சிறையில் நானாக எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நான் ஒரு தனிமை விரும்பி. நானும் ஒரு கைதி என்பதால் பல கைதிகள் தயக்கமின்றி என்னுடன் பேசியதால் தெரிந்து கொண்டவை.  சில சொந்த அனுபவங்களும் உண்டு. நான் எழுதிய கடிதங்கள் தினமலரில் வெளியான பிறகு `அண்ணே, இதைபற்றியும் நீங்க எழுதுங்கண்ணே` என்றும் சொன்னவை.

Saturday, October 23, 2010

அபராதத்தை அதிகரியுங்கள்

தினமலர் 15-07-2009 இதழில் (சிறையில் இருந்தபோது )வெளியான கடிதம்.



`நீதிமன்றங்களில், லட்சகணக்கில் வழக்குகள் தேங்கி நிற்பதாலும், வழக்கை நடத்த செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும், ஏழை மக்களை பொறுத்தவரையில் நீதி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க, நாம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு பல் வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: குற்றம் சாட்டப்பற்றவர் கைது செய்யபட்ட பின் 15 நாட்களுக்கு ஒரு