!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

Friday, July 24, 2026

நீட்- என்ன செய்யலாம்?


இந்தத் தலைவலி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது; முடிவு வந்தபாடில்லை. என்னதான் பிரச்சினை?

எல்லாத் துறைகளிலும் ஓர் அடிப்படைத் தேர்வு வைத்து, "இந்த மாணவன் இதில் தேறுவானா?" என்று கணித்து அவர்களுக்கு மட்டும் இடம் கொடுப்பது நல்ல விஷயம்தான்.

பல பேருக்குப் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான உடல் தகுதியும் வலியைத் தாங்கும் மனஉறுதியும் இருக்கிறதா என்று தேர்வு வைப்பது போல், மருத்துவத் துறையிலும் வைப்பதில் தவறில்லை.

Saturday, July 11, 2026

இவர்களுக்கு அரசு வேலையா?

கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கும், அதனால் உயிரை இழந்தவர்களுக்கும் உதவி செய்வது என்பது நல்ல விஷயம்தான். இங்கே ஒரு வகையில் தவறு விஜய் மீது இருந்தாலும், பல வகைகளில் தவறு அப்போதைய அரசின் மீதும் இருக்கிறது.

ஒருவர் ஒரு துறையில் எவ்வளவுதான் வெற்றியாளராக இருந்தாலும், பிற துறைகளில் அவர்களின் அனுபவ அறிவு குறைவாகவே இருக்கும். இத்தகைய நேரங்களில், அந்தக் குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் இவர்களுக்குச் சரியான வழிகாட்ட வேண்டும்.

சமீபத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த குழப்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். புதிதாக வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யாமல், பழைய திமுக சார்புடைய வழக்கறிஞர்களை விடுவித்துவிட்டார்கள். ஆனால், மாற்று ஏற்பாடு செய்யாமல் இப்படிச் செய்யக்கூடாது என்று அமைச்சருக்குத் துறை சார்ந்த (திராவிட விசுவாச) அதிகாரிகள் ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே, "இவர்கள் தவறு செய்யட்டும்" என்ற நோக்கில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள். கடைசியில் பழி அமைச்சர் மீது விழுகிறது.

Thursday, July 2, 2026

இதுதாண்டா அரசியல்!

அதிமுக கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறிவருகிறது. விஜய் அங்கேயிருந்து எம்.எல்.ஏக்களை ஒட்டுமொத்தமாகக் கணிசமாகத் தூக்குவார் என்று பார்த்தால், இ.எம்.ஐ கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கிறார். அதுவும் நல்லதுதான்; எல்லோரும் ஒரே நேரத்தில் முடிவெடுக்க மாட்டார்கள். 

என்னதான் இருந்தாலும் அது அவர்களுக்குத் தாய் கழகம், அதை விட்டுவிட்டு வர யாருக்கும் எளிதில் மனசு வராது. எடப்பாடி பழனிசாமி திருந்துவார் என எதிர்பார்த்திருக்கலாம், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம் என அவர்கள் தயங்கியிருக்கலாம். ஆனால், எடப்பாடிக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. "கட்சியை விட நான்தான் முக்கியம்" என்ற இறுமாப்பு அவருக்கு. எனவே, இனி அதிமுக மெல்லச் சாவதைத் தவிர வேறு வழியில்லை.

அதுசரி, விஜய் இப்படி ஒரு கட்சிய உடைப்பது சரியா?

Saturday, June 27, 2026

சோஃபா (கவுண்டமணி) மாடல்


இன்னும் ஆறு மாதத்திற்கு தவெக குறித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது. காரணம், எதிர்க்கட்சிகளிடம் நேர்மையோ திறமையோ இல்லை. எனவே, அவர்களைப் பாராட்டி எழுத வேண்டிய அவசியம் இல்லை. நாம் தோற்றுவிட்டோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், இவர் எப்படி ஜெயிக்கலாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். வியாதி இவர்களிடம் இருந்தால் மருந்தை இவர்கள்தானே சாப்பிட வேண்டும்? அந்த உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. இன்னொரு தோல்வி அவர்களை நசுக்கிவிடும். அதுவரை அவர்கள் புலம்பட்டும்.

இங்கே விஜய் அவர்களின் நிர்வாகக் கோளாறுகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் இவையெல்லாம் அரசியலில் ‘சாதாரணமப்பா’ என கடந்து போகக்கூடியவைதான்.

Saturday, April 11, 2026

திமுகவின் புள்ளிவிவர பித்தலாட்டம்

தேர்தல் வந்தாலே போதும், எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு கதை கட்டுகிறார்கள். ஒருவன் திறமையாகப் பேச வேண்டும், அத்துடன் அவன் கையில் ஒரு புள்ளிவிவரம் இருக்க வேண்டும்; அவ்வளவுதான், மக்கள் அதை நம்பத் தொடங்கிவிடுவார்கள். 'சிவப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்' என்பது போன்ற மனநிலைதான் இதுவும்.

இந்த வேலையை எல்லா கட்சிகளும் செய்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதாலும், அவர்களுடைய சமூக ஊடகப் பிரிவினரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுடைய வண்டவாளத்தை முதலில் பார்ப்போம்.

Saturday, March 21, 2026

தமிழ் நாடா, தெலுங்கு நாடா?


தமிழ் நாடா, தெலுங்கு நாடா? இதுதான் இப்போதைய சர்ச்சை. பாக்யராஜ், பார்த்திபன் போன்றோர் இதை பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் கணிசமாக தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அதிலும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கே முதல்வர் மட்டும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. அவர் நல்லவர், திறமைசாலி என விட்டுவிடலாம். (இங்கே நான் ஸ்டாலினை குறிப்பிடவில்லை, பொதுவாக சொல்கிறேன்.) ஆனால் கணிசமான அமைச்சர்களும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பதுதான் பிரச்சினை.

Tuesday, March 17, 2026

திமுகவும், பங்களாதேஷும்.

திமுகவும், பங்களாதேஷும். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். இருக்கிறது. 

தற்போது இந்தியாவில் ஒரு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. சங்கியாக இருந்தால் முழு சங்கியாக இருக்கவேண்டும். உபியாக இருந்தால் அதுவும் அப்படியே. ரத்தத்தின் ரத்தம், தற்குறி, ஜோம்பி என எல்லாம் இந்த வகைதான். அவர்களுடைய தலைவர்கள் தவறு செய்துவிட்டால் அதை அப்படியே பூசி மெழுகிவிட வேண்டும். ஆனால் அடுத்தவர்கள் செய்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். நான் இந்த கொள்கையை கடைபிடிப்பவன் அல்ல. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை என்றால் சொல்லிவிடுவேன்.

Tuesday, December 9, 2025

உச்சி பிள்ளையாரா, தீபத் தூணா?




திருப்பரங்குன்றம் குறித்த ஹேங்கோவர் பலருக்கு முடித்திருக்கலாம். எனக்கு இன்னும் தொடர்கிறது. காரணம், ஏகப்பட்ட சந்தேகம் வந்தது, அதற்கான விடை கிடைக்காததால் இன்னமும் அது குறித்த செய்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.

முதலில் இந்த தீபத்தூண் விஷயத்தை கவனிப்போம். இதில் ஏன் இவ்வளவு சர்ச்சை வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. இது உண்மையிலேயே தீபத்தூண்தானா அல்லது சர்வே கல்லா என்பது கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமா?

Saturday, December 6, 2025

திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது


திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது. தீபம் அணைந்துவிட்டிருக்கலாம், ஆனால் செய்திகளில் இன்னும் சில வாரம் எரியும். கடந்த ஆண்டே இதை கவனித்தேன். இந்த ஆண்டு அது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு என்பதும், இங்கே பிஜேபி வளர துடிக்கிறது என்பதும் புரிகிறது.

இதில் அரசியல் இருப்பதும் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் யார் எந்த நோக்கத்துக்காக போராடினாலும், நேரம் காலம் பார்த்து போராடினாலும் நியாயம் யார் பக்கம் என்பதையும் கவனிக்க வேண்டுமல்லவா.

உடனடியாக எழுத வேண்டாம் என்று செய்திகளை கவனித்தேன். அதில் ஒரு விஷயம். 100 ஆண்டுகாலமாக பிள்ளையார்தான் இந்த தீபத்திற்கு சாட்சியாக இருக்கிறார். இப்போது தீடிரென்று ஏன் மாற்றவேண்டும்? மேம்போக்காக பார்த்தால் நியாயமாக தெரியும். அதையே திருப்பி கேட்டால்.

Saturday, September 6, 2025

(இரண்டு கால்) நாய்கள் ஜாக்கிரதை



இதுதான் தற்போதைய பரபரப்பு. நானும் இரண்டு தரப்பு வாதங்களையும் கவனித்தேன். நான் நேரடியாக கவனித்த சில அனுபவங்களும் ஞாபகத்துக்கு வந்தது. அவற்றையெல்லாம் இங்கே பார்ப்போம்.

இரக்கம் தேவைதான். ஆனால் அது யாரிடம் கட்டவேண்டும், எப்படி காட்டவேண்டும் என்பதில்தான் இங்கே சிக்கல் வருகிறது. இந்த நாய் ஆதரவாளர்கள் தங்கள் வருமானத்தை முதலில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்துவிட்டு அது போக மீதம் இருக்கும் தொகையைத்தான் இது போன்ற நாய் வளர்ப்பு அல்லது தெரு நாய்களுக்கு உணவளித்தல் என்ற புண்ணியத்தை செய்கிறார்கள்.

Thursday, April 17, 2025

தமிழ்நாட்டில் பிஜேபி ஏன் வளரமுடியவில்லை?


வரலாறுதான் காரணம். பொதுவாக நாம் படித்த வரலாறு ஒன்றாகவும், அதேசமயம் நடந்த வரலாறு மற்றும் நாம் கவனிக்காத வரலாறு வேறு விதமாக இருக்கும். இங்கே நாம் அந்த கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.

இங்கே பிஜேபியின் தலைவலிக்கு இரண்டே தியரிதான் காரணம். ஓன்று, வடமாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு. இந்துக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் இந்தியா இஸ்லாமியர்களின் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 900 ஆண்டுகள் அடிமையாக இருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் நடைமுறையில் இந்த உண்மை அப்படியே இல்லை. முக்கியமாக கடற்கரை பகுதிகளான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா பிரிசிடெண்சி என இந்த பகுதிகளை மட்டும் பிரிட்டிஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற பகுதிகளை அவர்கள் உள்ளூர் தலைகளுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள். அதாவது princely states என 500கும் மேற்பட்ட சிறிய, பெரிய என பல தலைகள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தன. மத்தியில் பிஜேபி அரசு, மாநிலத்தில் திமுக அரசு என்பதுபோல்.

Tuesday, March 11, 2025

டிலிமிடேஷன் - இங்கே பிளாக் மெயில் செய்ய வேண்டும்

மும்மொழி கொள்கைக்கு பிறகு டிலிமிடேஷன் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியிருக்கிறது. இதன் முக்கியமான தலைவலி வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக பெருகியிருப்பதுதான். மேம்போக்காக பார்த்தால் வட மாநிலத்தவர்கள் முட்டாள்களாக தெரியும். ஆனால் நிஜம்?   

இங்கே வெளிப்படையாக  தெரியும் காரணம் வறுமை. இன்றைய சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் நாளையை பற்றி யோசிக்கமாட்டான். தென் மாநிலங்களில் கடற்கரை இருப்பதால் இந்த மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி வந்தாலே அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நம்மை தள்ளிவிட்டுவிடும். எனவே நாம்  இங்கே அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம்; அவர்கள் துரதிருஷ்டசாலிகள். அவ்வளவுதான்.

Monday, March 3, 2025

WE WILL LEARN HINDI ONLY IF WE NEED !

வழக்கமாக நான் இந்த காப்பி-பேஸ்ட் வேலையை செய்வதில்லை. ஆனால் QUORA இணையதளத்தில் இதை படிக்க நேர்ந்தபோது இதை பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்த காலத்தில் படிக்கும்போது கல்வி இந்த அளவுக்கு சுமையாக இல்லை. இப்போது எட்டாவது படிக்கும்போதே பத்தாவது கல்விக்கான பாடத்தையும் இப்போதே படிக்க வேண்டும் என்ற அளவுக்கு பெற்றோர்களின் மனநிலை போய்விட்டது. டியூஷன் என்பது மக்கு பிள்ளைகளுக்காக என்று இருந்த நிலைமை மாறி, பாடத்திட்டங்கள் அதிகமாகிவிட்டதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க இந்த டியூஷன் தேவைப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு கல்வி வந்துவிட்டது.

இது தவிர, கம்ப்யூட்டர் மற்றும் இன்ன பிற துறைகள் என கல்வி விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், கூடுதலாக ஒரு மொழி என்பது மாணவர்களுக்கு சிரமம்தானே?

இன்றைய பெற்றோர்கள் அவர்கள் சுமக்காத ஒரு சுமையை தன் பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். இது என்ன நியாயமோ?   

Saturday, March 1, 2025

இங்கே எல்லோரும் அமித்ஷாதான்



இந்த மும்மொழி பிரச்சினை காரணமாக பல ஆங்கில காணொளிகளை கவனித்தேன். இந்தி மொழிக்கு ஆதரவாக வாதாடும் பல அதிபுத்திசாலிகளை, இது குறிப்பாக வடக்கன்ஸ், கவனிக்க நேரிடுகிறது. இவர்கள் அடிமுட்டாள்கள் என அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நான் அவர்களை திட்டத்தான் போகிறேன்; வெறுக்கப்போவதில்லை. காரணம் சிறுவயதிலிருந்தே இப்படிப்பட்ட மனிதர்களை நிறைய பார்த்துவிட்டதால் அந்த மனநிலை எனக்கு வந்துவிட்டது.

சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், மாமா ஆதரவில் சில வருடம் அவர்கள் வீட்டிலே இருந்தேன். அங்கேதான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு அமித்ஷாவை பார்த்தேன். தற்போது எப்படி இந்தி திணிப்பு நடக்கிறதோ அதேபோல் அப்போது எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது.

Saturday, February 22, 2025

மோடிக்கு நேரம் சரியில்லை



மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.

இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.

Sunday, February 2, 2025

சீமானை கைவிட்ட ஈழப் போராளிகள்

 

சீமானை பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, அதை வெளியிட்ட பிறகு, பல வீடியோக்களை, மன்னிக்கவும் காணொளிகளை காண நேரிடுகிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதில் எது உண்மை எது பொய்  என்று குழப்பும் வரும் அளவுக்கு புதுப்புது தகவல்கள் வருகிறது. இவற்றில் சில ஏற்கனவே வெளிவந்தவை. அவற்றை நான் தற்போதுதான் கவனித்தேன்.

கடந்த பதிவில் சீமான் - பிரபாகரன் போட்டோ எடிட் செய்யப்பட்ட ஓன்று என்று அதை எடிட் செய்தவரே சொல்லிவிட்டார், அப்படியிருக்கையில் அந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அதை உண்மை என சீமான் நிரூபிக்க போராடுகிறார் என்றால் அவர் பிரபாகரனை சந்திருக்கமாட்டார் என்று எழுதியிருந்தேன்.

Tuesday, January 28, 2025

பெரியார் எனும் மாபெரும் தலைவன்


இந்த மாதம் சீமானின் பெரியார் புராணம்தான் பரபரப்பாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்தை கவனித்து என்னுடைய பார்வையில் கருத்து சொல்லவேண்டுமென்றால், இங்கே பெரியார் தமிழ்நாட்டில் ஹீரோ நம்பர் 1 என்றால் அதே தமிழ்நாட்டில் கழிசடை நம்பர் 1 என்றால் அது சீமான்தான். இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி என்று கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். அனால் அது பல பக்கத்துக்கு போக்கும் என்பதால் முடிந்த வரை சில விஷயங்கள் இங்கே.

அம்மாவின்/மனைவியின் அருமை அவர்கள் போனபிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் பெரியாரின் அருமையை அவர் போனபின்தான் தமிழக மக்கள் அறுவடை செய்கிறார்கள்/உணர்கிறார்கள். இதில் நான் சற்று கூடுதலாகவே உணர்கிறேன். காரணம் நான் அகமதாபாத்தில் இருப்பதால். அகமதாபாத் என்றில்லை நீங்கள் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்துக்கு சென்று அங்கே சில காலம் வாழ்ந்தால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியும் மற்ற பல விஷயங்களில் தமிழகம் பெற்றிருக்கும் முன்னேற்றமும் உங்களுக்கு புரியும். அதுவும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உங்களுக்கு இருந்து பல விஷ்யங்களை ஒப்பிட்டு பார்க்கும் பகுத்தறிவும் இருந்தால்.

Wednesday, December 25, 2024

தமிழ் தேசியம் விற்பனைக்கு


இப்போதெல்லாம்  தமிழ் தேசியம் பேசுவது என்பது ஒரு பேஷனாகிவிட்டது. யூ டியூபில் ஏதாவது ஒரு வீடியோ பார்த்தாலும் அதுல சைடுல எவனாவது ஒருத்தன் இதைப்பற்றி பேசுகிறான். இது மெடிக்கல்ல கிடைக்குமா அல்லது மருந்து கடையில கிடைக்குமான்னு தெரியல, கிடைச்சா வாங்கி பாத்து ஏதாவது கருத்து சொல்லலாம்.

இப்ப இங்க நான் சொல்லப்போறது வேற ஒரு தியரி.

Wednesday, December 11, 2024

அண்ணாமலை வந்துவிட்டார்


அண்ணாமலை மீண்டும் பேசுபொருளாகிவிட்டார். நானும் அவரைப்பற்றி அவ்வப்போது கவனிப்பதுண்டு. இவர் அதுக்கு (அரசியலுக்கு) சரிப்பட்டு வருவாரா வரமாட்டாரா என சில சமயம் சந்தேகம் வரும். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

சமீபத்தில் ஷேர் மார்க்கட்டில் டிரேட் செய்யும்போது ஒரு ஷேர் கொஞ்சம் துள்ளியது. நான் நிறைய படிக்கிறேன், எனவே எனக்கு ஏழாம் அறிவு, எட்டாம் அறிவு என அறிவு கணக்கில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது. கவனிக்கவும், அறிவு மட்டும்தான்.

Tuesday, June 25, 2024

கள்ளக்குறிச்சி மரணங்கள்


இது திமுக ஆட்சியில் இரண்டாவது அவலம். நியாயமாக பார்த்தால் ஆட்சியை கலைக்க கோரலாம். ஆனால் அது சாத்தியப்படாது. இந்திய ஜனநாயகம் கொஞ்சம் வளர்ந்துவிட்டது. இங்கே கவர்னர் ஆட்சி என்பது இனி அபூர்வம்தான். அதுவும் தற்போதுதான் நாற்பதுக்கு நாற்பது என்று மக்கள் செல்வாக்கை திமுக நிரூபித்திருக்கும் சூழ்நிலையில் அப்படி ஒரு கோரிக்கை வைப்பதே அபத்தம். அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?