!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, January 28, 2025

பெரியார் எனும் மாபெரும் தலைவன்


இந்த மாதம் சீமானின் பெரியார் புராணம்தான் பரபரப்பாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்தை கவனித்து என்னுடைய பார்வையில் கருத்து சொல்லவேண்டுமென்றால், இங்கே பெரியார் தமிழ்நாட்டில் ஹீரோ நம்பர் 1 என்றால் அதே தமிழ்நாட்டில் கழிசடை நம்பர் 1 என்றால் அது சீமான்தான். இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி என்று கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். அனால் அது பல பக்கத்துக்கு போக்கும் என்பதால் முடிந்த வரை சில விஷயங்கள் இங்கே.

அம்மாவின்/மனைவியின் அருமை அவர்கள் போனபிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் பெரியாரின் அருமையை அவர் போனபின்தான் தமிழக மக்கள் அறுவடை செய்கிறார்கள்/உணர்கிறார்கள். இதில் நான் சற்று கூடுதலாகவே உணர்கிறேன். காரணம் நான் அகமதாபாத்தில் இருப்பதால். அகமதாபாத் என்றில்லை நீங்கள் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்துக்கு சென்று அங்கே சில காலம் வாழ்ந்தால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியும் மற்ற பல விஷயங்களில் தமிழகம் பெற்றிருக்கும் முன்னேற்றமும் உங்களுக்கு புரியும். அதுவும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உங்களுக்கு இருந்து பல விஷ்யங்களை ஒப்பிட்டு பார்க்கும் பகுத்தறிவும் இருந்தால்.

Thursday, January 23, 2025

ஒரு நல்லவரும் ஒரு கெட்டவனும்


முதலில் நல்லவரை பார்த்துவிடுவோம். இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன். சமீபத்திய ஒரு மேடை பேச்சில் நீதிபதிகளையும், அவர்களது தீர்ப்புகளையும் விமர்ச்சிப்பது தவறில்லை, தாராளமாக அதை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். இவரது மடியில் கனமில்லை. எனவே இப்படி ஒரு துணிச்சலான கருத்து. சரி ஏதோ சில நல்லவர்களாவது நீதித்துறையில் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுவோம்.

ஆனால் நம் நாட்டில் நல்லவர்கள் என ஒரு வித்தியாசமான புது வகை ரகம் உருவாகியிருக்கிறது. இவர்களின் தியரி அல்லது கொள்கை என்னவென்று பார்த்தால் அது நமக்கு மயக்கத்தை தரும். இவரும் அப்படி இருப்பாரோ என ஒரு சந்தேகம்.

Tuesday, January 14, 2025

சவுக்கு சங்கரும், ஞானசேகரனும்

என்னய்யா தலைப்பு இது என்று கேள்வி கேட்காதீர்கள். இங்கே இந்த இரண்டு பேர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் அல்லது காவல்துறை அவர்களை அணுகும் விதத்தில் ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது. அதற்காகத்தான் இந்த தலைப்பு.

முதலில் சவுக்கு சங்கர். இவர் கடந்த வருடம் ஐபிஸ் அருண் அவர்களை பற்றி, அவர் பெண் காவலர்களை தவறாக பயன்படுத்துகிறார் என ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அந்த வீடியோ எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மீது வழக்கு தேவை என்பதை நானும் உணர்ந்தேன். அவர்மீது உடனடியாக வழக்கும்  பதியப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் போடப்பட்ட விதம் அயோக்கியத்தனம் என்ற அளவுக்கு இருந்தது.

Saturday, January 4, 2025

யார் அந்த நீதிபதி?

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை செய்திதான் தற்போது பரபரப்பு. நானும் கவனிக்கிறேன். தொடர்ந்து நாட்டு நடப்பு செய்திகளை கவனிப்பவர்களுக்கு இது ஒரு பழகிப்போன செய்தி. இது இந்த வருடம். அடுத்த வருடம் இதே போல் ஒரு பரபரப்பு பாலியல் வன்கொடுமை வரப்போகிறது. காரணம், இங்கே பல விஷயங்களை பேசுவதற்கு/விவாதிப்பதற்கு/குரல் கொடுப்பதற்குதான்  மனிதர்கள் இருக்கிறார்களே தவிர, இதை முடிவுக்கு கொண்டுவரும் தலைவர்கள்தான் இல்லை.