!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, April 23, 2025

இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை


தற்போது இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை எழுத நினைத்து நினைத்து நின்றுவிட்டது. இந்த முறை அதையும் பார்த்துவிடுவோம்.

அதாவது பெரும்பாலும் மனிதர்கள் வெளுத்ததெல்லாம் சுண்ணாம்பு என நினைக்கும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் நிதானமாக கவனித்தால் இங்கே நியாயம் இளையராஜா பக்கம் இருப்பது தெரியும்.

இங்கே வெளிப்படையாக தெரிவது இளையராஜா பக்கம் நியாயம் இல்லை என்பது. அதாவது அவர் இசையமைத்த படங்களுக்கு காப்புரிமை பெறவில்லையாம், எனவே அவருக்கு இப்படி பணம் கேட்க உரிமையில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் வாதம். ஆனால் இதைத்தாண்டி மனசாட்சி என்று ஓன்று இருக்கிறதல்லவா?  சட்டம் சில விஷயங்களை வலியுறுத்தினாலும் பல விஷயங்களில் சட்டமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவறு செய்தவர்களை தண்டிக்காமல் விட்ட சம்பவங்களும் உண்டு. இது அந்த மாதிரியான வகை.

Thursday, April 17, 2025

தமிழ்நாட்டில் பிஜேபி ஏன் வளரமுடியவில்லை?


வரலாறுதான் காரணம். பொதுவாக நாம் படித்த வரலாறு ஒன்றாகவும், அதேசமயம் நடந்த வரலாறு மற்றும் நாம் கவனிக்காத வரலாறு வேறு விதமாக இருக்கும். இங்கே நாம் அந்த கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.

இங்கே பிஜேபியின் தலைவலிக்கு இரண்டே தியரிதான் காரணம். ஓன்று, வடமாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு. இந்துக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் இந்தியா இஸ்லாமியர்களின் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 900 ஆண்டுகள் அடிமையாக இருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் நடைமுறையில் இந்த உண்மை அப்படியே இல்லை. முக்கியமாக கடற்கரை பகுதிகளான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா பிரிசிடெண்சி என இந்த பகுதிகளை மட்டும் பிரிட்டிஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற பகுதிகளை அவர்கள் உள்ளூர் தலைகளுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள். அதாவது princely states என 500கும் மேற்பட்ட சிறிய, பெரிய என பல தலைகள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தன. மத்தியில் பிஜேபி அரசு, மாநிலத்தில் திமுக அரசு என்பதுபோல்.