கிளி ஜோசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள், அடி ஜோசியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஜோசியம் பாட்ஷா படத்தில் வரும். அதாவது, ஒருவன் எதிரியை அடித்த விதத்தை வைத்தே, அடித்தவன் ஆட்டோக்காரன் இல்லை, நாடி நரம்பெல்லாம் ரத்த வெறி பிடித்த ஒருவனின் அடி என அடித்தவனின் ஜாதகத்தைக் கண்டுபிடிப்பதுதான் இந்த அடி ஜோசியம். இது போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதேபோல் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒருவன் பணக்காரனா என கண்டுபிடிக்க அந்த ஆளின் வங்கிக் கணக்கைப் பார்க்க வேண்டாம். அவன் பிள்ளை எந்த பிராண்ட் மொபைல், எந்த மாதிரியான வண்டி வைத்திருக்கிறான் என்பதை கவனித்தாலே போதும். அதாவது, பல இடங்களில் உண்மையை இப்படி குறுக்குவழியிலும் கண்டுபிடிக்கலாம்.
எதற்காக இந்த உதாரணம் என்றால், என்னுடைய முகநூல் பக்கத்தில் இப்போது பாரதியார் குறித்த செய்திகள் அதிகமாக வருகிறது. சமீபத்திய சர்ச்சை காரணமாக அந்த செய்திகளை நிறைய படித்ததால் இந்த நிலைமை. இதை அப்படியே தாண்டி போக முடியவில்லை. எனவேதான் இந்தப் பதிவு.



