!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, December 24, 2025

பாரதியார் யார்?

கிளி ஜோசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள், அடி ஜோசியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஜோசியம் பாட்ஷா படத்தில் வரும். அதாவது, ஒருவன் எதிரியை அடித்த விதத்தை வைத்தே, அடித்தவன் ஆட்டோக்காரன் இல்லை, நாடி நரம்பெல்லாம் ரத்த வெறி பிடித்த ஒருவனின் அடி என அடித்தவனின் ஜாதகத்தைக் கண்டுபிடிப்பதுதான் இந்த அடி ஜோசியம். இது போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதேபோல் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒருவன் பணக்காரனா என கண்டுபிடிக்க அந்த ஆளின் வங்கிக் கணக்கைப் பார்க்க வேண்டாம். அவன் பிள்ளை எந்த பிராண்ட் மொபைல், எந்த மாதிரியான வண்டி வைத்திருக்கிறான் என்பதை கவனித்தாலே போதும். அதாவது, பல இடங்களில் உண்மையை இப்படி குறுக்குவழியிலும் கண்டுபிடிக்கலாம்.

எதற்காக இந்த உதாரணம் என்றால், என்னுடைய முகநூல் பக்கத்தில் இப்போது பாரதியார் குறித்த செய்திகள் அதிகமாக வருகிறது. சமீபத்திய சர்ச்சை காரணமாக அந்த செய்திகளை நிறைய படித்ததால் இந்த நிலைமை. இதை அப்படியே தாண்டி போக முடியவில்லை. எனவேதான் இந்தப் பதிவு.

Saturday, December 20, 2025

விஜய் ரசிகர்களாகும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


நவோதயா பள்ளிகள் தேவையா?

பள்ளிகள் தேவைதான், ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற சேவைகள்/ கல்வி எப்போதும் தேவையில்லை. அங்கே இறுதி பலன் என்பது கொடுப்பவனின் நோக்கமாகத்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.

சமீபத்தில் மாரிதாஸ் காணொளி ஒன்றை கவனித்தேன். அதில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது, எனவே வேறு வழியில்லை, தமிழக அரசு நவோதயா பள்ளிகளை அனுமதித்தாக வேண்டும் என சந்தோஷமாக மேளம் அடித்திருந்தார். அதோடு விட்டால் பரவாயில்லை. இந்த திட்டத்தை தடுப்பதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை இந்த திமுக அரசு, அதாவது கலைஞரும், ஸ்டாலினும் தடுத்தார்கள், இனி அது நடக்காது என சொல்லியிருந்தார்.

திமுகவை திட்டுங்கள் அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. `நீ விளக்கு பிடிச்சாதான் திட்டுவேன்` என்றால் நான் அதற்கும் தயார். அந்த அளவுக்கு அது ஒரு மோசமான கட்சி என்பதுதான் என் கருத்து.

Tuesday, December 9, 2025

உச்சி பிள்ளையாரா, தீபத் தூணா?




திருப்பரங்குன்றம் குறித்த ஹேங்கோவர் பலருக்கு முடித்திருக்கலாம். எனக்கு இன்னும் தொடர்கிறது. காரணம், ஏகப்பட்ட சந்தேகம் வந்தது, அதற்கான விடை கிடைக்காததால் இன்னமும் அது குறித்த செய்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.

முதலில் இந்த தீபத்தூண் விஷயத்தை கவனிப்போம். இதில் ஏன் இவ்வளவு சர்ச்சை வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. இது உண்மையிலேயே தீபத்தூண்தானா அல்லது சர்வே கல்லா என்பது கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமா?

Saturday, December 6, 2025

திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது


திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது. தீபம் அணைந்துவிட்டிருக்கலாம், ஆனால் செய்திகளில் இன்னும் சில வாரம் எரியும். கடந்த ஆண்டே இதை கவனித்தேன். இந்த ஆண்டு அது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு என்பதும், இங்கே பிஜேபி வளர துடிக்கிறது என்பதும் புரிகிறது.

இதில் அரசியல் இருப்பதும் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் யார் எந்த நோக்கத்துக்காக போராடினாலும், நேரம் காலம் பார்த்து போராடினாலும் நியாயம் யார் பக்கம் என்பதையும் கவனிக்க வேண்டுமல்லவா.

உடனடியாக எழுத வேண்டாம் என்று செய்திகளை கவனித்தேன். அதில் ஒரு விஷயம். 100 ஆண்டுகாலமாக பிள்ளையார்தான் இந்த தீபத்திற்கு சாட்சியாக இருக்கிறார். இப்போது தீடிரென்று ஏன் மாற்றவேண்டும்? மேம்போக்காக பார்த்தால் நியாயமாக தெரியும். அதையே திருப்பி கேட்டால்.