கடந்த 5 ம் தேதி வெளிவந்த தினமணி தலையங்கம் `தவறான சிகிச்சை` மிக அருமை. டாக்டர்களுக்கு மட்டும் சுரணை இருந்திருந்தால் இதை படித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு விட்டு சுயபரிசோதனையில் இறங்கி இருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேசமயம் டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. ஒரு வக்கீல் தாக்கபட்டால் வக்கீல்கள் ஸ்ட்ரைக்; கண்டக்டர் தாக்கப்பட்டால் பஸ்கள் ஸ்ட்ரைக் என்று தன் இனத்துக்காக (துறை) குரல் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜாதி மற்றும் மத உணர்வுக்கு இணையாக நாட்டை நாசாமாக்க கிளம்பி இருக்கும் புது வியாதி இது.
