!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, February 22, 2025

மோடிக்கு நேரம் சரியில்லை



மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.

இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.

Thursday, February 13, 2025

பெரியாரும், மணியம்மையும், இந்து மதமும்


பெரியார் குறித்த ஒரு பதிவு எழுத ஆரம்பித்த போது அவ்ருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்த பல விஷயங்களை கவனித்தேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் பெரியார் ஆதரவாளர்கள், தற்குறிகள் என பல விதமாக இருக்கிறார்கள். தற்குறிகள் என்றால், ஒருவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் தவறே செய்யவில்லை என மூடி மறைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

நான் அப்படி அல்ல. இந்த வியாதி எல்லா சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடமும் இருக்கிறது. எனக்குத்தான் அதில் எதை நம்புவது என தெரியாமல் மண்டை காய்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல விஷயங்களை கவனித்ததில் முக்கியமாக எனக்கும் உறுத்தியது, முதிய வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததுதான். 

தற்போது நாம் பாதுகாப்பான, நாகரீகமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  நமக்கு அந்த திருமணம் அநாகரிகமாக தெரியலாம். ஆனால் நாம் பல விஷயங்களை எதார்த்தமாக கவனிப்பதில்லை. இங்கே நாம் கடந்தகால மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும்.

Sunday, February 2, 2025

சீமானை கைவிட்ட ஈழப் போராளிகள்

 

சீமானை பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, அதை வெளியிட்ட பிறகு, பல வீடியோக்களை, மன்னிக்கவும் காணொளிகளை காண நேரிடுகிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதில் எது உண்மை எது பொய்  என்று குழப்பும் வரும் அளவுக்கு புதுப்புது தகவல்கள் வருகிறது. இவற்றில் சில ஏற்கனவே வெளிவந்தவை. அவற்றை நான் தற்போதுதான் கவனித்தேன்.

கடந்த பதிவில் சீமான் - பிரபாகரன் போட்டோ எடிட் செய்யப்பட்ட ஓன்று என்று அதை எடிட் செய்தவரே சொல்லிவிட்டார், அப்படியிருக்கையில் அந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அதை உண்மை என சீமான் நிரூபிக்க போராடுகிறார் என்றால் அவர் பிரபாகரனை சந்திருக்கமாட்டார் என்று எழுதியிருந்தேன்.