!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, February 13, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஒரு இந்தியத் தமிழனின் பகிரங்கக் கடிதம்.


ராஜ நடராஜன் said...  சிவா!உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.என்னை விட நேரடி வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு இருந்தும் பிரபாகரன் என்ற சொல்லையும் தாண்டிய ஒரு போராட்டத்தின் மையப்புள்ளி பற்றி அலசாமலும் ஈழப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமலும் குற்றம் சொல்லல் என்ற எல்லையிலே நீங்கள் நிற்பதால் உங்கள் மொழி... வார்த்தை விளையாட்டை நிறுத்திக்கொள்கிறேன்.நன்றி

இது ஈழம் குறித்த ஒரு பதிவின் விவாதத்தில் ஒரு ஈழத்தமிழர் கடைசியாக போட்ட பின்னோட்டம். அவர் சில குற்றச்சாட்டுகளோடு இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டார். ஆனால் என்னால் நிறுத்த முடியவில்லை. அவர் மட்டுமில்லை பல இந்திய, இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இதே உணர்வுதான் இருக்கும். எனவேதான் இந்த பதிவு.    

*****************************************************************


நண்பரே, ஈழத்தமிழனின் இன்றைய சோகமான நிலையில் நான் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சவில்லை. ஒரு தமிழன் தோற்று, அங்குள்ள தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதை இங்குள்ள எந்த தமிழனும் விரும்பவில்லை. ஆனால், இந்தியாவை குறை சொல்லும் முன், உணர்ச்சிகளை தாண்டி நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். தவறு (அதிகம்) யார் பக்கம் என்பது புரியும். சிங்களவன் எப்படி வெற்றி பெற்றான் என்பது நமக்கு தேவையில்லாத ஓன்று. ஆனால் ஒரு தமிழன் ஏன் தோற்றான்? அதற்கு காரணங்கள் என்ன என்பதை நாம் அலசி ஆராய்ந்தால்தான், மற்றொரு ஈழப்போராட்டம் வரும்போது கவனமாக இருக்க முடியும்.

அதே சமயம் நான் ஒரு இந்தியனாக இந்த பதிவை எழுதவில்லை. அரசியலை ஆழ்ந்து கவனிக்கும் ஒரு பார்வையாளனாகதான் எழுதுகிறேன். இந்தியா ஒரு தவறு செய்திருந்தால் அதை வெளிப்படையாக கண்டிக்கும் அளவுக்கு இங்கே சுதந்திரமும் இருக்கிறது, விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், அதை சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியமும் இருக்கிறது.

முதலில் இந்தியாவின் நிலைபாட்டை பார்ப்போம். இந்தியா இலங்கை விஷயத்தில் சுயநலமாக முடிவெடுத்திருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. உண்மைதான். ஒரு இந்திய பிரதமர் இந்தியநலனை மனதில் வைத்துதான் முடிவெடுப்பார். இதுதான் அவருடைய கடமையும் கூட. உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் இதேபோல்தான் முடிவெடுக்கின்றன. எனவே இலங்கை விஷயத்தில் நான் மத்திய அரசை குறை சொல்லமாட்டேன். இலங்கை விஷயத்தில் குற்றவாளிகூண்டில் நிற்பவர்கள் பிரபாகரனும், கலைஞரும் கூடவே தமிழகத்தில் இருக்கும் புலிகளின் ஆதரவாளர்களும் தான். அதாவது நம் தமிழர்கள் தரப்பில்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு இலங்கை பிரச்சினையை மட்டுமின்றி பிரபாகரனையும் (பிரபாகரன் இந்தியாவின் எதிரியாகிவிட்ட போதும்) சேர்த்தே கைகழுவி விட்டது. காரணம். புலிகளுக்கு உதவியது தவறு, அதன் விளைவுதான் இது என்று சமாதானமாகியிருக்க வேண்டும். அல்லது பிரபாகரன் (இந்தியாவால்) அழிக்கப்பட்டால் அங்கே தமிழனுக்கு நாதியில்லாமல் போய்விடும் என்பதால் நடந்தது ஒரு துன்பவியல் சம்பவம் என்று உண்மையிலேயே நினைத்து பிரபாகரனை கண்டும் காணாமல் விட்டுவிட்டிருக்கலாம்.

பல ஈழத் தமிழர்களின் குற்றச் சாட்டு என்ன வென்றால் ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு பழி வாங்க, இந்தியா சிங்களவனுக்கு துணை போனது என்பதுதான். இது என்ன சினிமாவா? 20 ஆண்டுகள் கழித்து செத்துப் போனவனின் மகன் தலையெடுத்து பழிவாங்குவதற்கு! அங்குள்ள தமிழரின் நலனுக்காக இல்லை என்றாலும், பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் பிரிவினைகோஷம் எழுப்பும் அபாயமும் இருந்தது. எனவேதான் இந்தியா பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்ற விஷயத்தை தீவிரமாக வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்தினாலும் அதற்கும் இந்திய ராணுவத்தின் உதவியைதான் இலங்கை கேட்கும் என்பதால் இந்தியா இந்த விஷயத்தில் கண்டும்காணாமல் இருந்தது. பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அந்த காரியத்தை இந்தியா எப்போதோ செய்திருக்கும். ஆனால் இந்த 20 ஆண்டுகாலத்தில் புலிகள் என்ன சாதித்தார்கள்? ஜெயிக்கவும் முடியவில்லை, ஒரு சமாதான உடன்படிக்கைக்கும் வரவில்லை. கடைசியில் சூழ்நிலை சிங்களவனுக்கு சாதகமாக திரும்பிவிட்டது.

இலங்கையை கைகழுவிய இந்தியா இப்போது ஏன் உதவவேண்டும்? சூழ்நிலைகள்தான் காரணம். புலிகளை அழிக்க இலங்கை சீனாவின் உதவியை கோரும் என்ற நிலை. இந்த நிலையில் இந்தியா என்ன செய்வது? சீன உதவியுடன் புலிகள் அழிக்கப்பட்டு இதே இனப்படுகொலைகள் நடந்திருந்தால், அப்போதும் இந்தியா இதை தடுக்கவில்லை என்று இதே கோபத்தைத்தான் ஈழத்தமிழர்கள் காட்டியிருப்பார்கள்.  எனவே ஈழத்தமிழனும் இந்தியாவுக்கு எதிரியாகி இருப்பான். ராணுவ உதவி செய்யாததால் சிங்களவனும் இந்தியாவுக்கு எதிரியாகி இருப்பான். அதேசமயம் சீனாவுக்கு அங்கே நட்புறவு பலப்பட ஒரு வாய்பளித்ததாக ஆகியிருக்கும். அதே ராணுவ உதவியை இந்தியா செய்தால், ஈழத்தமிழர்களின் எதிர்ப்பு என்ற ஒரே நஷ்டம்தான். இரண்டில் எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிரியாகத்தான் பார்க்கப் போகிறார்கள். எனவே நஷ்டம் என்று முடிவான பிறகு முடிந்த அளவு நஷ்டத்தை குறைப்பதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் இந்தியா செய்திருக்கிறது.

என்னுடைய வருத்தமெல்லாம் என்னவென்றால், ` இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. அப்படி நடந்தால் அது உங்களுக்கு அழிவுதான். எனவே ஒரு கௌரவமான ஒப்பந்தத்துக்கு தயாராகுங்கள்` என்று பிரபாகரனை தமிழக தலைவர்கள் முன்கூட்டியே எச்சரித்திரிருக்க வேண்டும். அப்படி ஒரு முயற்சியில் தமிழக தலைவர்கள் இறங்கினார்களா அல்லது பிரபாகரன் இதற்கு உடன்படவில்லையா என்ற விவரமெல்லாம் நமக்கு தெரியாது. அப்படி ஒரு முயற்சியில் தமிழக தலைவர்கள் ஈடுபட்டு அதை பிரபாகரன் நிராகரித்திருந்தால், இந்தியா தரப்பில் குறை சொல்ல எதுவுமே இல்லை. ஆனால் அப்படி ஒரு எச்சரிக்கையை தமிழக தலைவர்கள் பிரபாகரனுக்கு கொடுக்கவில்லை என்றால், தமிழ்நாட்டிலும் தமிழனுக்கு சரியான தலைமை இல்லை என்றுதான் அர்த்தம். (இது தெரிந்த விஷயம்தான். ஒருவேளை 2 ஜி பணத்தை பங்கிடுவதிலேயே குறியாய் இருந்திருப்பார்கள்.)                      

பிரபாகரன் தரப்பில் உள்ள குறை என்னவென்றால், நெருங்கி வரும் அபாயத்தை உணர்ந்து ஒரு ஏற்றுக்கொள்ளகூடிய ஒப்பந்தத்துக்கு வராதது. இரண்டாவது, இந்தியாவின் உதவியில்லாமல் அங்கே எதுவுமே சாத்தியமில்லாத நிலையில், மீண்டும் இந்தியாவின் ஆதரவைபெற என்ன வழி என்று யோசித்திருக்க வேண்டும். இந்தியாவின் உதவி என்றால் ஆயுத, பொருளாதார உதவி அல்ல. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து, இலங்கையை நிர்பந்தித்து அங்குள்ள தமிழர்களுக்கு உரிமையை பெற்றுத்தருவது. ஆனால் இந்திய பிரதமரை படுகொலை செய்த ஒருவர் அங்கே தமிழர்களின் பிரிதிநிதியாக இருக்கும் வரை இது சாத்தியமா? இந்தியா பிரபாகரனை கண்டுக்காமல் விட்டிருக்கலாம். ஆனால் கூடி குலாவவா முடியும்.

இங்கே எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இரண்டு பெண்கள் ஒரு குழந்தைக்கு உரிமை கொண்டாடினார்கள். அந்த குழந்தையை இரண்டாய் வெட்டி ஆளுகொன்றாய் வழங்கும்படி மன்னன் தீர்ப்பு வழங்க, உண்மையான தாய் பதறிப்போய், `வேண்டாம். என் குழந்தையை கொல்ல வேண்டாம். குழந்தையை அந்த போலித் தாயே வைத்துக்கொள்ளட்டும்` என்று கதறினாள். இதுதானே உண்மையான பாசம்.

தன்னால் இனி தம் மக்களுக்கு நல்லது செய்யமுடியாது என்பதை பிரபாகரன் உணர்ந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும்? இயக்கத்தை நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கண்காணாமல் போயிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு தர்மசங்கடம் விலகியிருக்கும். புலிகளின் மீதிருந்த அவப்பெயர் எல்லாம் பிரபாகரனோடு போய்விட, அதன்பிறகு அங்குள்ள தமிழர்களுக்காக குரல் கொடுக்க இந்திய தமிழர்களுக்கோ, இந்தியாவுக்கோ எந்த சங்கடமும் இருந்திருக்காது. இந்த யுத்தமும்  இவ்வளவு சோகமாக முடிந்திருக்காது. ஆனால், இந்த யுத்தத்தில் தோற்றுவிட்டால் தான் மட்டும் அழியமாட்டோம், தமது மக்களின் எதிர்காலமும், கூடவே ஈழக்கனவும் நிர்மூலமாகிவிடும் என்பதை அவர் உணரவில்லை.

இந்தியாவை நம்பி பிரபாகரன் ஒதுங்க முடியுமா? இந்த கேள்விக்கு பதில் சொல்வது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் வேறு வழி. கைவசம் இருக்கும் வழி வெற்றியை தராத நிலையில் மாற்று வழியை முயற்சி செய்துதான் பார்த்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், இந்தியா ஈழத்தை வாங்கி கொடுத்திருக்காது, ஆனால் இப்படி ஒரு படுகொலையை நிச்சயம் வேடிக்கை பார்த்திருக்காது. குறைந்த பட்சம் ஒரு கவ்ரவமான ஒப்பந்தத்துக்கு வழி வகுத்திருக்கும்.

இங்கே இன்னொரு லாஜிக்கையும் கவனிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் இருக்கும்வரை அவர்கள்தான் பொறுப்பு. பெற்றோர்கள் இல்லாத நிலையில்தான் மற்ற உறவினர்கள் அதன் நலனில் அக்கறை செலுத்த ஆரம்பிப்பார்கள். ஈழத்தமிழர்கள் கூழுக்கும் (பிரபாகரனும் வேண்டும் ) ஆசை, மீசைக்கும் (இந்தியாவும் உதவனும்) ஆசை என்று இருந்திருக்கிறார்கள். கடைசியில் யாரும் அவர்களை காப்பாற்றவில்லை.  


...பிரபாகரன் என்ற சொல்லையும் தாண்டிய ஒரு போராட்டத்தின் மையப்புள்ளி பற்றி அலசாமலும் ஈழப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமலும் ...

உண்மைதான். நான் இந்த விஷயத்துக்குள் நுழையவில்லை. ஈழ வரலாறு குறித்து எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லையென்றாலும் , இதைப்ற்றி பிறகு பார்ப்போம்.   

67 comments:

ராஜ நடராஜன் said...

சிவா!காலையில் உங்கள் இடுகையைப் பார்த்தேன்.முழுவதும் சொல்லி இறுதி வரிகளில் தொபுக்கடீர் என்று இடுகை விழுந்து விட்டது என்பதால் மௌனமாக வந்து விட்டேன்.

ஈழம் குறித்து சொல்வதற்கும்,விமர்சிப்பதற்கும் நிறையவே உள்ளது.நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளதால் உங்கள் இடுகை குறித்து யாராவது கருத்தை முன் வைக்கிறார்களா என்று பார்க்கலாம்.

Swami said...

Pannadai thanamaga iuuku ungal karuthu

Swamy said...

திரு சிவானந்தம்

சொல்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் புரித சரியில்லை. நீங்கள் இன்னும் பல விசயங்களை புரிந்து கொள்ளவில்லை. சில நுட்பங்களும் உங்களுக்கு புரிபடவில்லை, புரிய போவதும் இல்லை. ஏனென்றால் உங்கள் மனநிலை அப்படி இருக்கிறது. உங்களை போன்றவர்கள் கருத்து அரை வேகட்டு தனமாக இருக்கிறது. உங்கள் மொன்னையான தட்டையான கருத்துக்களில் எந்த சாரமும் இல்லை. ஏதோ பரபரப்புக்கு எழுதுவது போல இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

உண்மைதான். நான் இந்த விஷயத்துக்குள் நுழையவில்லை. ஈழ வரலாறு குறித்து எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லையென்றாலும் , இதைப்ற்றி பிறகு பார்ப்போம்.

அப்புறம் எதுக்கு இது மாதிரி ஒரு பதிவு!!?? ஆழமான கட்டுரை ஒன்று எழுதணும்னா அதுவும் இது போன்ற சிக்கலான அரசியல் கட்டுரைகள், முதலில் நாம் அதனைப் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அறிந்து கொள்ளும் வரையில் அமைதியாக இருக்கலாம். என்பது என்னோட நிலைப்பாடு.

Yoga.s.FR said...

ராஜீவ் கொலைக்கும்,பிரபாகரனுக்கும் முடிச்சுப் போடுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றது!1987-ல் ராஜீவ் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டார்!ஈழ விடுதலைப் போரில் பிரபாகரன் அசைக்க முடியாத நபரென்று தெரிந்து கொண்டே அமைதிப் படை மூலம் "அன்றே"பிரபாகரனைப் போட்டுத் தள்ள ராஜீவ் முடிவெடுத்தார்!ராஜீவைக் கொன்றது யாரென்பது இன்று வரை அவிழாத முடிச்சு!இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலிருந்து பங்காள தேசத்தை பிரித்துக் கொடுக்க அன்னையால் முடிந்தது!ஆனால்,இன்று வரை அறுபத்து மூன்று ஆண்டுகளாக நசுக்கப்படும்,ஒடுக்கப்படும் ஈழத் தமிழினத்துக்கு "சுதந்திரம்"அல்ல வாழ்வுரிமையைக் கூடப் பெற்றுக் கொடுக்க இந்திய இறையாண்மை தடையாக இருக்கிறது!பிரச்சார பீரங்கியாக "உங்கள்"போன்றவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரியும் சிங்களப் பெரும்பான்மையரசுக்கு (கூலி பெறாமலே) கடமை புரியத் தயாராயிருக்கையில் என்ன சொல்லி என்ன?இலங்கையில் நடப்பது,நடந்தது,நடக்கப் போவது என்னவென்றே தெரியாமல் மேலோட்டமான பார்வையை விடுத்து,அலசுவது உங்கள் போன்றோருக்கு அவசியமானது!வெறுமனே அலசுகிறேன் பேர்வழியென்று "துணி"அலசுபவது போல் அலசாதிருக்க வேண்டுகிறேன்_ஈழத் தமிழன்_

மாயாவி said...

ஈழம் பற்றிய உங்கள் புரிதல் கத்துக்குட்டி அளவிலேயே உள்ளது. இந்நிலையில் நீங்கள் ஈழத்தமிழர்க்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியது சரி என படவில்லை.

புலிகள்/ஈழத்தமிழர்கள் சரியா, பிழையா என்பதை காலம் உணர்த்தும்.

ஈழத்தமிழர்களை அழிக்க இந்தியா உதவியது இன்று இந்தியாவின் பார்வையில் சரியாக இருக்கலாம்.

ஆனால் ஸ்ரீலங்காவும் சீனாவும் சீவி வைத்த ஆப்பில் இந்தியா தானே ஏறி உட்கார்ந்தது அரசியல் முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

அதன் பலனை /விளைவைத் தெரிந்து கொள்ள இந்தியா வெகுநாள் காத்திருக்க தேவையில்லை!!!

இளங்கோ said...

இலங்கைத் தமிழர்கள் பற்றி அக்கறை உள்ளவர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர்.ஆனால் வைகோ போன்ற சிலர் தாங்கள்தான் அக்கறை உள்ளது போல் கருணாநிதி-ஜெயலலிதா அரசியலில் பிரச்சினையை சிக்க வைத்து தமிழக மக்கள் போக்கையே மாற்றி விட்டனர்.எம்ஜியார் ஆட்சியில் இருந்த போதும்,ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் மத்திய அரசோடு நெருங்கியவர்களாகவே இருந்தனர்.அப்போது அவர்களால் செய்ய முடியாத செயலை கருணாநிதி செய்யவில்லை என்று இலங்கை பிரச்சினையில் அவரையே திட்டி கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.உங்கள் வலைப் பதிவு வெளிப்படையானது.

Anonymous said...

ராஜீவை கொன்றது புலிகள் தான் எனபதற்கு என்ன ஆதாரம் ? ஆய்வு செய்த ஜெயின் கமிசன் இந்த கொலை வழக்கில் பல விஷயங்கள் / பலர் இன்னும் விசாரிக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்ல்கிறது.இந்திய அரசு அதை இன்னமும் கிடப்பிலே தான் போட்டுள்ளது .ஏன் ?

ஈழ தமிழரை ,அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க இந்திய அரசுக்கு இஸ்டமில்லை.அதானால் தான் இவ்வளவு கொடுமையையும் பார்த்து கொண்டு இருந்ததுடன் ,மேலை நாடுகள் தலையிடுவதையும் தடை பண்ணினார்கள். இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு ,அதில் நாம் தலையிட முடியாது என்று இப்போ சொல்பவர்கள் 1987 இல் எப்படி விமானத்தில் சென்று (இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் ) உணவு பொட்டலங்களை போட்டார்கள்.?
சரி போகட்டும் .ஈழ தமிழர்களை தான் காப்பாட்ற உதவ முடியாது. 500 தமிழக மீனவர்களை இலங்கை சிங்கள வெறி பிடித்த ராணுவம் சுட்டு கொன்றுள்ளார்களே ! இதற்க்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ள்ளது .?

ஆழம் தெரியாத விடயங்களில் காலை விடுவது நல்லதல்ல நண்பரே . உலக விசயங்களையும் சினமா ,கிரிக்கட் ,கம்பியூட்டர் தொழில் நுட்பம் என்று பீத்தும் இந்திய தமிழனுக்கு 20 மைல் தொலைவில் உள்ள ஒரு நாடில் நடக்கும் தமிழின மக்களின் பிரச்னை தெரியவில்லை.
இந்த லட்சணத்தில் பகிரங்க கடிதம் ! பரிதாபம்.!

யோகன்

Adriean said...

//உங்களுக்கு அழிவுதான். எனவே ஒரு கௌரவமான ஒப்பந்தத்துக்கு தயாராகுங்கள்` என்று பிரபாகரனை தமிழக தலைவர்கள் முன்கூட்டியே எச்சரித்திரிருக்க வேண்டும். //
அப்படி உண்மையை கூற கூடிய தமிழக தலைவர்களை தமிழ் இன துரோகிகள் என்று அழைக்கும் நிலையை தான் தமிழகத்து பதிவர்களும், வைகோ, சீமான் போன்றவர்களும் ஏற்படுத்தி வைத்திருந்தனர். பிரபாகரன் தோற்க்கடிக்கபட அசைக்கவே பட முடியாத வீரன் என்ற மாயையை ஏற்படுத்தி புலிகளை நன்றாக பப்பா மரத்தில் ஏற்றிவிட்டனர். பிரபாகரனின் தலைநகரம் கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நெருங்கவே முடியாது என்றார்கள்.ராணுவத்தால் கைப்பற்றபட்ட பின்பு புலிகள் தாங்களாகவே கிளிநொச்சியை கைவிட்டனர் என்றார்கள். இலங்கை விஷயத்தில் குற்றவாளிகூண்டில் நிறுத்தபட வேண்டியவர்கள்
1.பிரபாகரன்
2.தமிழக புலிகளின் ஆதரவாளர்கள்
3.தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்திய கலைஞர்

Anonymous said...

அன்பரே நீங்கள் ஒரு சிறந்த இந்திய பிரஜையாய் இருந்துகொண்டே இப்பதிவை பதிந்துள்ளீர்கள். உங்களை நாம் குறை சொல்லமாட்டோம் ஏனேனில் சினிமாவிலும் தரம் கெட்ட அரசியலிலும் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் நீங்கள். ஆதலால் மற்றவற்றை புரிந்து கொள்ளும் பகுத்தறிவு உங்களுக்கில்லை. பட்டறிவுள்ள எமக்கு உங்களைப் போன்றவர்களின் தவறான கருத்துக்களை திருத்தவும் முடியாதுள்ளது. ஏனேனில் உங்ளுக்கு உங்கள் அரசியல் வாதிகளுக்கு எமக்கும மேல் ஒருவனா என்ற கெளரவப் பிரச்சனை. ஈழத்தின் வரலாற்றை ஒருமுறை ஆழ்ந்து கவனியுங்கள். படியுங்கள். பிரபாகரன் என்ற மனிதரை குறை சொல்ல உங்கள் எவருக்கும் அருகதையில்லை. அவர் தனிமனிதரல்ல அவர் ஒரு இனத்தின் தன்மானத் தலைவர். சீனாவை சுட்டிக்காட்டி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கின்றீர்கள். இந்திய நாட்டிற்கு என்றும் சிங்கள அரசு பணிந்து போனதுமில்லை பயப்பட்டதும் இல்லை இன்று நேற்றல்ல காலம் காலமாக நடந்து வரும் ஒருநிகழ்வு. எம்மை எம் இனத்தை எம் காவல் தெய்வங்களை அழித்த பழியை மறைப்பதற்கு கதையவிழ்த்து விட்டுள்ளது இந்திய அரசு. தயவு செய்து உங்கள்அரசியல் வியாதிகளிடம் சொல்லி உங்கள் மணிணின் அந்த ஏழை மீனவர்களையாவது காப்பாற்றப் பாருங்கள். நாம் இந்தியா என்ற கேடு கெட்ட ஒரு நாட்டை நம்பி ஏமாந்து விட்டோம். நீங்களாவது இந்தியா, இறையாண்மை கத்தரிக்காய் என்று ஏமாறதிருப்பின் தப்பிப் பிழைப்பீர்கள். மறுபடியும் நாம எழுவோம். அன்று இந்தியா என்ற நாசகாரி நாட்டின் துணையின்றியே எழுவோம். இது நிச்சயம்.

மீன்துள்ளியான் said...

Please understand the issue before u comment.. Otherwise do not.. There are many things to babble..But do not babble in sensitive issues..

I was not able to bear the nonsense in this post and could not read completely.

YOGA.S.Fr said...

///தன்னால் இனி தம் மக்களுக்கு நல்லது செய்யமுடியாது என்பதை பிரபாகரன் உணர்ந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும்? இயக்கத்தை நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கண்காணாமல் போயிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு தர்மசங்கடம் விலகியிருக்கும். புலிகளின் மீதிருந்த அவப்பெயர் எல்லாம் பிரபாகரனோடு போய்விட, அதன்பிறகு அங்குள்ள தமிழர்களுக்காக குரல் கொடுக்க இந்திய தமிழர்களுக்கோ, இந்தியாவுக்கோ எந்த சங்கடமும் இருந்திருக்காது. இந்த யுத்தமும் இவ்வளவு சோகமாக முடிந்திருக்காது. ஆனால், நான் மட்டும் அழியமாட்டேன், அப்படி அழிந்தால், என் மக்களையும், கூடவே ஈழக்கனவையும் நிர்மூலமாக்கிவிட்டுதான் போவேன் என்று போயிருக்கிறார் பிரபாகரன்.////நல்லாயிருக்கு!தம்பி,முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் இலட்சியத்தை நோக்கிப் பயணித்த ஒரு தலைவன் இப்படி நினைத்திருப்பானா?இந்த வார்த்தைப் பிரயோகங்களிலிருந்தே உங்கள் (எங்கள்)தலைவர் பற்றிய புரிதல் இருக்கும் போது,இதற்கு மேலும் விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பது எருமை மாட்டின் மீது மழை பொழிவதற்குச் சமனானது!"இந்து" ராமின் தம்பியா நீங்கள்?

YOGA.S.Fr said...

///பல ஈழத் தமிழர்களின் குற்றச் சாட்டு என்ன வென்றால் ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு பழி வாங்க, இந்தியா சிங்களவனுக்கு துணை போனது என்பதுதான். இது என்ன சினிமாவா? 20 ஆண்டுகள் கழித்து செத்துப் போனவனின் மகன் தலையெடுத்து பழிவாங்குவதற்கு! அங்குள்ள தமிழரின் நலனுக்காக இல்லை என்றாலும், பிரபாகரனுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் பிரிவினைகோஷம் எழுப்பும் அபாயமும் இருந்தது. எனவேதான் இந்தியா பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்ற விஷயத்தை தீவிரமாக வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்தினாலும் அதற்கும் இந்திய ராணுவத்தின் உதவியைதான் இலங்கை கேட்கும் என்பதால் இந்தியா இந்த விஷயத்தில் கண்டும்காணாமல் இருந்தது. பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அந்த காரியத்தை இந்தியா எப்போதோ செய்திருக்கும். ஆனால் இந்த 20 ஆண்டுகாலத்தில் புலிகள் என்ன சாதித்தார்கள்? ஜெயிக்கவும் முடியவில்லை, ஒரு சமாதான உடன்படிக்கைக்கும் வரவில்லை. கடைசியில் சூழ்நிலை சிங்களவனுக்கு சாதகமாக திரும்பிவிட்டது./// ராஜீவ் காந்தியைக் கொன்றது யார் என்ற கேள்விக்கே இன்று வரை பதில் கிட்டாத நிலையில்,விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததன் மூலம்,உலகின் முக்கிய நாடுகள் எல்லாம் தடை விதிக்கக் காரணமானது இந்தியா!இலங்கை அரசே 2006 வரை தடை விதிக்காதிருந்தது உங்களுக்குத் தெரியுமா, நண்பரே?சமாதான உடன்படிக்கைக்கு புலிகள் வரவில்லையா?எத்தனையோ தடவைகள் இலங்கை இராணுவம் முன்னேற முடியாது முகாம்களில் முடங்கிய போது ஒரு பக்கச் சார்பாக போர் நிறுத்தம் செய்து,நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய போதும்,படைக்கலன்களை பெருக்கிக் கொள்ள இலங்கை அரசு பேச்சு வார்த்தையென்று காலத்தை இழுத்தடித்த கதை தெரியுமா நண்பரே?சந்திரிகா ஆட்சிக் காலத்தில் யாழ்.குடாவில் நிலை கொண்டிருந்த முப்பந்தையாயிரம் படையினரை அழிக்க விடுதலைப் புலிகள் தயாராயிருந்த போது,இலங்கை அரசுக்கு உதவி,தடுத்து நிறுத்தியது யாரென்று உங்களுக்குத் தெரியுமா,நண்பரே?அமைதிப் படை என்ற பெயரில் வந்த அழிப்புப் படை ஈழத்தில் புரிந்த கொடுமைகள் உங்களுக்குத் தெரியுமா,நண்பரே?தோல்விப் படை இந்தியா திரும்பிய போது தமிழக முதல்வர் ஏன் வரவேற்புக்குப் போகவில்லையென்று தெரியுமா,நண்பரே?என்றைக்குமே "எங்கள் தலைவன்" இந்தியாவை எதிரியாகப் பார்த்ததில்லை!இன்றும் கூட!உங்களுக்கு ஒரு வேண்டுகோள்;தயவு செய்து ஈழத் தமிழர்கள் வரலாற்றை,இலங்கையை பிரித்தானியர்கள் ஆக்கிரமித்ததன் முன்னும்,பின்னும் ஆற அமர படித்து விட்டு "அரசியல்" ஆய்வாளராக மாறுங்கள்!அது உங்களுக்கும்,ஏன் எங்களுக்கும் கூட நல்லது!என்றைக்குமே தமிழகத் தலைவர்கள் இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கை எழுப்ப மாட்டார்கள் என்பது எங்களுக்கே தெரிகையில் தமிழ் நாட்டிலிருக்கும் உங்களுக்குப் புரியவில்லை,தெரியவில்லை!அந்தோ பரிதாபம்!தமிழகத் தலைவர்கள் கோருவதெல்லாம் ஈழத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக,இறையாண்மையுடன் வாழ வேண்டும் என்பதையே!

Anonymous said...

naNparE

Anonymous said...

நண்பரே

நுனிப்புல் மட்டுமே மேயத்தெரிந்த நீங்கள் உங்களை உச்சபட்ச அறிவுஜீவியாக கருதிக்கொண்டிருப்பது போலத் தெரிகிறது. உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

வெத்து வேட்டு said...

அய்யா சத்தியமா நம்புங்க ராஜீவு தற்கொலை தான் செஞ்சாரு...
நம்புங்கய்யா நம்புங்க..
பிரபா எவ்ளோ பெரிய கெட்டிகாறாரு..வல்லவரு..அவர் ஒருபோதுமே தப்பே செய்யாதவரு
..நல்லவரு..நம்புங்கய்யா நம்புங்க..
நீங்க என்ன இப்படி பொசுகென்று அவரை ஒரு கூமுட்டை கணக்கா பதிவு போட்டுட்டீங்க
பாருங்க இப்போ எவ்ளோ பேரு பொங்கி எழுந்திட்டாங்க ...

ஜோதிஜி said...

நண்பா ராஜ நடராஜன் ஈழத்தமிழர் அல்ல. கொங்கு மண்டல தமிழர். அப்புறம் நீங்களே உங்கள் வரலாற்று அறிவு பற்றி புரிய வச்சுட்டீங்க. நன்றி.

Anonymous said...

ஒரு வேண்டுகோள்;தயவு செய்து ஈழத் தமிழர்கள் வரலாற்றை,இலங்கையை பிரித்தானியர்கள் ஆக்கிரமித்ததன் முன்னும்,பின்னும் ஆற அமர படித்து விட்டு "அரசியல்" ஆய்வாளராக மாறுங்கள்!அது உங்களுக்கும்,ஏன் எங்களுக்கும் கூட நல்லது! தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன்
திகதி: 08.11.2010
சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார்.
இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:
“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.
1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.
இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.
அவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.

Anonymous said...

மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.
இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.
அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா? இதை கருணாநிதி மறுப்பாரா?
1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை.
ஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.
குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.
அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன.
சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை.

இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.
வைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.
இறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

Anonymous said...

வல்லவன் வாழ்வான் என்பது போல ஈழத்தின் கதை முடிந்து போனது. புண்ணை நோண்டி மூக்கில மோந்து பாக்கிறதுல என்னய்யா வரப்போவுது? ரொம்பக் காயங்கள் நிறைய புண்கள்.

ஒண்ண முதல்ல புரிஞ்சுக்குங்க இந்தியா என்னைக்கும் ஈழத்தமிழனுக்கு ஆதரவா இருந்தது கிடையாது. பிரச்சனைய தூண்டி விட்டு இலங்கை மேல ஆதிக்கம் செலுத்துறது ஒன்னுதான் இந்தியாவோட கணக்கு. அதனாலதான் ஒன்னுக்கு பத்து இயக்கங்களுக்கு பத்துவிதமா பயிற்சியும் ஆயுதமும் கொடுத்தது. பின்னாடி மோதலுக்கும் வழிசெய்தது.

எல்லா இயக்கங்களும் இந்தியாவோட கட்டுப்பாடில இருந்திச்சு புலிகள் மட்டும் சொந்தக்கால்ல நிற்க முற்பட்டாங்க. ஒப்பந்தம் ஒன்னு போட்டு இலங்கைக்குள்ளார அமைதிப்படையா தமிழருக்கு சார்பாக நுழையிறமாதிரி நுழைஞ்சாங்க. புலிகளிண்ட ஆயுதத்த வாங்கினாங்க. அப்புறமா மத்த இயக்கத்த வைச்சு புலிகளை கொன்னாங்க. சிங்கள அரசோட சேந்து செயற்பட்டாங்க. ஆயுதமில்லாத புலித்தளபதிகள புடிச்சு சிங்களப்படையிடம் ஒப்படைச்சாங்க. அவங்களும் சயினைட்டு கடிச்சு செத்தாங்க. ஆயுதமில்லாத காலத்துல இந்திய அரசிடம் நீதி வேண்டி உண்ணாவிரதமிருந்து செத்தாங்க. இந்தியா என்ன செஞ்சிச்சு?

சீனா தலையிடும் பாகிஸ்தான் தலையிடும் என்னு இலங்கைக்கு சப்போட்ட போனாங்களா? நூத்துக்கு எண்பது வீதமான ஆயுதமும் இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும் தானே கொடுத்திச்சு. இன்னைக்கும் இந்தியாவ விட சீனாவோட ஆதிக்கமே இலங்கையில அதிகம். புலிகள அழிச்சதில பாகிஸ்தானோட ஆயுதங்கள் தான் மிகப்பெரிய பங்கு வகிச்சிருக்கு. இலங்கைய எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளாரயும் இந்தியா வைச்சிருக்க முடியாதெங்கிறது உண்மை.

சரி ஈழத்தமிழர விடுங்க இன்னைவரைக்கு 500 தமிழக மீனவர்கள இலங்கைப் படைகள் கொன்னிருக்கு. அம்மணமாக்கி அடிச்சு உதச்சிருங்காங்க இதே வேற நாட்க்காரங்க என்றா அந்த நாடுகள் எப்படி நடந்துகொள்ளும்? ஏன் அந்த மீனவங்க இந்தியன் இல்லியா?

ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முதல்ல இந்தியான்னா என்ன இந்தியா எங்கிற அரசு எந்த அச்சில இயங்குது? இந்த நூற்றாண்டில கணணி யுகத்தில பதினேழு மில்லியன் மக்கள் தீண்டத்தகாத மக்களா வாழ்ற ஒரு தேசத்தின் ஜனநாயகம் எப்படிப்பட்டது? இந்தியா ஜனநாயகத்தின் பொருள் என்ன? ஒரு இந்தியனா நாம இருக்கிறதில எவ்வளவுதூரம் ஜனநாயகவாதிய இருக்கிறம் என்று சிந்தியுங்க.

முதல்ல தாய்க்கு மகனா இருக்கிறது பின்னாடி ஊருக்கு நல்ல குடிமகனான இருக்கிறது. தமிழனா இரு பின்னாடி இந்தியனா இரு. உன்னோட நிலம் மொழி கலாச்சாரம் பண்பாடுக்கு முதல்ல மதிப்புக் கொடுத்து அதுக்கு முன்னுரிமை கொடுத்து அதுக்கு அப்புறமா இந்தியனா இருந்தா அது ஒரு முறை. அதெல்லாத்தையும் விட்டுப்போட்டு நான் இந்தியன் என்னு அலையிறீங்க பாருங்க உங்களுக்கு எதையும் புரியவைக்க முடியாது. இந்தியன் என்றதுக்கு முதல்ல அர்த்தம் கிடையாது. பல தேசங்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்புத்தான் இந்தியா அத முதல்ல புரிஞ்சுக்குங்க. நீ தமிழன். நான் தமிழன் அதுக்கு அப்புறமாத்தான் இந்தியன். இதான் உண்மை. இந்த உண்மைக்கு மதிப்புக்கொடுத்தா ஈழத்தமிழனும் சாகமாட்டான் தமிழக மீனவனும் சாகமாட்டான். உன்னோட தேசம் எது மக்கள் எது ன்னு கேட்டா இந்தியன் என்னு சொல்லுவ அப்புறமா சாகிற மீனவன் எல்லாம் தமிழனா சாவான். உன்னால தடுக்க முடியாது ஏன்னா நீ இந்தியன். ஒரு அர்த்தமும் கிடையாது.

சிவானந்தம் said...

@ ராஜ நடராஜன்

சிவா!காலையில் உங்கள் இடுகையைப் பார்த்தேன்.முழுவதும் சொல்லி இறுதி வரிகளில் தொபுக்கடீர் என்று இடுகை விழுந்து விட்டது என்பதால் மௌனமாக வந்து விட்டேன்.
ஈழம் குறித்து சொல்வதற்கும்,விமர்சிப்பதற்கும் நிறையவே உள்ளது.நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளதால் உங்கள் இடுகை குறித்து யாராவது கருத்தை முன் வைக்கிறார்களா என்று பார்க்கலாம்....>>>>

நண்பரே, ஒரு பிரச்சினை என்று எடுத்துகொண்டால் அதில் ஆதி, அந்தம், பக்க விளைவுகள், எதிர்விளைவுகள் என்று பல விஷயங்கள் இருக்கும். எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்தது புரிந்து கொண்டுதான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. அதுவும் வலைதளத்தில் கருத்து தெரிவிக்கும் நிதி ஆதாரமில்லாத சராசரி மனிதனுக்கு இன்னும் சிரமம்.

ஈழப்பிரச்சினை என்று எடுத்துகொண்டால், ஈழம் கேட்க காரணம் என்ன, இனி என்ன செய்யப்போகிறார்கள், இங்கே இந்தியா ஏன் மவுனமாக இருந்தது, பங்களாதேஷுக்கு உதவிய இந்தியா ஈழத்துக்கு ஏன் உதவில்லை, என்று எத்தனை விதமான கேள்விகள். எல்லா கேள்விக்கும் ஒரே பதிவில் பதில் சொல்வதோ அல்லது இதில் ஒரு விஷயத்தில் எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லை எனவே எதைபற்றியும் பேசமாட்டேன் என்று ஒதுங்கவோ முடியாது.

வலைத்தளம் என்பது மாற்றுக் கருத்துக்கான ஒரு தளம். புலிகளை பற்றி விமர்சித்தால் எப்படி இவர்கள் விளக்கம் தருகிறார்களோ, அதேபோல் இந்தியாவை பற்றிய விமர்சனம் வந்தபோது நான் பதிலளித்தேன். அவ்வளவுதான்.

Anonymous said...

வலைத்தளம் என்பது மாற்றுக் கருத்துக்கான ஒரு தளம். புலிகளை பற்றி விமர்சித்தால் எப்படி இவர்கள் விளக்கம் தருகிறார்களோ -ரா.சிவானந்தம்
இலங்கையில் புலிகள் இருந்த போது புலிகளை பற்றி விமர்சித்த பேராசிரியர்கள் தொடக்கம் பாட்டாளி வரை அத்தனை தமிழர்களையும் புலிகள் கொன்று குவித்தார்கள். குட்டிமணியையும் தங்கதுரையையும் காட்டி கொடுத்தது பிரபாகரன் என்பது இலங்கையில் ஒரு சிறுவன் கூட அறிவான்.

சிவானந்தம் said...

@ சுவாமி
திரு சிவானந்தம் சொல்கிறேன் என தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் புரித சரியில்லை. நீங்கள் இன்னும் பல விசயங்களை புரிந்து கொள்ளவில்லை. சில நுட்பங்களும் உங்களுக்கு புரிபடவில்லை, புரிய போவதும் இல்லை. ஏனென்றால் உங்கள் மனநிலை அப்படி இருக்கிறது. உங்களை போன்றவர்கள் கருத்து அரை வேகட்டு தனமாக இருக்கிறது. உங்கள் மொன்னையான தட்டையான கருத்துக்களில் எந்த சாரமும் இல்லை. ஏதோ பரபரப்புக்கு எழுதுவது போல இருக்கிறது.

திரு சுவாமி அவர்களே
இந்த பதிவை படித்தவுடம் நீங்கள் முதலில் போட்ட பின்னுட்டம் எப்படி இருக்கிறது?ஆனால் அடுத்து வந்த பின்னுட்டம் எப்படி எழுதியிருக்கிறீர்கள். முதலில் கோபத்தில் வார்த்தைகளை கொட்டிய நீங்கள், பின்னர் நிதானமாக சிந்தித்து எழுதியதில், கருத்துகளில் மாறுதல் இல்லையென்றாலும் வார்த்தைகளில் நிதானம் தெரிகிறது. அதே போல்தான் உங்களுடைய ஈழ சிந்தனையும் இருக்கிறது. தோல்வியின் கோபத்தில் இந்தியா மீது வார்த்தைகளை வீசுகிறீர்கள். பின்னர் இதுவும் மாறக்கூடும்.

நீங்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு பின்னோட்டம் இட்டு பின்னர் இது குறித்து மேலும் கருத்து சொல்ல நினைத்தீர்களோ, அதே போல் நானும் வேறு ஒரு பதிவில் உணர்ச்சிவசப்பட்டு சில வரிகளில் ஒரு பின்னோட்டம் இட்டு, அது வார்த்தை மோதல்களில் முடிந்து கடைசியில் நான் இந்த பதிவை போட நேர்ந்தது. பரபரப்புக்காக எழுதவேண்டும் என்றால் நான் நேரடியாகவே எழுதியிருப்பேன். சுத்தி வளைச்சி வரவேண்டிய அவசியமில்லை.

Hariharan said...

// முதல்ல தாய்க்கு மகனா இருக்கிறது பின்னாடி ஊருக்கு நல்ல குடிமகனான இருக்கிறது. தமிழனா இரு பின்னாடி இந்தியனா இரு. உன்னோட நிலம் மொழி கலாச்சாரம் பண்பாடுக்கு முதல்ல மதிப்புக் கொடுத்து அதுக்கு முன்னுரிமை கொடுத்து அதுக்கு அப்புறமா இந்தியனா இருந்தா அது ஒரு முறை. // Mr. Siva, this is the statement I want to repeat it to you. when a maharastrian, biharian, bengali, all are living with their identity why tamil people alone has to loose their tamil identity and vouch as a indian. please first live as tamil then give your voice for the nation otherwise we have to polish the shoes of some foolish politicians.

சிவானந்தம் said...

@Thekkikattan...
அப்புறம் எதுக்கு இது மாதிரி ஒரு பதிவு!!?? ஆழமான கட்டுரை ஒன்று எழுதணும்னா அதுவும் இது போன்ற சிக்கலான அரசியல் கட்டுரைகள், முதலில் நாம் அதனைப் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அறிந்து கொள்ளும் வரையில் அமைதியாக இருக்கலாம். என்பது என்னோட நிலைப்பாடு.>>>

ஈழப்பிரச்சினையின் பலவிதமான பரிமாணங்களில் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது இலங்கைத்தமிழனின் கடமை. ஈழம் தமிழர்களோடு சம்பந்தப்பட்டதால் நாமும் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

அதேசமயம், ஒரு பொது விவாதத்தில் பல விஷயங்கள் அலசப்படும்போது நம்மால் பதில் சொல்லக் கூடிய கேள்வி வந்தால், அதற்கு நாம் பதிலளிக்கிறோம். அதுபோன்றதுதான் இந்த பதிவும். எனவே, இந்தியாவின் பங்கு, அதன் தடுமாற்றம் போன்றவை விமர்சனதிற்கு வந்தபோது, இங்கே என்னால் பதிலளிக்க முடியும் என்பதால், நான் பதிலளித்தேன்.

அதுசரி. இன்று உலகிலேயே அதிகம் விமர்சிக்கப்படும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவை விமர்சிப்பவர்கள் எல்லாம் அமெரிக்க வரலாறை தெரிந்து கொண்டா விமர்சிக்கிறார்கள்?

YOGA.S.Fr said...

அன்பர் சிவா அவர்கள் பார்வைக்கு;ஈழத் தமிழராகிய எங்கள் பிரச்சினை என்னவென்று எங்களுக்கு(ஈழத்தமிழருக்கு)தெரியும்!தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களே!நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு உண்மையான நிலை(ஈழப் பிரச்சினை பற்றி)தெரியாது.காரணம்,மறைக்கப்படும் உண்மைகள்!ஊடகங்களால்,குறிப்பாக பார்ப்பனப் பத்திரிகைகள் கூடவே ஆட்சியிலிருக்கும்(என்று சொல்லிக் கொள்ளும்)அரச ஆதரவு ஊடகங்கள்!விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசு உட்பட இன அழிப்புக்குத் துணை போன உலக நாடுகள் எல்லாமே ஆதரவளித்த முள்ளி வாய்க்கால் அனர்த்தம் பற்றி வாயே திறக்காது,தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே மறைக்கப்பட்ட உண்மைகள்!மானாட மயிலாடவும்,நீயா நானாவும் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது தமிழ் நாட்டு உறவுகளை உறங்கு நிலையில் வைத்திருந்தன!முத்துக்குமார் தீக்குளித்ததையே குடும்பக் கஷ்டத்தால் தீக்குளித்ததாக பிரச்சாரம் செய்த பத்திரிகைகள்,ஈழப் பிரச்சினையின் அடி,முடி தேடுமா என்ன?போரை நிறுத்த வலியுறுத்திஆர்ப்பாட்டம் செய்யவே அனுமதிக்காத மானில அரசு மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டதன் பலனை அனுபவிக்கும் காலம் நெருங்கி விட்டது!இவ்வாறான ரா.சிவானந்தம் போன்றோரின் அனுபவமற்ற எழுத்துக்களுக்கு மாறாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களால் ஒரு சிலருக்காவது ஈழப் பிரச்சினையின் தாற்பரியம் புரிந்தால் நல்லதே!

YOGA.S.Fr said...

////அதுசரி. இன்று உலகிலேயே அதிகம் விமர்சிக்கப்படும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவை விமர்சிப்பவர்கள் எல்லாம் அமெரிக்க வரலாறை தெரிந்து கொண்டா விமர்சிக்கிறார்கள்?/////அமெரிக்கா என்ன அமெரிக்கா?கடலோடி வஸ்கொடகாமா கண்டு பிடித்த தேசம்!அங்கிருந்த பழங்குடி மக்களாகிய செவ்விந்தியர்களை விரட்டி விட்டு வந்தேறு குடிகளால் ஆளப்படும் தேசம்!அதனால் தான் அபிவிருத்தியை இலக்கு வைத்து ஆண்டுக்கு ஐம்பதாயிரம் குடியேறிகளை வரவேற்கிறார்கள்!அதாவது,தேர்ச்சி பெற்ற அடிமைகளை ஏற்றுக் கொள்கிறார்கள்!மேலும்,உருப்படியாக இருக்கும் நாடுகளை தங்கள் வசதிக்காக பணத்தைக் காட்டி சிண்டு முடிந்து பலன் பெற்றுக் கொள்வார்கள்!ஏதோ அமெரிக்கா என்று பூச்சாண்டி காட்டுகிறீர்கள்?இந்த நாரதர் வேலையெல்லாம் துனிசியாவில் நாற்றம் பிடித்து எகிப்து வரை வந்து யேமன்,அல்ஜீரியா,வரை பரவியிருக்கிறது!பட்டியலில் இன்னும் எத்தனையோ????????????????

சிவானந்தம் said...

@Yoga.s.FR
ராஜீவைக் கொன்றது யாரென்பது இன்று வரை அவிழாத முடிச்சு!>>>>>>

ராஜீவ் படுகொலையை ஒரு துன்பவியல் சம்பவம் என்று வெளிப்படையாக சொன்னதன் மூலம் மறைமுகமாக அந்த பழியை பிரபாகரன் ஏற்றுகொண்டார். இருந்தாலும் இன்னமும் நீங்கள் முழுபூசணிக்காய சோத்துல மறைக்க பாக்கறீங்க.

அன்றே"பிரபாகரனைப் போட்டுத் தள்ள ராஜீவ் முடிவெடுத்தார்!>>>

இதை உண்மை என்றே ஏற்றுகொள்வோம். ஆனால் இங்கே ஒரு முரண்பாட்டை கவனித்தீர்களா? இந்திய அமைதிப்படையை எதிர்த்ததால் பிரபாகரனை அழிக்க இந்தியா முயன்றது. ஆனால் அதைவிட பெரிய குற்றமாக இந்திய பிரதமரை படுகொலை செய்தபின், பிரபாகரனை அழிக்க இந்தியா 20 ஆண்டுகளாக எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. புலிகள் இயக்கத்தை சர்வதேச அளவில் தடை செய்ய மட்டுமே முயன்றது. அதாவது உங்களை ஒருவன் ஆயிரக்கணக்கில் ஏமாற்றினால் அவன் கையை உடைக்க போவீர்கள். ஆனால் லட்சக்கணக்கில் ஏமாற்றினால் கண்டுக்காமல் விட்டுவிடுவீர்கள். என்ன லாஜிக் இது!

<<<<<< இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானிலிருந்து பங்காள தேசத்தை பிரித்துக் கொடுக்க அன்னையால் முடிந்தது! ஆனால்,இன்று வரை அறுபத்து மூன்று ஆண்டுகளாக நசுக்கப்படும்,ஒடுக்கப்படும் ஈழத் தமிழினத்துக்கு "சுதந்திரம்"அல்ல வாழ்வுரிமையைக் கூடப் பெற்றுக் கொடுக்க இந்திய இறையாண்மை தடையாக இருக்கிறது!>>>>

இங்கே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடமிருந்து சுதந்திரம் கேட்கிறான். முஜிபுர் ரஹ்மான் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் தனது பிரிநிதிதுவத்தை நிருபித்திருந்தார். முக்கியமாக அவர் தனது சொந்த சகாக்களையே கொலை செய்து அவப்பெயரை பெற்றிருக்கவில்லை. அதைவிட முக்கியமாக, பாகிஸ்தானின் நட்பு நாடாக இருந்தும் அமெரிக்காவும், சீனாவும் இந்த போரில் இருந்த நியாயத்தை புரிந்து இந்தியாவை எதிர்க்கவில்லை. இந்தியாவிலும் பிரிவினைவாதம் தலைதூக்கவில்லை. எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது.

<<<< பிரச்சார பீரங்கியாக "உங்கள்"போன்றவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரியும் சிங்களப் பெரும்பான்மையரசுக்கு (கூலி பெறாமலே) கடமை புரியத் தயாராயிருக்கையில் என்ன சொல்லி என்ன? இலங்கையில் நடப்பது,நடந்தது,நடக்கப் போவது என்னவென்றே தெரியாமல் மேலோட்டமான பார்வையை விடுத்து,அலசுவது உங்கள் போன்றோருக்கு அவசியமானது!வெறுமனே அலசுகிறேன் பேர்வழியென்று "துணி"அலசுபவது போல் அலசாதிருக்க வேண்டுகிறேன்_ஈழத் தமிழன்>>>>>

பிரபாகரனின் சில கொள்கைகள் ஈழ போராட்டதிற்கு அவப்பெயரையும், அதன் வெற்றிவாய்ப்பையும் பறித்துவிட்டது என்பதுதான் என் விமர்சனம். ஆனால் அதற்காக சிங்களவனுக்கு நான் கொடி பிடிப்பேன் என்று நீங்கள் நினைத்தால், என்னால் இதற்கு பதில் சொல்லமுடியாது.

சிவானந்தம் said...

@ மாயாவி
ஈழத்தமிழர்களை அழிக்க இந்தியா உதவியது இன்று இந்தியாவின் பார்வையில் சரியாக இருக்கலாம்.>>>>

சின்ன திருத்தம். புலிகளை அழிக்க...

ஆனால் ஸ்ரீலங்காவும் சீனாவும் சீவி வைத்த ஆப்பில் இந்தியா தானே ஏறி உட்கார்ந்தது அரசியல் முட்டாள்தனத்தின் உச்சகட்டம். அதன் பலனை /விளைவைத் தெரிந்து கொள்ள இந்தியா வெகுநாள் காத்திருக்க தேவையில்லை!!!>>>>>

இந்திய பிரதமரை கொலை செய்ததன் மூலம் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டீர்களே. அதைதானே சொல்கிறீகள். கண்டிப்பாக. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பனிமலர் said...

இது எனது கண்டனம், அதிகம் எழுத வேண்டி இருந்ததால் தனி பதிவாகவே எழுதிவிட்டேன்.

http://panimalar.blogspot.com/

Anonymous said...

//அமெரிக்கா என்ன அமெரிக்கா?
இருக்கும் நாடுகளை தங்கள் வசதிக்காக பணத்தைக் காட்டி சிண்டு முடிந்து பலன் பெற்றுக் கொள்வார்கள்!ஏதோ அமெரிக்கா என்று பூச்சாண்டி காட்டுகிறீர்கள்? //

சிவா, கவனியுங்கள் !மேலே இப்படி சொன்ன புலி ஆதரவாளர்கள் தான் நாடுகடந்த அரசு, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு என்ற பெயர்களில் அமெரிக்காவின் காலை பூஜை செய்கிறார்கள்.

YOGA.S.Fr said...

ராஜீவ் கொலை "துன்பியல் நிகழ்வு"என்று எங்கள் தலைவரா சொன்னார்?முழுப் பூசணிக்காயை சோற்றில் நாம் மறைக்கிறோமா?கற்றுக் குட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்வதே பிழைப்பாகி விட்டது!///இங்கே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிடமிருந்து?!சுதந்திரம் கேட்கிறான்!///சரி அப்படியே இருக்கட்டும்!1977-ல் இலங்கையில் நடந்த தேர்தலில் தமிழீழத் தனியரசே தமிழருக்கு வேண்டுமென்று எங்கள் தந்தை செல்வா தலைமையில் ஈழத் தமிழர் தீர்ப்பளித்தார்களே?அது தெரியுமா உங்களுக்கு?பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற போது,பிரித்தானியரால் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையில் தமிழர்களுக்கான "சுய நிர்ணய உரிமை" பறிக்கப்பட்டது தெரியுமா, உங்களுக்கு?பெரும்பான்மையினமாக இருந்த,இருக்கும் சிங்கள இனம் மொழியுரிமை,நிலவுரிமையென்று படிப்படியாகப் பறித்து வருவது தெரியுமா,உங்களுக்கு?சாத்வீக முறையில் போராடிய ஈழத் தமிழர்களை ஆயுத முனையில் அடக்கி,ஒடுக்கியது தெரியுமா,உங்களுக்கு?1948-முதல் 1972 வரை அகிம்சை முறையில் போராடிக் களைத்துப் போன கதை தெரியுமா,உங்களுக்கு?இந்திய அமைதிப் படை இலங்கையில் காலூன்றியிருந்த போது கூட காந்தியின் அகிம்சை முறையில் உண்ணா நோன்பிருந்து இறந்தானே தீபன்,அது ஏன் என்று தெரியுமா,உங்களுக்கு?காந்தி தேசம் காப்பாற்றுமென்று உயிர் பிரியும் வரை நம்பியிருந்தானே?///பிரபாகரனை அழிக்க இருபது ஆண்டுகளாக இந்தியா முயற்சிக்கவில்லை?!//அது ஏனென்று கூட உங்கள்"பேரறிவுக்குப்"புரியவில்லை!அந்த இருபது ஆண்டு கால "ஆட்சி"யை இரை மீட்டுங்கள்!புரியும்!வல்லரசுக் கனவில் மிதக்கும் பாரத தேசம்,கேவலம் ஒரு ஆயுதக் குழுவிடம்(இந்திய அரசின் பார்வையில்)தோல்வியுற்றது என்ற அழிக்க முடியாத கறையை அழிக்க வேண்டுமென்றே கங்கணம் கட்டி,ஓர் இலட்சம் உயிர்களை துச்சமென மதித்து பிரபாகரனை மட்டுமல்ல,அவருடன் கூட இருக்கும் ஈழ மக்களையும் கொன்று,இன்று ஆசுவாசப்படுத்திக் கொண்டது என்பதே உண்மை!எங்கள் உடலை வருத்தி உண்ணா நோன்பிருந்த எங்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்து,ஆயுதங்கள் மேல் காதல் கொள்ள வைத்ததே,இந்த ஆட்சியாளர்கள் தான்!உங்களுக்குத் தெரியுமா,1958 முதல் 1983 வரை இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர் உயிர்கள் பறிக்கப்பட்டதும்,சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டதும்,எங்கள் ஈழப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதும்?1983க்குப் பின்னர் அவ்வாறான ஒரு இனக்கலவரம் நடைபெறவேயில்லை,தெரியுமா உங்களுக்கு?"ஆயுதம்" காத்தது!!!!இப்போ இது போதும்!அருணாச்சலப் பிரதேசத்தைக் காக்கும் வழியைப் பாருங்கள்!

YOGA.S.Fr said...

//////பிரபாகரனின் சில கொள்கைகள் ஈழ போராட்டதிற்கு அவப்பெயரையும், அதன் வெற்றிவாய்ப்பையும் பறித்துவிட்டது என்பதுதான் என் விமர்சனம். ஆனால் அதற்காக சிங்களவனுக்கு நான் கொடி பிடிப்பேன் என்று நீங்கள் நினைத்தால், என்னால் இதற்கு பதில் சொல்லமுடியாது./////நண்பரே நீங்கள் நினைப்பது போல் அல்ல!அவர் நம்பினார்,நம்பினார் நம்பிக் கொண்டேயிருந்தார்!அமைதிப் படையை நம்பினார்!நோர்வேயை நம்பினார்! மேற்குலகை நம்பினார்!ஏன்?கடைசி வரை"இந்தியா"வை நம்பினார்!உங்களை நம்பினார்!நம்பிக்கை தானே வாழ்க்கை,நண்பரே?

சிவானந்தம் said...

இங்கே பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது பொதுவான பதில் இது. பணிசுமை மற்றும் இணையத்தின் தேவை காரணாமாக எனது பதிவுகளும், பின்னூட்டத்திற்கான பதில்களும் சற்று தாமதமாகவே வரும். ஒரு வாரமானாலும் நான் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன்.

சிவானந்தம் said...

@ இளங்கோ

//////இலங்கைத் தமிழர்கள் பற்றி அக்கறை உள்ளவர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர்.ஆனால் வைகோ போன்ற சிலர் தாங்கள்தான் அக்கறை உள்ளது போல் கருணாநிதி-ஜெயலலிதா அரசியலில் பிரச்சினையை சிக்க வைத்து தமிழக மக்கள் போக்கையே மாற்றி விட்டனர்.எம்ஜியார் ஆட்சியில் இருந்த போதும்,ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் மத்திய அரசோடு நெருங்கியவர்களாகவே இருந்தனர்.அப்போது அவர்களால் செய்ய முடியாத செயலை கருணாநிதி செய்யவில்லை என்று இலங்கை பிரச்சினையில் அவரையே திட்டி கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.உங்கள் வலைப் பதிவு வெளிப்படையானது.///////

பழைய கதையை விடுங்கள். தற்போது நடக்கும் போரில் புலிகள் மட்டும் அழியப்போவதில்லை. அங்குள்ள மக்களுக்கும் பாதிப்பு, ஈழப்போருக்கும் பெரும் பின்னடைவு ஏற்ப்படும் என்பதால், தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனை எச்சரித்திருக்க வேண்டும். இங்கே முதல்வராக கலைஞர் இருப்பதால் மற்ற அரசியல்வாதிகளை விட அவருக்குதான் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. இந்திய தமிழர்களின் எதிர்புணர்வை காட்டி மத்திய அரசின் மூலம் இலங்கையின் வேகத்தை குறைத்திருக்க வேண்டும். அதேசமயம் பிரபாகனுக்கும் நிதர்சனத்தை புரியவைக்க முயற்சித்திருக்க வேண்டும்.

YOGA.S.Fr said...

ஒரு வாரமல்ல ஒரு மாதம் ஏன் ஒரு வருடம் கூட எடுத்துக் கொள்ளுங்கள்!யார் வேண்டாமென்றார்கள்?ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது,ஈழ மக்களின் வலியையோ,ஆதங்கத்தையோ நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்!இது உங்கள் தளம்!அதனால் நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதி விட்டுப் போகலாம்!நீங்கள் என்றில்லை இங்கே புலம்பெயர் நாடுகளில் கூட(இப்படிச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்குப் புரியாமலிருக்கலாம்."மேற்குலக நாடுகள்" என்று எடுத்துக் கொள்ளுங்கள்)நூற்றுக் கணக்கான இணைய ஊடகங்கள் உள்ளன!அவற்றில் பொறுக்கியெடுத்தால் ஒன்றோ இரண்டோ இணையங்களே தார்மீகக் கடமையை நிறைவேற்றுகின்றன!இவையனைத்தும் ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமானவை!இலங்கையரசுக்கு(உங்களைப்போல்)வக்காலத்து வாங்கும் இணையப் பத்திரிகைகளே பெரும்பான்மையானவை!இருப்பினும் ஈழ மக்களின் அசையாத,அடங்காத சுதந்திர வேட்கையின் வெப்பத்தை தாங்க முடியாதவையாகவே அவை உள்ளன என்பது வேறு விடயம். அதிகம் எழுத எனக்கும் முடியாது!இணையத்திலேயே தூங்க முடியுமா,என்ன?வேலைப்பழு எங்களுக்கும் உண்டு!இத்துடன் முடித்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன்!ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி வருவோருக்கு என்ன சொல்லி, என்ன ஆகி விடும்?விடை பெறுகிறேன்,நண்பரே! நன்றி! வணக்கம்!!!!

சிவானந்தம் said...

@ Anonymous
/////ராஜீவை கொன்றது புலிகள் தான் எனபதற்கு என்ன ஆதாரம் ? ஆய்வு செய்த ஜெயின் கமிசன் இந்த கொலை வழக்கில் பல விஷயங்கள் / பலர் இன்னும் விசாரிக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்ல்கிறது.இந்திய அரசு அதை இன்னமும் கிடப்பிலே தான் போட்டுள்ளது .ஏன் ?>>>>>>

வேண்டாம் விட்டுவிடுவோம். ராஜிவ்காந்தி தற்கொலைதான் செய்துகொண்டார். போதுமா!

//////ஈழ தமிழரை ,அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கேட்க இந்திய அரசுக்கு இஸ்டமில்லை.//////

சிறையில் ஒரு கைதி இன்னொரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன். இவர்மீது பல வழக்குகள் இருக்கிறது. ஆனால் ஒரு வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. இந்த குற்றத்தை அவர் செய்திருக்கிறார். எனவே தண்டனை உறுதி என்று இருந்திருக்கிறார். ஆனால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டதை அவராலேயே நம்ப முடியவில்லை. அவருடைய வக்கீலை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்தார். இன்னொரு வழக்கில் ஒரு கைதி குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனு ஒன்றை எழுதித்தரச் சொன்னார். `இந்த குற்றத்தை நீ செய்தாயா?` என்று நான் கேட்டதற்கு கேட்டதற்கு `இல்லை` என்று சொன்னார். அப்புறம் எதுக்காக குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். இவரை பெயிலில் எடுக்க ஆளில்லை. சில வழக்குகள் தண்டனை 6 மாதம் என்றாலும் வழக்கு வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படும். எனவே குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவர் விடுதலையாகிவிடலாம். எனவே ஒப்புகொள்கிறார்.

விதியை பார்த்தீர்களா? தப்பு செய்தவன் தப்பித்துவிட்டான். தப்பு செய்யாதவன் சட்டப்படி குற்றவாளியாகி தண்டனை அனுபவிக்கிறான். ஒருவனின் வக்கீல் திறமைசாலி. இன்னொருவனுக்கு சூழ்நிலை சரியில்லை.

ஈழத்தமிழர்களின் போராட்டம் நியாமானதுதான். ஆனால் அவர்களுக்கு சூழ்நிலையும் சரியில்லை, அவர்களுடைய வக்கீலும் (பிரபாகரன்) சரியில்லை.


/////சரி போகட்டும் .ஈழ தமிழர்களை தான் காப்பாட்ற உதவ முடியாது. 500 தமிழக மீனவர்களை இலங்கை சிங்கள வெறி பிடித்த ராணுவம் சுட்டு கொன்றுள்ளார்களே ! இதற்க்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ள்ளது .?///////

இதை தனியே ஒரு பதிவில்தான் அலசவேண்டும்.

//////ஆழம் தெரியாத விடயங்களில் காலை விடுவது நல்லதல்ல நண்பரே . உலக விசயங்களையும் சினமா ,கிரிக்கட் ,கம்பியூட்டர் தொழில் நுட்பம் என்று பீத்தும் இந்திய தமிழனுக்கு 20 மைல் தொலைவில் உள்ள ஒரு நாடில் நடக்கும் தமிழின மக்களின் பிரச்னை தெரியவில்லை.
இந்த லட்சணத்தில் பகிரங்க கடிதம் ! பரிதாபம்.!//////////////

இதையே கொஞ்சம் மாற்றி சிந்தித்து பாருங்கள். 20 மைல் தொலைவில் உள்ள தமிழனுக்கு உங்கள் பிரச்சினையை உங்களால் அல்லது உங்கள் வக்கீலால் புரியவைக்க முடியவில்லை. ஆனால் உலகம் உங்கள் குரலைகேட்டு ஓடி வரவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறீர்கள். எனக்கும் நீங்கள் சிந்திக்கும் விதத்தை பார்க்கும் போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.

சிவானந்தம் said...

@ Anonymous
/பட்டறிவுள்ள எமக்கு ////

இந்த அறிவை நீங்கள் சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.

சிவானந்தம் said...

@ மீன்துள்ளியான்

/////Please understand the issue before u comment.. Otherwise do not.. There are many things to babble..But do not babble in sensitive issues../////

i gave enough clarification in this debate. a issue will have lot of ramification. only scholars have to analyse thoroughly.

///I was not able to bear the nonsense in this post and could not read completely./////

this is a common disease we human always suffer. we would like to read, hear what we like. whether you like it or not but always there will be a counter point.

சிவானந்தம் said...

@ YOGA.S.பிர

/////ராஜீவ் கொலை "துன்பியல் நிகழ்வு"என்று எங்கள் தலைவரா சொன்னார்?முழுப் பூசணிக்காயை சோற்றில் நாம் மறைக்கிறோமா?கற்றுக் குட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்வதே பிழைப்பாகி விட்டது!/////


The rebel leader described Rajiv Gandhi's assassination as a "tragic incident that happened 10 years ago".
http://news.bbc.co.uk/2/hi/south_asia/1923580.

When asked about the assassination, the 47-year-old guerrilla leader, after consulting his chief aide Anton Balasingham, said: "It was a tragic incident."
http://www.rediff.com/news/2002/apr/11ltte.htm

கத்துக்குட்டிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம். இதற்கு தமிழாக்கம் செய்தால் போதும்.

சிவானந்தம் said...

@ ராஜ நடராஜன்
//////சிவா!மறுபடியும் பின்னூட்டம் பக்கம் வந்தீங்கன்னா நீங்க சொல்ற மாதிரி இந்தியக் கொள்கைக்கு பெயர் விவேகம் இல்ல.அதுக்குப் பேர் Double track policy./////



நண்பரே! நீங்கள் இந்தியாவை தாக்கு தாக்கு என்று தாக்குவதால் உங்களை ஈழத்தமிழர் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்.

அரசியல் என்றாலே சுயநலம் என்றாகிவிட்டது. இதில் தனிப்பட்ட சுயநலம் தேசம் சார்ந்த சுயநலம் என்று இருவிதம் இருக்கிறது. தேசம் சார்ந்த சுயநலத்தை நாம் அதிகம் விமர்சிக்கமுடியாது.

இங்கே ஈழத்தமிழர்களின் பிரச்சினையை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது அலட்சியமாக இருகிறார்கள் என்ற கோவம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு வழக்கில் நீங்கள் தோற்றுவிட்டால் நீதிபதியை குறை சொல்லக்கூடாது. நீங்கள் சரியான முறையில் வாதாடவில்லை என்றும் சொல்லலாம். காலம் கடந்துவிட்டது என்றாலும் `இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்` என்று ஒரு பதிவு போடுங்கள். அதையும் அலசுவோம். துணி அலசல் அல்ல. நிஜமாகவே.

Anonymous said...

///நண்பரே! நீங்கள் இந்தியாவை தாக்கு தாக்கு என்று தாக்குவதால் உங்களை ஈழத்தமிழர் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்.///சபாஷ்!!!!!!!!!!!!!!!ஈழத் தமிழனுக்கு ஒரு நீதி!இந்தியத் தமிழனுக்கு வேறு நீதி! வாழ்க,ஜனநாயகம்!

Anonymous said...

///நண்பரே! நீங்கள் இந்தியாவை தாக்கு தாக்கு என்று தாக்குவதால் உங்களை ஈழத்தமிழர் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்.///சபாஷ்!!!!!!!!!!!!!!!ஈழத் தமிழனுக்கு ஒரு நீதி!இந்தியத் தமிழனுக்கு வேறு நீதி! வாழ்க,ஜனநாயகம்!

ராஜ நடராஜன் said...

@ ராஜ நடராஜன்
//////சிவா!மறுபடியும் பின்னூட்டம் பக்கம் வந்தீங்கன்னா நீங்க சொல்ற மாதிரி இந்தியக் கொள்கைக்கு பெயர் விவேகம் இல்ல.அதுக்குப் பேர் Double track policy./////

இது என்ன வெட்டி ஒட்டல் பாணி?

சரி அதே பாணியில் எனது பதிவின் பின்னுட்டத்தில் சொன்னதை இங்கேயும் வெட்டி ஒட்டுகிறேன்.
--------------------------------
சிவா!உங்கள் மீள் வருகைக்கு நன்றி.இந்தியாவை தாக்குவதன் காரண காரியங்கள் என்ன என்பதனை எனது பதிவுகளும்,கூடவே பதிவுலகில் நிலவும் பொதுக்கருத்துக்களும் விளக்குமென நினைக்கிறேன்.

தாக்குவதாலேயே எனது இந்திய நேசத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.பொது வாழ்வில் உலவும் சுயநலவாதிகளை விட எனது தேசப்பற்று அதிகம் என்பதனை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.அதன் பொருட்டே எதிர்வினைப் பின்னூட்டங்களும் பதிவுகளும் கூட.

பின்னூட்டம் நீளம் கருதி அடுத்த பின்னூட்டத்தில் தொடருகிறேன்.

ராஜ நடராஜன் said...

அவரவர் மனம் சார்ந்த பல தரப்பட்ட கருத்துக்கள் இணையத்தில் முன்வைக்கப்படுகின்றன.குங்குமம்,தினத்தந்தியென்று படித்த காலத்தில் அதுவே வேத வாக்காக இருந்தது.இப்பொழுது கருத்துக்கள் பல பரிணாமங்களாக விரிவதாலும்,அனுபவங்களும் கோடுகள் போடுவதாலும் தராசின் எடை எந்தப்பக்கம் ஏன் உயர்கிறது,குறைகிறது என்பது புரிகிறது.

கிளிநொச்சி பத்திரிகையாளர்கள் கூட்டத்தில்தான் ராஜிவின் மரணம் ஒரு துன்பியல் சம்பவம் என்று பிரபாகரன் கூறினார்.பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் பிரபாகரனின் கருத்து பற்றியும் அவரைப்பற்றியும் நான் எனது பதிவில் முன்பு எதிர்வினை செய்தவன்.

ஆனால் அப்போதைய காலகட்டத்தையும்,மே மாதம் 2009ன் கால அவலத்தையும் ஒரே எடையில் நிறுத்த இயலுமா சிவா!

இதோ எகிப்துக்காரனுக்கும் இன்னும் மனித உரிமைகளும்,சுதந்திர குரல்கள் எழுமிடமெல்லாம்தான் நான் குரல் கொடுக்கிறேன்.மொழியென்ற ஒரே காரணத்துக்காக என்னை ஈழச்சார்பாளன் என்ற வட்டத்துக்குள் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை.ஆனாலும் உலகின் முன் மனித அவலங்கள் முறையாகப் போய்ச் சேராத காரணத்தினாலும்,உலகரங்கில் ஒரு பேரவலம் இலைமறை காயாக மறைக்கப்பட்டு விட்ட காரணத்தாலும் இணையம் மூலமாவது உண்மைகள் வெளி வருகிறதே என்பதாலும், ஈழமும் மனித நேயத்துக்கான தேவை என்பதாலும் முன்பே சொன்னது போல் மொழியென்ற காரணத்தால் நீங்கள் என்னை ஈழத்தமிழர் என்று முத்திரை குத்தினாலும் அது எனக்குப் பெருமையே.

ஈழம் குறித்தும்,இந்தியம் குறித்தும் நிறைய படியுங்கள்.இணையத்தில் அத்தனையும் கொட்டிக்கிடக்கிறது.அதுவே சரியான புரிதலை உங்களுக்கு தரும்.

உங்களின் பதிவுக்கு எதிர்வினை செய்தவர்களே அதிகம் என்பது தெரிகிறது.அதில் நானும் ஒருவனாகவே

ராஜ நடராஜன் said...

Double track policy க்கு தமிழில் அர்த்தம் என்ன தெரியுமா?

புள்ளைய கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது.

சிவானந்தம் said...

Anonymous said...
///சபாஷ்!!!!!!!!!!!!!!!ஈழத் தமிழனுக்கு ஒரு நீதி!இந்தியத் தமிழனுக்கு வேறு நீதி! வாழ்க,ஜனநாயகம்!////

ஒரு நண்பர், ராஜ நடராஜன் ஈழத்தமிழர் அல்ல. கொங்கு மண்டலத் தமிழர் என்று குறிப்பிட்டு இந்த வரலாறுகூட உங்களுக்கு தெரியவில்லையே என்று கிண்டலடித்திருந்தார். சரி, இந்த வரலாரையாவது நான் தெரிந்துகொண்டேன் என்றுதான் குறிப்பிட்டேன். இது ஒரு தவறா? நான் மனிதர்களை ஜாதி, மதம், இனம் என்று பிரித்து பார்ப்பவன் அல்ல.

Anonymous said...

"கோயம்பேடு" மார்க்கட்டில பூசணிக்கா முழுசா கெடைக்குமா?கிலோ என்ன வெல?நா புடிச்ச மொயலுக்கு மூணு காலு!

Bibiliobibuli said...

சிவா,
உங்கள் இடுகையை பாதிக்கும் மேல் படிக்கமுடியவில்லை. காரணம், நான் ஓர் ஈழத்தமிழ் என்பது மட்டுமே.

இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தியா பற்றி நியாயமான பார்வைக்கு ஏன் நீங்கள் அருந்ததி ராய் போன்றோரின் எழுத்தை படிக்கக்கூடாது. இது கூட ஓர் பரிந்துரை தான்.

Anonymous said...

உலகத்தில் இருந்த மிக மோசமான பயங்கரவாத இயக்கமான புலிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் இறப்பதிற்க்கும் புலிகளே காரணமாக இருந்தனர். இப்போ புலிகளால் ஏற்பட்ட அவலங்களை மிகைபடுத்தி புலி பிரசாரம் செய்கிறார்கள்.

சிவானந்தம் said...

@ ராஜ நடராஜன்

////.பொது வாழ்வில் உலவும் சுயநலவாதிகளை விட எனது தேசப்பற்று அதிகம் என்பதனை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்.அதன் பொருட்டே எதிர்வினைப் பின்னூட்டங்களும் பதிவுகளும் கூட.///

வாழ்த்துக்கள், நண்பரே! இதுதான் இந்தியா. இங்கே ஒரு குடிமகன் அரசை தைரியமாக விமர்சிக்கலாம். அதிகப்பட்சம் உங்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். படுகொலை செய்யமாட்டார்கள். இந்த ஆரோக்கியமான சூழ்நிலைதான் ஒரு நாட்டை அழியாமல் தடுக்கிறது.

/////தாக்குவதாலேயே எனது இந்திய நேசத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்////

அதே உணர்வுதான் எனக்கும். ஈழத்தமிழர்களை விமர்சிப்பதால், எனது தமிழ் உணர்வை குறைத்து மதிப்பிட வேண்டாம். இந்தியன் என்ற அடையாளம் சமகால வரலாறு கொடுத்தது. ஆனால் நான் தமிழன் என்பதை நானே நினைத்தாலும் அழிக்க முடியாத அளவுக்கு எனது DNA -வில் பதிந்துவிட்டது.

ஈழத்தமிழன் சுதந்திரம் கேட்க நியாமான காரணங்கள் இருக்கிறது, எனவே கேட்கிறான், சிங்களவனை வெறுக்கிறான். ஆனால் இந்தியன் என்ற அடையாளத்தை வெறுக்க நியாமான காரணங்கள் எதுவும் இல்லை. இந்தியா வளர்ந்துவரும் ஜனநாயக நாடு என்பதால் சில குறைகள் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்தையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக நான் கருதவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் இந்தியன் என்ற அடையாளத்தை தூக்கிஎறிய நான் தயங்கமாட்டேன்.

இப்போது பிரச்சினையே இந்தியாவின் இலங்கை கொள்கைதான். இது சில வரிகளிலோ அல்லது சில பதிவுகளின் மூலமோ முழுதாக ஆராயமுடியாது.

Anonymous said...

/////ஈழத்தமிழன் சுதந்திரம் கேட்க நியாமான காரணங்கள் இருக்கிறது, எனவே கேட்கிறான், சிங்களவனை வெறுக்கிறான். ஆனால் இந்தியன் என்ற அடையாளத்தை வெறுக்க நியாமான காரணங்கள் எதுவும் இல்லை. இந்தியா வளர்ந்துவரும் ஜனநாயக நாடு என்பதால் சில குறைகள் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்தையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக நான் கருதவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வருமானால் இந்தியன் என்ற அடையாளத்தை தூக்கிஎறிய நான் தயங்கமாட்டேன்.///// நல்லது!இந்தியனாகவே இருந்து விட்டுப் போங்கள்!ஆனால் ஈழத் தமிழனின் வலி என்னவென்று பரிபூரணமாகத் தெரிந்து கொண்டு விமர்சியுங்கள்.உலகெங்கும் வாழும் சிறுபான்மையின மக்களின் துன்ப,துயரங்கள் என்னவென்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள்!மாறி வரும் உலக ஒழுங்கை கற்றுக் கொள்ளுங்கள்!வெளி நாடுகளில் வாழும் இந்திய மாணவர்கள் உட்பட அனைத்துலக மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!அதே போல் உள் நாட்டுப் பிரச்சினைகளால் தஞ்சம் கோரும் இலட்சக் கணக்கான மக்களின் வேதனையைப் புரிந்து கொள்ளுங்கள்!உதாரணத்துக்கு,ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் முகாம்களில் படும் இன்னல்களை முடிந்தால் ஒரு தடவை சென்று பாருங்கள்!அவர்களுடன் பேசி உண்மை நிலையைப் புரிய முயற்சியுங்கள்!திபேத்திய அகதிகளுக்கும் ஈழ அகதிகளுக்குமான இடைவெளி என்னவென்று கண்டு கொள்ளுங்கள்!போர்?! முடிந்து விட்டதாக உலக நாடுகளுக்கு பிரசாரம் செய்து பொருளாதார உதவிகளை கபடத்தனமாகப் பெற்றுக் கொள்ளும் இலங்கை அரசு மேற்குலகில் தஞ்சமடைந்து வாழும் ஈழத் தமிழர்களையும் அழிந்து போன இலங்கையை மீளக் கட்டியெழுப்ப பலிக்கடாவாக மாற்றும் நய வஞ்சகத்தை தெரிந்து கொள்ளுங்கள்!இன்று வரை ஈழ அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்புவது குறித்த பேச்சுக்கள் எதிலும் ஈடுபடாது,அரசியல் நலன்களை முன்னிறுத்தி செயலாற்றும் மாநில,மத்திய அரசின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்.போக,"இந்தியனாக" இருக்கும் நீங்கள்,தென் மானில நதி நீர்ப் பங்கீடு குறித்த உங்கள் பார்வை என்னவென்றும் கொஞ்சம் சொல்லுங்கள்!காவிரி உட்பட உயர் நீதிமன்ற தீர்ப்பையே அலட்சியம் செய்யும் கேரள,கர்நாடக அரசுகளின் செயல்பாடு குறித்த உங்கள் கருத்தையும் கொஞ்சம் உரைப்பீர்களா?ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் இந்திய தமிழ் மாணவர்கள்,இந்தியக் கடற்பரப்பில் கொல்லப்படும் வேதாரண்யம்,இராமேஸ்வரம் மீனவர்கள் குறித்த இந்திய அரசின் "பாராமுகம்" குறித்தும் கொஞ்சம் சொல்லுங்களேன்?யோகா என்றொரு அன்பரின் அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமான பதில் சொல்லுங்களேன்?வெட்டி,வெட்டி உங்களுக்கு சார்பான ஒருசில வார்த்தைகளுக்கு மட்டும் பதிலளித்தால் எப்படி?

சிவானந்தம் said...

@Anonymous

///யோகா என்றொரு அன்பரின் அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமான பதில் சொல்லுங்களேன்?வெட்டி,வெட்டி உங்களுக்கு சார்பான ஒருசில வார்த்தைகளுக்கு மட்டும் பதிலளித்தால் எப்படி?////

இங்கே வெட்டி ஒட்டிய வார்த்தைகள் மட்டுமின்றி, நீங்கள் இந்த பின்னூட்டத்தில் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் நியாயமானவையே. இதற்கெல்லாம் நான் பதில் சொல்லியாகவேண்டும். ஆனால் பட்ட காலிலேயே படும் என்பார்களே அதுபோல் எனக்கும் வேறுசில பிரச்சினைகள். எனவே நேரம் ஒதுக்குவதும் இணையத்தை நாடுவதும் கொஞ்சம் சிரமம்.

ஒரு சிக்கலான பதிவை போட்டபிறகு அதற்கு வரும் அனைத்து விமர்சனத்துக்கு நான் பதில் கொடுத்துதான் ஆகவேண்டும். ஆனால் நான் கொடுத்த பதிலுக்கும் விமர்சனங்கள் வரவே, அதற்கு பதிலளிக்க வேண்டியதாகிவிட.... அப்படியே தடம் மாறிவிட்டது.

சுருக்கமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். நீங்கள் என்னதான் இந்தியாவையும், என்னையும் திட்டினாலும், நான் ஈழத்தமிழனை எதிரியாகப் பார்க்கவில்லை. ஒரு நியாயமான போராட்டம் படுதோல்வியில் முடிந்து போனதற்கு இந்தியாதான் காரணம் என்பது உங்கள் வாதம். இந்தியா தவறே செய்யவில்லை என்று நான் வாதிடவில்லை. ஆனால் புலிகளின் பங்குதான் அதிகம் என்பது என் வாதம். இந்த பதிவை போட்ட பிறகு வந்த பல பின்னூட்டங்களை படித்த பிறகும் எனது பார்வையில் மாற்றமில்லை. `எருமை மாட்டின் மீது மழை பொழிவதற்குச் சமனானது! ` என்று மீண்டும் ஒரு விமர்சனம் வரலாம். விமர்சனத்துக்கு பயந்தோ அல்லது மற்றவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதும் எழுத்துக்கள் எழுத்தல்ல. அது ஜால்ரா.

இந்த விவாதத்தை நாம் இங்கே முடித்துக் கொள்வோம். அதற்காக இங்கே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்லமாட்டேன் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் நிதானமாக வந்து பாருங்கள். அனைத்துக்கும் பதில் இருக்கும். இங்கே எனது கருத்துக்கு எதிர்வாதம் செய்தவர்களே அதிகம். ஆனால் இங்கே வந்த இந்தியத்தமிழர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கியும் இருக்கலாமல்லவா?

இந்த பதிவுக்கு வருகைதந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றி

YOGA.S.Fr said...

நண்பரே கடைசியாக சில தகவல்கள்:ஈழத்தில் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவைக்கு எம்மை தள்ளிச் சென்றவர்கள் இலங்கையில் மாறி,மாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மையின சிங்கள ஆட்சியாளர்களே!ஆரம்பத்தில் இலங்கையின் வடக்கு,மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள காடுகளில் தன்னிச்சையாக ஆயுதப் பயிற்சியை மேற்கொண்ட விடுதலைப் போராளிக் குழுக்கள் மேலதிக பயிற்சிகளுக்காக தமிழ் நாட்டை தளமாகப் பயன்படுத்தினர்!அன்று ஆட்சியிலிருந்த அன்னை ஈழத் தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்துக்கு மறைமுக ஆதரவை வழங்கினார்!கூடவே தமிழக தலைவர்களும்.(பின்னர் நான் பெரிதா,அவர் பெரிதா என்ற தன்மானப் பிரச்சினையால் இரண்டு பட்டது வேறு கதை!)அன்னை மரணிக்க(கொல்லப்பட)ஆட்சிக்கு வந்த கற்றுக்குட்டி ராஜீவ் மூக்கை நுழைத்து,குள்ளநரி ஜே.ஆருடன் ஒப்பந்தம் போட்டு இலங்கை வந்த போது இலங்கை இராணுவ வீரனின் துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்கானது உலகறிந்தது!ஒப்பந்தப்படி இரண்டு ஆண்டுகளில் சர்வஜன வாக்கெடுப்பு இலங்கையின் வடக்கு,கிழக்கில் நடத்தப்பட வேண்டும்!அதற்கு முன் ஆயுதங்கள் போராளிகளிடமிருந்து களையப்பட வேண்டும்,வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் கூடாது என்றெல்லாம் இன்னோரன்ன ஏற்பாடுகள் இருந்தன!ஆனால் இலங்கை அரசோ அவைகளை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியுமே எடுக்கவில்லை!அமுல்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க ராஜீவ் முயலவுமில்லை!ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது!அமைதி ஏற்படுத்த வந்த அமைதிப்படை இருந்த அமைதியையும் கெடுத்ததே கண்ட பலன்!படிப்படியாக வளர்ந்த போராட்டம் அப்பப்போ பேச்சுவார்த்தை என்ற பெயரில் பெரும்பான்மையின அரசால் ஆயுதங்கள் கொள்வனவுக்கே செலவிடப்பட்டது!அப்போதும் கூட கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தால் விடுதலைப் போரை வெற்றி கொள்ள முடியவில்லை!சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி நிலவ முடியாத தொங்கு பாராளுமன்றைக் கொண்டிருந்த இந்தியாவில் ஓரளவுக்கு பலம் வாய்ந்த ஒரு ஆட்சி கலைஞர் தயவுடன் அமைந்ததும்,11/09 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும்,ஜோர்ஜ் புஷ் இன் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அறிவிப்பும்,இந்தியாவின் பழிக்குப் பழி வாங்கும் குணத்தை தட்டியெழுப்பியது என்பதே உண்மை!நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்குமாம்!பிராந்தியத்தின் முக்கியத்துவம் இப்போது புரிந்து என்ன பயன்?கை நழுவிப் போய் விடும் போலிருக்கிறதே!பொருளாதார வளர்ச்சியில் சீனாவுக்கு இரண்டாமிடம்!இலங்கையில் பாதி சீனா வசம்!என்ன செய்யலாம்????????

ம.தி.சுதா said...

சகோதரம் நான் இங்கே அரசியல் பற்றி கதைக்க வரவில்லை அது எனக்கு விருப்பமில்லாதது தேவையும்படாதது...

ஒரு ஈழத்தில் வாழும் ஈழத்தமிழன் என்ற முறையிலும் போருக்கெதிராக குரல் கொடுப்பவன என்ற ரிதியிலும் தான் இங்கு வந்திருக்கிறேன்...

முதலில் எங்கள் வலிகளை புரிந்த கொள்ளுங்கள்..

ஃஃஃஃஃ அதற்கு காரணங்கள் என்ன என்பதை நாம் அலசி ஆராய்ந்தால்தான், மற்றொரு ஈழப்போராட்டம் வரும்போது கவனமாக இருக்க முடியும்ஃஃஃஃஃ

அப்படி ஒரு எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் எமக்கு அப்படி ஒர எண்ணமமில்லை திரணியும் இல்லை இவ்வளவகாலமம் யார்யாரோ நாம் தமிழர் எனச் சொல்லி வீரம் பேச எம் வாழ்வை தொலைத்து விட்டோம்... அப்படி எண்ணமுள்ளவர்கள் வாருங்கள் காத்திருக்கிறோம்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ இது என்ன சினிமாவா? 20 ஆண்டுகள் கழித்து செத்துப் போனவனின் மகன் தலையெடுத்து பழிவாங்குவதற்கு! ஃஃஃஃஃ

நீங்கள் சொல்வது சரி என வைத்துக் கொண்டால் ராஜீவ் கொலை வழக்க தண்டனைக் கைதிகளை என் வைத்த 20 வரடமாக வதைக்கிறிர்கள் இதை உங்களால் நியாயப்படுத்த முடியுமா ராஜீவ் எமக்கு செய்த துரோகத்திற்க கடவுளாய் கொடுத்த தண்டனை இதை உங்களால் மறுக்க முடியுமா ? இங்க கற்பிழந்த, கழுத்தறுந்த நபர்கள் எத்தனை பேர் தெரியுமா ?

ம.தி.சுதா said...

எம் வலிகளை கொஞ்சமாவத அறியணுமென்றால் என்னோட தளம் வாந்து லேபிளில் உள்ள வன்னி என்பதை சொடுக்கிப் பாருங்கள் சகோதரம்...

சிவானந்தம் said...

பின்னூட்டமிட்ட ம.தி.சுதா மற்றும் YOGA.S.Fr அவர்களுக்கு நன்றி.

மறுக்க முடியாத ஆதாரங்களை நீங்கள் முன் வைத்திருகிறீர்கள். நான் உங்கள் வலிகளை உணர்ந்திருக்கிறேன்.

அதேசமயம் இங்கே நான் இந்தியாவுக்காக வாதாடுகிறேன் என்று ஈழத்தமிழனை அவமானப்படுத்த முடியாது, அதே நேரத்தில் இந்தியாவின் தடுமாற்றதிற்கான காரணங்களை நான் (அதிமேதாவித்தனமாக இல்லைஎன்றாலும்) ஓரளவாவது புரிந்து கொண்டதால் அதை உங்களுக்கு விளக்கவும் வேண்டும்.

இங்கே நீங்கள் முன் வைத்த வாதங்களிலேயே சில முரண்பாடுகள் இருக்கிறது. அதை நான் சொல்ல, மறுபடியும் நீங்கள் பின்னூட்டமிட.... வேண்டாம். சற்று தாமதமானாலும் நான் ஒரு பதிவாகவே வருகிறேன்.

சிவானந்தம் said...

@YOGA.S.Fr
///முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் இலட்சியத்தை நோக்கிப் பயணித்த ஒரு தலைவன் இப்படி நினைத்திருப்பானா///

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எங்கேயாவது இடருமல்லவா, அது போன்றது தான் எனது இந்த வார்த்தை பிரயோகமும்.இதை நான் கவனித்தவுடன் இந்த பதிவில் திருத்திவிட்டேன். ஒருவர் மற்றவர்கள் பார்வையில் வில்லனாக தெரிந்தாலும்,சொந்த மக்களுக்கே குழிபறிக்க மாட்டார். அந்த வார்த்தைகளுக்காக மன்னிக்கவும்.

Anonymous said...

////புலிகளை அழிக்க இலங்கை சீனாவின் உதவியை கோரும் என்ற நிலை. இந்த நிலையில் இந்தியா என்ன செய்வது? சீன உதவியுடன் புலிகள் அழிக்கப்பட்டு இதே இனப்படுகொலைகள் நடந்திருந்தால், அப்போதும் இந்தியா இதை தடுக்கவில்லை என்று இதே கோபத்தைத்தான் ஈழத்தமிழர்கள் காட்டியிருப்பார்கள்.////

உங்கள் அக்கா தங்கையை பக்கத்து வீட்டுக்காரன் கற்பழிக்க போகின்றான் என்றால் நீங்களே கற்பழிக்கலாம் என்பது போல் இருக்கின்றது உங்கள் இந்திய விசுவாசம்

ஆகா என்ன ஒரு ஈழத்து நடிப்பு

ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் இதுவும்

YOGA.S.Fr said...

நீங்கள் இந்தியனாக இருப்பதில் என்றைக்கும் ஈழத்தமிழன் பெருமையடையவே செய்கிறான்!ஏனெனில்,இந்தியா ஒரு ஜனநாயக நாடு!அங்கு அனைத்து மக்களுக்கும் ஓரளவுக்காவது சம அந்தஸ்து உண்டு!இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அன்றிலிருந்து இன்று வரை இலங்கையர் என்று சொல்வதேயில்லை,தமிழர் அல்லது ஈழத் தமிழர் என்றே சொல்வது வழக்கம்.ஏனெனில் இலங்கையர் என்றுநெஞ்சை நிமிர்த்தி எங்கும் சொல்வதற்கு அந்தப் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள்,பெரும்பான்மை சிங்களவர்கள் மனிதாபிமானத்துடனோ,புரிந்துணர்வுடனோ நடந்து கொள்வதேயில்லை!அது முதன்மை வலி!மறுக்கப்படும் கல்வி,வேலை வாய்ப்பு, நிலவுரிமையென்று எதுவுமேயில்லை!சொல்லப்போனால் அடிமைகளாகவே பார்க்கிறார்கள்!உண்மையில் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் ஆதியில் இலங்கையில் வாழ்ந்த ஒரு சிறு இனம் தமிழினம்!பின்னர் வந்தேறு குடிகளாக வந்தோரே சிங்களவர்கள் இப்போது வரலாற்றையே புரட்டிப் போட்டு புதிய வரலாறு எழுதி வைத்திருக்கிறார்கள்!அதனையே பாடசாலைகளிலும் கற்பிக்கிறார்கள்! உங்களுக்கு நேரமிருந்தால் இலங்கை பற்றிய பழைய நூல்கள் தமிழ் நாட்டு நூலகங்களில் கிடைக்கும்!படித்துப் பாருங்கள்,உண்மை நிலை புரியும், நன்றி!

eela tamilan said...

1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக?
http://tamilthesiyam.blogspot.com/2011/02/1991-1987.html

சிவானந்தம் said...

ஆகா என்ன ஒரு ஈழத்து நடிப்பு

ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் இதுவும்///

ம்ஹும். விடமாட்டீங்க. உசுப்பிவிடறீங்க. சரி. இதைதததயும் பார்ப்போம்!

வார்த்தைகளால், உவமைகளால் விளையாட எனக்கும் தெரியும். ஆனால் நான் அதை செய்தால் மற்றவர்களுக்கு உபதேசித்ததை நானே மீறியவனாகி விடுவேன். எனவே எனது நிதானமான பதில் இதோ!

இங்கே வந்த பின்னூட்டங்களில் திரு யோகா அவர்களின் வாதம் மட்டுமே கொஞ்சம் யோசிக்க வைக்க கூடிய அளவில் இருக்கிறது. `சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி நிலவ முடியாத தொங்கு பாராளுமன்றைக் கொண்டிருந்த இந்தியாவில் ஓரளவுக்கு பலம் வாய்ந்த ஒரு ஆட்சி கலைஞர் தயவுடன் அமைந்ததும்,11/09 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும்,ஜோர்ஜ் புஷ் இன் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அறிவிப்பும்,இந்தியாவின் பழிக்குப் பழி வாங்கும் குணத்தை தட்டியெழுப்பியது என்பதே உண்மை` என்ற வாதம் என்னை சிந்திக்க வைத்தது. ஒருவேளை இப்படியும் இருக்குமோ என்று! அதேசமயம் `பிரபாகரனை பழி வாங்க` என்று கூட நான் எடுத்து கொள்வேனே தவிர, பழி வாங்க அப்பாவி மக்களை அழிக்க இந்தியா உதவி செய்தது என்பதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். அந்த மக்களை பிரபாகரன் கேடயமாக பயன்படுத்தியதால் இழப்பு அதிகம் என்றும் சொல்லலாம்.

மற்ற வாதங்கள் எல்லாம் இரு முனை கொண்ட கத்தி போன்றவை. உங்கள் வாதத்தில் சில வார்த்தைகளை மட்டும் மாற்றி அப்படியே திருப்பி அடிக்கலாம்.

உதாரணத்திற்கு ஓன்று.
ம. தி. சுதா

///ராஜீவ் எமக்கு செய்த துரோகத்திற்க கடவுளாய் கொடுத்த தண்டனை இதை உங்களால் மறுக்க முடியுமா ?///

புலிகள் செய்த அட்டுழியத்துக்கு கடவுளாய் கொடுத்த தண்டனைதான் இந்த தோல்வி. இதை நீங்கள் மறுக்க முடியுமா?

பின்னூட்டம் நீளம் காராணமாக பிரித்து போட்டிருக்கிறேன்.

சிவானந்தம் said...

இது அனைவருக்கும் எனது பொதுவான பதில்.

உயிர்பலியும் பாலியல் வன்முறையும்...

இன்றைய ( மக்களை கேடயமாக பயன்படுத்தப்படும்) கொரில்லா போரில் வழக்கமாக எதிரியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. பாகிஸ்தானிய பத்திரிக்கைகளை படித்தால் உலகத்திலேயே மோசமானது இந்திய ராணுவம்தான் என்றும், அமெரிக்க பத்திரிக்கைகளை பார்த்தால், ஒவ்வொரு முஸ்லிமும் குடிசைத் தொழிலாக குண்டு தயாரிக்கிறான் என்றுதான் சொல்லும். எனவே பலதரப்பட்ட பத்திரிக்கைகளை படித்தால்தான் உண்மை தெரியும். ஆனால் சிங்கள ராணுவம் செய்த அட்டுழியம் இன்று உலகத்துக்கே தெரிந்துவிட்டது. இலங்கைக்கு இந்தியா செய்த சில உதவிகளால் இந்தியாவும் பழி ஏந்தி நிற்கிறது.

இங்கே என்னுடைய விளக்கம் என்னவென்றால், போரில் உதவி என்பது ராணுவரீதியானதுதான். நாங்கள் இவ்வளவு மக்களை கொல்லப்போகிறோம். இவ்வளவு பெண்களை கற்பழிக்கப்போகிறோம் என்றெல்லாம் ஒப்பந்தம் போட்டு செய்வதில்லை.

இதையே வேறுவிதமாக சொல்லுவதென்றால், இந்தியாவில் தேர்தல் செலவுகளுக்காக ஊழல் என்பது கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்டு விட்டது. இதை வெளிப்படையாக சொல்லமுடியாது. அவ்வளவுதான். தேர்தல் செலவுகளின் அவசியம் கருதி சின்ன சின்ன ஊழல்களை நேர்மையான அரசியல் தலைவர்கள் கூட கண்டுகொள்வதில்லை. எதிர்ப்புகளை குறிப்புகளாக பதிவு செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். 2 ஜி விஷயத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும். அதேபோல் போர் என்றால் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதும் தெரிந்தே செய்த உதவிதான் இது. ஆனால் கலைஞர் மலை முழுங்கி மகாதேவனாக இருப்பார் என்றோ அல்லது சிங்களவன் இந்த அளவுக்கு மோசமாக நடந்துகொள்வான் என்றோ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டிலும் கூட்டணி இருப்பதால், (லாபத்திற்கான கூட்டணி அல்ல, நிர்பந்த கூட்டணி) பிரதமரின் கை சுத்தமாக இருந்தும் இஞ்சி தின்ன குரங்கைப்போல் (நானும்தான்) முழித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக போரில் வெற்றியைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். இருந்தாலும் தோல்வி உறுதி என்றால் அனாவசிய உயிர் பலியை தவிர்க்க சரணடைந்து விடுவார்கள். பாகிஸ்தான் கூட பங்களாதேஷ் போரில் இந்தியாவிடம் சரணடைந்தது.. ஆனால் பிரபாகரன்..... எனவே உயிர் பலி இங்கு அதிகம். (இதை நான் உதாரணத்துக்குதான் சொன்னேன். சிங்களவனிடம் சரணடைய சொல்லவில்லை.)

அடுத்த குற்றச்சாட்டு இந்தியாவின் மீதானது. இந்திய அமைதிப்படை மீதான குற்றச்சாட்டுகள்.

`ஹாய்` மதன் ஒரு கேள்வியில் சொல்லியிருந்தார். இராணுவத்தினன் என்றாலே அவன் ஒரு மிருகம்தான் என்று. மனித நேயம் உள்ளவனை ராணுவத்தில் சேர்த்தால் எதிரியை கொல்லும் முன் ஆயிரம் கேள்வி கேட்பான். எனவே ரானுவதிரினரின் மீதான குற்றச்சாட்டு உண்மையாகவும் இருக்ககூடும். ஆனால் அது தேய்மானம் என்ற அளவில் இருந்ததா அல்லது மன்னிக்க முடியாதா அளவில் இருந்ததா? எனக்கே தெரியாது. ஆனால் லாஜிக் என்ற அடிப்படியில் பார்த்தால், ஒருவர் உங்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருந்தால் அவரை பழி வாங்க நினைப்பீர்கள் அல்லது கடைசி வரை மன்னிக்க மாட்டீர்கள். இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறோம் என்று புலிகளும் சொன்னதன் மூலம் இந்திய அமைதிபடையின் செயல்பாடுகள் சேதாரம் என்ற அளவில்தான் இருந்திருக்கும் என்றுதான் நான் நினைக்கிறன்.

சிவானந்தம் said...

///ஆகா என்ன ஒரு ஈழத்து நடிப்பு///

நான் தமிழன் என்பதற்காக ஈழத்தை ஆதரிக்கவில்லை. இந்தியத் தமிழனின் அடிப்படை உரிமையையும் இலங்கைத் தமிழனின் அடிப்படை உரிமையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும் இலங்கை ஜனநாயகத்தின் லட்சணம்.

எனவேதான் நான் ஈழத்தை ஆதரிக்கிறேன். அதே போல் எங்குதான் கருத்து வேறுபாடு இல்லை. அதற்காக சக போராளிகளை அழித்து, அரசியல் கட்சித் தலைவர்களை அழித்து, உச்சக்கட்டமாக ராஜீவ் காந்தியை கொலையை செய்து, பயங்கரவாதிகள் என்ற பேரை வாங்கி, அதன் காரணமாக உங்கள் பக்கம் இருந்த நியாயம் பின்னுக்கு தள்ளப்பட்டு தோல்விக்கு வழி வகுத்தது என்பதையும் நான் நம்புகிறேன்.

இங்கேயும் நான் வார்த்தைகளோடு விளையாடலாம். சிங்களவன் எப்படியும் தமிழர்களை கொல்லத்தான் போகிறான், எனவே உங்கள் சகோதரனை (இயக்கங்களை) நீங்களே கொன்றுவிடீர்களோ!

இது கிட்டத்தட்ட காஷ்மீர் கதைதான். காஷ்மீரிகளுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. இருந்தாலும் பிரிவினையே மதரீதியாகத்தானே நடந்தது. எனவே சுதந்திரம் கொடுங்கள் என்று கேட்டால் அது நியாயமானதுதான். ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளால் இப்போது அதன் பேச்சை யாரும் மதிப்பதே இல்லை. இதேதான் விடுதலைப்புலிகள் விஷயத்திலும் நடந்திருகிறது. இதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்.

இங்கே சில விமர்சனங்களுக்கு மட்டுமே நான் பதிலளித்திருக்கிறேன். மேலும் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் இருகின்றன. பார்ப்போம்.

YOGA.S.Fr said...

நான் முன்பே கூறியபடி ஈழ விடுதலைப் போரின் வரலாறு முழுமையாக உங்களால் இன்னமும் தெரிந்து கொள்ளப்படவில்லை!ஒட்டி உறவாடி கழுத்தறுப்பார்கள் என்று தெரிந்து தான் நீங்களும்,அந்தக் கையாலாகா கலைஞரும் சகோதர யுத்தம் என்ற அம்பை எய்து வருகிறீர்கள்!1986-ல் ஒன்றாக இணைந்தார்கள்!மீண்டும் நான் பெரியவன்,நீ சிறியவன் என்ற தன் மானத் தமிழன் பிரச்சினையாலேயே உடைந்தார்கள்!அடுத்து 1995-ல் சந்திரிகா ஆட்சியின் போது 40,000க்கு மேற்பட்ட இராணுவத்தினர் யாழ்.குடாவை அழிக்கப் புறப்பட்ட போது இலட்சக் கணக்கான மக்கள் புலிகளுடன் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள்!சேதம் குறைக்கப்பட்டது!இன்று வரை இராணுவ ஆட்சியே யாழ்.குடாவில் தொடர்கிறது,உங்களுக்குத் தெரியுமா?கடைசியாக போக்கிடமின்றி மூன்று இலட்சமாக அதிகரிக்கப்பட்ட இராணுவம் ஏதொ வேற்று நாட்டுடன் போர் புரிவது போல் விமானக் குண்டு வீச்சு முதல், இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஆயுத உதவியுடன் அனைத்து வழங்களையும் பயன்படுத்தி ஒரு விடுதலை இயக்கத்தை நிர்மூலம் செய்கிறோமென்று இனப் படுகொலையொன்றையே,சர்வதேச தொண்டு நிறுவனங்களினது பிரசன்னமற்று சாட்சிகளுமற்று நடாத்தி முடித்தது என்பதே நிதர்சன உண்மை!நீங்கள் என்னடாவென்றால் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று இந்திய, இலங்கை அரசுகள் பரப்புரை செய்வது போல் தொடர்ந்தும் கூறி வருகிறீர்கள்!இதனைத் தான் நான் வன்மையாக மறுக்கிறேன்!கூலியற்ற பிரச்சாரம் என்று சொல்கிறேன்!இவ்வாறான எழுத்துக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!மேலும் இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாகவே "இந்தியாவின்" போரை நாம் நடத்தினோம் என்று இற்றை வரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தியத் தரப்பிலிருந்து மறுப்பேதுமில்லையே,ஏன்???????????????இன்னுமொரு விடயம்:///இது என்ன சினிமாவா,இருபது ஆண்டுகளின் பின்னர் மகன் தலையெடுத்து பழி வாங்குவதற்கு?///சினிமா என்பது முற்றுமுழுதான கற்பனை அல்ல!உலகில் நிகழும் சம்பவங்களை கோர்த்துத் தான் சினிமா உருவாகிறது என்பது என் அபிப்பிராயம்.

Anonymous said...

///“ரத்தத் தீவு” அனிதா பிரதாபின் புத்தகத்தைப் படித்தவுடன், பிரபாகரன் பற்றிய என் எண்ணங்கள் மாறியது.///

Post a Comment