வழக்கமாக நான் இந்த காப்பி-பேஸ்ட் வேலையை செய்வதில்லை. ஆனால் QUORA இணையதளத்தில் இதை படிக்க நேர்ந்தபோது இதை பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்த காலத்தில் படிக்கும்போது கல்வி இந்த அளவுக்கு சுமையாக இல்லை. இப்போது எட்டாவது படிக்கும்போதே பத்தாவது கல்விக்கான பாடத்தையும் இப்போதே படிக்க வேண்டும் என்ற அளவுக்கு பெற்றோர்களின் மனநிலை போய்விட்டது. டியூஷன் என்பது மக்கு பிள்ளைகளுக்காக என்று இருந்த நிலைமை மாறி, பாடத்திட்டங்கள் அதிகமாகிவிட்டதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க இந்த டியூஷன் தேவைப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு கல்வி வந்துவிட்டது.
இது தவிர, கம்ப்யூட்டர் மற்றும் இன்ன பிற துறைகள் என கல்வி விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், கூடுதலாக ஒரு மொழி என்பது மாணவர்களுக்கு சிரமம்தானே?
இன்றைய பெற்றோர்கள் அவர்கள் சுமக்காத ஒரு சுமையை தன் பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். இது என்ன நியாயமோ?