!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, August 13, 2014

அகமதாபாத் நகர் (பொங்கல்) வலம்


இந்த வாரம் பொங்கல் தொடர்பான காட்சிகளே வித்தியாசமாய் இருந்தது. பல இடங்களில் கவனித்ததில் இவர்கள் காத்தாடி வாங்கியது 100, 2000 என இருந்தது. அந்த அளவுக்கா காத்தாடி விடுவார்கள் என ஆச்சர்யப்பட்டேன். பொங்கல் அன்று சில வீடுகளில் காத்தாடி விட்டதை கவனித்த போதுதான் அதுவே குறைவு என்பது தெரிந்தது. அந்த அளவுக்கு விண்ணில் காத்தாடிகள்.

எந்த வம்புக்கும் போகவேண்டாம், அதாவது எந்த காத்தாடியையும் அறுக்க வேண்டாம் என நினைத்து காத்தாடி விட முடியாது. நீங்கள் காத்தாடி பறக்க விட்ட சில நிமிடங்களிலே ஏதாவது ஓன்று உங்களை காவு வாங்கிவிடும். 

நான் வேடிக்கை பார்க்க போன இடத்தில் ஒருவர் 5 நிமிடத்திற்கு ஒன்றை பலி கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த வேகத்தில் இருந்தால் நூறு காத்தாடிகளே பத்தாது.

பொங்கல் தொடர்பான மேலும் சில விஷயங்கள்

ஆர்ச்

நீங்கள் பல விதமான ஆர்ச் பார்த்திருக்கலாம். இது புதுவிதம். மூவிங் ஆர்ச். டூ வீலர்களில் இருக்கிறது. காத்தாடி நூல்களால் உயிருக்கு ஆபத்து என்பதால் வண்டிகளில் இதை பொருத்தி இருக்கிறார்கள். ஒரு நீட்டு கம்பியை எடுத்து டூ வீலரின் முன்னே இருக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கான கம்பிகளில் பொருத்தி விடுகிறார்கள். அவ்வளவுதான். இனி வண்டி ஓட்டும்போது முன்னே காத்தாடி நூல் இருந்தால் இந்த ஆர்ச் உங்களை அதிலிருந்து காப்பாற்றும்.

விளக்கு பலூன் 



டுக்கள்

இப்போது இந்த பேஷனும் கிளம்பி இருக்கிறது. மாலை 7 மணிக்கு பிறகு எல்லோரும் ஒரு சேர இந்த (விளக்கு) பலூன்களை பறக்கவிடுகிறார்கள். மாடியிலிருந்து பார்த்தால் காட்சிகள் அற்புதமாக இருக்கிறது.

தீபாங்கல்

ம்ஹும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. தீபாவளியையும் பொங்கலையும் இணைத்தால் இந்த வார்த்தைதான் வருகிறது. இங்கே பொங்கலுக்கும் பட்டாசு வெடிக்கிறார்கள். புது பழக்கமாம். எனவே எங்கும் வெடிமயம்தான்.

ஒருபக்கம் இந்த விளக்கு பலூன்கள் கண்கொள்ளா காட்சியாக இருக்க, அத்துடன் விண்ணிலே வெடித்து சிதறும் ராக்கெட் பட்டாசுகளின் வர்ண ஜாலங்களும் சேர...அற்புதமான காட்சிதான்.