!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, October 24, 2012

அரவிந்த் கேஜ்ரிவாலும், `சவுக்கு` சங்கரும்

அர்விந்த் கேஜ்ரிவால் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். பல ஊழல் செய்திகளை வெளியிடுகிறார். இவர்களுடைய லோக்பால் போராட்டத்தில்  எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த  போராட்ட முறை எனக்கு பிடித்திருக்கிறது.

லோக்பால் போராட்டம் தோற்றதன் காரணம் அதில் யதார்த்தம் இல்லை. இருந்தாலும் அந்த சமயத்தில் அரசியல்வாதிகள் பயந்துவிட்டார்கள். அதற்கான அறிகுறி தெரிந்தது. அந்த பயத்தை பயன்படுத்திக் கொண்டு, இருக்கும் ஓட்டைகளில் சிலவற்றையாவது சரி செய்திருக்க முடியும். ஆனால், `முழுதாக வேண்டும்` என்ற இவர்களின் பிடிவாதத்தால், அது பரணுக்கு போனதுதான் மிச்சம்.

Wednesday, October 17, 2012

தேவை ஒரு அடையாளம்

கடலூரில் சில மாதம் இலவச விளம்பர பத்திரிகை நடத்தினேன். முதல் இதழுக்காக டிசைன் செய்த போது, `என்ன கருத்து எதுவும் காணோம், பத்திரிக்கை என்றால் அது இருக்கணுமே!` என்றார் ஒருவர். சம்பிரதாயங்களை மீற முடியுமா. நானும் எழுதினேன்.

முதல் கருத்தாக (2005) எழுதியது ஹாஸ்பிட்டல்கள் பற்றி. அந்த சமயம் ஒருவர் புலம்பினார். ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலில் உறவினரை சேர்த்திருக்கிறார். பில் வந்த பிறகுதான் அவருக்கு பிபி எகிறியது.

ஆபத்து என்றவுடன் அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிடுகிறோம். ஆனால் அது நமது தகுதிக்கு தகுந்ததா என்பது நமக்கு தெரிவதில்லை.

Monday, October 8, 2012

காவிரி: இப்படியும் ஒரு புலம்பல்

காவிரி பிரச்சினை மீண்டும் செய்திகளில். இங்கே அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே நம்பமுடியாது. இவர்கள் உண்மையைதான் சொல்வார்கள். அது திரிக்கப்பட்ட உண்மையாக இருக்கும்.

ஆனால் தற்போது வலைப்பதிவுகள் மற்றும் விவாத களங்கள் வந்துவிட்டன. இங்கே வாதிடுபவர்களின் வாதங்களில் அறியாமை இருக்கலாம், போலித்தனம் இருக்காது. எனவே இந்த வாரம் இது போன்ற பிரபலமில்லாத வலை தளங்களை தேடிப் படித்தேன்.

இதில் ஆரோக்கியமான வாதங்கள் ஒரு பக்கம். அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் இன்னொரு பக்கம்.