!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, March 29, 2012

இலங்கை. இனி எது நடந்தாலும் நன்மைக்கே!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தை அன்று மதியம் டிவியில் பார்த்தேன். ஈவினிங் கடைக்கு வந்தால், ராஜ நடராஜ அண்ணனின் இந்த தீர்மானம் குறித்த பதிவு. அவ்வளவு வேகம். இது அவருக்கு சந்தோஷமான செய்தி. எனவே உடனடியாக அவருடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

எனக்கும் இந்தியாவின் இந்த முடிவு அதன் விருப்பமான முடிவாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம். உடனே பதிவு எழுத ஆரம்பித்தேன். சில பல காரணங்களால் உடனே முடியவில்லை. ஆனால் அதற்குள் இதே பாணியில் வேறு சில பதிவுகள் வந்து விட்டன. சரி, இது பத்தோடு பதினொன்று...

சினிமாவில் இந்த காமெடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது காமெடி சீன் இல்லை. யதார்த்தத்தை பிரிதிபலிக்காத எதுவும் காமெடியாகத்தானே இருக்கும். இது அந்த வகை காமெடி. அதாவது எல்லா உதையும் வாங்கிய பிறகு, கடைசி நேரத்தில் வில்லன் மனம் திருந்திவிட்டதாக வசனம் பேசுவான். யதார்த்தமாக படங்கள் வந்த காலத்திலும் இந்த அபத்தம் சினிமாவில் உண்டு.

Thursday, March 22, 2012

சந்தர்ப்பவாத தமிழன்!

தற்போதைய பரபரப்பு செய்தி இலங்கை அரசு மீதான மனித உரிமை குற்றச்சாட்டுதான். இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்த ஆவேசம் இலங்கைத் தமிழனுக்கு ஆச்சர்யத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் எனக்கோ ஒரு சொந்த அனுபவத்தை நினைவுபடுத்தியது.

(இது சொந்த கதை. தெரிந்தவர்கள் யாராவது படிக்கலாம். எனவே உள்ளதை உள்ளபடியே சொல்லமுடியாது. முத்துசாமியை முத்துலட்சுமியாக மாற்றி இருப்பேன். சில சம்பவங்களையும் இடம் மாற்றி இருப்பேன்.)

ஒரு உறவினர் கடைக்கு வந்தார். பேச்சலராக இருந்தேன். வந்தவர், `கல்யாணம் பண்ணிக்க.. வயசிருந்தாலும் ஏன் தனியா கஷ்டப்படனும்?... குடும்பம் பண்ணாலும் அதே செலவுதான் ஆகும்...` என்றார். இது அவ்வப்போது கிடைக்கும் உபதேசங்கள்தான். எனவே நான் பொருட்படுத்தவில்லை.

Monday, March 12, 2012

இந்திய ஜனநாயகம். இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை!

குடும்ப அரசியல் இந்தியாவில் வேரூன்றிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் ஓமர் அப்துல்லா வந்தார். அடுத்து உ பி யில் அகிலேஷ் பதவி ஏற்கப் போகிறார். பஞ்சாபில் பிள்ளைக்கு இன்னும் தகுதி வரவில்லை. இனி என்ன... மாநிலம் தோறும் இந்த அநியாயத்தை கட்சித் தலைவர்கள் அரங்கேற்றலாம். அதேசமயம் இந்தியாவில் வாரிசுகள் ஆட்சியை பிடிப்பது அப்பட்டமான சர்வாதிகாரத்தினால் இல்லை. இருந்தாலும் இது வேறுவிதமான சர்வாதிகாரம்.

இது அது குறித்த பழைய பதிவு. சற்றே மாற்றங்களுடன்... 

இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல விடாமல் தடுப்பது நம் நாட்டின் சில அரசியல் கட்சிகள் சில தனிப்பட்ட நபரின் குடும்ப சொத்தாகிப் போனதுதான். இன்று இந்தியாவில் கட்சிகள் பெருகிவருவதன் காரணமும் இதுதான். ஒரு கட்சியில் தொண்டனாக சேர்ந்து பின்னர் அந்த கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருவது தற்போது சாத்தியமில்லாத சூழ்நிலையாக உருவாக்கி இருப்பதால், பலர் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதை தடுக்க அரசியல் கட்சிகளையும் முழுமையான ஜனநாயக இயக்கமாக செயல்பட வைக்க வேண்டும்.

Sunday, March 11, 2012

`கைப்புள்ள` ராகுல்

இரவு 10 மணிக்கு முன் டிவியை (நாடகங்கள்) பார்த்தால் எனக்கு தலைவலி வரும். அதே 10 மணிக்கு மேல் டிவியை பார்க்காவிட்டாலும் (செய்திச் சேனல்கள்) தலைவலி வரும். அதுவும் தேர்தல் நேரம். எனவே இந்த வாரம் முழுக்க கவனம் இங்கேதான்.

ஒரு ஆளுங்கட்சி (உ.பி.) தோற்கடிக்கப்பட்ட செய்தியை கேட்ட போது, அது இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெற்ற கதையை சொன்னதால் சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அடுத்த முதல்வர் அப்பாவா, பிள்ளையா என்ற போட்டியை பார்த்த போது அந்த சந்தோஷமும் பறிபோனது. இது இந்திய ஜனநாயகம் இன்னமும் சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.

Monday, March 5, 2012

மூன்று விஷயங்கள்: அரசியல், என்கவுண்டர், கூடங்குளம்.

இந்த வாரம் அதிகம் படித்தது என்கவுண்டர் தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள்தான். `இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்கவுண்டர் கூடாது` என்று சிலர்.

`இறந்தவர்களுக்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் `பல அரசியல் ஊழல் பேர்வழிகளும், போலீஸ் கொள்ளைகாரர்களும் வெளியில் இருக்க, இந்த கொள்ளையர்களை மட்டும் ஏன் பலிகடாவாக்க வேண்டும்` இது வேறு சிலர்.

வாதப்படி பார்த்தால் எல்லாம் சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் யதார்த்தம் எப்போதுமே வேறுவிதமாகத்தான் இருக்கும்.