!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, May 9, 2026

தேர்தல் சீர்திருத்தங்கள்: அளவுச் சாப்பாடு

இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது. நிறைய தேர்தல் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தலைப்பில் நிறைய எழுதலாம் என்றாலும், முக்கியமானவற்றை மட்டும் கவனிப்போம்.

இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், இது போன்ற தொங்கு சட்டமன்றம் ஒரு நிரந்தரத் தலைவலி. எனவே, இதற்குத்தான் முதலில் தீர்வு தேவை. என்ன செய்யலாம்?

ஓட்டலுக்குச் செல்கிறோம்; கையில் காசு குறைவாக இருந்தால் என்ன செய்வோம்? 'அளவுச் சாப்பாடு' அல்லது இருப்பதற்குத் தகுந்தாற்போல் சாப்பிடுவோம். அதே கொள்கைதான் இங்கேயும்.

Wednesday, May 6, 2026

விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்

டிவி சீரியல்களில் யாரோ ஒரு பெண், ஒரு குடும்பத்தைப் பற்றி ஏதாவது போட்டுக் கொடுத்து அவர்களின் நிம்மதியைக் கெடுக்கப் பார்ப்பார். இப்போது அரசியலில் ஊடகவியலாளர்கள் அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் ஊடகவியாளர்களுக்கு மிகப்பெரிய அவமானத்தைக் கொடுத்துவிட்டது; அதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெளியே ‘இட்ஸ் மிராக்கிள், வாழ்த்துகிறோம்’ என இளித்தாலும், உள்ளுக்குள் இருக்கும் எரிச்சலை எப்படித் தீர்ப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

சரி, அவர்கள் என்னதான் சொல்கிறார்கள், எப்படி சமாளிக்கிறார்கள் என்று நானும் சில பேட்டிகளைக் கவனித்தேன். கிட்டத்தட்ட எல்லாம் சீமான் ரேஞ்சுக்குத்தான் இருக்கிறது. அதாவது, மக்களுக்கு அறிவில்லையாம்! அதனால்தான் இந்த முடிவாம்! ஒரே டெம்ப்லேட்.

இது விஜய்யின் வெற்றியா?


இந்தத் தேர்தல் பல உண்மைகளை உணர்த்திவிட்டது. இதுவரை 'தற்குறி' என்றால் அது விஜய் ரசிகர்கள் மட்டும்தான் என்ற பிம்பம் இருந்தது. நானும் பல காணொளிகளை கவனித்தேன்; இளம் விஜய் ரசிகர்கள், பெண்கள், படித்தவர்கள் எனப் பலரும் உளறினார்கள். அவர்களுக்கு அரசியலே தெரியவில்லை; ஏதோ ஒரு மாய உலகத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அந்த இளைஞர்களின் பேட்டியை கவனிக்கும் எவரும், விஜய் ரசிகர்கள் தற்குறிகள் தான் என்ற முடிவுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு அந்தப் பேட்டிகள் அபத்தமாக இருந்தன.

இருந்தாலும், விஜய் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். காரணம், விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் தற்குறிகளாக இருக்கலாம், ஆனால் விஜய் அப்படி அல்ல. அவருக்கு ஓரளவாவது அரசியல் தெரிந்திருக்கிறது. தன்னுடைய பலம் என்ன என்பதை உணர்ந்துதான் அவர் கூட்டணிக்கு முயற்சி செய்தார். "வென்றால் கூட்டணி ஆட்சிதான்" என்பதையும் முதலிலேயே சொல்லிவிட்டார். ஆரம்பகாலத்தில் சீமான், எடப்பாடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல்கள் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் தங்களை 'சூப்பர்மேன்' என நினைத்துக்கொண்டு பேசினார்கள்.

Tuesday, May 5, 2026

தேர்தல் பாடம் 1, 2026

இந்தத் தேர்தல் எவ்வளவோ பாடங்களைச் சொல்லியிருக்கிறது. அதில் ஒன்று, இனி அரசியலில் ஜெயிக்க நினைக்கும் தலைவர்கள் பத்திரிகையாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கக் கூடாது என்பதுதான்.

அரசியலில் வாயால் மட்டுமே அரசியல் செய்து வீணாய்ப் போன அரசியல்வாதிகளைப் போல், இவர்களும் வாயை மட்டுமே வளர்த்திருக்கிறார்கள். அந்த அரசியல் வியாதிகளைப் போலவே, இந்தத் தற்பெருமை பேசும் பத்திரிகையாளர்களின் கணிப்பும் முட்டாள்தனமாக இருந்திருக்கிறது.

தற்போது தோற்ற அரசியல்வாதிகளுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்காலம் போய்விட்டது. ஆனால், இந்தப் பத்திரிகையாளர்கள் அதே வாயை வைத்துக்கொண்டு மீண்டும் பல உருட்டல்களை உருட்டி, விஜய்க்கு ஜால்ரா அடித்துப் பிழைத்துக்கொள்வார்கள். இதுதான் அவர்களின் பலம்.

த.வெ.க ஜெயிக்கும் எனக் கணிப்பது வேறு; ஆனால், ஒரு முதல்வரே தோற்கும் அளவுக்கு மக்களிடையே வெறுப்பு இருக்கிறது என்பதைக் கணிக்க முடியாத பத்திரிகையாளர்களை என்ன சொல்வது?

இதற்கு இரண்டே பதில்கள்தான்: ஒன்று, அவர்கள் விலை போய்விட்டார்கள். இரண்டு, அவர்களும் நம்மைப் போலவே சராசரி மனிதர்கள்தான்; நன்றாகப் பேசத் தெரிந்தவன் திருமணப் புரோக்கராக இருப்பதைப் போல, இவர்கள் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இந்த உண்மை நமக்குத் தெரிகிறது, அவர்களுக்குத் தெரியவில்லை.

இனி அவர்களின் பேட்டிகளைக் கேளுங்கள்; சுவாரசியமாக இருக்கும். எங்களுடைய கணக்கு எங்கே தப்பாகிவிட்டது என்று (சப்பைக் கட்டு) சொல்லுவார்கள். அதுவும் நம்புகிற மாதிரியே இருக்கும். ஆனாலும், உலகம் இவர்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறிக்கொண்டிருக்கும்.

மொத்தத்தில் இவர்கள் இருவரும் திருந்தப்போவதில்லை.


Monday, May 4, 2026

யோவ்.. நாங்களெல்லம் எம் ஜி ஆர், ஜெயலிதாவையே பார்த்தவங்க...


எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல...

என்னுடைய 2000 வருட அனுபவத்துல (ஜேம்ஸ் வசந்தன்) சொல்றேன்.

ஜேம்ஸ் வசந்தன் தப்பான முடிவுக்கு வந்துராதீங்க. த வெ க ரசிகனுக்கு நீங்கள் சொன்ன ஆலோசனையை, அதாவது உங்களுடைய பதிவை நீங்களே அடிக்கடி படிங்க. தப்பான முடிவுக்கு போயிடாதீங்க.

Saturday, April 25, 2026

ரிவால்வர் (விஜய்) ரீட்டா

வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இனி கணக்குப் போட வேண்டியதுதான் மீதி. நாம் அந்த வேலையைப் பார்ப்போம்.

'ரிவால்வர் ரீட்டா' என்று ஒரு படம், கீர்த்தி சுரேஷ் நடித்த படம். அதில் ஒரு வில்லன் குடிபோதையில் தவறுதலாக கீர்த்தி வீட்டுக்கு வந்து இறந்து போவான். இறந்தவனுடைய தலைக்கு அவனுடைய எதிரி நல்ல விலை வைத்திருப்பான். அந்தத் தலைக்காக ஒரு கூலிப்படை, அவர்களுக்கு மேல் ஒரு ஒப்பந்ததாரர், அதற்கும் மேல் ஒரு விநியோகிஸ்தர் என அனைவரும் தேடுவார்கள்.

Wednesday, April 22, 2026

பி.டி.ஆர் vs சுந்தர் சி


சமீபத்தில் பி.டி.ஆர் vs சுந்தர் சி சர்ச்சையைக் கவனித்தேன். சுந்தர் சி நன்கு பேசுகிறார். நம்ம ஆட்களும் அதிபுத்திசாலிகள்; ஒருவரிடம் வாதத்திறமை இருந்துவிட்டால், உடனே அவர் அறிவாளிதான் என்று முடிவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் இணையத்தில் இவர் ஹீரோவாகிவிட்டார். சினிமாவில் அவர் வெற்றியாளர்தான், ஆனால் அரசியலில்?

எனக்கு திமுகவை பிடிக்காது. இந்தத் தேர்தலில் அந்தத் கட்சி தோற்க வேண்டும் அல்லது சிறுபான்மை அரசாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், நியாயம் என்று வந்துவிட்டால் அது யார் பக்கம் இருக்கிறதோ, நானும் அங்கேதான் இருப்பேன். அந்த வகையில் நான் பி.டி.ஆர் பக்கம் நிற்கிறேன். காரணம் என்ன?

Monday, April 20, 2026

மகளிர் மசோதா தேவையா?


பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி அடைந்தது குறித்து நிறைய விவாதம் நடக்கிறது. இது கொண்டு வந்ததில் பிஜேபி ஒரு அயோக்கியத்தனம் செய்திருக்கிறது என்பதும் உண்மை. பலமில்லை என்றும் தெரிந்தும் ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்றால் அது ஊரை ஏமாற்றும் வேலைதான்.

ஆனால் முக்கியமான விஷயத்தை பலர் கவனிக்கவில்லை. அது இங்கே.

முதல் சிக்கல், 33 சதவிகிதம் பெண்களுக்கு தேவையா? அவர்கள் கேட்டார்களா? இல்லையே! இவர்களாகவே கூப்பிடுவாங்கலாம், அப்புறம் நேரம் சரியில்லை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்வார்களாம். இந்த காமெடிதான் தற்போது நடக்கிறது.

பெண்கள் என்ன கேட்பது? இது அவர்களின் தார்மீக உரிமையாயிற்றே! `சில விஷயங்களை கேட்டா கொடுக்க வேண்டும்` என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.

அமெரிக்கா ஒரு பேப்பர் டைகரா?

அராத்துவின் ஈரான் போர் குறித்த ஒரு பதிவில் கருத்து போர் நடந்து, அது கொஞ்சம் நீளமாக போய்விட்டது. அந்த பின்னூட்டங்கள் இங்கே ஒரு பதிவாக...

அராத்துவுக்கு கென்னடி அளித்த பதில்,

சூழலுக்கு ஏற்ப உங்கள் பார்வையும் நோக்கமும், ஏகாதிபத்திய தலைவரின் செயல்பாடுகள் போல தடம் மாறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனித்து செயல் பட துவங்கியுள்ளது. ரஸ்யா - சீனா தங்களது வர்த்தகத்தை இனி டாலரில் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது.

Friday, April 17, 2026

டிலிமிடேஷன்

டிலிமிடேஷன் குழப்பம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சமீபத்திய செய்திகள் உண்மையாக இருந்தால், தமிழகத்தின் சதவிகிதம் குறையாதாம்; நல்ல விஷயம்தான். ஆனால் உண்மையில் இங்கே நடந்தது பிஜேபி நடத்திய கண்கட்டு வித்தை. கடைசியில் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை. இங்கே பிஜேபிக்கு கெட்ட நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சில இடியாப்ப சிக்கல்கள் அப்படி ஒரு சூழ்நிலைக்கு நாட்டை கொண்டுவந்து விட்டது. இதற்கான நியாயமான தீர்வு யாரிடமும் இல்லை. 

வட மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை, இதுதான் தலைவலி. இந்த மாநிலங்களில் வறுமை அதிகம். வெளியே வேலை இல்லை; மக்களுக்கு வீட்டிலேயே `வேலை`. இது வரமா,சாபமா? இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் அதைவிட கடுமையாக `உழைக்கிறார்கள்`. அந்த ஆபத்து வேறு.

Tuesday, April 14, 2026

சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?

சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பைக் கவனித்தேன். ஈரானும், தமிழக அரசியலும் எந்த பக்கம் போகும் என்றே தெரியவில்லை. எனவே நாட்டு நடப்பையும் கொஞ்சம் கவனிப்போம்.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும்.  தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.

Saturday, April 11, 2026

திமுகவின் புள்ளிவிவர பித்தலாட்டம்

தேர்தல் வந்தாலே போதும், எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு கதை கட்டுகிறார்கள். ஒருவன் திறமையாகப் பேச வேண்டும், அத்துடன் அவன் கையில் ஒரு புள்ளிவிவரம் இருக்க வேண்டும்; அவ்வளவுதான், மக்கள் அதை நம்பத் தொடங்கிவிடுவார்கள். 'சிவப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்' என்பது போன்ற மனநிலைதான் இதுவும்.

இந்த வேலையை எல்லா கட்சிகளும் செய்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதாலும், அவர்களுடைய சமூக ஊடகப் பிரிவினரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுடைய வண்டவாளத்தை முதலில் பார்ப்போம்.

Thursday, April 9, 2026

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல். மீண்டும் போரா?

மீண்டும் போர் செய்திதான். இஸ்ரேல் லெபனானில் குண்டு மழை பொழிந்து இருக்கிறது. கணிசமான மக்கள் இறந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் இங்கே பொருந்ததாம். இது என்ன குழப்பம்?

வழக்கமாக தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலாகப்போகிறது என்பது தெரிந்தவுடன் நம் ஊர் அமைச்சர்கள்   கடுமையாக `உழைத்து` பல திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவார்கள்.காரணம் உங்களுக்கு தெரியும். அதே கதைதான் இங்கேயும். எல்லா போர் நிறுத்தங்களும் இப்படித்தான். கடைசி நிமிட இலக்கை அந்த ஒப்பந்தத்தை மீறி முடித்துக்கொள்வார்கள். 

Wednesday, April 8, 2026

ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது


ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. யார் இறங்கி வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இது பெருமை பேசும் நேரமில்லை. ஈரான் தன் நிலை உணர்ந்தது நல்ல விஷயம். ஆசியாவில் பங்களாதேஷுக்கு அடுத்து இன்னொரு முஸ்லீம் நாடு ஜனநாயகப் பாதைக்கு திரும்புகிறது. அதுதான் நல்ல செய்தி.

மொத்தத்தில் இது விளையாட்டல்ல இவர் ஜெயித்தார் அவர் தோற்றார் என்று அறிவிக்க. இங்கே நாட்டை அழிப்பது யாருடைய நோக்கமும் அல்ல. அவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சில நேரங்களில் தவறான பாதையில் செல்பவர்களை மிரட்டி சரியான பாதைக்கு திருப்ப வேண்டியதாகியிருக்கிறது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

Saturday, April 4, 2026

அமெரிக்கா -2 ஈரான் 0


ஈரான் போர் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கு தப்பாகிவிட்டது. அமெரிக்காவின் கணக்கும்தான். அது அவர்களுடைய தலைவலி. என்னுடைய கணக்கு தப்பானதுதான் எனக்கு பிரச்சினை. ஏன் என்று ஆராய்ந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஒரு சர்ச்சில் குண்டு வெடித்தது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் அது முஸ்லீம் தீவிரவாதி செய்த வேலை என நினைத்தேன். ஆனால் அது ஒரு கிறிஸ்துவனுடைய வேலை என்பது பின்னர் தெரியவந்தது.

Tuesday, March 31, 2026

செங்கோட்டையன் முதல்வரா?

செங்கோட்டையன் முதல்வரா? எதுவும் சொல்வதற்கில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சமீபத்திய தேர்தல் தொடர்பான செய்திகளை கவனித்தால் ஒரு வேளை இப்படியும் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. சில மாதங்களுக்கு முன்,  `விஜய்யின் தவெக எனும் இ -காமர்ஸ் நிறுவனம்` என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது தனிக்கட்சி ஆரம்பிப்பது என்பது தற்போது அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டது. எனவே இப்படி போக முடியாதவர்கள் விஜய்யின் தவெக வை ஒரு பிளாட்பாரமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என எழுதியிருந்தேன். அது தற்போது நடக்கிறது.

Sunday, March 29, 2026

A B C D கூட்டணி ஜெயிக்குமா?

அதாங்க.. திமுக கூட்டணி ஜெயிக்குமா என்பதுதான் கேள்வி. அந்த 26 ஏழுத்தை கொண்டவன் ஒரு காலத்தில் உலகத்தை ஆண்டான். இப்போது அவன் நிலை என்ன.. அதுதான் உலகம். இங்கே எந்த சாம்ராஜ்யமும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை. அதுவும் தற்போது டிஜிட்டல் உலகம். இங்கே வளர்ச்சியும் வீழ்ச்சியும் மிக வேகமாக இருக்கும்.

2026 தேர்தலில் யார் ஜெயித்தாலும் ஒரு சாம்ராஜ்யம் சிதையப் போகிறது. அது திமுகவா அல்லது அதிமுகவா என்பதுதான் புதிர். டைம் மிஷின் மட்டும் கிடைத்தால் உடனடியாக மே மாதம் போய் உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

Wednesday, March 25, 2026

தட்டில் முகம் தெரிகிறது சிறுத்தைகளே...


ஒரு நீதிக் கதை. யார் வீட்டுக்காவது விருந்தாளியாக போனால் தட்டில் முகம் தெரிவதற்கு முன் வந்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். இணையத்தில் இருப்பவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை.

திருமாவளவனின் கதை அப்படித்தான் இருக்கிறது. தன்மானம் சுயமரியாதை என பெரியாரிஸம் பேசுவார். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே தெரியாது போலிருக்கிறது. விண்ணில் பெரியார் இதையெல்லாம் பார்த்து இந்நேரம் தலையில் அடித்துக்கொண்டிருப்பார்.

Saturday, March 21, 2026

தமிழ் நாடா, தெலுங்கு நாடா?


தமிழ் நாடா, தெலுங்கு நாடா? இதுதான் இப்போதைய சர்ச்சை. பாக்யராஜ், பார்த்திபன் போன்றோர் இதை பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் கணிசமாக தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அதிலும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கே முதல்வர் மட்டும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. அவர் நல்லவர், திறமைசாலி என விட்டுவிடலாம். (இங்கே நான் ஸ்டாலினை குறிப்பிடவில்லை, பொதுவாக சொல்கிறேன்.) ஆனால் கணிசமான அமைச்சர்களும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பதுதான் பிரச்சினை.

Tuesday, March 17, 2026

திமுகவும், பங்களாதேஷும்.

திமுகவும், பங்களாதேஷும். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். இருக்கிறது. 

தற்போது இந்தியாவில் ஒரு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. சங்கியாக இருந்தால் முழு சங்கியாக இருக்கவேண்டும். உபியாக இருந்தால் அதுவும் அப்படியே. ரத்தத்தின் ரத்தம், தற்குறி, ஜோம்பி என எல்லாம் இந்த வகைதான். அவர்களுடைய தலைவர்கள் தவறு செய்துவிட்டால் அதை அப்படியே பூசி மெழுகிவிட வேண்டும். ஆனால் அடுத்தவர்கள் செய்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். நான் இந்த கொள்கையை கடைபிடிப்பவன் அல்ல. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை என்றால் சொல்லிவிடுவேன்.

Saturday, March 14, 2026

கேஸ் தட்டுப்பாடு, பிஜேபி சறுக்கியதா?


இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடில் பல விதமான செய்திகள் வருகிறது. மத்திய அரசு சரியாக திட்டமிடவில்லை, இப்படி ஒரு சூழ்நிலையை கணிக்க தவறிவிட்டார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனக்கும் இங்கே ஆர்வம் வந்தது. ஆசியாவில் பல நாடுகளில் நிலை என்ன என்று கவனித்தேன்.

சவுத் கொரியா 200 நாட்கள், ஜப்பான் 250 நாட்கள், மலேஷியா 30 நாட்கள்?, சீனா 100 நாட்கள், இந்தியா 70 நாட்களுக்கான ரிசர்வ் என பலவிதமான தகவல்கள். இதில் சமையல் எரிவாயு வேறு வகை போலிருக்கிறது. அங்கேதான் இந்தியாவின் கையிருப்பு கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதுதான் தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

Saturday, March 7, 2026

இந்தியாவின் மானம் போய்விட்டதா?


ஈரானிய கப்பல் அழிந்ததில் இந்தியாவின் மானம் போய்விட்டதாம். இந்த செய்தியை நான் கவனித்தபோது  எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டுக்கு வந்த விருந்தாளியை காப்பாற்ற வேண்டியது நம் கடமையாயிற்றே, என்ன நடந்தது என்று புரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெரியும். நம் நாட்டு பத்திரிக்கையாளர்கள் பரபரப்பு பரதேசிகள். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் என்பது எதுவும் தெரியாத ஏகாம்பரங்கள். நம்நாட்டு சமூக ஆர்வலர்கள் வேறு வகை. சமோசா சாப்பிட்டுக்கொண்டே சமூக அவலத்தை பேசுவார்கள். வடை சாப்பிடும்போது வரலாறு பேசிவிட்டு அப்படியே அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.

Friday, March 6, 2026

இது தவறான சிந்தனை


நடிகர் விஜய் திரிஷாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். எல்லோரும் கண்டிக்கிறார்கள். இது தவறுதான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் கனவு உள்ள நபர் இப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் இதன் பின்னால் இருக்கிறது.

அவர் இப்போது இப்படி வெளிப்படையாக திரிஷாவுடன் வருவதன் முக்கிய காரணம், அவருடைய மனைவியை வெறுப்பேற்றத்தான். அந்த அளவுக்கு வெறுப்பு இவருக்கும் அவர் மனைவி மேல் இருக்கிறது. மனைவியை ஒதுக்குவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். அப்பா அம்மாவையும் ஒதுக்கும் அளவுக்கு அவர் ஒதுங்கி இருக்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மனக்காயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை அவர் வெளியே சொல்லாமல் மவுனம் காக்கிறார், தனிமையை தேடுகிறார். ஒருவேளை அந்த தனிமைதான் அவரை அரசியல் நோக்கி தள்ளுகிறதோ?

Sunday, March 1, 2026

காமெனி கொல்லப்பட்டார்

ஈரான் அதிபர் காமெனி கொல்லப்பட்டார். இனி ஈரான் மட்டுமின்றி மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பும். இது நல்ல செய்திதான். ஆனால் காமெனி போன்ற சர்வாதிகாரிகளை/ அவுட் டேட்டட் தலைவர்களை ஜனநாயக நாடுகள் முறையாக ஒதுக்கி வைத்திருந்தால் அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும். இஸ்லாமிய நாடுகளில் அது இல்லாததால், இப்படி ஒரு ஜனநாயக ரவுடி வந்து அந்த வேலையை செய்யவேண்டியிருக்கிறது.

ஆனால் நான் சந்தேகப்பேர்வழி. இங்கே சில செய்திகள் மர்மமாக இருக்கிறது. இந்த தாக்குதலை  அமெரிக்காதான் செய்ததா அல்லது ஈரானில் இருக்கும் காமெனி எதிர்ப்பாளர்கள் இதை பயன்படுத்திக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.

Friday, January 23, 2026

இது மோடியின் சாதனையில் வராதே...

இந்த வாரம் மோடியின் சாதனைகளைப் பார்ப்போம். நிஜமாகவே அவர் பல விஷயங்களில், பல துறைகளில் சாதித்திருக்கிறார். அதேசமயம் சில இடங்களில் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.

மோடியின் தேசபக்தி, நிர்வாகத்திறமை, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற துடிப்பு என எல்லாமே அவரை சிறந்த தலைவராகத்தான் காட்டுகிறது. நானும் அதை நம்புகிறேன். வரலாறு எப்போதுமே இப்படித்தான். வாழும்போது தூற்றும், மறைந்த பிறகு போற்றும்.

காரணம், அரசியலில் Coexist என்ற தியரி கிடையாது. ஒருவர் எவ்வளவு நல்ல தலைவராக இருந்தாலும், நிஜத்தில் அவர் உங்களுக்குப் போட்டியாளர். எனவே வாழும்வரை அவருடைய குறைகளைச் சொல்லிக்கொண்டே/மிகைப்படுத்திக்கொண்டே தான் அரசியல் செய்யவேண்டும். அப்போதுதான் நீங்கள் அதிகாரத்துக்கு வர முடியும். பெரும்பாலான தலைவர்களுக்கு இதுதான் நடந்திருக்கிறது.

Friday, January 16, 2026

இது திமுகவின் சாதனை - மூன்றே மாதத்தில் குழந்தையாம்!


தேர்தல் நெருங்குகிறது. இனி திமுக உடன்பிறப்புகளின் அலப்பரை அதிகமாக இருக்கும். இந்த அலப்பரை எல்லா மனிதர்களிடமும் இருக்கும். ஆனால் திமுகவினர் வித்தியாசமானவர்கள். இவர்களுக்கு லாஜிக் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் பேசுவது `என்ன... கையைப் பிடிச்சு இழுத்தியா?` என்ற வடிவேலு காமெடி வகை. நாம்தான் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்.    

`எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது` என்று ஒருவன் சொன்னால் அவனை வாழ்த்தலாம். திருமணமாகி மூன்றே மாதத்தில் ஒருவன் இதைச் சொன்னால் எப்படி இருக்கும்? காதல் திருமணமா, பல மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டு இவர்கள் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்களா என்ற கேள்வியெல்லாம் உங்களுக்குள் எழும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதுவும் பெண்ணை பார்த்த ஒரு மாதத்தில் திருமணம், அடுத்த மூன்று மாதத்தில் குழந்தை என்று சொன்னால்...நமக்கு இப்போது தலை சுற்றுமல்லவா? அப்படிதான் இருக்கிறது தற்போது உடன்பிறப்புகள் சுட்டிக் காட்டும் சில பொருளாதாரப் புள்ளி விவரங்கள்.

Monday, January 5, 2026

தலித் புள்ளிங்கோ - இவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?


இந்த நான்கு சிறுவர்கள் செய்த செயலை நீங்கள் கவனித்து, மறந்து அடுத்த பரபரப்பை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இவை சில கடந்த கால சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அவை இங்கே.

என் கடையில் வேலை பார்த்த இருவர் தலித்துகள். எனக்கு அது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் என் கடையில் ஐயர் ஒருவர் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவார். அவர்தான் ஒருவரை சுட்டிக்காட்டி எதேச்சையாக கேட்டார் `இவர் தலித்தா?` என்று.