!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label judicial. Show all posts
Showing posts with label judicial. Show all posts

Wednesday, August 5, 2026

கட்ட துரைக்கு (உதயநிதி) நேரம் சரியில்லை

உதயநிதியின் தஞ்சாவூர் (திரிஷா) ஆபாச பேச்சை பல விதமாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இவர் பல இடங்களில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே எந்தப் பேச்சு என்று எதிர்காலத்தில் குழப்பம் வராமல் இருக்க, இப்படி இடத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

என்னைக் கேட்டால் இங்கே முதல் குற்றவாளிகளே நீதிபதிகள்தான். இவர்களால்தான் இவ்வளவு அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையில் பலரும் துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நீதித்துறையின் மீது பயம் போய்விட்டதுதான் காரணம்.

ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிபதிக்கு முன்னே நிறுத்தினால், பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டினால், ஜாமீன், வாய்தா எல்லாம் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். "எங்கம்மா வயசுக்கு வந்துட்டாங்க, அதனால வாய்தா கொடுங்க" என்று ஒரு வழக்கறிஞர் சொன்னாலும், "லாஜிக் இடிக்குதே" என யோசிக்காமல் அதற்கும் வாய்தா கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள்.

Tuesday, July 28, 2026

கரூர் தீர்ப்பு — இது நல்ல விஷயம்தான்!

மதுரை உயர் நீதிமன்றம், கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்ட கருத்துகளும் வரவேற்கப்பட வேண்டியவை. "இவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது தவறு" என ஏற்கனவே ஒரு பதிவில் நானும் எழுதியிருக்கிறேன். எனவே, இது ஒரு நல்ல தீர்ப்புதான். ஆனால், 'வெளுத்ததெல்லாம் பால்' என்று நினைப்பவன் நான் இல்லை; ஒருவேளை அது 'மில்க்' ஆகவும் இருக்கலாம்!

இங்கே, ஆளுங்கட்சியின் முடிவை எதிர்த்து ஒரு தீர்ப்பு — அதுவும் மிக விரைவாக — வரக் காரணம் என்ன?

Tuesday, April 14, 2026

சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?

சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பைக் கவனித்தேன். ஈரானும், தமிழக அரசியலும் எந்த பக்கம் போகும் என்றே தெரியவில்லை. எனவே நாட்டு நடப்பையும் கொஞ்சம் கவனிப்போம்.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும்.  தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.

Wednesday, November 26, 2025

தமிழக அரசு vs கவர்னர் ரவி - இது ஒரு கவுண்டமணி காமெடி

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு vs கவர்னர் ரவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று இரண்டு நாளாக படித்தேன். வருவேன்..ஆனா வரமாட்டேன் என்ற வகை.  

இந்த வழக்கில் கவர்னர் மற்றும் குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கமுடியாது என்று இவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். நான் பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன், இந்த நீதிபதிகளுக்கும்  நீட் எக்ஸாம் வைத்து அவர்களுக்கு பொது அறிவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று. அதை செய்யாததால்தான் இப்படிப்பட்ட அபத்தமான தீர்ப்புகள் வருகின்றன.

Saturday, November 8, 2025

கோவை கற்பழிப்பு - என்னதான் செய்வது?


கோவை கற்பழிப்பு இன்னும் ஒரு வாரம் ஓடும். அடுத்த பரபரப்பு செய்திக்காக வெயிட்டிங். இங்கே நீண்ட காலமாக இது போன்ற செய்திகளை கவனிக்கிறோம். ஆனால் இதுவரை தீர்வுதான் வரவில்லை. எனவே நாம் மாற்றி யோசிக்கவேண்டியதுதான்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சில அடிப்படையான பிரச்சினைகள் என சில வகைப்படுத்தி அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது அவசியமாகிறது.

முதல் பிரச்சினை காலதாமதம். அந்தக்காலத்தில் பெண்கள் 14-15 வயதிலேயே `உலகத்தை` பார்த்தார்கள். பின்னர் அது 18-20 என மாறியது. இப்போது பெண்கள் முதுநிலை கல்வியையும் முடித்து பின்னர் வேலைக்கு போய் அங்கே இரண்டு வருடம் பணம் சம்பாதித்து, பெற்றவர்களுக்கு கொஞ்சம் உதவியாய் இருந்து அதன்பிறகு 25-30 க்கு பிறகுதான் திருமணம் செய்து `உலகத்தை` பார்க்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. இது பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்படும் அநீதி.

Tuesday, January 14, 2025

சவுக்கு சங்கரும், ஞானசேகரனும்

என்னய்யா தலைப்பு இது என்று கேள்வி கேட்காதீர்கள். இங்கே இந்த இரண்டு பேர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் அல்லது காவல்துறை அவர்களை அணுகும் விதத்தில் ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது. அதற்காகத்தான் இந்த தலைப்பு.

முதலில் சவுக்கு சங்கர். இவர் கடந்த வருடம் ஐபிஸ் அருண் அவர்களை பற்றி, அவர் பெண் காவலர்களை தவறாக பயன்படுத்துகிறார் என ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அந்த வீடியோ எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மீது வழக்கு தேவை என்பதை நானும் உணர்ந்தேன். அவர்மீது உடனடியாக வழக்கும்  பதியப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் போடப்பட்ட விதம் அயோக்கியத்தனம் என்ற அளவுக்கு இருந்தது.

Saturday, January 4, 2025

யார் அந்த நீதிபதி?

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை செய்திதான் தற்போது பரபரப்பு. நானும் கவனிக்கிறேன். தொடர்ந்து நாட்டு நடப்பு செய்திகளை கவனிப்பவர்களுக்கு இது ஒரு பழகிப்போன செய்தி. இது இந்த வருடம். அடுத்த வருடம் இதே போல் ஒரு பரபரப்பு பாலியல் வன்கொடுமை வரப்போகிறது. காரணம், இங்கே பல விஷயங்களை பேசுவதற்கு/விவாதிப்பதற்கு/குரல் கொடுப்பதற்குதான்  மனிதர்கள் இருக்கிறார்களே தவிர, இதை முடிவுக்கு கொண்டுவரும் தலைவர்கள்தான் இல்லை.

Thursday, June 22, 2023

இவர்கள் திருந்தமாட்டார்கள்


எழுதும் ஆர்வம் போய்விட்டது. ஆனாலும் இந்த நீதித்துறை கனவான்கள் செய்யும் அட்டூழியங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. இது அந்த வகை பதிவு.

சமீபத்தில் தமிழ்நாட்டு ஐபிஸ் ஆபிஸர் ராஜேஷ் தாஸ் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். இதுதான் செய்தி. இதில் சந்தோசம் மற்றும் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மிக விரைவாக 3 ஆண்டுகளிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

Saturday, February 11, 2023

நானொரு முட்டாளுங்க...



சமீபத்திய நீதித்துறை செய்திகளை படித்தால் எனக்கு இந்த சிந்தனைதான் வருகிறது. எவ்வளவு அற்புதமாக பிஜேபியும் நீதித்துறை கனவான்களும் நம் காதில் பூ சுற்றியிருக்கிறார்கள்.

அவ்வப்போது நீங்கள் ஒரு செய்தியை படித்திருக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் கவனித்திருக்கலாம். மத்திய சட்ட அமைச்சர் `நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் நடைமுறை சரியில்லை, எனவே இதை மாற்றவேண்டும்` என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அதாவது சொல்லுவார், வருத்தப்படுவார், ஆவேசப்படுவார், ஆதங்கப்படுவார். அவ்வளவுதான்.. அதைத்தாண்டி எதையும் செய்யமாட்டார். ஏனென்றால் அவரால் எதுவும் செய்யமுடியவில்லையாம்.

Sunday, May 15, 2022

உப்புமா கொள்ளையர்கள்

சென்னையில் சமீபத்தில் நடந்த இரட்டை கொலையில் போலீசார் மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்துவிட்டார்களாம்.  சட்டசபையில் முதல்வரே இதற்கு பாராட்டு தெரிவித்துவிட்டார். இது எப்பேர்ப்பட்ட சாதனை? ஆனால் செய்திகளை படித்தால் எனக்கு அப்படி தெரியவில்லை.

நிஜத்தில் இது ஒரு உப்புமா கொள்ளையர்களின் கதை. அதாவது முன் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளின் வேலை. போலீசார் தங்கள் திறமைகளை `காட்டி`க் கொள்ள  உதவும் ஒரு கிரைம்.

Friday, March 26, 2021

`சின்னப்புள்ள` சீமான்


எப்போதாவது சீமானின் பேச்சை கேட்பதுண்டு. அப்படி ஒரு முறை கேட்டபோது `எதற்கய்யா 8 வழி சாலை.. வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ணப்போற?` என கோபமாக கர்ஜித்தபோது, நான் அதிர்ச்சியானேன்.

பொருளாதாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரியும், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நாடும் வளம் பெறமுடியும் என்பதை. இந்த உள்கட்டமைப்பில் பல வழி சாலைகளும் ஓன்று. அப்போதே எனக்கு கோவம் வந்து ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைத்தேன். வழக்கம்போல் டிஃபரஷன் வந்து நின்றுவிட்டது.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு ஒரு அறிவுரை சொன்னார். `எடப்பாடி, ஸ்டாலின், கமல் மற்றும் என்னை கூப்பிட்டு விவாதம் வையுங்கள், யார் ஜெயிக்கிறார் என பாப்போம்` என சவால் விட்டார். இவர் நன்கு வாயை வளர்த்து வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இவரை இப்படி வாயாட வைத்திருக்கிறது.

ஆனால் இவரின் வாய் சவடாலை கேட்டபோது எனக்கு கோபமும் வந்தது கூடவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையும் வந்தது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டுவிதமான தலைவர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஊழல்வாதிகள் மற்றும் சீமானை போன்ற அரைவேக்காடுகள்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவரை போன்ற நபர்கள் வார்த்தை ஜாலங்களில் அற்புதமாக, வசீகரமாக இருக்கிறார்கள். ஒருவகையில் நேர்மையான அரசியல்வாதி என்ற தோற்றமும் தெரிகிறது. அது ஒருவகையில் உண்மையாகவே இருக்கக்கூடும்.

ஆனால் எதார்த்தம் புரியாத, புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை யாருக்கும் பயன்படாது. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு என்றோரு நேர்மையான மனிதர் இருந்தார். 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மம்தா பானர்ஜியும் நேர்மையான, எளிமையான மனிதர்களே. அவர்களின் ஆட்சியையும் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் என்ன பயன்?

சமீபத்திய கொரோன லாக் டவுனில் ஒரு கவனிக்கத்தக்க செய்தி. இந்த லாக் டவுன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 40 ஆண்டுகால நேர்மையான தலைவர்களின் ஆட்சி இவர்களை எந்த நிலைமையில் வைத்திருக்கிறது.

இன்னொரு நேர்மையான தலைவரான ஒடிசாவின் நவீன் பட்நாயக் கதையும் அப்படிதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இங்கே நேர்மையான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் தமிழகம் கழங்களின் ஊழலில் சிக்கி தவித்தாலும், வளர்ச்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது.

இது ஒரு வினோதமான சூழ்நிலை. ஊழல்வாதிகள் வளர்ச்சியை கொடுக்கிறார்கள். நேர்மையானவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஓரளவு புரிந்தாலும் இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது அதைவிட சிரமம்.

இங்கே ஒரே செய்திதான். ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள்தான், ஆனால் அதைவிட ஆபத்து இப்படி நேர்மையை மட்டும் தகுதி என நினைத்துக்கொள்ளும் முட்டாள் தலைவர்கள்.

இதற்கு ஒரு கதை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு அம்மா தன் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தினார். ஓரளவு பொருளும் இருந்தது. இவரும் சம்பாதித்து சேமித்தார்.

காலத்தின் கொடுமை இவரின் ஒரு பிள்ளையை ஊதாரியாக மாற்றியது. இன்னொரு பிள்ளை உலகம் புரியாத அப்பாவியாக இருந்தது. பெரிய பிள்ளை அவ்வப்போது வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். அக்கம் பக்கத்தில் இதை சொல்லி அந்த அம்மா புலம்புவது வழக்கம். சின்னப்புள்ள அப்பாவியாக இருந்தாலும் அந்த பிள்ளை மீது அந்த அம்மாவிற்கு நம்பிக்கை.

ஒருநாள் அந்த அம்மா தன்னுடைய சின்னபுள்ளையை செமத்தியாக அடித்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. தன்னுடைய திருட்டு புள்ளையை கூட இவர் இப்படி அடித்ததில்லையே என ஆச்சர்யம். `பெரியவனாவது 100-200 திருடுவான். இவன் என்னை நடுத்தெருவுல கொண்டுவந்து நிறுத்திட்டானே` என கத்திக்கொண்டிருந்தார்.

நடந்தது இதுதான். வீட்டில் இந்த சின்னப்புள்ள தனியாக இருந்தபோது கணவன் மனைவி போல் இருவர் வந்திருக்கின்றனர். திருடர்கள். இவர்களை பற்றிய விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். `உங்கப்பா போன பிறகு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க என வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். கடைசியில், `வரும்போது உனக்காக பிஸ்கட் வாங்க மறந்துட்டோம். நீயே போய் உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள்` என சொல்ல, அந்த சின்னப்புள்ள காசை வாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான். இவர்களும் வீட்டில் கிடைத்தை வாரிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இப்படித்தான் உலகம் வித்தியாசமாய் இருக்கும். இங்கே அயோக்கியர்களை விட முட்டாள்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

இங்கே இரண்டு கழகங்களின் அழிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் எனக்கு, அதற்கு மாற்று என வரும் இந்த சின்னப்புள்ள கமல்,சீமான் போன்றவர்களின் அரசியலை பார்த்தால் அதுவும் பயமாக இருக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர்மையான அதே சமயம் திறமையான தலைவர்கள் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம், தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லை.

Friday, February 12, 2021

தலைகீழ் உபதேசம்



கடந்த பதிவில் நான் என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள 10 வருடங்கள் ஆனது என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போதே இன்னொரு செய்தியையும் கவனித்தேன். அதாவது சிலர் பச்சோந்தியாக பத்தே நாட்களில் குணம் மாறுவார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு செய்தி இங்கே. 

சமீபத்தில் என்னுடைய பேஸ்புக்கில் ஒரு பதிவு வந்தது. பிக்பாஸ் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்த பிறகு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை நான் பாலோ செய்திருந்தேன். அவர் இந்து ராம் அவர்களின் ஒரு கருத்தை லைக் பண்ண, அது எனக்கு காட்டியது. இவர் லைக் பண்ணியிருக்கிறார் என்றால் இவருக்கும் அந்த கருத்தில் உடன்பாடு என்றுதான் அர்த்தம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். பிரபல பாப் ஸ்டார் ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலாக டெண்டுல்கரும் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இது அவர்களின் உரிமை. எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆனால் இங்கே டெண்டுல்கரை விமரிசித்து  இந்து ராம் டிவிட்டரில் போட்ட செய்தி இங்கே.

And Sachin Tendulkar pontificating that “External forces can be spectators but not participants” is laughable. Is expressing an opinion ‘participation’?If Tendulkar wishes his opinion to be respected, he should stick to cricket and matters he is knowledgeable about.

ஒரு சம்பவம் நடக்கும் போது கருத்து (opinion) சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ஆலோசனை (advise) செல்லும்போதுதான் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த துறையில் எக்ஸ்பர்ட்டா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இங்கே மிக மிக முக்கியமாக ஒன்றை கவனிக்கவும். நான் இங்கே எனது கருத்தைதான் பதிவு செய்கிறேன்.

அதேபோல் இந்து ராம் அவர்களும் ஒரு கருத்தை முன் வைத்ததில் தப்பில்லை. அதற்காக அவர் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட அதிர்ச்சி ஜேம்ஸ் வசந்தன் அதை லைக் பண்ணியது.      

சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் 4ல் ஒரு சம்பவம்.  பாலாஜிக்கும் ஆரிக்கும் சண்டை வந்தபோது, பாலாஜி பேசற வரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு, ஆரி பேசும்போது மட்டும் ரம்யா பாண்டியன் இடையில் புகுந்து தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டுவார். இதை கமலும் சுட்டி காட்டிவிட்டார். ஜேம்ஸ் வசந்தனும் சொல்லிவிட்டார்.

அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு துறையை பற்றி ஒரு பெண் பாடகி கருத்து சொல்கிறார். அப்போது வாய் திறந்து `உன்னுடைய கருத்து பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்றால் உனக்கு தெரிந்த துறையை பற்றி மட்டும் கருத்து சொல்` என்று அந்த பாடகிக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். அப்போது வாய் திறக்காத இந்த புத்திசாலி, கிட்டத்தட்ட அதே கருத்தை /தவறை டெண்டுல்கர் செய்யும்போதுமட்டும்  இவருக்கு அறசீற்றம் வந்துவிட்டது. என்ன ஒரு மொள்ளமாரித்தனம். ஒரு வேளை ரம்யா பாண்டியனுக்கு இவர் ஒன்னுவிட்ட சித்தப்பாவா இருப்பாரோ? அல்லது ரெண்டு பேரோட பேரும் ர வுல ஆரம்பிக்கறதால இப்படித்தான் ரெண்டு நாக்கோட அலைவாங்களோ?

பிக்பாஸ் விமர்சனத்தில் ரம்யா பாண்டியன் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன் இங்கே ராமை விமர்சனம் செய்யவில்லை, மாறாக லைக் செய்திருக்கிறார். என்ன கொடுமை சரவணன் இது. 

நான் என் குணத்தை மாற்றிக் கொள்வதற்கு பல வருடங்கள் ஆகியது. ஆனால் ஜேம்ஸ் வசந்தன் 10 நாளுக்கு முன்னால் நடுநிலைமை என்றால் என்ன என்று ரம்யாவுக்கு உபதேசம் செய்துவிட்டு, இங்கே இப்படி தலைகீழ் உபதேசம்.