!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, December 28, 2012

சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால் பணம்


கிரானைட் வழக்கில் கைது செய்யப்பட்ட பி ஆர் பழனிச்சாமி அனைத்து வழக்குகளிலும் பெயில் கிடைத்து வெளியில் வந்துவிட்டாராம். இது சமீபத்தில் படித்த செய்தி. இவர் மீது 35 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் வரக்கூடுமாம்.

பொதுவாக ஒருவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. இதை வலியுறுத்தி ஒரு பதிவும் போட்டிருக்கிறேன். ஐந்துக்கு மேல் போனால் காப்பு உறுதி என்ற பயம் ஓரளவுக்காவது குற்றவாளிகளை கட்டுபடுத்தும்.

Friday, December 21, 2012

மன்னிக்க அல்ல, தண்டிக்க கற்றுக் கொள்ளுங்கள்


டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், இந்த சமுதாயம் எந்த அளவுக்கு மோசமாக மாறிவிட்டது என்பதை காட்டுகிறது. வழக்கம்போல் கூச்சல்களும் மெழுகுவர்த்தி ஊர்வலங்களும் நடக்கும்.

அடுத்து குஜராத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக அலசப்படும் போது, இந்த விஷயம் மறக்கடிக்கப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அந்த நேரம் உணர்சிகளை கொட்டிவிட்டு பின்னர் அதை மறந்துவிடுவது இந்தியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

எனக்கு தெரிந்து இந்த பிரச்சினைகளுக்கு இரண்டே காரணங்கள்தான். ஓன்று மக்களின் மனநிலை, மற்றது இந்திய நீதித்துறையின் உருப்படாத கொள்கை.

Saturday, December 15, 2012

நகர்வலம்: எப்படி எல்லாம் நம்பள ஏமாத்தறாங்க!


தினம் செய்திகளை இணையத்திலும், டிவியிலும் கேட்டாலும், தமிழ் நாட்டின் அடுத்த கட்ட செய்திகள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதாவது பரபரப்பான செய்தி தலைப்பு செய்தியாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி பல செய்திகள் இருக்கும். அது கவனத்துக்கு வராமலேயே போகிவிடும்.

எனவே மற்ற செய்திகளையும் கவனிக்க ஜூவி வாங்கப் போனேன். சில வாரங்களாக வாங்கவில்லை. அங்கே 9 ம் தேதி போட்ட இதழ் எனக்கு 14 ந்தேதி கிடைத்தது. வழக்கமாக மற்ற மாநிலங்களில் இதன் விலை 1 ரூபாய் அதிகம் (11). இவர் 12 ரூபாய் வாங்குகிறார். அது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இந்த முறை எனக்கு வேறு ஒரு சந்தேகம் வந்துவிட்டது.

Thursday, December 13, 2012

தேர்தல்: தமிழகமும், குஜராத்தும்...


குஜராத் தேர்தலையும் தமிழ்நாட்டு தேர்தலையும் கவனிக்கும் போது வித்தியாசங்கள் அநியாயத்துக்கு நம்மை பார்த்து சிரிக்கின்றன. மனமும் இந்த முரண்பாடுகளுக்கு பதிலை தேடுகிறது. சில காரணங்கள் இங்கே. 

தமிழகம் மாநில அந்தஸ்த்தை அடைந்தது 1950 ல். குஜராத் அந்த அந்தஸ்த்தை 1960 ல் பெற்றது.

தமிழகம் இயற்கையாகவே இந்தியா என்ற மத்திய அமைப்பிலிருந்து விலகி இருக்கிறது. மாநில உணர்வு இங்கே அதிகம். இது தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என இரண்டு பிரிவை உருவாக்கியது.

Thursday, December 6, 2012

நாட்டு நடப்பு: இப்படியும் சில பெண்கள்

சமீபத்தில் இந்த செய்தியை படித்தபோது சில கேள்விகளால் தலை சுற்றியது. குஜராத்தில் ஒரு பெண் விரைவில் தாயாகப் போகிறார். எப்படி என்பதில்தான் சிக்கல்.

இவர் 52 வயது பெண். இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்துவிட்டார். கணவனும் இறந்துவிட்டார். தனிமையில் தவித்தார். இந்த சூழ்நிலையில், மனைவியை இழந்த இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார்.

இதுவரை தப்பில்லை. இது யதார்த்தமான, நியாயமான முடிவுதான். ஆனால் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது போல், இவருடைய புது கணவருக்கு முதல் தாரத்திலும் குழந்தை இல்லை. எனவே அவருக்கு தன்னுடைய (ராஜ) வம்சம் தழைக்க வேண்டும் என்ற ஆசை.