!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, July 30, 2011

எரிபொருள் சிக்கனம் - சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு...


இந்த வாரம் ஒரு காது குத்தும் நிகழ்சிக்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டி இருந்தது. ஆனால் நான் கோவிலுக்கு போவதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.

அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், பிரபஞ்சம் மற்றும் பல தியரிகளையும் படிக்கும் போது கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கான காரணங்கள் தெரியவில்லை. அதேசமயம், `நீ என்ன செய்தாய் எனக்கு, நான் உன்னை மதிப்பதற்கு` என்ற எனது கோவமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

Sunday, July 17, 2011

ஒரு கோடி பரிசு !


எனக்கு நுனி நாக்கில் ஒரு ஓரமாக கொஞ்சம் கருப்பாக இருக்கும். மச்சமோ என்னவோ? எனவே சிலர், `அய்யய்யோ... உன்னை பகைச்சிக்க கூடாதப்பா. நீ எது சொன்னாலும் பலிக்கும்` என்று சொல்லுவார்கள். அது உண்மையோ, பொய்யோ, ஆனால் நான் இதற்கு முந்தைய பதிவில் ஒரு உதாரணத்துக்கு சொல்லியிருந்தேன், தீவிரவாதிகள் குண்டு வைத்து விளையாடுவதற்காகவே உருவான நகரம்தான் மும்பை என்று! நான் அப்படி சொல்லி சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் தீவிரவாதிகள் மும்பையில் மீண்டும் குண்டு வைத்து விளையாடிவிட்டார்கள்.

Tuesday, July 12, 2011

இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லையா?


யுத்தம் முடிந்துவிட்ட நிலையில், இனப்படுகொலைக்காக இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவும்,  ராஜபக்சேவை தண்டிக்கவும் ஈழத்தமிழர்களோடு இந்திய தமிழர்களும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போர்ராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற போராட்டங்கள் சர்வதேச சமூகத்தை தூண்டிவிட அவசியம் தேவை. எனவே இதை நாம் வரவேற்போம், முடிந்த வரை உதவுவோம்.

ஆனால் இவர்கள் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களுக்கு மட்டும்தான் தமிழுணர்வு இருப்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் தேசியம் என்ற பெயரில் இந்தியாவில் தமிழனுக்கு ஏற்படும் அவமானத்தை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டும் போது, அது நமது பொறுமையை கடுமையாக சோதிக்கிறது.

Sunday, July 10, 2011

நீங்க இந்தியாகாரங்க, உங்க நாட்டை விட்டுகொடுக்க மாட்டீங்க....

சிறையில் நான் முதல் எட்டு மாதம் தொடர் குற்றவாளிகளின் பிளாக்கில் இருந்தேன். பின்னர் வேறு பிளாக் மாறிவிட்டேன். இந்த பிளாக்கில் நான் போய் சேர்ந்தது இலங்கை தமிழர்களுக்கான செல்லில். இங்கே நான் ஒன்றரை வருடம் இருந்தேன். இந்த செல்லில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இலங்கைத் தமிழராக, போதை பொருள் கடத்தல் வழக்கில் உள்ளவராக அல்லது வசதியானவராக இருக்க வேண்டும். நான் இந்த மூன்றும் கிடையாது. இருந்தாலும் சிறை நூலக உதவியாளர் (ஈழத் தமிழர்) இந்த செல்லில் இருந்ததால், அவருடைய நட்பால் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.