!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, April 8, 2013

இதைப் பற்றி நாம் பேசக்கூடாது


நாட்டை உலுக்கிய டெல்லி கற்பழிப்புக்கு பின்னர் செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால், அது பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்ததாக தெரியவில்லை.

தினம் ஒரு தகவல் என ஏதாவது ஒரு ஒரு கற்பழிப்பு செய்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அதிலும் பெண்கள் இந்தியா என்றாலே அலறுகிறார்கலாம். சமீபத்திய புள்ளிவிவரம் அப்படி சொல்கிறது. இதனால் நமக்கு அன்னிய செலாவணியும் போச்சு, மானம் மரியாதையும் போச்சு. 

சட்டம் இந்த குற்றங்களுக்கு கடுமையை காட்டுவதில்லை என்பது ஒரு முக்கிய குறையாக சொல்லப்பட்டது. அரசு தற்போது சட்டங்களை கடுமையாகி இருப்பதால், அந்த ஓட்டையை அடைத்தாகிவிட்டது என்றே நினைப்போம்.

Tuesday, March 26, 2013

இலங்கை: இங்கேயும், அங்கேயும்


தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு ஆங்கில இணையதளத்தில் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.  நமக்கு சரிவராத ஒரு மொழியில் எதற்கு  கஷ்டப்பட்டு கருத்து சொல்லணும் என்பதால் அதில் ஆர்வம் குறைந்தது. ஆனால் இலங்கை பிரச்சினை குறித்த கருத்துக்களை வட இந்திய ஊடகங்களில் படித்தபோது அப்படி இருக்க முடியவில்லை.

பல  வட இந்தியர்கள், `தமிழர்களுக்கு அங்கே மரியாதை இல்லையென்றால் விசாவை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டியதுதானே` என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

Thursday, September 6, 2012

ராஜீவ் கொலையாளிகள் மன்னிக்கப்படுவார்கள்?


மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அவ்வவப்போது இதற்கான குரல் கேட்டாலும் தற்போது அது சத்தமாக ஒலிக்கிறது.

இந்த விஷயத்தில் நான் என் கருத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பேரறிவாளனை இதுவரை அனுபவித்த தண்டனையோடு விடுதலை செய்வதையும், மற்ற இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்குவதையும் நான் ஆதரிக்கிறேன்.

Thursday, March 29, 2012

இலங்கை. இனி எது நடந்தாலும் நன்மைக்கே!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தை அன்று மதியம் டிவியில் பார்த்தேன். ஈவினிங் கடைக்கு வந்தால், ராஜ நடராஜ அண்ணனின் இந்த தீர்மானம் குறித்த பதிவு. அவ்வளவு வேகம். இது அவருக்கு சந்தோஷமான செய்தி. எனவே உடனடியாக அவருடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

எனக்கும் இந்தியாவின் இந்த முடிவு அதன் விருப்பமான முடிவாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம். உடனே பதிவு எழுத ஆரம்பித்தேன். சில பல காரணங்களால் உடனே முடியவில்லை. ஆனால் அதற்குள் இதே பாணியில் வேறு சில பதிவுகள் வந்து விட்டன. சரி, இது பத்தோடு பதினொன்று...

சினிமாவில் இந்த காமெடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது காமெடி சீன் இல்லை. யதார்த்தத்தை பிரிதிபலிக்காத எதுவும் காமெடியாகத்தானே இருக்கும். இது அந்த வகை காமெடி. அதாவது எல்லா உதையும் வாங்கிய பிறகு, கடைசி நேரத்தில் வில்லன் மனம் திருந்திவிட்டதாக வசனம் பேசுவான். யதார்த்தமாக படங்கள் வந்த காலத்திலும் இந்த அபத்தம் சினிமாவில் உண்டு.

Tuesday, July 12, 2011

இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லையா?


யுத்தம் முடிந்துவிட்ட நிலையில், இனப்படுகொலைக்காக இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவும்,  ராஜபக்சேவை தண்டிக்கவும் ஈழத்தமிழர்களோடு இந்திய தமிழர்களும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போர்ராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற போராட்டங்கள் சர்வதேச சமூகத்தை தூண்டிவிட அவசியம் தேவை. எனவே இதை நாம் வரவேற்போம், முடிந்த வரை உதவுவோம்.

ஆனால் இவர்கள் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களுக்கு மட்டும்தான் தமிழுணர்வு இருப்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் தேசியம் என்ற பெயரில் இந்தியாவில் தமிழனுக்கு ஏற்படும் அவமானத்தை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டும் போது, அது நமது பொறுமையை கடுமையாக சோதிக்கிறது.

Sunday, July 10, 2011

நீங்க இந்தியாகாரங்க, உங்க நாட்டை விட்டுகொடுக்க மாட்டீங்க....

சிறையில் நான் முதல் எட்டு மாதம் தொடர் குற்றவாளிகளின் பிளாக்கில் இருந்தேன். பின்னர் வேறு பிளாக் மாறிவிட்டேன். இந்த பிளாக்கில் நான் போய் சேர்ந்தது இலங்கை தமிழர்களுக்கான செல்லில். இங்கே நான் ஒன்றரை வருடம் இருந்தேன். இந்த செல்லில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இலங்கைத் தமிழராக, போதை பொருள் கடத்தல் வழக்கில் உள்ளவராக அல்லது வசதியானவராக இருக்க வேண்டும். நான் இந்த மூன்றும் கிடையாது. இருந்தாலும் சிறை நூலக உதவியாளர் (ஈழத் தமிழர்) இந்த செல்லில் இருந்ததால், அவருடைய நட்பால் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.

Tuesday, January 25, 2011

இனி நாம் தமிழன் என்று சொல்லவேண்டாம். தலை நிமிர்ந்து....


மீண்டும் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை படிக்கும்போது என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. நான் தமிழன் என்றும் அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்படவேண்டும் போலிருக்கிறது.