தமிழகத்தில் தற்போது இந்த குரல்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்துவிட்டன. இது இந்தியா முழுவதுக்கும்னா வியாதி என்றாலும் தமிழ்நாட்டில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற முதல்வர் விஜய்யை பார்த்து டில்லியில் இருந்த ஊடகவியாளர்களின் அந்த குரல், எனக்கு நிஜமாக தெருக்களில் அடிக்கடி கேட்கும் `அந்த குரல்களை` நினைவுபடுத்திவிட்டது.
ஏன் இந்த நிலைமை?
முதல் காரணம், தமிழகத்தில் கல்வி அறிவு அதிகம். அதைவிட அதிகம் வாசிப்பு ஆர்வம். ஒரு காலத்தில் பத்திரிக்கைகளாக இருந்த அவை தற்போது கூடுதலாக இணையமாகவும் மாறி இருக்கிறது. எனவே அவர்களுக்கு செய்தி என்ற தீனி அடிக்கடி தேவை.




