!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, March 17, 2026

திமுகவும், பங்களாதேஷும்.

திமுகவும், பங்களாதேஷும். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். இருக்கிறது. 

தற்போது இந்தியாவில் ஒரு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. சங்கியாக இருந்தால் முழு சங்கியாக இருக்கவேண்டும். உபியாக இருந்தால் அதுவும் அப்படியே. ரத்தத்தின் ரத்தம், தற்குறி, ஜோம்பி என எல்லாம் இந்த வகைதான். அவர்களுடைய தலைவர்கள் தவறு செய்துவிட்டால் அதை அப்படியே பூசி மெழுகிவிட வேண்டும். ஆனால் அடுத்தவர்கள் செய்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். நான் இந்த கொள்கையை கடைபிடிப்பவன் அல்ல. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை என்றால் சொல்லிவிடுவேன். அது எமனாக இருந்தாலும் சரி, அல்லது அந்த சிவனாக இருந்தாலும் சரி.

Saturday, March 14, 2026

கேஸ் தட்டுப்பாடு, பிஜேபி சறுக்கியதா?


இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடில் பல விதமான செய்திகள் வருகிறது. மத்திய அரசு சரியாக திட்டமிடவில்லை, இப்படி ஒரு சூழ்நிலையை கணிக்க தவறிவிட்டார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனக்கும் இங்கே ஆர்வம் வந்தது. ஆசியாவில் பல நாடுகளில் நிலை என்ன என்று கவனித்தேன்.

சவுத் கொரியா 200 நாட்கள், ஜப்பான் 250 நாட்கள், மலேஷியா 30 நாட்கள்?, சீனா 100 நாட்கள், இந்தியா 70 நாட்களுக்கான ரிசர்வ் என பலவிதமான தகவல்கள். இதில் சமையல் எரிவாயு வேறு வகை போலிருக்கிறது. அங்கேதான் இந்தியாவின் கையிருப்பு கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதுதான் தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

Saturday, March 7, 2026

இந்தியாவின் மானம் போய்விட்டதா?


ஈரானிய கப்பல் அழிந்ததில் இந்தியாவின் மானம் போய்விட்டதாம். இந்த செய்தியை நான் கவனித்தபோது  எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டுக்கு வந்த விருந்தாளியை காப்பாற்ற வேண்டியது நம் கடமையாயிற்றே, என்ன நடந்தது என்று புரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெரியும். நம் நாட்டு பத்திரிக்கையாளர்கள் பரபரப்பு பரதேசிகள். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் என்பது எதுவும் தெரியாத ஏகாம்பரங்கள். நம்நாட்டு சமூக ஆர்வலர்கள் வேறு வகை. சமோசா சாப்பிட்டுக்கொண்டே சமூக அவலத்தை பேசுவார்கள். வடை சாப்பிடும்போது வரலாறு பேசிவிட்டு அப்படியே அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.

Friday, March 6, 2026

இது தவறான சிந்தனை


நடிகர் விஜய் திரிஷாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். எல்லோரும் கண்டிக்கிறார்கள். இது தவறுதான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் கனவு உள்ள நபர் இப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் இதன் பின்னால் இருக்கிறது.

அவர் இப்போது இப்படி வெளிப்படையாக திரிஷாவுடன் வருவதன் முக்கிய காரணம், அவருடைய மனைவியை வெறுப்பேற்றத்தான். அந்த அளவுக்கு வெறுப்பு இவருக்கும் அவர் மனைவி மேல் இருக்கிறது. மனைவியை ஒதுக்குவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். அப்பா அம்மாவையும் ஒதுக்கும் அளவுக்கு அவர் ஒதுங்கி இருக்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மனக்காயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை அவர் வெளியே சொல்லாமல் மவுனம் காக்கிறார், தனிமையை தேடுகிறார். ஒருவேளை அந்த தனிமைதான் அவரை அரசியல் நோக்கி தள்ளுகிறதோ?

Sunday, March 1, 2026

காமெனி கொல்லப்பட்டார்

ஈரான் அதிபர் காமெனி கொல்லப்பட்டார். இனி ஈரான் மட்டுமின்றி மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பும். இது நல்ல செய்திதான். ஆனால் காமெனி போன்ற சர்வாதிகாரிகளை/ அவுட் டேட்டட் தலைவர்களை ஜனநாயக நாடுகள் முறையாக ஒதுக்கி வைத்திருந்தால் அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும். இஸ்லாமிய நாடுகளில் அது இல்லாததால், இப்படி ஒரு ஜனநாயக ரவுடி வந்து அந்த வேலையை செய்யவேண்டியிருக்கிறது.

ஆனால் நான் சந்தேகப்பேர்வழி. இங்கே சில செய்திகள் மர்மமாக இருக்கிறது. இந்த தாக்குதலை  அமெரிக்காதான் செய்ததா அல்லது ஈரானில் இருக்கும் காமெனி எதிர்ப்பாளர்கள் இதை பயன்படுத்திக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.