!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, May 26, 2026

தவெக வை நோக்கி.. வரிசையில் மற்ற எம் எல் ஏக்கள்...

முடிவெடுப்பது எப்படி முக்கியமோ அதேபோல் அதை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், அப்போதுதான் அது பலனளிக்கும்.

காங்கிரஸ், விசிக போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே விஜய் பக்கம் திரும்பியிருந்தால், இன்று கணிசமான எம் எல் ஏக்களும் மேலும் பல மந்திரிகளும் கிடைத்திருக்கும், கோட்டைவிட்டுவிட்டார்கள்.

இப்போதும் அதே நிலைதான். தற்போது தவெக வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளும் மட்டமான அரசியல் செய்யும் கட்சிகள் அல்ல, எனவே விஜய்க்கு ஆபத்து இல்லைதான். இருந்தாலும் ஒரு நிரந்தர ஆட்சியை உறுதி செய்ய, அடுத்த தேர்தலுக்கு முன் மேலும் ஒட்டு வங்கியை கூட்டுவதற்கும், சில `இழுபறிகள்` விஜய்க்கு தேவை. இதைத்தான் எல்லா கட்சிகளும் செய்தன, செய்கின்றன. எனவே அரசியல்வாதியாக விஜய்யும் அதைத்தான் செய்வார்.

Saturday, May 23, 2026

இனி விஜய்யை எதிர்க்க வேண்டும்

ஆமாம் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிட்டது. திராவிட கட்சிகள் ஆணவத்தோடு இருக்கின்றன எனவே அதற்கு ஒரு மாற்று இருந்தால்தான் அரசியல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலை இருந்ததால் நான் விஜய்யை ஆதரித்தேன்.

நிலைமை இப்போது தலைகீழ். எப்படி பார்த்தாலும் இனி திராவிட கட்சிகள் எழுந்து நிற்கும் வாய்ப்பு குறைவு. அந்த அளவுக்கு மரண அடி இரண்டு கட்சிகளுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி எதிர்க் கட்சியே இல்லாமல் ஒரு அரசு இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே இனி இவருக்கு ஒரு மாற்றை தேட வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டோம்.

Tuesday, May 19, 2026

திராவிட கட்சிகள்.....கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு

மழை விட்டும் இன்னும் தூவானம் நிற்கவில்லை. இன்னமும் விஜய் கொடுத்த அதிர்ச்சியைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை; விதவிதமான வியாக்கியானங்கள். விஜய், திமுக கூட்டணிக் கட்சிகளை எப்படி அழைக்கலாம்? அவர்கள் தீய சக்தி இல்லையா? அதிமுகவை எப்படி உடைக்கலாம்? இப்படி திமுக மற்றும் அதிமுக ஆதரவு ஊடகவியலாளர்களின் புலம்பல் ஓவராக இருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலும் தலைவலிதான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு கோளாறு வந்துவிடுகிறது. `இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது` என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ஒருவேளை அந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், இந்தத் திரைமறைவு குதிரை பேரங்கள் குறையும்.

இங்கே கவனிக்கப் போவது விஜய் செய்தது சரியா தவறா என்ற விமர்சனங்களைத்தான்.

Sunday, May 17, 2026

கட்டாயப் போக்குவரத்துச் சேவை

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விலை உயர்வு நாட்டைப் பெருமளவில் பாதிப்பதாகக் கூறி, பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்தியிருக்கிறார். இது நல்ல விஷயம்தான். ஆனால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தலைவலி என்னவென்றால், தொலைத்த பொருளைத் தொலைத்த இடத்தில் தேடாமல், "அங்கே இருட்டாக இருக்கிறது" என்று கூறி வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடுவதுதான்.

பிரதமர் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும்படியும், 'கார்ப்பூலிங்' (Carpooling) போன்ற கூட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்படியும் சொல்லியிருக்கிறார். அறிவுரை ஓகே, நடைமுறை?

பொதுவாகச் சாலையில் செல்லும் போக்குவரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் கிட்டத்தட்ட 50-60 சதவீதத்தினர் தனி நபர்களாகவே பயணிக்கிறார்கள். அவர்களின் பின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதை ஏன் நகர்ப்புறப் பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

Sunday, May 10, 2026

எது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?

"ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்."

விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சை எழுந்தபோது, இதற்கான சம்பிரதாய நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று நானே யோசித்தேன். இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் இதில் ஒரு குழப்பம் இருப்பது இயல்புதான். ஆனால், இதற்கான சரியான வழிமுறை என்ன?