நாட்டில் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. அதில் இந்த அவதூறு வழக்குகளும் இப்போது புதிதாக தலைவலிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தத்தில் நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் பல லட்சம் வழக்குகளில் இவைகளும் பதிவாகி, மேலே நகர முடியாமல் நின்றுவிடுகின்றன.
இதில் பெரிய தலைவலி என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் என்பது எது, அதன் எல்லை எது என்று நிர்ணயிப்பதுதான். இணையங்களிலும் முகநூலிலும் பின்னூட்டங்களைக் கவனித்தால் அநாகரிகமான வார்த்தைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அங்கே அவர்கள் சராசரி மனிதர்கள் என்பதால் அதை ஓரளவுக்குப் பொறுத்துக் கொள்ளலாம் (ஜீரணிக்கலாம்).




