!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, July 24, 2026

நீட்- என்ன செய்யலாம்?


இந்தத் தலைவலி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது; முடிவு வந்தபாடில்லை. என்னதான் பிரச்சினை?

எல்லாத் துறைகளிலும் ஓர் அடிப்படைத் தேர்வு வைத்து, "இந்த மாணவன் இதில் தேறுவானா?" என்று கணித்து அவர்களுக்கு மட்டும் இடம் கொடுப்பது நல்ல விஷயம்தான்.

பல பேருக்குப் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான உடல் தகுதியும் வலியைத் தாங்கும் மனஉறுதியும் இருக்கிறதா என்று தேர்வு வைப்பது போல், மருத்துவத் துறையிலும் வைப்பதில் தவறில்லை.

Saturday, July 18, 2026

மகாத்மா காந்தி, பெரியார், இப்போது விஜய்


இது ஒரு அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி. எனவே குறிப்பாக விஜய்யை வெறுப்பவர்கள் கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்வது நல்லது.

நான் நீண்ட காலமாக ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன். 20 ஆண்டுகளாக எவ்வளவோ கணக்குகள் போட்டு, நஷ்டமாகி, நொந்து போய் ஒரு வழியாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் வெற்றியில் இருக்கிறேன். அதாவது சமீபகாலமாக நஷ்டம் என்ற செய்தியே கிடையாது. இது ரொம்ப லேட்தான். இருந்தாலும், 'பெட்டர் லேட் தென் நெவர்' என்ற மனநிலை.

இப்படி ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் விலை ஏறிய ஷேர்களை மட்டும் ஆராய்வேன். அதில் சில ஒற்றுமைகள் தெரியும். அதே ஒற்றுமை வேறு ஷேர்களில் தெரிந்தால் உடனே வாங்கிவிடுவேன். அதில் 70 சதவிகிதம் எனக்கு லாபம்தான்.

Thursday, July 16, 2026

பழனி முருகனுக்கே பஞ்சாமிர்தமா?



பழனி முருகர் கோவிலுக்குச் சொந்தமான (?) நிலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. உயர் நீதிமன்றம் அந்த பதிவை ரத்து செய்துவிட்டது. இது நல்ல விஷயம். ஆனால் அதேசமயம் இங்கே பல தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் உருவாகியிருக்கிறது.

முதல் குழப்பம் அறநிலையத்துறை ரமேஷ் மீது பழி சுமத்துவது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஒரு லாஜிக் வேண்டும். விஜய் ஊழலை அனுமதிக்கமாட்டார் என்பது தெரிந்த உண்மை. ஒருவேளை அவரும் தடம் மாறினாலும் அதற்கும் சில வருடங்கள் ஆகும்.

ஒருவேளை விஜய் ஊழலை (தேர்தல் செலவுக்கு) ஓரளவுக்கு அனுமதித்தாலும், ரமேஷ் போன்றவர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர். இப்படி பொறுப்புக்கு வந்த உடனே யாரும் இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். அதுவும் 100 கோடி ஊழல் செய்யும் அளவுக்கு துணிச்சல் நிச்சயம் வராது. இங்கே யாரையும் யோக்கியன் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எதார்த்தம் என்ற அடிப்படையில் பார்த்தால் இங்கே ஊழலுக்கு வாய்ப்பில்லை.

Saturday, July 11, 2026

இவர்களுக்கு அரசு வேலையா?

கரூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்கும், அதனால் உயிரை இழந்தவர்களுக்கும் உதவி செய்வது என்பது நல்ல விஷயம்தான். இங்கே ஒரு வகையில் தவறு விஜய் மீது இருந்தாலும், பல வகைகளில் தவறு அப்போதைய அரசின் மீதும் இருக்கிறது.

ஒருவர் ஒரு துறையில் எவ்வளவுதான் வெற்றியாளராக இருந்தாலும், பிற துறைகளில் அவர்களின் அனுபவ அறிவு குறைவாகவே இருக்கும். இத்தகைய நேரங்களில், அந்தக் குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் இவர்களுக்குச் சரியான வழிகாட்ட வேண்டும்.

சமீபத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த குழப்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். புதிதாக வழக்கறிஞர்களைத் தேர்வு செய்யாமல், பழைய திமுக சார்புடைய வழக்கறிஞர்களை விடுவித்துவிட்டார்கள். ஆனால், மாற்று ஏற்பாடு செய்யாமல் இப்படிச் செய்யக்கூடாது என்று அமைச்சருக்குத் துறை சார்ந்த (திராவிட விசுவாச) அதிகாரிகள் ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே, "இவர்கள் தவறு செய்யட்டும்" என்ற நோக்கில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள். கடைசியில் பழி அமைச்சர் மீது விழுகிறது.

Sunday, July 5, 2026

இந்த வியாதிக்கு மருந்தில்லை

நாட்டில் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. அதில் இந்த அவதூறு வழக்குகளும் இப்போது புதிதாக தலைவலிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தத்தில் நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கும் பல லட்சம் வழக்குகளில் இவைகளும் பதிவாகி, மேலே நகர முடியாமல் நின்றுவிடுகின்றன.

இதில் பெரிய தலைவலி என்னவென்றால், கருத்துச் சுதந்திரம் என்பது எது, அதன் எல்லை எது என்று நிர்ணயிப்பதுதான். இணையங்களிலும் முகநூலிலும் பின்னூட்டங்களைக் கவனித்தால் அநாகரிகமான வார்த்தைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அங்கே அவர்கள் சராசரி மனிதர்கள் என்பதால் அதை ஓரளவுக்குப் பொறுத்துக் கொள்ளலாம் (ஜீரணிக்கலாம்).