ரா.சிவானந்தம்
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Saturday, September 12, 2026
(மிசா) ஸ்டாலினும், பாபநாசம் திரைப்படமும்
மிசாவில் ஸ்டாலின் சிறைக்கு போனாரா அல்லது இது வேறு வகையா என்பது குறித்த கட்டுரைகளையும், காணொளிகளையும் சலிக்கும் அளவுக்குக் கவனித்துவிட்டேன். The judgment is ready. இருந்தாலும், எந்த ஒரு செய்தியிலும் ஏதோ ஒரு சுவாரசியமான தகவல் மறைந்திருக்கும் அல்லவா, அதை இங்கே கவனிப்போம்.
இப்போது விவாதங்களில் இரண்டு வார்த்தைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன. ஒன்று, இந்தக் கம்பி கட்டுன கதை. இரண்டாவது, நேரேட்டிவ் செட் செய்வது. கலைஞர் இந்த இரண்டையும் அந்தக் காலத்திலேயே செய்துவிட்டார் என்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான செய்தி.
Thursday, September 10, 2026
புதிய தலைமைச் செயலகம் - இப்படி செய்யலாம்
தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்திருக்கிறது. அவசியமானதுதான்; ஆனால் ஏற்கனவே இப்படித்தான் கலைஞர் ஒன்றைக் கட்டி, பின்னர் அது அரசு மருத்துவமனையாக மாறியது. தமிழக அரசியலில் இப்படி அடிக்கடி நடக்கிறது; பரந்தூர் சமீபத்திய உதாரணம். எனவே, மீண்டும் அப்படி ஒரு தலைவலியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டுமே, என்ன செய்யலாம்?
தமிழ்நாட்டில் திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டால், அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் நடந்துவிடும். இது நம் வழக்கம். ஆனால் இங்கே குஜராத்தில் அப்படியில்லை. நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைவெளி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கிறது. அதுவரை மணப்பெண்ணும் மணமகனும் பழகுகிறார்கள். குடும்பங்களும் விசேஷ நாட்களில் சந்தித்துக்கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
Sunday, September 6, 2026
கச்சத்தீவு - என்ன நடந்தது ?
இப்போதெல்லாம் திடீர் திடீரென்று கச்சத் தீவு செய்திகளில் வந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் கலைஞரும் காங்கிரசும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என அரசியலாக்கப்படுகிறது. எனக்கும் கலைஞரை பிடிக்காதுதான். திமுக தோற்றதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டவன்தான் நான். இருந்தாலும் நியாயம் என்று வந்துவிட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டுதான் தீர்ப்பு எழுதுவேன்.
அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
Wednesday, September 2, 2026
வா மணி வா
நீண்ட நாட்களுக்கு பிறகு கவனத்தை ஈர்த்த ஒரு பதிவு. நிசப்தம் மணிகண்டன் எழுதியிருந்தார். வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஒருவன் கொஞ்சம் அதிகமாகப் பேசினால், அவன் குடித்திருக்கிறான் என்று அர்த்தம். அதுவே வேறு இடங்களில் ரொம்பப் பேசினால், அவன் தான் செய்த தவறுகளை மறைக்கிறான் என்று பொருள். இந்த மணிகண்டனும் அப்படித்தான் போலிருக்கிறது.
இவர் பதிவுலகில் இருந்த ஆரம்பகாலத்தில் இவருக்கிருந்த நற்பெயர் காரணமாக, பலர் இவர் ஆரம்பித்த அறக்கட்டளைக்கு நிதி கொடுத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இவரும் பலருக்குக் கல்வி உதவி செய்தார்; தகவல்களைப் பதிவாகவும் போட்டார்.
Saturday, August 29, 2026
டில்லியை நோக்கி விஜய்..
Aug.5 அன்று எழுதிய 'உதயநிதியின் ‘அந்த’ பேச்சு' பதிவின் ஒரு பகுதி ...https://anindianviews.blogspot.com/2026/08/blog-post_916.html
....தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.
பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்...
இது அந்த பதிவின் கடைசி பகுதி.
இப்போது இதுதான் நடக்கும் என்பது உறுதியாகிறது. ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பதைப் போன்றதுதான் இது. ஆனால் இது உடனடியாக சாத்தியமாகுமா?
Labels:
BJP,
cockroachjanatha,
Congress,
rahul gandhi,
TVK,
vijay
Subscribe to:
Posts (Atom)




