!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, August 29, 2026

டில்லியை நோக்கி விஜய்..

Aug.5 அன்று எழுதிய 'உதயநிதியின் ‘அந்த’ பேச்சு' பதிவின் ஒரு பகுதி ...https://anindianviews.blogspot.com/2026/08/blog-post_916.html

....தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.

பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்...

இது அந்த பதிவின் கடைசி பகுதி.

இப்போது இதுதான் நடக்கும் என்பது உறுதியாகிறது. ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பதைப் போன்றதுதான் இது. ஆனால் இது உடனடியாக சாத்தியமாகுமா?

Wednesday, August 26, 2026

பறக்காத பரந்தூர் விமான நிலையம்.

இந்தியா போன்ற சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இவையெல்லாம் நிரந்தரத் தலைவலி. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக நிலங்களை வாங்கி ஊழல் செய்கின்றன என்பதும் உண்மை.

சில சீன காணொளிகளைக் கவனித்தேன். அங்கே எல்லாத் துறைகளிலும் பிரமாதமான வளர்ச்சி. ஆனால் அரசை எதிர்த்துப் போராட்டங்கள் என்பதே கிடையாது. தியான்மென் சதுக்கம் கொடுத்த அடி, இந்தத் தலைமுறையையும் பயமுறுத்தி வைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அங்கே டிஃப்ளேஷன் (Deflation) சில ஆண்டுகளாக இருக்கிறதாம். அதாவது, விலைவாசி ஏறி வருவதைப் போல, சீனாவில் அது இறங்குமுகமாக இருக்கிறதாம். அது இன்னும் குறையவில்லை. அங்கே இருக்கும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணித்தால் எப்படி இருக்கும்?

Sunday, August 23, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : இங்கேயும் கிரீமி லேயர் வரும்

முதலில் ஒரு கதை. அந்தக் காலத்தில் விக்கிரமாதித்தன் என்ற மன்னர் இருந்தார். அவர் நீதி பரிபாலனம் செய்வதில் சிறந்து விளங்கினார். அவர் இறந்த பிறகு, அந்தச் சிம்மாசனம் மண்ணில் புதைந்து, ஒரு மேடாக இருந்தது. அந்த மண் மேட்டில் யார் அமர்ந்தாலும், அவர்கள் நேர்மையானவர்களாக மாறிவிடுவார்களாம்.

நிஜத்தில், இந்தக் கொடுமைதான் தற்போது அரசியலில் நடக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளில் கடந்த 50 ஆண்டுகளாக திறமையற்ற மற்றும் ஊழலில் திளைத்த முதல்வர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த இருக்கைகளுக்கும் அந்த வியாதி பிடித்துவிட்டது. யார் அந்த இருக்கையில் அமர்ந்தாலும், அவர்களையும் அது முட்டாளாக்கிவிடுகிறது.

Saturday, August 22, 2026

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்; இது சரியா?


முதல்வர் விஜய் எடுத்த சில முடிவுகளில் எனக்கு அதிருப்தி இருந்தாலும், இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், இது குறித்த விமர்சனங்களை கவனித்தபோது, பாமர மக்களிலிருந்து அறிவுஜீவி அர்னால்ட்கள் வரை எல்லோரும் இதைக் குறை சொல்கிறார்கள். கொஞ்சம் எதார்த்தமாகப் பேசும் சவுக்கு சங்கரும் இதைக் குறை சொல்லியிருந்தார். நான் எல்லாவற்றையும் கவனிப்பேன். ஆனால், மற்றவர்கள் கருத்து எப்படி இருந்தாலும், என் வழி தனி வழி.

நான் இதை ஆதரிக்கிறேன். ஏன்?

Wednesday, August 19, 2026

திருமாவளவன் - இவரும் திருந்தமாட்டார்

அரசியல் களம் எவ்வளவோ மாறிவிட்டது. கூட்டம் காட்டுவதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி எல்லாம் நிறையவே பெரும் எண்ணிக்கையில் கூட்டங்களை வரவழைத்துக் காட்டியிருக்கின்றன.

அதேபோல் திராவிட கட்சிகளிலும் நிறையப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சீமானைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; அவர் ஒரு இரண்டாம் கோயபல்ஸ். ஆனால், இந்த பேச்சுத்திறமை மக்களிடம் எடுபட்டதா? அதிகம் பிரச்சாரம் செய்யாத, மேடைப்பேச்சே தெரியாத விஜய்தான் வெற்றி பெற்றார்.

இப்படி இன்றைய உலகமும் மக்களின் பார்வையும் மாறிவிட்ட சூழ்நிலையில், இன்னமும் அந்த உளுத்துப்போன (உளுந்தூர்பேட்டை) மாநாடு போன்றவை அரசியல் கட்சிகளுக்குத் தேவையா?