சமீபத்தில் பி.டி.ஆர் vs சுந்தர் சி சர்ச்சையைக் கவனித்தேன். சுந்தர் சி நன்கு பேசுகிறார். நம்ம ஆட்களும் அதிபுத்திசாலிகள்; ஒருவரிடம் வாதத்திறமை இருந்துவிட்டால், உடனே அவர் அறிவாளிதான் என்று முடிவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் இணையத்தில் இவர் ஹீரோவாகிவிட்டார். சினிமாவில் அவர் வெற்றியாளர்தான், ஆனால் அரசியலில்?
எனக்கு திமுகவை பிடிக்காது. இந்தத் தேர்தலில் அந்தத் கட்சி தோற்க வேண்டும் அல்லது சிறுபான்மை அரசாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், நியாயம் என்று வந்துவிட்டால் அது யார் பக்கம் இருக்கிறதோ, நானும் அங்கேதான் இருப்பேன். அந்த வகையில் நான் பி.டி.ஆர் பக்கம் நிற்கிறேன். காரணம் என்ன?



