தேர்தல் தோல்விக்குப் பின், திமுக மற்றும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அரசியலில் விமர்சனம் தேவைதான். ஆனால், அதை எங்கே செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா? இப்போதைக்கு அவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது; எப்போது வரும் என்றும் தெரியாது.
"முதல்வர் விஜய் பேச மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்! அவருக்கு எதுவுமே தெரியவில்லையாம்!"—இதுதான் இப்போதைய ஹாட் டாபிக். ஆனால், அவருக்கு ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது; சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. அவர் ஒரு வெற்றியாளர், அது போதாதா?




