
ரா.சிவானந்தம்
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Sunday, March 1, 2026
காமெனி கொல்லப்பட்டார்

Friday, January 23, 2026
இது மோடியின் சாதனையில் வராதே...
இந்த வாரம் மோடியின் சாதனைகளைப் பார்ப்போம். நிஜமாகவே அவர் பல விஷயங்களில், பல துறைகளில் சாதித்திருக்கிறார். அதேசமயம் சில இடங்களில் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.
மோடியின் தேசபக்தி, நிர்வாகத்திறமை, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற துடிப்பு என எல்லாமே அவரை சிறந்த தலைவராகத்தான் காட்டுகிறது. நானும் அதை நம்புகிறேன். வரலாறு எப்போதுமே இப்படித்தான். வாழும்போது தூற்றும், மறைந்த பிறகு போற்றும்.
காரணம், அரசியலில் Coexist என்ற தியரி கிடையாது. ஒருவர் எவ்வளவு நல்ல தலைவராக இருந்தாலும், நிஜத்தில் அவர் உங்களுக்குப் போட்டியாளர். எனவே வாழும்வரை அவருடைய குறைகளைச் சொல்லிக்கொண்டே/மிகைப்படுத்திக்கொண்டே தான் அரசியல் செய்யவேண்டும். அப்போதுதான் நீங்கள் அதிகாரத்துக்கு வர முடியும். பெரும்பாலான தலைவர்களுக்கு இதுதான் நடந்திருக்கிறது.
Friday, January 16, 2026
இது திமுகவின் சாதனை - மூன்றே மாதத்தில் குழந்தையாம்!
Monday, January 5, 2026
தலித் புள்ளிங்கோ - இவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?
என் கடையில் வேலை பார்த்த இருவர் தலித்துகள். எனக்கு அது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் என் கடையில் ஐயர் ஒருவர் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவார். அவர்தான் ஒருவரை சுட்டிக்காட்டி எதேச்சையாக கேட்டார் `இவர் தலித்தா?` என்று.
Wednesday, December 24, 2025
பாரதியார் யார்?
கிளி ஜோசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள், அடி ஜோசியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஜோசியம் பாட்ஷா படத்தில் வரும். அதாவது, ஒருவன் எதிரியை அடித்த விதத்தை வைத்தே, அடித்தவன் ஆட்டோக்காரன் இல்லை, நாடி நரம்பெல்லாம் ரத்த வெறி பிடித்த ஒருவனின் அடி என அடித்தவனின் ஜாதகத்தைக் கண்டுபிடிப்பதுதான் இந்த அடி ஜோசியம். இது போலீஸ்காரர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதேபோல் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒருவன் பணக்காரனா என கண்டுபிடிக்க அந்த ஆளின் வங்கிக் கணக்கைப் பார்க்க வேண்டாம். அவன் பிள்ளை எந்த பிராண்ட் மொபைல், எந்த மாதிரியான வண்டி வைத்திருக்கிறான் என்பதை கவனித்தாலே போதும். அதாவது, பல இடங்களில் உண்மையை இப்படி குறுக்குவழியிலும் கண்டுபிடிக்கலாம்.
எதற்காக இந்த உதாரணம் என்றால், என்னுடைய முகநூல் பக்கத்தில் இப்போது பாரதியார் குறித்த செய்திகள் அதிகமாக வருகிறது. சமீபத்திய சர்ச்சை காரணமாக அந்த செய்திகளை நிறைய படித்ததால் இந்த நிலைமை. இதை அப்படியே தாண்டி போக முடியவில்லை. எனவேதான் இந்தப் பதிவு.



