ரா.சிவானந்தம்
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Monday, April 20, 2026
மகளிர் மசோதா தேவையா?
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி அடைந்தது குறித்து நிறைய விவாதம் நடக்கிறது. இது கொண்டு வந்ததில் பிஜேபி ஒரு அயோக்கியத்தனம் செய்திருக்கிறது என்பதும் உண்மை. பலமில்லை என்றும் தெரிந்தும் ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்றால் அது ஊரை ஏமாற்றும் வேலைதான்.
ஆனால் முக்கியமான விஷயத்தை பலர் கவனிக்கவில்லை. அது இங்கே.
முதல் சிக்கல், 33 சதவிகிதம் பெண்களுக்கு தேவையா? அவர்கள் கேட்டார்களா? இல்லையே! இவர்களாகவே கூப்பிடுவாங்கலாம், அப்புறம் நேரம் சரியில்லை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்வார்களாம். இந்த காமெடிதான் தற்போது நடக்கிறது.
பெண்கள் என்ன கேட்பது? இது அவர்களின் தார்மீக உரிமையாயிற்றே! `சில விஷயங்களை கேட்டா கொடுக்க வேண்டும்` என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.
அமெரிக்கா ஒரு பேப்பர் டைகரா?
அராத்துவின் ஈரான் போர் குறித்த ஒரு பதிவில் கருத்து போர் நடந்து, அது கொஞ்சம் நீளமாக போய்விட்டது. அந்த பின்னூட்டங்கள் இங்கே ஒரு பதிவாக...
அராத்துவுக்கு கென்னடி அளித்த பதில்,
சூழலுக்கு ஏற்ப உங்கள் பார்வையும் நோக்கமும், ஏகாதிபத்திய தலைவரின் செயல்பாடுகள் போல தடம் மாறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனித்து செயல் பட துவங்கியுள்ளது. ரஸ்யா - சீனா தங்களது வர்த்தகத்தை இனி டாலரில் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது.
Friday, April 17, 2026
டிலிமிடேஷன்
டிலிமிடேஷன் குழப்பம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சமீபத்திய செய்திகள் உண்மையாக இருந்தால், தமிழகத்தின் சதவிகிதம் குறையாதாம்; நல்ல விஷயம்தான். ஆனால் உண்மையில் இங்கே நடந்தது பிஜேபி நடத்திய கண்கட்டு வித்தை. கடைசியில் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை. இங்கே பிஜேபிக்கு கெட்ட நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சில இடியாப்ப சிக்கல்கள் அப்படி ஒரு சூழ்நிலைக்கு நாட்டை கொண்டுவந்து விட்டது. இதற்கான நியாயமான தீர்வு யாரிடமும் இல்லை.
வட மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை, இதுதான் தலைவலி. இந்த மாநிலங்களில் வறுமை அதிகம். வெளியே வேலை இல்லை; மக்களுக்கு வீட்டிலேயே `வேலை`. இது வரமா,சாபமா? இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் அதைவிட கடுமையாக `உழைக்கிறார்கள்`. அந்த ஆபத்து வேறு.
Tuesday, April 14, 2026
சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?
சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பைக் கவனித்தேன். ஈரானும், தமிழக அரசியலும் எந்த பக்கம் போகும் என்றே தெரியவில்லை. எனவே நாட்டு நடப்பையும் கொஞ்சம் கவனிப்போம்.
இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும். தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.
Saturday, April 11, 2026
திமுகவின் புள்ளிவிவர பித்தலாட்டம்
தேர்தல் வந்தாலே போதும், எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு கதை கட்டுகிறார்கள். ஒருவன் திறமையாகப் பேச வேண்டும், அத்துடன் அவன் கையில் ஒரு புள்ளிவிவரம் இருக்க வேண்டும்; அவ்வளவுதான், மக்கள் அதை நம்பத் தொடங்கிவிடுவார்கள். 'சிவப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்' என்பது போன்ற மனநிலைதான் இதுவும்.
இந்த வேலையை எல்லா கட்சிகளும் செய்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதாலும், அவர்களுடைய சமூக ஊடகப் பிரிவினரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுடைய வண்டவாளத்தை முதலில் பார்ப்போம்.
Subscribe to:
Comments (Atom)



