மீண்டும் போர் செய்திதான். இஸ்ரேல் லெபனானில் குண்டு மழை பொழிந்து இருக்கிறது. கணிசமான மக்கள் இறந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் இங்கே பொருந்ததாம். இது என்ன குழப்பம்?
வழக்கமாக தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலாகப்போகிறது என்பது தெரிந்தவுடன் நம் ஊர் அமைச்சர்கள் கடுமையாக `உழைத்து` பல திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவார்கள்.காரணம் உங்களுக்கு தெரியும். அதே கதைதான் இங்கேயும். எல்லா போர் நிறுத்தங்களும் இப்படித்தான். கடைசி நிமிட இலக்கை அந்த ஒப்பந்தத்தை மீறி முடித்துக்கொள்வார்கள்.




