முடிவெடுப்பது எப்படி முக்கியமோ அதேபோல் அதை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், அப்போதுதான் அது பலனளிக்கும்.
காங்கிரஸ், விசிக போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே விஜய் பக்கம் திரும்பியிருந்தால், இன்று கணிசமான எம் எல் ஏக்களும் மேலும் பல மந்திரிகளும் கிடைத்திருக்கும், கோட்டைவிட்டுவிட்டார்கள்.
இப்போதும் அதே நிலைதான். தற்போது தவெக வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளும் மட்டமான அரசியல் செய்யும் கட்சிகள் அல்ல, எனவே விஜய்க்கு ஆபத்து இல்லைதான். இருந்தாலும் ஒரு நிரந்தர ஆட்சியை உறுதி செய்ய, அடுத்த தேர்தலுக்கு முன் மேலும் ஒட்டு வங்கியை கூட்டுவதற்கும், சில `இழுபறிகள்` விஜய்க்கு தேவை. இதைத்தான் எல்லா கட்சிகளும் செய்தன, செய்கின்றன. எனவே அரசியல்வாதியாக விஜய்யும் அதைத்தான் செய்வார்.




