!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, September 17, 2026

விஜய் ஏன் லண்டனுக்குப் போனார்; ஒருவேளை இதற்காக இருக்குமோ?

விஜய் லண்டனுக்குப் போய்விட்டு வந்துவிட்டார். ஏகப்பட்ட பேர் ஏதேதோ கருத்துகளைச் சொல்லிவிட்டார்கள். இது அஜித்தின் ரேஸுக்காக என்று சில செய்திகள். அதிகாரப்பூர்வமாக, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் நடந்த சம்பவங்களை கவனித்தால், இங்கே ஏதோ ஒன்று இடிக்கிறது. அதாவது, reading between the lines என்று சொல்வார்களே, அதுபோல் ஏதோ ஒன்றை யாரும் கவனிக்கவில்லை போலிருக்கிறது.

Monday, September 14, 2026

இடைத்தேர்தல் காமெடிகள்

இந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் பலரை அழ வைக்கப்போகின்றன.

ஏற்கனவே அதிகாரத்தை இழந்து, ஊழல்கள் வெளிவந்து அவமானத்தில் திமுகவினர் கத்திக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் அநாகரிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டான் என்றால், அதற்கு ஒரே அர்த்தம்தான்—அவர்களுக்கு எங்கேயோ வலிக்கிறது. அந்த வலியைத் தாங்க முடியவில்லை; திருப்பி அடிக்கவும் முடியவில்லை. இது போன்ற நேரங்களில் வார்த்தைகளால் எதிரியை ஆபாசமாகத் திட்டி மனசாந்தி அடைய வேண்டியதுதான். அதுதான் திமுக தலைவர்களின் ஆபாசப் பேச்சுக்குக் காரணம்.

Saturday, September 12, 2026

(மிசா) ஸ்டாலினும், பாபநாசம் திரைப்படமும்

மிசாவில் ஸ்டாலின் சிறைக்கு போனாரா அல்லது இது வேறு வகையா என்பது குறித்த கட்டுரைகளையும், காணொளிகளையும் சலிக்கும் அளவுக்குக் கவனித்துவிட்டேன். The judgment is ready. இருந்தாலும், எந்த ஒரு செய்தியிலும் ஏதோ ஒரு சுவாரசியமான தகவல் மறைந்திருக்கும் அல்லவா, அதை இங்கே கவனிப்போம்.

இப்போது விவாதங்களில் இரண்டு வார்த்தைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன. ஒன்று, இந்தக் கம்பி கட்டுன கதை. இரண்டாவது, நேரேட்டிவ் செட் செய்வது. கலைஞர் இந்த இரண்டையும் அந்தக் காலத்திலேயே செய்துவிட்டார் என்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான செய்தி.

Thursday, September 10, 2026

புதிய தலைமைச் செயலகம் - இப்படி செய்யலாம்

தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்திருக்கிறது. அவசியமானதுதான்; ஆனால் ஏற்கனவே இப்படித்தான் கலைஞர் ஒன்றைக் கட்டி, பின்னர் அது அரசு மருத்துவமனையாக மாறியது. தமிழக அரசியலில் இப்படி அடிக்கடி நடக்கிறது; பரந்தூர் சமீபத்திய உதாரணம். எனவே, மீண்டும் அப்படி ஒரு தலைவலியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டுமே, என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் திருமணங்கள் நிச்சயம் செய்யப்பட்டால், அடுத்த ஆறு மாதங்களில் திருமணம் நடந்துவிடும். இது நம் வழக்கம். ஆனால் இங்கே குஜராத்தில் அப்படியில்லை. நிச்சயத்திற்கும் திருமணத்திற்குமான இடைவெளி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை இருக்கிறது. அதுவரை மணப்பெண்ணும் மணமகனும் பழகுகிறார்கள். குடும்பங்களும் விசேஷ நாட்களில் சந்தித்துக்கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

Sunday, September 6, 2026

கச்சத்தீவு - என்ன நடந்தது ?


இப்போதெல்லாம் திடீர் திடீரென்று கச்சத் தீவு செய்திகளில் வந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் கலைஞரும் காங்கிரசும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என அரசியலாக்கப்படுகிறது. எனக்கும் கலைஞரை பிடிக்காதுதான். திமுக தோற்றதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டவன்தான் நான். இருந்தாலும் நியாயம் என்று வந்துவிட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டுதான் தீர்ப்பு எழுதுவேன்.


அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.