!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, April 9, 2026

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல். மீண்டும் போரா?

மீண்டும் போர் செய்திதான். இஸ்ரேல் லெபனானில் குண்டு மழை பொழிந்து இருக்கிறது. கணிசமான மக்கள் இறந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் இங்கே பொருந்ததாம். இது என்ன குழப்பம்?

வழக்கமாக தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலாகப்போகிறது என்பது தெரிந்தவுடன் நம் ஊர் அமைச்சர்கள்   கடுமையாக `உழைத்து` பல திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவார்கள்.காரணம் உங்களுக்கு தெரியும். அதே கதைதான் இங்கேயும். எல்லா போர் நிறுத்தங்களும் இப்படித்தான். கடைசி நிமிட இலக்கை அந்த ஒப்பந்தத்தை மீறி முடித்துக்கொள்வார்கள். 

Wednesday, April 8, 2026

ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது


ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. யார் இறங்கி வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இது பெருமை பேசும் நேரமில்லை. ஈரான் தன் நிலை உணர்ந்தது நல்ல விஷயம். ஆசியாவில் பங்களாதேஷுக்கு அடுத்து இன்னொரு முஸ்லீம் நாடு ஜனநாயகப் பாதைக்கு திரும்புகிறது. அதுதான் நல்ல செய்தி.

மொத்தத்தில் இது விளையாட்டல்ல இவர் ஜெயித்தார் அவர் தோற்றார் என்று அறிவிக்க. இங்கே நாட்டை அழிப்பது யாருடைய நோக்கமும் அல்ல. அவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சில நேரங்களில் தவறான பாதையில் செல்பவர்களை மிரட்டி சரியான பாதைக்கு திருப்ப வேண்டியதாகியிருக்கிறது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

Saturday, April 4, 2026

அமெரிக்கா -2 ஈரான் 0


ஈரான் போர் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கு தப்பாகிவிட்டது. அமெரிக்காவின் கணக்கும்தான். அது அவர்களுடைய தலைவலி. என்னுடைய கணக்கு தப்பானதுதான் எனக்கு பிரச்சினை. ஏன் என்று ஆராய்ந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஒரு சர்ச்சில் குண்டு வெடித்தது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் அது முஸ்லீம் தீவிரவாதி செய்த வேலை என நினைத்தேன். ஆனால் அது ஒரு கிறிஸ்துவனுடைய வேலை என்பது பின்னர் தெரியவந்தது.

Tuesday, March 31, 2026

செங்கோட்டையன் முதல்வரா?

செங்கோட்டையன் முதல்வரா? எதுவும் சொல்வதற்கில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சமீபத்திய தேர்தல் தொடர்பான செய்திகளை கவனித்தால் ஒரு வேளை இப்படியும் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. சில மாதங்களுக்கு முன்,  `விஜய்யின் தவெக எனும் இ -காமர்ஸ் நிறுவனம்` என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது தனிக்கட்சி ஆரம்பிப்பது என்பது தற்போது அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டது. எனவே இப்படி போக முடியாதவர்கள் விஜய்யின் தவெக வை ஒரு பிளாட்பாரமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என எழுதியிருந்தேன். அது தற்போது நடக்கிறது.

Sunday, March 29, 2026

A B C D கூட்டணி ஜெயிக்குமா?

அதாங்க.. திமுக கூட்டணி ஜெயிக்குமா என்பதுதான் கேள்வி. அந்த 26 ஏழுத்தை கொண்டவன் ஒரு காலத்தில் உலகத்தை ஆண்டான். இப்போது அவன் நிலை என்ன.. அதுதான் உலகம். இங்கே எந்த சாம்ராஜ்யமும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை. அதுவும் தற்போது டிஜிட்டல் உலகம். இங்கே வளர்ச்சியும் வீழ்ச்சியும் மிக வேகமாக இருக்கும்.

2026 தேர்தலில் யார் ஜெயித்தாலும் ஒரு சாம்ராஜ்யம் சிதையப் போகிறது. அது திமுகவா அல்லது அதிமுகவா என்பதுதான் புதிர். டைம் மிஷின் மட்டும் கிடைத்தால் உடனடியாக மே மாதம் போய் உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.