
விஜய் கர்நாடகா போகிறாராம்! போகட்டும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒருவேளை அதுவும் பலிக்கலாம்.
தண்ணீர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை. நாடுகளுக்கிடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு உலகளாவிய நடைமுறை இருக்கிறது.இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதே சமயம் சீனாவில் இருந்து இந்தியாவுக்குத் தண்ணீர் வரும் பிரச்சினையும் இருக்கிறது.
இந்தியாவிலும் மாநிலங்களுக்கிடையில் நதிநீர் பகிர்வில் ஏதாவது கோளாறு வந்தால், அதே கொள்கையைத்தான் இந்தியா உள்நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, நியாயம் என்பது தமிழ்நாட்டுக்கு மறுக்க முடியாத ஒன்று.
ஆனால், நீதி யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் தலைவலியே.



