பழனி முருகர் கோவிலுக்குச் சொந்தமான (?) நிலம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. உயர் நீதிமன்றம் அந்த பதிவை ரத்து செய்துவிட்டது. இது நல்ல விஷயம். ஆனால் அதேசமயம் இங்கே பல தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் உருவாகியிருக்கிறது.
முதல் குழப்பம் அறநிலையத்துறை ரமேஷ் மீது பழி சுமத்துவது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டுவதற்கு ஒரு லாஜிக் வேண்டும். விஜய் ஊழலை அனுமதிக்கமாட்டார் என்பது தெரிந்த உண்மை. ஒருவேளை அவரும் தடம் மாறினாலும் அதற்கும் சில வருடங்கள் ஆகும்.
ஒருவேளை விஜய் ஊழலை (தேர்தல் செலவுக்கு) ஓரளவுக்கு அனுமதித்தாலும், ரமேஷ் போன்றவர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர். இப்படி பொறுப்புக்கு வந்த உடனே யாரும் இப்படி வம்பை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். அதுவும் 100 கோடி ஊழல் செய்யும் அளவுக்கு துணிச்சல் நிச்சயம் வராது. இங்கே யாரையும் யோக்கியன் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எதார்த்தம் என்ற அடிப்படையில் பார்த்தால் இங்கே ஊழலுக்கு வாய்ப்பில்லை.




