!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 14, 2026

சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?

சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பைக் கவனித்தேன். ஈரானும், தமிழக அரசியலும் எந்த பக்கம் போகும் என்றே தெரியவில்லை. எனவே நாட்டு நடப்பையும் கொஞ்சம் கவனிப்போம்.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும்.  தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.

Saturday, April 11, 2026

திமுகவின் புள்ளிவிவர பித்தலாட்டம்

தேர்தல் வந்தாலே போதும், எல்லோரும் ஏதாவது ஒரு புள்ளிவிவரத்தை வைத்துக்கொண்டு கதை கட்டுகிறார்கள். ஒருவன் திறமையாகப் பேச வேண்டும், அத்துடன் அவன் கையில் ஒரு புள்ளிவிவரம் இருக்க வேண்டும்; அவ்வளவுதான், மக்கள் அதை நம்பத் தொடங்கிவிடுவார்கள். 'சிவப்பாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்' என்பது போன்ற மனநிலைதான் இதுவும்.

இந்த வேலையை எல்லா கட்சிகளும் செய்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதாலும், அவர்களுடைய சமூக ஊடகப் பிரிவினரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுடைய வண்டவாளத்தை முதலில் பார்ப்போம்.

Thursday, April 9, 2026

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல். மீண்டும் போரா?

மீண்டும் போர் செய்திதான். இஸ்ரேல் லெபனானில் குண்டு மழை பொழிந்து இருக்கிறது. கணிசமான மக்கள் இறந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் இங்கே பொருந்ததாம். இது என்ன குழப்பம்?

வழக்கமாக தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலாகப்போகிறது என்பது தெரிந்தவுடன் நம் ஊர் அமைச்சர்கள்   கடுமையாக `உழைத்து` பல திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவார்கள்.காரணம் உங்களுக்கு தெரியும். அதே கதைதான் இங்கேயும். எல்லா போர் நிறுத்தங்களும் இப்படித்தான். கடைசி நிமிட இலக்கை அந்த ஒப்பந்தத்தை மீறி முடித்துக்கொள்வார்கள். 

Wednesday, April 8, 2026

ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது


ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. யார் இறங்கி வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இது பெருமை பேசும் நேரமில்லை. ஈரான் தன் நிலை உணர்ந்தது நல்ல விஷயம். ஆசியாவில் பங்களாதேஷுக்கு அடுத்து இன்னொரு முஸ்லீம் நாடு ஜனநாயகப் பாதைக்கு திரும்புகிறது. அதுதான் நல்ல செய்தி.

மொத்தத்தில் இது விளையாட்டல்ல இவர் ஜெயித்தார் அவர் தோற்றார் என்று அறிவிக்க. இங்கே நாட்டை அழிப்பது யாருடைய நோக்கமும் அல்ல. அவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சில நேரங்களில் தவறான பாதையில் செல்பவர்களை மிரட்டி சரியான பாதைக்கு திருப்ப வேண்டியதாகியிருக்கிறது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

Saturday, April 4, 2026

அமெரிக்கா -2 ஈரான் 0


ஈரான் போர் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கு தப்பாகிவிட்டது. அமெரிக்காவின் கணக்கும்தான். அது அவர்களுடைய தலைவலி. என்னுடைய கணக்கு தப்பானதுதான் எனக்கு பிரச்சினை. ஏன் என்று ஆராய்ந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஒரு சர்ச்சில் குண்டு வெடித்தது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் அது முஸ்லீம் தீவிரவாதி செய்த வேலை என நினைத்தேன். ஆனால் அது ஒரு கிறிஸ்துவனுடைய வேலை என்பது பின்னர் தெரியவந்தது.