!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, September 6, 2026

கச்சத்தீவு - என்ன நடந்தது ?


இப்போதெல்லாம் திடீர் திடீரென்று கச்சத் தீவு செய்திகளில் வந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் கலைஞரும் காங்கிரசும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என அரசியலாக்கப்படுகிறது. எனக்கும் கலைஞரை பிடிக்காதுதான். திமுக தோற்றதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டவன்தான் நான். இருந்தாலும் நியாயம் என்று வந்துவிட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டுதான் தீர்ப்பு எழுதுவேன்.


அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

Wednesday, September 2, 2026

வா மணி வா


நீண்ட நாட்களுக்கு பிறகு கவனத்தை ஈர்த்த ஒரு பதிவு. நிசப்தம் மணிகண்டன் எழுதியிருந்தார். வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஒருவன் கொஞ்சம் அதிகமாகப் பேசினால், அவன் குடித்திருக்கிறான் என்று அர்த்தம். அதுவே வேறு இடங்களில் ரொம்பப் பேசினால், அவன் தான் செய்த தவறுகளை மறைக்கிறான் என்று பொருள். இந்த மணிகண்டனும் அப்படித்தான் போலிருக்கிறது.

இவர் பதிவுலகில் இருந்த ஆரம்பகாலத்தில் இவருக்கிருந்த நற்பெயர் காரணமாக, பலர் இவர் ஆரம்பித்த அறக்கட்டளைக்கு நிதி கொடுத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இவரும் பலருக்குக் கல்வி உதவி செய்தார்; தகவல்களைப் பதிவாகவும் போட்டார்.

Saturday, August 29, 2026

டில்லியை நோக்கி விஜய்..

Aug.5 அன்று எழுதிய 'உதயநிதியின் ‘அந்த’ பேச்சு' பதிவின் ஒரு பகுதி ...https://anindianviews.blogspot.com/2026/08/blog-post_916.html

....தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.

பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்...

இது அந்த பதிவின் கடைசி பகுதி.

இப்போது இதுதான் நடக்கும் என்பது உறுதியாகிறது. ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பதைப் போன்றதுதான் இது. ஆனால் இது உடனடியாக சாத்தியமாகுமா?

Wednesday, August 26, 2026

பறக்காத பரந்தூர் விமான நிலையம்.

இந்தியா போன்ற சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இவையெல்லாம் நிரந்தரத் தலைவலி. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக நிலங்களை வாங்கி ஊழல் செய்கின்றன என்பதும் உண்மை.

சில சீன காணொளிகளைக் கவனித்தேன். அங்கே எல்லாத் துறைகளிலும் பிரமாதமான வளர்ச்சி. ஆனால் அரசை எதிர்த்துப் போராட்டங்கள் என்பதே கிடையாது. தியான்மென் சதுக்கம் கொடுத்த அடி, இந்தத் தலைமுறையையும் பயமுறுத்தி வைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, அங்கே டிஃப்ளேஷன் (Deflation) சில ஆண்டுகளாக இருக்கிறதாம். அதாவது, விலைவாசி ஏறி வருவதைப் போல, சீனாவில் அது இறங்குமுகமாக இருக்கிறதாம். அது இன்னும் குறையவில்லை. அங்கே இருக்கும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணித்தால் எப்படி இருக்கும்?

Sunday, August 23, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : இங்கேயும் கிரீமி லேயர் வரும்

முதலில் ஒரு கதை. அந்தக் காலத்தில் விக்கிரமாதித்தன் என்ற மன்னர் இருந்தார். அவர் நீதி பரிபாலனம் செய்வதில் சிறந்து விளங்கினார். அவர் இறந்த பிறகு, அந்தச் சிம்மாசனம் மண்ணில் புதைந்து, ஒரு மேடாக இருந்தது. அந்த மண் மேட்டில் யார் அமர்ந்தாலும், அவர்கள் நேர்மையானவர்களாக மாறிவிடுவார்களாம்.

நிஜத்தில், இந்தக் கொடுமைதான் தற்போது அரசியலில் நடக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் இருந்த இருக்கைகளில் கடந்த 50 ஆண்டுகளாக திறமையற்ற மற்றும் ஊழலில் திளைத்த முதல்வர்களும் அமைச்சர்களும் அமர்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த இருக்கைகளுக்கும் அந்த வியாதி பிடித்துவிட்டது. யார் அந்த இருக்கையில் அமர்ந்தாலும், அவர்களையும் அது முட்டாளாக்கிவிடுகிறது.