இன்னும் ஆறு மாதத்திற்கு தவெக குறித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது. காரணம், எதிர்க்கட்சிகளிடம் நேர்மையோ திறமையோ இல்லை. எனவே, அவர்களைப் பாராட்டி எழுத வேண்டிய அவசியம் இல்லை. நாம் தோற்றுவிட்டோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், இவர் எப்படி ஜெயிக்கலாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். வியாதி இவர்களிடம் இருந்தால் மருந்தை இவர்கள்தானே சாப்பிட வேண்டும்? அந்த உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. இன்னொரு தோல்வி அவர்களை நசுக்கிவிடும். அதுவரை அவர்கள் புலம்பட்டும்.
இங்கே விஜய் அவர்களின் நிர்வாகக் கோளாறுகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் இவையெல்லாம் அரசியலில் ‘சாதாரணமப்பா’ என கடந்து போகக்கூடியவைதான்.




