மழை விட்டும் இன்னும் தூவானம் நிற்கவில்லை. இன்னமும் விஜய் கொடுத்த அதிர்ச்சியைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை; விதவிதமான வியாக்கியானங்கள். விஜய், திமுக கூட்டணிக் கட்சிகளை எப்படி அழைக்கலாம்? அவர்கள் தீய சக்தி இல்லையா? அதிமுகவை எப்படி உடைக்கலாம்? இப்படி திமுக மற்றும் அதிமுக ஆதரவு ஊடகவியலாளர்களின் புலம்பல் ஓவராக இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலும் தலைவலிதான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு கோளாறு வந்துவிடுகிறது. `இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது` என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ஒருவேளை அந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், இந்தத் திரைமறைவு குதிரை பேரங்கள் குறையும்.
இங்கே கவனிக்கப் போவது விஜய் செய்தது சரியா தவறா என்ற விமர்சனங்களைத்தான்.



