!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, April 4, 2026

அமெரிக்கா -2 ஈரான் 0


ஈரான் போர் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கு தப்பாகிவிட்டது. அமெரிக்காவின் கணக்கும்தான். அது அவர்களுடைய தலைவலி. என்னுடைய கணக்கு தப்பானதுதான் எனக்கு பிரச்சினை. ஏன் என்று ஆராய்ந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஒரு சர்ச்சில் குண்டு வெடித்தது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் அது முஸ்லீம் தீவிரவாதி செய்த வேலை என நினைத்தேன். ஆனால் அது ஒரு கிறிஸ்துவனுடைய வேலை என்பது பின்னர் தெரியவந்தது.

Tuesday, March 31, 2026

செங்கோட்டையன் முதல்வரா?

செங்கோட்டையன் முதல்வரா? எதுவும் சொல்வதற்கில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சமீபத்திய தேர்தல் தொடர்பான செய்திகளை கவனித்தால் ஒரு வேளை இப்படியும் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. சில மாதங்களுக்கு முன்,  `விஜய்யின் தவெக எனும் இ -காமர்ஸ் நிறுவனம்` என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது தனிக்கட்சி ஆரம்பிப்பது என்பது தற்போது அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டது. எனவே இப்படி போக முடியாதவர்கள் விஜய்யின் தவெக வை ஒரு பிளாட்பாரமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என எழுதியிருந்தேன். அது தற்போது நடக்கிறது.

Sunday, March 29, 2026

A B C D கூட்டணி ஜெயிக்குமா?

அதாங்க.. திமுக கூட்டணி ஜெயிக்குமா என்பதுதான் கேள்வி. அந்த 26 ஏழுத்தை கொண்டவன் ஒரு காலத்தில் உலகத்தை ஆண்டான். இப்போது அவன் நிலை என்ன.. அதுதான் உலகம். இங்கே எந்த சாம்ராஜ்யமும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை. அதுவும் தற்போது டிஜிட்டல் உலகம். இங்கே வளர்ச்சியும் வீழ்ச்சியும் மிக வேகமாக இருக்கும்.

2026 தேர்தலில் யார் ஜெயித்தாலும் ஒரு சாம்ராஜ்யம் சிதையப் போகிறது. அது திமுகவா அல்லது அதிமுகவா என்பதுதான் புதிர். டைம் மிஷின் மட்டும் கிடைத்தால் உடனடியாக மே மாதம் போய் உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

Wednesday, March 25, 2026

தட்டில் முகம் தெரிகிறது சிறுத்தைகளே...


ஒரு நீதிக் கதை. யார் வீட்டுக்காவது விருந்தாளியாக போனால் தட்டில் முகம் தெரிவதற்கு முன் வந்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். இணையத்தில் இருப்பவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை.

திருமாவளவனின் கதை அப்படித்தான் இருக்கிறது. தன்மானம் சுயமரியாதை என பெரியாரிஸம் பேசுவார். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே தெரியாது போலிருக்கிறது. விண்ணில் பெரியார் இதையெல்லாம் பார்த்து இந்நேரம் தலையில் அடித்துக்கொண்டிருப்பார்.

Saturday, March 21, 2026

தமிழ் நாடா, தெலுங்கு நாடா?


தமிழ் நாடா, தெலுங்கு நாடா? இதுதான் இப்போதைய சர்ச்சை. பாக்யராஜ், பார்த்திபன் போன்றோர் இதை பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் கணிசமாக தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அதிலும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கே முதல்வர் மட்டும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. அவர் நல்லவர், திறமைசாலி என விட்டுவிடலாம். (இங்கே நான் ஸ்டாலினை குறிப்பிடவில்லை, பொதுவாக சொல்கிறேன்.) ஆனால் கணிசமான அமைச்சர்களும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பதுதான் பிரச்சினை.