!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, June 17, 2026

தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையும், மிஸ்டர் கோபிநாத்தும்

இங்கே நான் வெள்ளை அறிக்கை பற்றிப் பேசப்போவதில்லை. காரணம், நான் புள்ளிவிவரங்களை அவ்வளவாக நம்புவது கிடையாது. அதுவும் நாட்டின் நிதிநிலை என்றால் அதில் நட்சத்திரங்களை விட அதிகமான புள்ளிவிவரங்கள் இருக்கும். எந்தப் புள்ளி எங்கே இணையும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். அதாவது, பல விஷயங்களில் சில விஷயங்களைப் போட்டு இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.


எனவே, இந்த பேட்டியின் மூலம் நான் கவனித்த வேறு விஷயங்களைப் பார்ப்போம்.பொதுவாக மனிதர்களில் மூன்று வகை. சம்பாதித்துக் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த சாதனையாளர்கள் சிலர்; உழைக்காமல், பரம்பரைச் சொத்தை விற்றுத் குடும்பத்தை ஓட்டுபவர்கள் சிலர்; கடன் வாங்கியே குடும்பத்தை நடத்தி, அதைச் சாதனையாகச் சொல்லும் சிலர். இந்தத் திராவிடக் கட்சிகள் மூன்றாவது வகை போலிருக்கிறது. அதிலும் மாநிலத்தைக் கடனாளியாக்கிவிட்டு அவர்கள் பணக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.

Friday, June 12, 2026

மார்ட்டின்.... ஒருவேளை இப்படி இருக்குமோ?

விஜய் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து மார்ட்டின் குடும்பம் செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. இவர்கள் ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்தவர்கள்தான். ஆனால், இப்போது இவர்களது பெயர் அதிகம் வரக் காரணம் என்ன?

இரண்டே காரணங்கள்தான். திராவிடக் கட்சிகளின், முக்கியமாக திமுகவின் தியரியின்படி, நீங்கள் அவர்கள் பக்கம் இருந்தால் சமூகப் போராளி, அறிவாளி, நல்லவர், நாலும் தெரிந்தவர். ஆனால், எதிர்ப்பக்கம் போய்விட்டால் கதை முடிந்தது; இது அப்படியே தலைகீழாக மாறிவிடும்.

Saturday, June 6, 2026

அண்ணாமலை சாதிப்பாரா?

இருக்கும் சூழ்நிலைகளை பார்த்தால் அது சிரமம் என்றுதான் தெரிகிறது. அதாவது ஒருவன் குடும்பத்தோடு ஓட்டலுக்கு சாப்பிட போனானாம். அங்கே "நிறைய செலவாகிறது" என்று புலம்பியிருக்கிறான். அதற்கு மனைவி "எதுக்கு புலம்பறீங்க? நான் பணம் கொடுக்கிறேன், பர்ஸை கொடுங்கள்" என்று சொன்னாளாம். இது எப்படி இருக்கு?
அதே கதைதான் இங்கேயும். கணவனும் மனைவியும் எப்படி வேறு வேறு இல்லையோ அதேபோல் பாஜகவும் அண்ணாமலையும் வேறு வேறு அல்ல. பாஜகவும் தமிழ்நாடு அரசியல் புரியாமல் அதே டீயை வேறு கிளாசில் கொடுக்கிறார்கள். இது பலிக்குமா என தெரியவில்லை.
நிஜத்தில் தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஜெயிக்கவேண்டுமென்றால் யாரோ ஓர் எதிரி வேண்டும். அவர்களை இலக்காக வைத்து, அவர்கள் செய்யும் குறைகளைச் சுட்டிக் காட்டித்தான் அரசியல் செய்யமுடியும். அப்படி அண்ணாமலை யாரை எதிர்த்து அரசியல் செய்வார்?

Friday, June 5, 2026

ரொம்ப யோசிக்கறாங்களாம்...!


தமிழக அரசியல்வாதிகளிடம் இப்போது ஒரு புது நோய் பீடித்திருக்கிறது. அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்! ஒரு புது முடிவை எடுக்கப்போகிறார்களாம்! அதையும் விரைவில் (?) எடுப்பார்களாம்! அப்படி ஒரு முடிவை விரைவாக எடுத்து கடைசியில் படுகுழியில் விழுவார்களாம்! 

அதிமுக - பிஜேபி கூட்டணி இப்படித்தான் கடும் இழுபறியில் மிக விரைவாக முடிவெடுத்தார்கள். கடைசியில் இருவருக்கும் நஷ்டம். காங்கிரஸ் - திமுக கூட்டணியும் இப்படித்தான் இழு இழு என இழுத்து விரைவாக கூட்டணி அமைத்தார்கள். அங்கேயும் இருவருக்கும் கோவிந்தாதான். தேமுதிக ஒரு வருடமாக யோசித்து விரைவாக முடிவெடுத்தார்கள். அதுவும் அதோகதி.

Thursday, May 28, 2026

ஐயா விஜய் சாமி நியூஸ் கொடுங்க... ஊடகவியலாளர்கள்!

தமிழகத்தில் தற்போது இந்த குரல்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்துவிட்டன. இது இந்தியா முழுவதுக்கும்னா வியாதி என்றாலும் தமிழ்நாட்டில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற முதல்வர் விஜய்யை பார்த்து டில்லியில் இருந்த ஊடகவியாளர்களின் அந்த குரல், எனக்கு நிஜமாக தெருக்களில் அடிக்கடி கேட்கும் `அந்த குரல்களை` நினைவுபடுத்திவிட்டது.

ஏன் இந்த நிலைமை?

முதல் காரணம், தமிழகத்தில் கல்வி அறிவு அதிகம். அதைவிட அதிகம் வாசிப்பு ஆர்வம். ஒரு காலத்தில் பத்திரிக்கைகளாக இருந்த அவை தற்போது கூடுதலாக இணையமாகவும் மாறி இருக்கிறது. எனவே அவர்களுக்கு செய்தி என்ற தீனி அடிக்கடி தேவை.