ஒரு நீதிக் கதை. யார் வீட்டுக்காவது விருந்தாளியாக போனால் தட்டில் முகம் தெரிவதற்கு முன் வந்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். இணையத்தில் இருப்பவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை.
திருமாவளவனின் கதை அப்படித்தான் இருக்கிறது. தன்மானம் சுயமரியாதை என பெரியாரிஸம் பேசுவார். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே தெரியாது போலிருக்கிறது. விண்ணில் பெரியார் இதையெல்லாம் பார்த்து இந்நேரம் தலையில் அடித்துக்கொண்டிருப்பார்.




