ரா.சிவானந்தம்
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Wednesday, March 19, 2025
அமைச்சர்கள் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஏன் இந்தி படிக்கிறார்கள்?
கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.
இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.
இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.
Tuesday, March 11, 2025
மோடிஜி, இதுதான் சரியான நேரம்
மும்மொழி கொள்கைக்கு பிறகு டிலிமிடேஷன் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியிருக்கிறது. இதன் முக்கியமான தலைவலி வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக பெருகியிருப்பதுதான். மேம்போக்காக பார்த்தால் வட மாநிலத்தவர்கள் முட்டாள்களாக தெரியும். ஆனால் நிஜம்?
இங்கே வெளிப்படையாக தெரியும் காரணம் வறுமை. இன்றைய சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் நாளையை பற்றி யோசிக்கமாட்டான். தென் மாநிலங்களில் கடற்கரை இருப்பதால் இந்த மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி வந்தாலே அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நம்மை தள்ளிவிட்டுவிடும். எனவே நாம் இங்கே அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம்; அவர்கள் துரதிருஷ்டசாலிகள். அவ்வளவுதான்.
Monday, March 3, 2025
WE WILL LEARN HINDI ONLY IF WE NEED !
வழக்கமாக நான் இந்த காப்பி-பேஸ்ட் வேலையை செய்வதில்லை. ஆனால் QUORA இணையதளத்தில் இதை படிக்க நேர்ந்தபோது இதை பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்த காலத்தில் படிக்கும்போது கல்வி இந்த அளவுக்கு சுமையாக இல்லை. இப்போது எட்டாவது படிக்கும்போதே பத்தாவது கல்விக்கான பாடத்தையும் இப்போதே படிக்க வேண்டும் என்ற அளவுக்கு பெற்றோர்களின் மனநிலை போய்விட்டது. டியூஷன் என்பது மக்கு பிள்ளைகளுக்காக என்று இருந்த நிலைமை மாறி, பாடத்திட்டங்கள் அதிகமாகிவிட்டதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க இந்த டியூஷன் தேவைப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு கல்வி வந்துவிட்டது.
இது தவிர, கம்ப்யூட்டர் மற்றும் இன்ன பிற துறைகள் என கல்வி விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், கூடுதலாக ஒரு மொழி என்பது மாணவர்களுக்கு சிரமம்தானே?
இன்றைய பெற்றோர்கள் அவர்கள் சுமக்காத ஒரு சுமையை தன் பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். இது என்ன நியாயமோ?
Saturday, March 1, 2025
இங்கே எல்லோரும் அமித்ஷாதான்
இந்த மும்மொழி பிரச்சினை காரணமாக பல ஆங்கில காணொளிகளை கவனித்தேன். இந்தி மொழிக்கு ஆதரவாக வாதாடும் பல அதிபுத்திசாலிகளை, இது குறிப்பாக வடக்கன்ஸ், கவனிக்க நேரிடுகிறது. இவர்கள் அடிமுட்டாள்கள் என அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நான் அவர்களை திட்டத்தான் போகிறேன்; வெறுக்கப்போவதில்லை. காரணம் சிறுவயதிலிருந்தே இப்படிப்பட்ட மனிதர்களை நிறைய பார்த்துவிட்டதால் அந்த மனநிலை எனக்கு வந்துவிட்டது.
சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், மாமா ஆதரவில் சில வருடம் அவர்கள் வீட்டிலே இருந்தேன். அங்கேதான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு அமித்ஷாவை பார்த்தேன். தற்போது எப்படி இந்தி திணிப்பு நடக்கிறதோ அதேபோல் அப்போது எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது.
Saturday, February 22, 2025
மோடிக்கு நேரம் சரியில்லை
மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.
இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.
ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.
Subscribe to:
Posts (Atom)