!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, April 21, 2014

பிஜேபி கூட்டணி 3 0 +


`அந்த பொண்ணுக்கு விவரம் பத்தாதுக்கா..` - இப்படிதான் அந்த பேச்சு ஆரம்பித்தது. அப்போது நான் சென்னையில் இருந்தேன். ஏதோ ஓரிடத்தில் இருந்தேன். என்னை கவனிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இங்கே பேச்சில் அடிபட்ட அந்த விவரம் புரியாத பெண்ணின் வீட்டுக்கு யாரோ ஓருவர் வந்திருக்கிறார். குடிக்க தண்ணி கேட்டிருக்கிறார். இவர் உள்ளே போன சமயம், வந்தவர் எதையோ சுருட்டி இருக்கிறார். மதிப்பு பத்தாயிரமாம். இதுதான் செய்தி. இதை சொல்லித்தான் சிரித்தார்கள். கூடுதலாக இன்னொரு செய்தியும் கிடைத்தது. அந்த பெண்ணுடைய கணவனுக்கும் விவரம் பத்தாதாம். வருமானத்துக்கு `வாய்ப்பு` உள்ள வேலையில் இருந்தாலும், பணம் பார்க்க தெரியவில்லையாம்.

Tuesday, December 17, 2013

மிஷ்கின் ஃபிலிம் காட்டறார்

மாரியம்மன் கோவில்--Indian express  

இங்கே அட்கேஷ்வர் என்ற ஏரியாவில் உள்ளூர் காவலரும் உலக காவலரும் அருகருகே இருக்கிறார்கள். அதாவது இந்த பக்கம் போலீஸ், அந்த பக்கம் கடவுள் (அட்கேஷ்வர்).

ஒருமுறை டூ வீலரில் வந்தவர்கள் வண்டியை விட்டு இறங்கி போலீசாரிடம் லைசன்ஸ் மற்றும் மற்ற இத்யாதிகளை பவ்யமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை பார்த்துக் கொண்டே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். கோவிலுக்கு அருகில் வந்தபோது, அங்கே ஒருவர் டூ வீலர் வண்டியில் உட்கார்ந்துகொண்டே கோவிலை (சாமியை) பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெட்டிஷன் நிறைய இருக்கும் போலிருக்கிறது.  நான் அதை தாண்டி கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தபோதும் முணுமுணுப்புதான். இவ்வளோ பெட்டிஷன் வைச்சிருக்கிறவர் அதை உள்ள போய் முறையா சொல்ல வேண்டியதுதானே?

Thursday, December 13, 2012

தேர்தல்: தமிழகமும், குஜராத்தும்...


குஜராத் தேர்தலையும் தமிழ்நாட்டு தேர்தலையும் கவனிக்கும் போது வித்தியாசங்கள் அநியாயத்துக்கு நம்மை பார்த்து சிரிக்கின்றன. மனமும் இந்த முரண்பாடுகளுக்கு பதிலை தேடுகிறது. சில காரணங்கள் இங்கே. 

தமிழகம் மாநில அந்தஸ்த்தை அடைந்தது 1950 ல். குஜராத் அந்த அந்தஸ்த்தை 1960 ல் பெற்றது.

தமிழகம் இயற்கையாகவே இந்தியா என்ற மத்திய அமைப்பிலிருந்து விலகி இருக்கிறது. மாநில உணர்வு இங்கே அதிகம். இது தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என இரண்டு பிரிவை உருவாக்கியது.

Sunday, September 2, 2012

சிறை அனுபவம்: இப்படியெல்லாம் நாங்கள் பேப்பர் படித்தோம்

சிறைக்கு சென்றபின் முதல் முறையாக இது கஷ்டம் என நான் உணர்ந்தது பேப்பர் படிக்கும் விஷயத்தில்தான். வெளியே இருந்தபோது நான் படிக்கும் நேரம்தான் அதிகம். மினி லைப்ரரி வைத்திருந்ததால், தினம் சில வாரஇதழ்கள் வந்துவிடும். அதை சர்குலஷன் விடும்முன் நான் முதலில் மேய்ந்துவிடுவேன். வியாபாரம் அப்புறம்தான். (பெரும்பாலும் வியாபாரத்தை கவனிப்பது ஊழியர்கள்தான்.) 

அந்த வேலை முடிந்ததும் மதியம் இணையத்தில் உலக பத்திரிகைகளை மேய்வேன். இரவு அரைமணி நேரம் ஆங்கில நாவலுக்காக.. நாவல் மோகம் கிடையாது. தொடர்ந்து படித்தால் ஆங்கிலம் வசப்பட்டுவிடும் என்பதால் அதையும் விடுவதில்லை. இப்படி தினம் பல மணி நேரம் படித்தே பழகிய நான், சிறையில் இந்த ஒரு விஷயத்தில்தான் நொந்துபோனேன்.

Monday, July 23, 2012

சிறை அனுபவம்: சில வி ஐ பி களுடன்...

முதலில் நான் இருந்த தொடர் குற்றவாளிகள் பிளாக்கில் பிரபலங்கள் வர வாய்ப்பில்லை. பத்திரிகையில் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டவர்கள் என்ற வகையில் பார்த்தால், சைக்கோ கொலையாளிகள் என்ற பெயரில் சென்னையை நடுங்க வைத்தவர்கள் இங்கே இருந்தார்கள். அந்த நான்கு பெரும் வேறு வேறு செல்/பிளாக் என பிரிக்கப்பட, ஒருவர் நான் இருந்த செல்லில் இருந்தார்.

இதற்கிடையில் நான் வந்த போது இருந்த பிளாக் ரைட்டர் தண்டனை பெற்று பக்கத்து ஜெயிலுக்கு போய்விட்டதால், அவருக்கு கீழே இருந்தவர்கள் அந்த பொறுப்பை ஏற்றார்கள். இவர்கள் வயதில் சிறியவர்கள் என்பதால் இங்கே  நான் சீனியர். கொஞ்சம் பழகிய பிறகு எல்லோரும் நண்பர்கள் ஆகிவிடுவோமே, அந்த தியரியும் எனக்கு சாதகமாக இருந்தது.  

அதுமட்டுமின்றி இன்னொரு முக்கிய விஷயம்தான் எனக்கு பாதுகாப்பாக இருந்தது. வழக்கமாக கைதிகள் வந்தால் விரைவில் பெயிலில் போய்விடுவார்கள். அல்லது கொஞ்சம் பயம் தெளிந்ததும் அவர்களுக்கு பிடித்த / தெரிந்த நபர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். இதுதான் சிறை யதார்த்தம். நான் மட்டும் அப்படி இல்லை. பெயில் வேண்டாம் என்றும் மறுத்தேன், அந்த செல்லைவிட்டும் போகவில்லை.

Tuesday, April 10, 2012

இந்திய ராணுவமும் அதன் உளுத்துப் போன கொள்கைகளும்!

சமீபத்தில் NDTV யில் ராணுவம் குறித்த ஒரு டாக் ஷோ பார்த்தேன். பல கருத்துக்கள் பேசப்பட்டன. காஷ்மீரில் ஒரு பகுதிக்கு சரக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் மகனை பறி கொடுத்தவர் பேசினார். இந்தியாவில் மட்டும்தான் ஒரு இஞ்சின் மட்டுமே கொண்ட ஹெலிகாப்டர் சேவையில் இருந்ததாம். அதில் இவர் மகன் பலியாகி இருக்கிறார். `நாட்டுக்காக உயிர் கொடுப்பது வேறு. ஆனால் தகுதி அற்ற தளவாடங்களின் மூலம் ஏற்படும் விபத்தால் யாரும் பலியாகக் கூடாது` என்றார்.

அடுத்து கவனித்தது, போபார்ஸ் சிண்ட்ரோம். இந்த ஊழல் மீடியாவில் கடுமையாக கிழிக்கப்பட்டதால், பல ராணுவ அதிகாரிகள், அவ்வளவு சீக்கிரத்தில் முடிவெடுப்பதில்லையாம். இந்த புதுத் தலைவலி தற்போது ராணுவத்தை ஆட்டிப் படைக்கிறது. இதனால் ஒரு பக்கம் ஆயுத பற்றாகுறை இருக்க, இன்னொரு பக்கம் அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பிய கொடுமையும் நடந்திருக்கிறது.

Friday, January 20, 2012

நண்பன் விமர்சனம். ஸாரி, சங்கர் விமர்சனம்


சிறை அனுபவம் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், அது குறித்து கொஞ்சம் ஆழமாகவே எழுத ஆரம்பித்தால், அது பல இணை துணை சம்பவங்களோடு மெகா சீரியலாக போய்க்கொண்டிருகிறது. இதை சில பதிவுகளாக பிரிப்பதா அல்லது அதன் போக்கில் விடுவதா என்ற குழப்பம் ஒரு பக்கம். இதற்கிடையில் நண்பனை பார்த்ததால், அதாவது சங்கரின் `நண்பனை` பார்த்ததால் இந்த பதிவு

டைரக்டர் சங்கர் கமர்ஷியலாக வெற்றிப் பட இயக்குனராக இருந்தாலும், பாய்ஸ் படத்துக்கு பிறகு அவர் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு முன் பசுத்தோல் போர்த்தி வலம் வந்தவர், சில வெற்றிகளை கண்டவுடன், கொஞ்சம் திரையை விளக்கி அவருடைய ரசனையை காட்டி இருக்கிறார். அதற்கு கிடைத்த எதிர்ப்பு அவரை அடக்கி வாசிக்க வைத்தாலும், அவருடைய ரசனைகள் எப்படியும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Thursday, November 10, 2011

ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.


ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. என்னை டெண்ஷனாக்குவதில் சாப்பாட்டுக்கும் முக்கிய பங்கிருப்பதால், இது உச்சக்கட்டத்தை அடையும் போது அதை தணிக்க நான் செய்வது இரண்டுதான். ஓன்று, அன்று ஓட்டலுக்கு போய் வயிறு வெடிக்கும் அளவுக்கு திருப்தியாய் சாப்பிடுவது. இரண்டு, நல்ல சினிமா பார்ப்பது.

கடலூரில் நான் மினி லைப்ரரி வைத்திருந்ததால், முக்கியமான வார இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன். எனவே விமர்ச்சனம் படித்துவிட்டுதான் பெரும்பாலும் போவேன். இருந்தாலும் சில சமயம் திடீர் முடிவோடும் போவதுண்டு. கடலூரில் அனைத்து தியேட்டரும் பஸ் ஸ்டான்ட் சுற்றியே இருப்பதால், வண்டியில் அப்படியே எல்லா தியேட்டரையும் சுற்றி வருவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் அது நல்ல படம் என்ற தியரியை நம்பிப் போவேன். அதிலும் ஏமாறுவது உண்டு. சில சமயம் என் சிந்தனையும், ரசனையும் மக்களோடு ஒத்துப் போகாது.