`பிஜேபி 3 0 +` என்று ஒரு பதிவு போட்டாலும் போட்டேன், நான் என்னவோ கோடிகணக்கில் செலவு செய்து தேர்தலில் நிற்பதுபோல் ரிசல்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். வந்தது ரிசல்ட். தலைகுப்பற விழுந்தேன். (நான் மட்டுமா?) இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. மீசை இருந்தாத்தானே ஓட்டறதுக்கு. தற்போது எனக்கு மீசையே இல்லை. அகமதாபாத் வரும் முன்பே அதை எடுத்துவிட்டேன். இப்படி ஒரு அதிர்ஷ்டம்.
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts
Saturday, May 24, 2014
தப்புக்கணக்கு
Monday, April 21, 2014
பிஜேபி கூட்டணி 3 0 +
`அந்த பொண்ணுக்கு விவரம் பத்தாதுக்கா..` - இப்படிதான் அந்த பேச்சு ஆரம்பித்தது. அப்போது நான் சென்னையில் இருந்தேன். ஏதோ ஓரிடத்தில் இருந்தேன். என்னை கவனிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
இங்கே பேச்சில் அடிபட்ட அந்த விவரம் புரியாத பெண்ணின் வீட்டுக்கு யாரோ ஓருவர் வந்திருக்கிறார். குடிக்க தண்ணி கேட்டிருக்கிறார். இவர் உள்ளே போன சமயம், வந்தவர் எதையோ சுருட்டி இருக்கிறார். மதிப்பு பத்தாயிரமாம். இதுதான் செய்தி. இதை சொல்லித்தான் சிரித்தார்கள். கூடுதலாக இன்னொரு செய்தியும் கிடைத்தது. அந்த பெண்ணுடைய கணவனுக்கும் விவரம் பத்தாதாம். வருமானத்துக்கு `வாய்ப்பு` உள்ள வேலையில் இருந்தாலும், பணம் பார்க்க தெரியவில்லையாம்.
Labels:
அரசியல்,
அனுபவம்,
சினிமா,
நீதிமன்றம்,
பி ஜே பி,
விஜயகாந்த்
Tuesday, January 21, 2014
விஜயகாந்த்?
விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்? இதுதான் தற்போதைய சஸ்பென்ஸ். சில ஷேர்கள் வாங்கிய பிறகு கூட இப்படி நான் நகத்தை கடித்ததில்லை. அந்த அளவுக்கு ஆர்வத்தை இது தூண்டி விட்டிருக்கிறது. என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் குழம்பி போயிருக்கிறாரா? அல்லது பேரத்தை அதிகரிக்க போக்கு காட்டுகிறாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும்முன் நாம் நமது அலசலை பார்ப்போம்.
பிஜேபி அணி விஜயகாந்தையும் சேர்த்துக் கொண்டு பலமான மூன்றாவது அணியாக உருவாகவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
பிஜேபி அணி விஜயகாந்தையும் சேர்த்துக் கொண்டு பலமான மூன்றாவது அணியாக உருவாகவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
Labels:
அதிமுக,
அரசியல்,
அனுபவம்,
திமுக,
நீதிமன்றம்,
பி ஜே பி,
விஜயகாந்த்
Friday, March 25, 2011
வைகோ, ஜெயலலிதா. யார் பாடம் கற்கவில்லை?
இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களை குறிப்பிடும்போது, `ஜெயலலிதா மாறியிருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மாறவில்லை` என்று குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டும் உண்மைதான். காலம் மனிதர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இங்கே ஜெயலலிதா மட்டுமின்றி வைகோவும் எதையும் கற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை.
Thursday, March 17, 2011
தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியல் தற்கொலை!
எப்படியோ திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. இந்த கூட்டணி ஏற்படாமல் இருந்தால் நாட்டுக்கும் நல்லது, காங்கிரசுக்கும் நல்லது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் என் ஆசையில் காங்கிரஸ் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.
கூட்டணி உறுதியானாலும் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு கேள்விக்கு இங்கே பதில் இல்லை. நம்மிடம் சொல்லப்படும் எந்த ஒரு செய்தியும் கோர்வையாக இருந்தால்தானே அதை நம்பமுடியும்? `இந்த தேர்தலில் திமுக தோற்றால், அம்மா ஒரு பக்கமும் 2 ஜி ஊழல் இன்னொரு பக்கமும் திமுகவை பந்தாடும் என்பதால், (இவர்களே உருவாக்கிக் கொண்ட) பல அவமானங்களை தாங்கிக் கொண்டு திமுக காங்கிரசுக்கு பணிந்து போகிறது` என்ற செய்தி கோர்வையாக இருப்பதால், நம்மால் இதை நம்ப முடிகிறது.
Monday, March 7, 2011
கூட்டணி முறிவு.காங்கிரசுக்கு லாபமே அதிகம்!
காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்து விட்டது.உண்மையில் இது எனக்கும் சந்தோஷமான செய்திதான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நடந்துவிட்டது.
ஆனால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை வைத்து பலரும் தங்கள் விருப்பம் போல் அர்த்தம் கொடுத்துக் கொள்கின்றனர். ஒருவேளை நானும் அப்படி இருக்கலாம். இருந்தாலும் இது எனது அலசல்.
வெளிப்பார்வைக்கு திமுக ஏதோ மிகத்திறமையாக செயல்பட்டு காங்கிரசின் மூன்றாவது அணி திட்டத்தை முறியடித்து விட்டதாவும், காங்கிரசை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் கருத்துக்கள் பரப்படுகிறது. ஆனால் நிஜம்?
காங்கிரஸ் உண்மையிலேயே மூணாவது அணி அமைக்க முயற்சி செய்ததா?
Subscribe to:
Posts (Atom)





