!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Wednesday, October 24, 2012

அரவிந்த் கேஜ்ரிவாலும், `சவுக்கு` சங்கரும்

அர்விந்த் கேஜ்ரிவால் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். பல ஊழல் செய்திகளை வெளியிடுகிறார். இவர்களுடைய லோக்பால் போராட்டத்தில்  எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த  போராட்ட முறை எனக்கு பிடித்திருக்கிறது.

லோக்பால் போராட்டம் தோற்றதன் காரணம் அதில் யதார்த்தம் இல்லை. இருந்தாலும் அந்த சமயத்தில் அரசியல்வாதிகள் பயந்துவிட்டார்கள். அதற்கான அறிகுறி தெரிந்தது. அந்த பயத்தை பயன்படுத்திக் கொண்டு, இருக்கும் ஓட்டைகளில் சிலவற்றையாவது சரி செய்திருக்க முடியும். ஆனால், `முழுதாக வேண்டும்` என்ற இவர்களின் பிடிவாதத்தால், அது பரணுக்கு போனதுதான் மிச்சம்.

Sunday, September 2, 2012

சிறை அனுபவம்: இப்படியெல்லாம் நாங்கள் பேப்பர் படித்தோம்

சிறைக்கு சென்றபின் முதல் முறையாக இது கஷ்டம் என நான் உணர்ந்தது பேப்பர் படிக்கும் விஷயத்தில்தான். வெளியே இருந்தபோது நான் படிக்கும் நேரம்தான் அதிகம். மினி லைப்ரரி வைத்திருந்ததால், தினம் சில வாரஇதழ்கள் வந்துவிடும். அதை சர்குலஷன் விடும்முன் நான் முதலில் மேய்ந்துவிடுவேன். வியாபாரம் அப்புறம்தான். (பெரும்பாலும் வியாபாரத்தை கவனிப்பது ஊழியர்கள்தான்.) 

அந்த வேலை முடிந்ததும் மதியம் இணையத்தில் உலக பத்திரிகைகளை மேய்வேன். இரவு அரைமணி நேரம் ஆங்கில நாவலுக்காக.. நாவல் மோகம் கிடையாது. தொடர்ந்து படித்தால் ஆங்கிலம் வசப்பட்டுவிடும் என்பதால் அதையும் விடுவதில்லை. இப்படி தினம் பல மணி நேரம் படித்தே பழகிய நான், சிறையில் இந்த ஒரு விஷயத்தில்தான் நொந்துபோனேன்.

Sunday, July 8, 2012

சிறை அனுபவம்: பணம்

சிறைக்கு சென்றவுடன் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது இதுதான். புதிய கைதிகள் கடுமையாக தண்டிக்கப்பட (வேலை வாங்கப்பட), பழைய கைதிகள் சொகுசாக வாழ்ந்ததுதான். அடுத்த சில மாதங்களில், பழைய கைதிகளில் சிலர் `உள்ளேயே` நன்றாக சம்பாதிப்பதை பார்த்த போது அது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த அதிர்ச்சி விலகி இதுதான் யதார்த்தம் எனப்புரிய பல மாதங்கள் ஆனது. ஊழல் ஒரு கொடிய தொற்று நோய். இதை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் அது உங்களின் டிராலி பாய், உடன்பிறவா சகோதரி என எல்லோருக்கும் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உத்தமர்களாகி உங்களை காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

அரசியலில் இதுதான் யதார்த்தம் என்றால் சிறையிலும் அதுதான். இங்கேயும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இங்கே உங்களை காட்டிக் கொடுக்கபோவது கீழ்நிலைக் காவலர்கள் மற்றும் கைதிகள்தான். எனவே அவர்களுக்கும் அவர்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாட அனுமதித்தே ஆகவேண்டும்.

Tuesday, May 22, 2012

அரசியலும், கர்ணன் தியரியும்

மீண்டும் ஒரு (புதுக்கோட்டை) இடைத்தேர்தல். மறுபடியும் அரசுக்கு தண்டச் செலவு. இடைத்தேர்தல்கள் ஒரு ஆட்சியின் தலைவிதியை மாற்றாதவரை, இவை தேவையே இல்லை. சிக்கனம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய அரசுக்கு இது மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை. தெரிந்திருக்கும். ஆனால் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது பற்றி பேசுவார்கள்..பேசுவார்கள்...இன்னும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இந்த அனாவசியமான, சம்பிரதாயமான இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் ஒதுங்கிவிட்டன. இருப்பது தேமுதிக மட்டுமே. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் பண மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து போராடுவது சிரமம் என்று புறக்கணித்த கட்சிகள் சமாளித்தாலும், எதற்கு (லாபமில்லாத) செலவு செய்வானேன் என்பதுதான் முக்கியமான காரணம்.

Monday, April 23, 2012

பணக்கார பிரபு யாரும் இல்லையா?

திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவியது இன்றைய கல்வி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இதில் பணம் நோக்கமாக இல்லை. தான் வெற்றியாளனாக வர வேண்டும் என்ற வெறி மாணவர்களுக்கு வராமல் ஆசிரியர்களுக்கு வர, அதையும் அவர்கள் குறுக்கு வழியில் அடைய முயற்சித்திருக்கிறார்கள். இதுதான் செய்தி.

இது ஒரு போலித்தனமான பெருமை என்றாலும், இந்த வியாதி பலரை பிடித்து ஆட்டுவதும் நிஜம். அரசியல்வாதிகள் பணம் கொடுத்து கூட்டத்தை காட்டுகிறார்கள். நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே படங்களை ஓட்டி, தங்களை வெற்றி வீரராக காட்டிக் கொள்கிறார்கள். இதெல்லாம் எந்த வகை? இதில் பெருமை மட்டுமில்லை, சில லாபமும் இருக்கிறது. 

ரஜினியின் சந்திரமுகி கூட 800 நாட்கள் தொடர்ந்து `ஓடி` சாதனை படைத்ததாம்! ஆனால் அது சாதனைக்காகவே ஓட்டப்பட்டது என்று எப்போதோ படித்தேன். இத்தனைக்கும் அவர் வெற்றியாளர். அவருக்கும் இது போன்ற போலித்தனம் தேவைபடுகிறது.

Tuesday, April 17, 2012

ஒரு முட்டாளும், ஒரு அப்பாவியும்..

சில நாட்களுக்கு முன் கவனித்த செய்தி இது. பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் IPL மேட்ச் பார்க்க ஃப்ரீ டிக்கெட் கேட்டதாகவும், அதற்கு இவர்கள் மறுத்ததால் மைதானத்தை சுத்தம் செய்ய மறுத்ததாகவும் டைம்ஸ் நவ் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பபட்டடது.

அது தொடர்பான விவாதத்தில், அர்னாப் ஏதோ ஒரு செக்க்ஷ்னை சொல்லி, `இப்படி கேட்பது குற்றமாகும்` என மிரட்ட, அந்த பக்கம் இருந்த அரசியல்வாதி (துணை மேயர்), அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். கூடவே, `பத்திரிகையாளர்களும் கவர் வாங்குவதில்லையா?` என அவர்களையும் வம்புக்கு இழுத்தார்.

ஒரு பக்கம் சட்டத்தின் மீது பயமின்மை, இன்னொரு பக்கம் தான் செய்யும் தவறை நியாயபடுத்த, `நீ மட்டும் யோக்கியமா?` என கேள்வி. இதுதான் இன்றைய அரசியல் என்பதை இந்த பேட்டி நிரூபித்தது. .

Tuesday, September 20, 2011

ஒரு நீதிக் கதை, ஒரு விளக்கம், ஒரு ஜோக்ஸ்.


இந்த கதையை ஒரு கென்ய பத்திரிகையில் படித்தேன். அரசியல்வாதிகளும், பிரபலமான மனிதர்களும் படிக்க வேண்டிய கதை. நீதிக் கதைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதையே நீங்கள் வேறு விதமாகவும் படித்திருக்கலாம். இருந்தாலும் நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே படியுங்கள்.

கென்யாவும் ஜனநாயக நாடு என்பதால், அங்கேயும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் புகார். அங்கே ஒரு கட்டுரையாளர் அவருடைய அரசியல் விமர்சனத்தில் இந்த கதையை சொன்னார்.

Tuesday, September 13, 2011

வெல்கம் பிஜேபி!


இது (பரபரப்பில்லாத) கிரிக்கெட் சீசன். கிரிக்கெட்டில் அவ்வவப்போது நமது கதாநாயகர்கள் மாறுவார்கள். உண்மையில் கிரிக்கெட்டில் நாம் எந்த ஒரு தனி நபர்களையும் துதி பாடுவதில்லை. அவர்கள் பார்மில் அடித்து ஆடும்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம். சரியாக விளையாடாமல் கட்டை போட்டால், `அவுட்டாகித் தொலையேன்` என்று சபிப்போம்.

நாட்டிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தருகிறார்கள் என்ற வகையில்தான் நாம் இவர்களை ஆதரிக்கிறோம். அவர்களால் நமது அணிக்கு பலம் இல்லை எனும்போது அவர்கள் புறக்கனிக்கப்படுவதையே விரும்புவோம். எனது அரசியல் நிலைப்பாடும் அந்த வகையை சேர்ந்ததுதான். மன்மோகன் சிங் என்ற நேர்மையான பொருளாதார நிபுணர் நம் நாட்டின் பிரதமராக வந்தபோது, இவரால் நாடு வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதுவும் செய்ய இயலாமல் இவர் பொம்மையாய் இருப்பதை பார்க்கும் போது இவர் போய் சேர்ந்தால் தேவலை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.

Saturday, August 20, 2011

காங்கிரஸ் - அன்னா ஹசாரே. ஜெயிக்கப்போவது யாரு?


காங்கிரசுக்கும் அன்னா ஹசாரே டீமுக்குமான மோதல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இனி நிமிடத்துக்கு ஒரு செய்தி வரும். `காங்கிரஸ் பணிந்தது` என்றோ அல்லது `அன்னாவின் சாயம் வெளுத்தது` என்றோ பலவிதமான அர்த்தங்கள் அதற்கு கொடுக்கப்படும்.  உண்மையில் இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தையும்,  இனி  என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவு ஆராயலாம்.

அன்னா ஹசாரேவையும் அவருடைய போராட்டத்தையும் அலசும் முன் இந்த உதாரணத்துக்கு போய் வருவோம். ஏனென்றால் சில விஷயங்களை உதாரணங்களோடு சொன்னால்தான் புரியும்.

Thursday, June 16, 2011

காங்கிரசின் ஊழல் ஆதரவும், தமிழக மக்களின் அம்மா ஆதரவும்... !

மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடம். இது மனிதர்கள் எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக்க சொல்லப்படும் வார்த்தை. மாமியார்கள் மட்டுமில்லை, பெரும்பாலான மனிதர்கள் பிரச்சினைகளை அணுகும் விதம் இப்படித்தான்.

கடந்த பதிவில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் இல்லை என்று சொல்லி இருந்தேன். ஆனால் இந்தியா இதுவரை கண்ட ஊழல்களில் பெரும்பாலானவை காங்கிரசுடன் தொடர்புடையவை. இப்போது வெளிவந்திருக்கும் பிரபலமான ஊழல்களிலும் காங்கிரஸ்காரர்களின் தொடர்பு இருக்கிறது அல்லது அவர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது. எனவே மேம்போக்கான பார்வையிலேயே சொல்லிவிடலாம் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான் என்று!