!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, January 29, 2014

மூடர் கூடம் (இது சினிமா அல்ல)



இந்தியாவில் ஒரு பிரிவினர் சுயநலம் காரணமாக சட்டத்தை மீறி நாட்டுக்கு நஷ்டத்தை உண்டாக்குகிறார்கள் என்றால், இன்னொரு பிரிவினர் சட்டத்தை பின்பற்றுகிறேன் என்று செய்யும் காமெடிகள் வேறு வகை. அப்படி சில கதைகள் இங்கே.

டைம்ஸ் ஆப் இண்டியா 

இங்கே உள்ளூர் நூலகத்திற்கு போனேன். டைம்ஸ் ஆப் இண்டியா படித்தேன். டேபிளில் நின்று கொண்டே படிக்கும் வகையில் இருந்தது. சற்று நேரத்தில் கால் வலிக்க, பேப்பரை எடுத்துக் கொண்டு உட்காரப் போனேன். நூலகர் தடுத்தார். அந்த பேப்பர் அந்த டேபிளில்தான் இருக்க வேண்டும் என்றார். அதாவது டைம்ஸ் ஆப் இண்டியா நின்றுகொண்டுதான் படிக்க வேண்டும். இப்படி ஒரு சட்டம்!  

Sunday, September 2, 2012

சிறை அனுபவம்: இப்படியெல்லாம் நாங்கள் பேப்பர் படித்தோம்

சிறைக்கு சென்றபின் முதல் முறையாக இது கஷ்டம் என நான் உணர்ந்தது பேப்பர் படிக்கும் விஷயத்தில்தான். வெளியே இருந்தபோது நான் படிக்கும் நேரம்தான் அதிகம். மினி லைப்ரரி வைத்திருந்ததால், தினம் சில வாரஇதழ்கள் வந்துவிடும். அதை சர்குலஷன் விடும்முன் நான் முதலில் மேய்ந்துவிடுவேன். வியாபாரம் அப்புறம்தான். (பெரும்பாலும் வியாபாரத்தை கவனிப்பது ஊழியர்கள்தான்.) 

அந்த வேலை முடிந்ததும் மதியம் இணையத்தில் உலக பத்திரிகைகளை மேய்வேன். இரவு அரைமணி நேரம் ஆங்கில நாவலுக்காக.. நாவல் மோகம் கிடையாது. தொடர்ந்து படித்தால் ஆங்கிலம் வசப்பட்டுவிடும் என்பதால் அதையும் விடுவதில்லை. இப்படி தினம் பல மணி நேரம் படித்தே பழகிய நான், சிறையில் இந்த ஒரு விஷயத்தில்தான் நொந்துபோனேன்.

Saturday, October 23, 2010

ஆஸ்திரேலியாவில் அடி வாங்குவதை தடுக்கலாம்...

தினமலர் 21-06-09 இதழில் வெளியான கடிதம்

(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது) 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் , இங்கே இந்தியாவில் கல்லூரிகளில் சட்டவிரோதமாக லட்சகணக்கில் நன்கொடைகள் வாங்குவதும் மத்திய அரசின் மோசமான கல்வி கொள்கையை காட்டுகிறது .

கல்வியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வரும் வேளையில் , அதற்க்கு தகுந்தாற்போல் கல்விநிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு தவறிவிட்டது .

மிக அதிகப்படியான நன்கொடைகளை தவிர்க்கவும் மற்றும் தரமான கல்வியை தேடியும், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை நாடுவதை மத்திய அரசு தடுக்கவில்லை . ஆகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையே இந்தியாவில் நேரடியாக அல்லது இந்திய நிறுவனங்களின் துணையோடு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் .

இதன் மூலம் நமக்கும் அந்நிய செலவாணி மிச்சமாகும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்களை நான் இணையதளம் மூலம் ஆராய்ந்திருக்கிறேன் .இன்றைய வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களின் வளர்ச்சிக்காக பாராம்பரிய தொழிலையோ அல்லது இயற்கை ஆதாரங்களையோ நம்பி இருக்கவில்லை .

மாறாக, இன்றைய சூழ்நிலைக்கு எந்த துறையில் முதலீடு செய்தால் லாபம் என கணித்து அதன்படி செயல்பட்டு வெற்றி கண்டிருக்கின்றன.

கல்வியை ஒரு லாபமளிக்கும் துறையாக கணித்து, அதன்முலம் ஆஸ்திரேலியர்கள் பெருமளவு அன்னிய செலாவணியை ஈட்டுவது, அவர்களுடைய புத்திசாலி தனத்தைக்  காட்டுகிறது .

இந்தியாவும், இயற்கை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா போன்ற துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அன்னிய செலாவணியை ஈட்டவும், வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, இத்துறைகளில் கூடுதல் கவனத்தையும் முதலீடுகளையும் செய்யவேண்டும் .