!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label uthyanithi. Show all posts
Showing posts with label uthyanithi. Show all posts

Wednesday, August 5, 2026

உதயநிதியின் ‘அந்த’ பேச்சு

இது ஒரு சிக்கல். ஓட்டப்பந்தயத்தில் 5 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்றால், சரியாக அந்த இடத்தை அடைந்தவுடன் உடனே நிற்க முடியுமா? முடியாது. ஓடிய வேகத்திற்கு இன்னும் 10 மீட்டர் தூரம் சென்றுதான் நிற்க முடியும். அதுபோன்றதுதான் மேடைப் பேச்சும். பேச்சின் வேகத்தில் நம்மை அறியாமல் சற்று எல்லை மீறிப்போய் விடுவோம். தவறை உணர்ந்த பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அடுத்த முறை அந்தக் குறையைத் தவிர்க்க வேண்டும். அந்த நாகரிகம் உதயநிதியிடம் இல்லை.

இன்னொரு பக்கம் சினிமாவுக்குக் குத்துப்பாட்டு தேவைப்படுவதைப் போல், மேடைப் பேச்சிலும் சில சுவாரசியங்கள் தேவைப்படுகின்றன. இது காலங்காலமாக இருந்து வருகிறது. வால்மீகி இராமாயணம் போர் அடிக்கிறது என்று யாரோ சொன்ன பிறகு, கம்பர் அவர் எழுதிய இராமாயணத்தில் கொஞ்சம் காமத்தைக் கலந்திருக்கக்கூடும்.

கட்ட துரைக்கு (உதயநிதி) நேரம் சரியில்லை

உதயநிதியின் தஞ்சாவூர் (திரிஷா) ஆபாச பேச்சை பல விதமாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இவர் பல இடங்களில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே எந்தப் பேச்சு என்று எதிர்காலத்தில் குழப்பம் வராமல் இருக்க, இப்படி இடத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

என்னைக் கேட்டால் இங்கே முதல் குற்றவாளிகளே நீதிபதிகள்தான். இவர்களால்தான் இவ்வளவு அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையில் பலரும் துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நீதித்துறையின் மீது பயம் போய்விட்டதுதான் காரணம்.

ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிபதிக்கு முன்னே நிறுத்தினால், பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டினால், ஜாமீன், வாய்தா எல்லாம் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். "எங்கம்மா வயசுக்கு வந்துட்டாங்க, அதனால வாய்தா கொடுங்க" என்று ஒரு வழக்கறிஞர் சொன்னாலும், "லாஜிக் இடிக்குதே" என யோசிக்காமல் அதற்கும் வாய்தா கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள்.