உதயநிதியின் தஞ்சாவூர் (திரிஷா) ஆபாச பேச்சை பல விதமாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இவர் பல இடங்களில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே எந்தப் பேச்சு என்று எதிர்காலத்தில் குழப்பம் வராமல் இருக்க, இப்படி இடத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
என்னைக் கேட்டால் இங்கே முதல் குற்றவாளிகளே நீதிபதிகள்தான். இவர்களால்தான் இவ்வளவு அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையில் பலரும் துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நீதித்துறையின் மீது பயம் போய்விட்டதுதான் காரணம்.
ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிபதிக்கு முன்னே நிறுத்தினால், பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டினால், ஜாமீன், வாய்தா எல்லாம் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். "எங்கம்மா வயசுக்கு வந்துட்டாங்க, அதனால வாய்தா கொடுங்க" என்று ஒரு வழக்கறிஞர் சொன்னாலும், "லாஜிக் இடிக்குதே" என யோசிக்காமல் அதற்கும் வாய்தா கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள்.
