!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label Economy. Show all posts
Showing posts with label Economy. Show all posts

Saturday, August 8, 2026

கேரளம் ஒரு புது அபார்ட்மெண்ட்

சமீபத்தில் ஒரு விவாதத்தைக் கவனித்தேன். ஜீவசகாப்தன் என்ற உடன்பிறப்பு போலிருக்கிறது, அவர்தான் சொன்னார். இந்த மூன்று மாதங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன, தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறதாம்.

தொடர்ந்து அரசியலைக் கவனிப்பவர்களுக்கு, அதன் முக்கியமான துறையான பொருளாதாரம் குறித்த புரிதலும் இருக்க வேண்டும். ஆனால் திமுகவினரும், அதன் ஆதரவாளர்களும் அறிவை வளர்ப்பதை விட வாயை வளர்ப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படி ஒரு அபத்தமான கருத்து.

Friday, January 23, 2026

இது மோடியின் சாதனையில் வராதே...

இந்த வாரம் மோடியின் சாதனைகளைப் பார்ப்போம். நிஜமாகவே அவர் பல விஷயங்களில், பல துறைகளில் சாதித்திருக்கிறார். அதேசமயம் சில இடங்களில் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.

மோடியின் தேசபக்தி, நிர்வாகத்திறமை, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற துடிப்பு என எல்லாமே அவரை சிறந்த தலைவராகத்தான் காட்டுகிறது. நானும் அதை நம்புகிறேன். வரலாறு எப்போதுமே இப்படித்தான். வாழும்போது தூற்றும், மறைந்த பிறகு போற்றும்.

காரணம், அரசியலில் Coexist என்ற தியரி கிடையாது. ஒருவர் எவ்வளவு நல்ல தலைவராக இருந்தாலும், நிஜத்தில் அவர் உங்களுக்குப் போட்டியாளர். எனவே வாழும்வரை அவருடைய குறைகளைச் சொல்லிக்கொண்டே/மிகைப்படுத்திக்கொண்டே தான் அரசியல் செய்யவேண்டும். அப்போதுதான் நீங்கள் அதிகாரத்துக்கு வர முடியும். பெரும்பாலான தலைவர்களுக்கு இதுதான் நடந்திருக்கிறது.

Wednesday, May 3, 2023

கர்நாடகா - இதை தவிர்க்கலாம்


கர்நாடகாவில் இந்த மாதம் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் என்ன புது தகவல் என கேட்கவேண்டாம். எனக்கு எதை படித்தாலும் அதில் ஒரு கோளாறு என் கண்ணுக்கு தெரியும். அந்த தகவல்தான் இங்கே.

அதாவது இந்த வருடம் சட்டமன்றம், அடுத்த வருடம் பரராளுமன்றம் தேர்தல் நடக்கப்போகிறது. அதுதான் இங்கே சிக்கல். காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது பிஜேபியாக இருக்கட்டும், இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக செலவு செய்து களைத்துப்போய், அடுத்த வருடம் மறுபடியும் அதே செலவு செய்யவேண்டும். இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

Wednesday, January 19, 2022

கிரிப்டோ கரன்சி


ஏதாவது சில விஷயங்கள் தீடீரென்று நம் ஆர்வத்தை தூண்டிவிடும். அதுகுறித்த செய்திகளை அதிகம் படிப்போம். இந்த வாரம் அப்படி கவனித்தது QR கோட் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களைத்தான். 

ஜப்பானில் சரக்குகளை தரம் பிரிக்க/கையாள இந்த QR முறையை ஒரு நிறுவனம் பின்பற்ற, பின்னர் அது  இப்படி  விரிவடைத்திருக்கிறது. QR கோட், பணப்பரிமாற்றம் மற்றும் பல விஷயங்களை மிக சுலபமாக முடித்துவிடுவதால் அது தற்போது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

இதில் கிரிப்டோ வேறு வகை. இங்கே அகமதாபாத்தில் சிறு வயதில் பால் வாங்க போகும்போது, அப்போது சில்லறை தட்டுப்பாடு நிறைய இருந்ததால், சில்லறைக்கு பதில் அவர்கள் கடை பெயர் அச்சடித்த டோக்கன் தருவார்கள். 50 காசு 25 காசு என அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். அது அவர்களிடம் மட்டும் செல்லுபடியாகும். 

இப்படி  உள்ளூர் பிரச்சினைகளில் நம் வசதிக்காக சில நடைமுறைகளை மனிதர்கள் உருவாக்குவார்கள். அப்படி வந்த சில விஷயங்கள் அற்புதமான கண்டுபிடிப்பாக மாறும். இதில் QR கோட் வரவேற்கத்தக்க ஓன்று. ஆனால் கிரிப்டோ? 

கிரிப்டோ குறித்து படிக்கும்போது எனக்கு பல சொந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. அதில் பல டேஜாவு வகை. அந்த அனுபவங்களுடன் இதை பொருத்தி பார்த்தால் இதுவும் அதே அடிப்படையில் போகக்கூடும்.

கரன்சிக்கு ஒரு சிறந்த மாற்றாம்; திருடு போகும் வாய்ப்பு இல்லையாம்; சுலபமானது என்று பல காரணங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் தற்போது இன்டர்நெட்டின் வளர்ச்சி, ஸ்மார்ட்போன் வருகை, UPI  என பல விஷயங்கள் வந்துவிட்ட நிலையில், கிரிப்டோ அவசியமே இல்லாத ஓன்று. இருந்தும் மக்கள் அதன் மீது மோகம் கொண்டு அலைவதின் காரணம் புதிர்தான்.

இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவ்வப்போது சில புது வரவுகள் வரும் பின்னர் அது காணாமல் போகும். உதாரணம் எவ்வளவோ சொல்லலாம். பேஜர் போய் ஆண்ட்ராய்டு வந்து பின்னர் அதை ஸ்மார்ட்போன் ஒழித்தது.

தற்போது இன்னொன்றையும் நான் கவனிக்கிறேன். வங்கிகளுக்கு போய் பணம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தநிலையில் ஏடிஎம்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. தெருவுக்கு நாலு ஏடிஎம்கள்கள் என உருவானது. அதே பல ஏடிஎம்கள்கள்  தற்போது காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன.

PAYTM/GPAY போன்ற UPI வரவுகள் பணபரிமாற்றத்தை மேலும் சுலபமாக்கிவிட்டதால் ஏடிஎம்கள் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஏடிஎம்கள்கள் இருக்கும். ஆனால்  வரும் காலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடுவிழா கண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதேதான் கிரிப்டோவிலும் நடக்கக்கூடும்.

இனி சில அனுபவங்களை பார்ப்போம். 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் வந்தபோது இப்படித்தான் பல ஷேர்களை தாறுமாறாக ஏற்றினார்கள். 10 ரூ ஷேர் 5000 போன கதையெல்லாம் நடந்தது. என் கெட்டநேரம் நான் அப்போதுதான் ஷேர்மார்கெட்டில் நுழைகிறேன். 

பொதுவாக ஷேர்களுக்குத்தான் PE/Ratio வைப்பார்கள். அந்த நேரத்தில் படுபாவிகள் அப்போதிருந்த மியூட்சுவல் பண்ட்களுக்கு கூட PE/Ratio வைத்து அதையும் விலை ஏற்றி ஏமாந்தவன் தலையில் கட்டினார்கள். ஏகப்பட்ட பென்னி ஸ்டாக் தாறுமாறாக ஏறி ஆப்ரேட்டர்களுக்கு பணமழையையும் ஏமாந்த சோணகிரிகளுக்கு அல்வாவையும் கொடுத்தது. 

அந்த நேரத்தில் இன்னொரு மோசடியும் நடந்தது. புற்றீசல்போல்  நிறைய புது வெளியீடுகள் வந்தன. வாரம் 10 பொது வெளியீடு வரும். தற்போது அதன் பேர் IPO. தெருக்களில்/பங்கு தரகர் அலுவலகத்தில் இதற்காகவே நிறைய விண்ணப்பங்கள் இருக்கும். அதில் நிறைய எடுத்துவந்து ஆராய்ச்சி செய்வேன்.

கம்பெனி 2 வது வருடமே லாபத்துக்கு வந்துவிடுமாம். வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்திருக்குதாம். உற்பத்தியான உடனே அவர்கள் வாங்கி கொள்வார்களாம். இப்படி நிறைய கதை விட்ட வெளியீடுகள் வந்து பின்னர் காணாமல் போனது. தற்போது நிறைய கிரிப்டோ வருவதை பார்த்தால் அதே நிலைமைதான் வரும் என நினைக்கிறன்.

அடுத்து ரியல் எஸ்டேட் பூம் வந்தது.  எல்லா பூமிலும் ஆரம்பகட்டத்தில் முதலீடு செய்பவர்கள் லாபம் பார்த்துவிடுவார்கள். இது தியரி. ஆனால் இவர்களை பார்த்து ஆட்டுமந்தைகளை போல் பலர் வந்து விழுவார்கள். அவர்களில் 10-20 தப்பித்தால் அதிர்ஷ்டம். மற்றவர்கள் இப்போதும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். நல்ல விலை வந்தால் கொடுத்துடுவேன் என்பார்கள். அதுவே அவர்களுக்கு பெருத்த நஷ்டமாக இருக்கும்.

அப்போதைய விலை ஏற்றம் இயற்கையான ஓன்று. அரசு தாராளமயமாக்களை கொண்டுவந்ததால், நிறைய உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்களை தொடங்கின. கூடவே மக்கள் தொகை பெருக்கமும் கொரோனவை போல் வேகமாக இருந்தது. தொழில் தொடங்க இடம், மக்களுக்கு வீடு என்ற தேவை எல்லாம் சேர்ந்து விலை தாறுமாறாக ஏறியது. தற்போது அதுவும் கொரோனவைபோல் சமநிலைக்கு வந்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலும் நிறைய மோசடிகள், கணக்கில் வராத  கருப்பு பணம் என விளையாட ஆரம்பித்ததால், அரசு பல வகைகளில் கடிவாளம் போட ஆரம்பிக்க, அங்கேயும் மந்தநிலை  வந்தது.

கிட்டத்தட்ட அதேதான் கிரிப்டோவிலும் நடக்கும். தற்போது சில நாடுகள் கடிவாளம் போட ஆரம்பித்துவிட்டன. இந்தியாவும் விரைவில் அந்த வேலையை ஆரம்பிக்கும். எந்த ஆட்டுமந்தை மனப்பான்மை இந்த விலையேற்றத்திற்கு காரணமாக இருந்ததோ, அதே ரிவர்ஸ் மனப்பான்மை இங்கே விலை வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.

இங்கே இன்னொரு தியரி சொல்வார்கள். ஒரு பொருள் நிறையவே விலை குறைந்தால் வாங்குவது நல்லது என மூளை சலவை செய்வார்கள். இந்த விஷயத்தில் நிபுணர்கள் மட்டுமே இதை சரியாக கணிக்கமுடியும். ஷேர் மார்க்கெட்டில் கொசுவை பூனை, புலி அளவுக்கு அல்ல, யானை அளவுக்கு ஏற்றிவைப்பார்கள். அது புலி அளவுக்கு வந்தாலே விலை வீழ்ச்சி என சாதாரண மனிதன் தலையில் கட்டுவார்கள். எனவே கவனம் தேவை.

ஷேர் மார்கெட்டிலாவது கொசுவை யானையாக்குவார்கள். ஆனால் பிட்காயின் தற்போதைய விலையை எதனுடன் ஒப்பிடுவது. 1டாலருக்கும் கீழே இருந்தது தற்போது அதிகபட்சம் 47 லட்சம் போயிருக்கிறது. இது என்ன லாஜிக்கோ.   இதற்கு சப்போர்ட் பிரைஸ் என எப்படி நிர்ணயிப்பது?

இன்னும் சில காலங்களில் `என்கிட்டே கிரிப்டோ இருக்கு, நல்ல விலை வந்தா சொல்லுங்க` என புலம்பும் மனிதர்களை நாம் காணக்கூடும்.

Monday, March 11, 2013

ரயில்வே: இப்படியும் அப்படியும்

கடந்த சில மாதமாக எழுத முடியவில்லை. ஒரு உறவினருக்கு உதவியாக ஆஸ்பிடல் போகும் வேலை வர, பதிவுகள் தடைபட்டது. பின்னர் வழக்கமாக அவ்வப்போது வரும் மனச்சோர்வு ஆட்கொள்ள, பதிவுகள் நின்றுவிட்டது. அதன்பிறகு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரயில்வே துறை குறித்த ஒரு விவாதத்தை கவனித்தபோதுதான்.

இதை சன் நியுஸில் கவனித்தேன். ரயில்வே துறை லாபகரமாக நடக்கிறது; (கடந்த காலங்களில்) 10,000 கோடி லாபம் பார்த்திருக்கிறது; அரசுக்கு டிவிடெண்டாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

லாபம்?

வழக்கம் போல் இது அரைகுறை புள்ளி விவரம். லாபம் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிட வேண்டும் என்று வரைமுறை இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படுபவை.

Monday, October 8, 2012

காவிரி: இப்படியும் ஒரு புலம்பல்

காவிரி பிரச்சினை மீண்டும் செய்திகளில். இங்கே அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே நம்பமுடியாது. இவர்கள் உண்மையைதான் சொல்வார்கள். அது திரிக்கப்பட்ட உண்மையாக இருக்கும்.

ஆனால் தற்போது வலைப்பதிவுகள் மற்றும் விவாத களங்கள் வந்துவிட்டன. இங்கே வாதிடுபவர்களின் வாதங்களில் அறியாமை இருக்கலாம், போலித்தனம் இருக்காது. எனவே இந்த வாரம் இது போன்ற பிரபலமில்லாத வலை தளங்களை தேடிப் படித்தேன்.

இதில் ஆரோக்கியமான வாதங்கள் ஒரு பக்கம். அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் இன்னொரு பக்கம்.

Friday, February 24, 2012

ஷேர் மார்கெட். பிளாட்பார ஃபாரம் முதல் Odin Diet வரை

தலைவலியில் மிகப் பெரிய தலைவலி அரசியல்வாதியாக இருப்பதுதான். மற்ற துறைகளில் அதை தொடர்ச்சியாக கவனிப்பதன் மூலம் அந்த துறை குறித்து ஆழ்ந்த அறிவை பெறமுடியும். ஆனால் அரசியலுக்கு அப்படி சொல்ல முடியாது. இது பல துறைகளை கட்டி ஆளும் துறை என்பதால் எதிலும் உங்களால் பாண்டித்தியம் பெற முடியாது. சில துறைகளில் ஆர்வம் காரணமாக கூடுதலாக கவனிக்கலாம். அவ்வளவுதான்.

இங்கே வாரம் ஒரு பிரச்சினை எழும்பும், உடனே அது குறித்த ஆராய்ச்சியில் மூழ்குவோம். அதில் ஓரளவு புரிதல் வருவதற்குள் இன்னொரு பிரச்சினை நம் கவனத்தை ஈர்க்கும். இப்படி அங்கே இங்கே மேய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதே தலைவலிதான் அரசியல் குறித்து எழுதுபவர்களுக்கும்.

Thursday, February 16, 2012

2g கொள்ளையின் மூன்றாவது மோசடி!


இதுவரை 2g யில் இரண்டு மோசடிகளைத்தான் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஓன்று: முறைகேடாக லைசன்ஸ் பெற்றது. இரண்டு: லைசன்ஸ் வாங்கிய பிறகு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்றதன் மூலம் அநியாய லாபம் பார்த்தது.

தற்போது அந்த லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மோசடி முறியடிக்கப்பட்டது. இனி அவர்கள் புதிதாக லைசன்ஸ் எடுத்தாக வேண்டும். இவர்களின் பங்குகளை வாங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் பேசி அவர்களுடைய பணத்தை வாங்கிவிடுவார்கள் அல்லது தங்களின் தொழிலை தொடர்கிறார்கள். அது அவர்களின் தலைவலி. எனவே அதை விட்டுவிடுவோம். ஆனால் இங்கே ஒரு மூன்றாம் கோணம் இருக்கிறது. அதாவது சொல்ல மறந்த கதை ஓன்று இருக்கிறது. நாம் அதை மட்டும் பார்ப்போம்.

Tuesday, February 14, 2012

2g கொள்ளை. இது வெளிச்சத்துக்கு வராத கொள்ளை!


ஆங்கிலத்தில் laughing all the way to the bank என்று ஒரு பன்ச் டயலாக் உண்டு. அதாவது ஒரு பிரச்சினையில், மற்றவர்களை முட்டாளாக்கிவிட்டு ஜெயித்தவர் பேங்குக்கு சிரித்துக் கொண்டே போனாராம். இந்த 2g வழக்கிலும் அப்படி சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். எனது ஷேர் மார்கெட் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன், யார் சிரிக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள.

இங்கே நான் உங்களுக்கு ஷேர் மார்கெட் பற்றி கிளாஸ் எடுக்கப் போவதில்லை. மேலோட்டமாக இந்த மோசடி மட்டும்.

இங்கே Insider Trading என்ற மோசடியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கம்பனி பற்றிய தகவல்களை, அவர்களிடமிருந்து முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அந்த ஷேரை குறைந்த விலையில் வாங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் அது. இப்படி கம்பனி பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு சொல்வது குற்றம்.