!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label போலீஸ். Show all posts
Showing posts with label போலீஸ். Show all posts

Thursday, January 10, 2013

போலீசின் `எல்லை`


எனக்கு மொபைலில் ஒரு மெசேஜ் வந்துது. வழியில் எங்கேயாவது பறவைகள் அடிபட்டு கிடந்தால், உடனே எங்களுக்கு போன் பண்ணுங்க என்று. இங்கே குஜராத்தில் இந்த மாதம் காத்தாடி திருவிழா என்பதால் பறவைகள் அடிபடும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த கவலை.

ஆனால் எனக்கு டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே அந்த பெண்ணும், அவர் நண்பரும் ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு போனார்களாம். உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டும் என்றோ அல்லது குறைந்த பட்சம் அவர்களுக்கு உடை கொடுக்க வேண்டும் என்றோ யாருக்கும் தோன்றவில்லை.

Monday, March 5, 2012

மூன்று விஷயங்கள்: அரசியல், என்கவுண்டர், கூடங்குளம்.

இந்த வாரம் அதிகம் படித்தது என்கவுண்டர் தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள்தான். `இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்கவுண்டர் கூடாது` என்று சிலர்.

`இறந்தவர்களுக்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் `பல அரசியல் ஊழல் பேர்வழிகளும், போலீஸ் கொள்ளைகாரர்களும் வெளியில் இருக்க, இந்த கொள்ளையர்களை மட்டும் ஏன் பலிகடாவாக்க வேண்டும்` இது வேறு சிலர்.

வாதப்படி பார்த்தால் எல்லாம் சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் யதார்த்தம் எப்போதுமே வேறுவிதமாகத்தான் இருக்கும்.

Monday, February 27, 2012

வங்கிக் கொள்ளைகளும், போலீசுக்கு சில ஆலோசனைகளும்!

சிறை பதிவை தொட்ட நேரம் சரியில்லை போலிருக்கிறது. மற்ற விஷயங்கள் சிந்தனையை இழுக்கிறது. வங்கிக் கொள்ளைகள் மீதுதான் இப்போதைய கவனம்.

மக்களை பொறுத்த வரையில், அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு சில வங்கிக் கொள்ளைகள் நடந்தன, போலீசார் விரைவாக செயல்பட்டு அவர்களை என்கௌன்டரில் கொன்று விட்டார்கள். ஆக செய்தி முடிந்துவிட்டது.

ஒரு பரபரப்பான கேஸில் போலீசார் வடிகட்டிய பொய்யை சொல்ல வாய்ப்பில்லை. இறந்தவனில் ஒருவன் அப்பாவியாய் இருந்தாலும் அந்த உண்மை வெளிவந்து போலீசாரின் தலை உருளும். எனவே போலீசாரின் வாதத்தை நம்புவோம். ஆனால் இவர்கள் கொல்லப்பட்ட விதம் எப்படி என்பது வேண்டுமானால் விவாதமாகலாம்.

Tuesday, February 1, 2011

சிறைகளில் செல்போன், தேவையற்ற வழக்குகள்- part 3



அந்த அபத்தத்தை படிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்.

நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ்காரரை யாரோ ரவுடிகள் வெட்டி குற்றுயிராய் போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தந்து அது வரும்வரை காத்திருப்பீர்களா, அல்லது உங்கள் காரிலேயே அந்த போலீஸ்காரரை ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வீர்களா?



Friday, January 28, 2011

சிறைகளில் செல்போன் - அபத்தமான தண்டனை - part 2



சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டால் சிறை அதிகாரிகள் பெரும்பாலும் அதற்காக வழக்கு போட விரும்புவதில்லை. மிக அபூர்வமாகத்தான் வழக்கு பதிவு செய்யப்படும். காரணம். இவ்வளவு கடுமையான கண்காணிப்பையும் மீறி எப்படி செல்போன் உள்ளே வருகிறது என்று மக்கள் கேள்வி கேட்ப்பார்கள். மக்கள் கேட்டுவிட்டு போகட்டும். அவர்கள் கருத்தையெல்லாம் இப்போது யாரும் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், நீதிபதிகள் நேரடியாக கேள்வி கேட்டு நக்கலடிப்பார்கள். அவமானமாக இருக்கும்.

Monday, January 17, 2011

சிறை அனுபவம்: லஞ்சம். சாரி, ராமகிருஷ்ணன்...

சில தவறுகளை செய்யத்தூண்டும் அல்லது அதை நியாப்படுத்த கூடிய காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் எனது சிறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இதோ, எனக்கும் அப்படி ஒரு அனுபவம்...      

`நான் கோர்டுக்கு வருவேன். என்னை வந்து பாருங்கள்` என்று சிறை நண்பர் (கேரியர்) ஒருவர் மெசேஜ் சொல்லி அனுப்பியி ருந்ததால்,அவரை பார்க்க ஐகோர்ட் வளாகத்துக்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. அந்த நேரம் வனிதா விஜயகுமார் குடும்பநல கோர்ட்டுக்கு வந்தாரோ அல்லது கிளம்பி கொண்டிருந்தாரோ... பிளாஷ்கள்  மின்னி கொண்டிருந்தன.

Sunday, December 5, 2010

சிறை அனுபவம் 3: பலி ஆடுகள்

இது ஒரு தொடர், வரிசையாக படிக்க



அந்த புதிய பிளாக்குக்கு நுழைந்த உடனேயே புரிந்து விட்டது இது ஜெயில்தான் என்று. அந்த பிளாக்கில் இருந்த அத்தனை பெரும் அக்மார்க் கிரிமினல்கள். மொத்தமாக (சுமார் 60 பேர்) அனுப்பபட்டவர்களில் நாங்கள் 15 பேர் ஒரு பிளாக்குக்குள் நுழைந்தோம். எனக்கு ஓரளவு உதவி புரிந்த அந்த பழைய கைதி, அட்மிஷன்களை பிரித்து விடும் அந்த பரப்பான நேரத்தில் காணாமல் போய்விட்டார். அவர் தன் பழைய நண்பர்களுடன் சேர்ந்துவிட்டதை  பின்னர் நான் தெரிந்துகொண்டேன்.


நாங்கள் போன பிளாக்குக்கு வார்டன்கள் தான் எங்களை அனுப்பி வைத்தார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் நாங்கள் அனுப்பி வைக்கப்பட்ட `விதம்`

Friday, November 5, 2010

சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.


சிறைக்கு சென்றவன் என்பதால் பரபரப்பான பல விஷயங்களை பற்றி நான் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் இங்கு பட்டும் படாமலும் சில விஷயங்களை குறிப்பிடுவேன். காரணம், சிறையில் நானாக எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நான் ஒரு தனிமை விரும்பி. நானும் ஒரு கைதி என்பதால் பல கைதிகள் தயக்கமின்றி என்னுடன் பேசியதால் தெரிந்து கொண்டவை.  சில சொந்த அனுபவங்களும் உண்டு. நான் எழுதிய கடிதங்கள் தினமலரில் வெளியான பிறகு `அண்ணே, இதைபற்றியும் நீங்க எழுதுங்கண்ணே` என்றும் சொன்னவை.