!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label அணுசக்தி. Show all posts
Showing posts with label அணுசக்தி. Show all posts

Sunday, September 30, 2012

அமெரிக்கா -இந்தியா-ஜப்பான். இது அரசியல் கூட்டணி அல்ல

அமெரிக்கா

சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். இந்தியா மீது நம்பிக்கை இழக்காதீர்கள் என்று தலைப்பு. கட்டுரையாளர் இந்தியா மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்.

சமீபகாலமாக இந்தியா பொருளாதாரரீதியாக தடுமாறுகிறது. தினம் ஒரு ஊழல் என வெளிப்படுகிறது. அரசு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. இதையெல்லாம் தாண்டி 2030 ல் இந்தியாவும் பேசப்படும் என்று எழுதி இருக்கிறார். தற்போது சீனா எப்படி பேசப்படுகிறதோ அதேபோல் இந்தியாவும் பேசப்படுமாம்.

Monday, September 17, 2012

கூடங்குளம்: திரிக்கப்பட்ட உண்மைகள்

கூடங்குளம் மீண்டும் பரபரப்பாகிவிட்டது. இது குறித்து சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் செய்திகளில் சிலவற்றை மட்டுமே உண்மையாக இதன் எதிர்பாளர்கள் பரப்புரை செய்யும்போது, அதற்கு பதில் எழுத வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.

அணுஉலை விற்கும் நாடுகள் தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவர்களுக்கு ஒரு கொள்கை என ஓரவஞ்சனை  செய்யவில்லை. எந்த ரிஸ்கை அவர்கள்  எடுக்கிறார்களோ அதேதான் நமக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை நாட்டின் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. எனவே நாடு இந்த யதார்த்தமான பாதையிலிருந்து விலக முடியாது.

Monday, March 5, 2012

மூன்று விஷயங்கள்: அரசியல், என்கவுண்டர், கூடங்குளம்.

இந்த வாரம் அதிகம் படித்தது என்கவுண்டர் தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள்தான். `இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்கவுண்டர் கூடாது` என்று சிலர்.

`இறந்தவர்களுக்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் `பல அரசியல் ஊழல் பேர்வழிகளும், போலீஸ் கொள்ளைகாரர்களும் வெளியில் இருக்க, இந்த கொள்ளையர்களை மட்டும் ஏன் பலிகடாவாக்க வேண்டும்` இது வேறு சிலர்.

வாதப்படி பார்த்தால் எல்லாம் சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் யதார்த்தம் எப்போதுமே வேறுவிதமாகத்தான் இருக்கும்.

Monday, November 28, 2011

முறையற்ற மதப் பிரச்சாரம்.


இந்த வாரம் எனக்கு கோபத்தை வரவழைத்தது சில கிறிஸ்துவ பிரச்சாரகர்களின் செயல்கள். ஒரு பள்ளிக் கூடத்தின் முன் சிறுவர்களிடம் மத புத்தகங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மதப் புத்தகங்களை விநியோகிப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறுவர்களிடம் இதை விநியோகிப்பதை நான் நேரடியாக பார்த்தது இப்போதுதான்.

ஆன்மீகத்தை பொறுத்த வரையில் நான் மதில் மேல் பூனை. நிச்சயம் தீவிர மத ஆர்வம் கிடையாது. ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் ஈடுபாடு காட்டி தீக்கதிரை சந்தா கட்டி வாங்கியும் படித்திருக்கிறேன், அப்படியே அந்த கட்சியின் ஒரு மாநில மாநாட்டில் தொண்டனாகவும் போயிருக்கிறேன். எனவே நாத்திகனாகத்தான் இருந்தேன். இருந்தாலும் கடலில் மூழ்குபவன் அந்த கடைசி நேர பயத்தில் `இறைவா` என்று கத்துவதில்லையா, அதுபோல் வந்ததுதான் பக்தி. அதன் பிறகு இப்படியும் அப்படியும் தடுமாறி நான் இப்போது எந்த பக்கம் என்றே தெரியாத நிலை.

அதே சமயம் இது மத ஆர்வத்தினாலோ அல்லது எது உயர்ந்த மதம் என்ற ஆராய்ச்சிக்கான பதிவோ இல்லை. நான் கண்ட ஒரு காட்சி லாஜிக்கோடு ஒட்டாமல் அயோக்கியத்தனம் என்ற எல்லையையும் தொடுவதால்தான் இந்த பதிவு.

Monday, November 21, 2011

கூடங்குளம் யாருக்கான திட்டம்?


கூடங்குளம் இப்போதைக்கு என்னையும் விடாது போலிருக்கிறது. முந்தைய பதிவில் சில நண்பர்கள் பின்னூட்டத்தில் சில கருத்துக்களை முன் வைத்தார்கள். உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அதற்கான பதில்தான் இது.

அப்படியே நான் இதையும் சொல்லிவிடுகிறேன். நான் அதிகம் எழுதுவதும் இல்லை, பேசுவதும் இல்லை. எழுதாததற்கு காரணம் சிறு வயதிலிருந்தே பிராக்டீஸ் இல்லாததாக இருக்கலாம். எனவே எழுதுவது என்பது எனக்கு தண்டனையை போன்றது. பேங்கில் சலான் எழுத எத்தனை வார்த்தைகள் எழுத வேண்டி இருக்கும்? அதற்கே எனக்கு கை வலிக்கும். எனவே நான் படிப்பது அதிகம், எழுதுவது குறைவு.

Monday, November 14, 2011

கூடங்குளம்: கேள்விகள் அங்கே, பதில் இங்கே.


சிறை தொடர்பான இரண்டு செய்திகள் பற்றி பதிவு எழுத நினைத்தால் வழக்கம் போல் ஏதோ ஓன்று நம் சிந்தனையை ஆக்கிரமித்து அது குறித்த பதிவில் போய் முடிகிறது. இந்த முறை மீண்டும் கூடங்குளமே என் சிந்தனை ஆக்கிரமித்திருக்கிறது.

முக்கியமாக நான் அதற்கு ஆதரவாளனாக இருப்பதால் (கவனிக்கவும், வேறு வழி இல்லாத நிலையில்) அதிகம் படிப்பது அதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைதான். அவர்கள் ஏதாவது ஆதாரமான கருத்தை முன் வைக்கிறார்களா என்று கவனிப்பேன்.

Monday, October 31, 2011

கூடங்குளம்: இங்கேயும் சில அன்னா ஹசாரேக்கள்


இதை தினமலருக்காக (இது உங்கள் இடம்) கொஞ்சம் சுருக்கி எழுதினேன். இங்கே இன்னும் கொஞ்சம் விளக்கமாக...


சில வாரங்களுக்கு முன் அணுசக்தி குறித்த தகவல்களில் முழ்கி இருந்தேன். ஆனால் முதலில் என் கதையை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்ததால் அதை பற்றி பதிவு எழுதவில்லை. கூடங்குளம் பிரச்சினை இன்னமும் கொதிக்கும் நிலையில் அது குறித்தும் ஒரு பதிவு.

அணுசக்தி விஷயமாக பல செய்திகளை படித்ததில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்கள் திறமை அடங்கியிருக்கிறது. ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம். இந்த தியரி இந்த பதிவுக்கும் பொருந்தும். இருந்தாலும் பலதரப்பட்ட வாதங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களால் உண்மையை கண்டுபிடித்துவிட முடியும்.