வரலாறுதான் காரணம். பொதுவாக நாம் படித்த வரலாறு ஒன்றாகவும், அதேசமயம் நடந்த வரலாறு மற்றும் நாம் கவனிக்காத வரலாறு வேறு விதமாக இருக்கும். இங்கே நாம் அந்த கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.
இங்கே பிஜேபியின் தலைவலிக்கு இரண்டே தியரிதான் காரணம். ஓன்று, வடமாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு. இந்துக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் இந்தியா இஸ்லாமியர்களின் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 900 ஆண்டுகள் அடிமையாக இருந்தது.
இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் நடைமுறையில் இந்த உண்மை அப்படியே இல்லை. முக்கியமாக கடற்கரை பகுதிகளான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா பிரிசிடெண்சி என இந்த பகுதிகளை மட்டும் பிரிட்டிஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற பகுதிகளை அவர்கள் உள்ளூர் தலைகளுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள். அதாவது princely states என 500கும் மேற்பட்ட சிறிய, பெரிய என பல தலைகள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தன. மத்தியில் பிஜேபி அரசு, மாநிலத்தில் திமுக அரசு என்பதுபோல்.
அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாடு 300 ஆண்டுகள்தான் அடிமையை முறையை சந்தித்தது. அப்படியே நம்மை, அதாவது தமிழ்நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் சுதந்திரத்தை கொடுத்துவிட்டு எந்த கறைகளையும் விடாமல் சென்றுவிட்டான். எனவே நமக்கு அடிமை வரலாறு என்பது ஜஸ்ட் பாசிங் க்ளுவ்ட் போலத்தான்.
ஆனால் வடமாநிலங்கள் கதை வேறு, அவர்களுக்கு இது 900 வருஷ பகை. முதலில் இஸ்லாமியர்கள் பின்னர் வெள்ளைக்காரன் என இரண்டு அடக்குமுறைகள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். எனவே இரண்டு சூடு பட்டுவிட்டதால், அதுவும் நீண்ட காலம் அது என்பதால் அவர்களுக்கு பய உணர்வு வந்துவிட்டது.
அதிலும் பெரும்பாலான வட மாநில பகுதிகள் அந்நிய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய வாரிசுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வட மாநில மக்கள் வெள்ளைக்கார ஆட்சியை பெயரளவில்தான் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் சந்தித்த, அனுபவித்த கொடுமைகள் எல்லாம் முஸ்லிம்கள் ஆட்சியில் நடந்தது. சுதந்திரத்திற்கு பிறகும் பெரும்பாலான முஸ்லிம்கள் இங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களில் பலருக்கு `நாங்கள் ஆண்ட பரம்பரை` என்ற இறுமாப்பும் இருக்கிறது, இன்னமும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் அவ்வப்போது சில பிராமணர்கள் செய்யும் அளப்பறைகளை பார்த்தால் உங்களுக்கு கோவம் வருமல்லவா, அதேதான் வடமாநிலங்களில் முஸ்லிம்கள் செய்வது. விளக்கம் கொடுத்தால் நீண்டுவிடும். உங்களுக்கு இந்தி தெரிந்து வட மாநில அரசியலை கவனித்தால்தான் உங்களுக்கு இது புரியும். இது வட மாநில இந்துக்களுக்கு பெரிய தலைவலி.
யாரால் நீங்கள் அவமானத்தையும் கொடுமையையும் அனுபவித்தீர்களோ அவர்கள் மீதுதான் உங்களுக்கு கோபம் அதிகமா வரும். தமிழ்நாட்டில் பிராமணர்களால் அதிக அவமானங்களை சந்தித்தது தலித் சமூகம். எனவே பிராமணர்களை திட்டாமல் தலித்துகளால் இருக்கமுடியாது என்பதுபோல், அங்கே முஸ்லிம்களை திட்டாமல் அவர்களால் இருக்கமுடியாது. இதுதான் இயற்கை.
தமிழ்நாட்டில் இருக்கும் பல தலைவர்களுக்கு, அறிவுஜிவிகளுக்கு இந்த தியரி புரியாது. உங்கள் பக்கத்து வீட்டு பாய் நல்லவர் எனவே நீங்கள் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்றால், அது உங்களுடைய அதிர்ஷ்டம். ஆனால் வடமாநில இந்துக்களும் அதையே செய்யவேண்டும் என்று நீங்கள் உபதேசித்தால் அது அரைவேக்காட்டுத்தனம்.
இந்த வடமாநில வரலாற்றில் வேறு சில ட்விஸ்டுகளும் வந்து நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. என்னதான் உள்ளூரில் முஸ்லீம் ஆட்சி என்றாலும், மொத்தத்தில் இந்தியா முழுக்க வெள்ளைக்காரன் ஆட்சிதான். அதாவது ஒட்டு மொத்த இந்தியாவின் நீதிபரிபாலனம் வெள்ளையர்கள் கையில்தான் இருந்தது. இருந்தாலும் இந்தியாவை கொள்ளை அடிக்க வேண்டுமென்றால் இந்துகள்-முஸ்லீம்கள் என யாரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என பல விஷயங்களில்/ மோதல்களில் வெள்ளையர்கள் பட்டும் படாமலும் இருந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் இந்துக்கள் சாத்வீகம் நிறைந்தவர்கள் என்பதை வெள்ளையர்கள் புரிந்துகொண்டார்கள். நியாயமான மாற்றங்களை ஓரளவாவது ஏற்றுக்கொள்வார்கள் என்பதால், இந்துக்களின் முட்டாள்தனமான பழக்க வழக்கம் மூடநம்பிக்கைகள் போன்றவற்றில் மட்டும் பலவேறு சீர்திருத்தங்களை பயப்படாமல் வெள்ளையர்கள் கொண்டுவந்தார்கள். முஸ்லிம்கள் விஷயத்தில் எதுவும் கிடையாது. இது சுதந்திரத்துக்கு முன். அதன்பின் சுதந்திரம் கிடைத்தாலும் நிலைமை மாறவில்லை.
அதன்பின் நேருவும், ஜின்னாவும் கதையில் நுழைகிறார்கள். இங்கே இந்தியாவின் தேசத்தந்தையாக ஜின்னா உயர்கிறார். நிஜம்தான். அவர் மட்டும் பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால், இந்தியா நாசமாக போயிருக்கும். எனவே அவர்தான் இந்தியாவின் ரட்சகர். முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்றாக வாழமுடியாது என்று ஒரு அற்புதமான சித்தாந்தத்தை சொல்லிவிட்டு, தான் ஒரு நரகத்தை உருவாக்குகிறோம் என்பது புரியாமல், தனிக்குடித்தனம் போய்விட்டார்.
இப்போது நேருவுக்கு ஒரு நெருக்கடி. சுதந்திர இந்தியா ஜனநாயக பண்புகளை, நவீன சிந்தனைகளை கொண்டு வரலாம். ஆனால் இவையெல்லாம் முஸ்லிம்களின் அகராதியில் இல்லாத வார்த்தைகள். எனவே இப்படி ஏதாவது செய்து முஸ்லிம்களுக்கு கோவம் வந்து அவர்களில் ஒரு பகுதியினராவது பாகிஸ்தானுக்கு மூட்டை கட்டினால், அங்கேயிருந்து ஜின்னா 'நான்தான் அப்பவே சொன்னேன்ல' என போன் போட்டு சிரிப்பார். அது இந்தியாவுக்கு அவமானமாக இருக்கும்.
எனவே நேருவின் அரசும் முஸ்லிம்கள் விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்தது. கொஞ்ச காலம் போகட்டும் என விட்டு பிடித்திருப்பார் போலிருக்கிறது. இதுவும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இப்படி பல காரணங்களால் முஸ்லிம்களுக்கு பிரிட்டிஷ் அரசும் அதன்பின் வந்த காங்கிரஸ் அரசும் செல்லம் கொடுக்க, உடம்புல கொஞ்சம் ஜாஸ்தின்னு ஏதோ சொல்லுவாங்களே அது முஸ்லிம்களுக்கு வந்துவிட்டது. அதாவது வடஇந்திய முஸ்லிம்களுக்கு.
அடுத்து இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என அடுத்து வந்த தலைவர்களும் நாட்டாமை (நேரு) ஒரு முடிவெடுத்தா அது சரியாத்தான் இருக்கும்னு காரணமே தெரியாமல் அவர்களும் அந்த தப்பான பாதையிலேயே போக, இப்போது முஸ்லிம்களுக்கு நம்மகிட்ட எவனும் வாலாட்ட மாட்டான் என்ற இறுமாப்பு அதிகமாகி அந்த விஷயம் வார்த்தைகளிலும் வர ஆரம்பித்தது.
அதன் உச்சகட்டமாக ஷாபானு என்ற முஸ்லீம் பெண்ணுக்கு நியாயமான நீதி சுப்ரிம் கோர்ட் வழங்கியபோது, அதை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பங்களாதேஷ் உருவாகிவிட்டது, ஜின்னாவின் தத்துவமே பொய்யாகிவிட்டது, இனி எதற்கும் பயப்பட வேண்டாம், நியாயத்தை நிலைநாட்டுவோம் என காங்கிரஸ் துணிச்சலாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒட்டு வங்கிக்கு பயந்து முஸ்லிம்களுக்கு என தனி சட்டம் உருவானபோது, காங்கிரசும், முஸ்லிம்களும் இது நம்மை சவக்குழியில் தள்ளப்போகிறது என்பதை உணரவில்லை.
நம்ம கதை தனி கதை
இனி தமிழ்நாட்டின் வரலாறை பார்ப்போம். நாம் (தமிழ்நாடு) வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தோம். அவன் போனதும் நமது கோபம் அடங்கிவிட்டது. ஆனாலும் இந்த உலகம் உருள ஒரு எதிரி/பயம் என்ற கான்செப்ட் வேண்டும். வெள்ளைக்காரன் போனபிறகு தமிழனுக்கு எதிரி என்ற ஒரு உருவம் கிடைக்காத நிலையில், ஏற்கனவே இருந்த பிராமண எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்து அது தமிழ்நாட்டில் நிரந்தமாக தங்கிவிட்டது.
வடமாநிலங்களில் கதை வேறு. அங்கேயும் பிராமணர்கள் அட்டகாசம் செய்திருந்தாலும், இஸ்லாமியர்களின் செயல் அதைவிட மோசமாக இருந்ததால் கோபம் அந்த பக்கம் திரும்பிவிட்டது. நீண்ட கால இஸ்லாமிய ஆட்சி, கலவரங்கள், பாகிஸ்தான் உருவானது போன்றவை எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு நம்பர் ஒன் எனிமியாக முஸ்லிம்கள் மாறிவிட்டார்கள்; பிராமணர்கள் தப்பிவிட்டார்கள். எனவே வடமாநில அரசியல் அந்த தியரியால் இயங்குகிறது.
இந்த வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த இன்னொரு டிவிஸ்டும் இருக்கிறது. அது பெரியார் பண்ண வேலை. அவர் பிராமணன், தலித், முஸ்லீம் என யாரையும் விட்டுவைக்காமல் எல்லோரையும் பார்த்து 'திருந்துங்கடா' என சகட்டுமேனிக்கு திட்டியதால், இந்துக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மேலே வர ஆரம்பித்தார்கள்.
அல்லது, இங்கே இன்னொரு தியரியும் வேலை செய்திருக்கக்கூடும். பக்கத்துவீட்டுக்காரன் நாய்குட்டி/கார் வாங்கினால் நமக்கும் காதுல புகை வந்து நாமும் வாங்குவோமில்லையா, அதுபோல் கிறிஸ்துவர்களும், இந்துக்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கவனித்து முஸ்லிம்களும் பின்பற்றி சிந்தனையில் தமிழ்நாட்டில் முன்னேறிவிட்டார்கள். இது வட மாநிலங்களில் நடக்கவில்லை.
அதுசரி முஸ்லீம் எங்கிருந்தாலும் முஸ்லிம்தான் அதில் என்ன தமிழக முஸ்லிம்கள் வித்தியாசமாக இருக்கிறாரகள் என நீங்கள் கேட்கலாம். மலேசியாவிலும் முஸ்லிம்கள்தான் ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்கள்தான். ஆனால் இரண்டு நாட்டு முஸ்லிம்களுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா, அதே கதைதான் இங்கேயும். புரியவில்லை என்றால் உலக வரைபடத்தில் மலேஷியாவை அரைமணி நேரமும், ஆப்கானிஸ்தானை அரைமணி நேரம் உத்து பாருங்கள், காரணம் புரியும். அதே தியரிதான் தமிழ்நாட்டிலும் வேலை செய்து தமிழ்நாட்டு முஸ்லிம்களை மாடரேட் ஆக மாற்றிவிட்டது.
தமிழ்நாட்டு முஸ்லீம் தலைவர்களின் பேட்டியை கேட்டால், அவர்களின் வாதம் சரியோ தவறோ, ஆனால் அதில் நாகரிகம் இருக்கும். வன்மமோ அநாகரிகமோ இருக்காது. ஹைதராபாத் ஒவைசி கூட ஓரளவு நாகரீகமாகத்தான் பேசுகிறார். வட மாநிலங்களில் இது தலைக்கீழ்.
ஆக மொத்தத்தில் தமிழகம் முஸ்லிம்களால் ஆளப்படவில்லை, கொடுமைப்படுத்தவில்லை. இங்கே இருக்கும் முஸ்லிம்களும் பக்குவப்பட்டிருக்கிறார்கள்.
பிரச்சினையையே சந்திக்காத தமிழன், பிரச்சினையே தராத முஸ்லிம்களுடன் வாழும் தமிழன், இதுதான் உலகம் என நினைத்து வட இந்தியர்களுக்கு சமூக நல்லிணக்கம் என்றால் என்ன என்று உபதேசித்தால் அதுவும் அரைவேக்காட்டுத்தனம்தான். அதேதான் பிஜேபிக்கும். அவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் சில அரசியல் கொள்கைகளை கடைபிடிக்கிறார்கள். அது வடமாநிலங்களில் சரி, அதை அப்படியே தமிழ்நாட்டில் திணிக்க விரும்புவதும் முட்டாள்தனம்தான்.
இங்கே பிஜேபி இன்னொரு முக்கியமான தவறையும் செய்கிறது. தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு கடுமையாக இருக்கும் நிலையில் அவர்களை கொஞ்ச காலமாவது மறைத்து வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் பிஜேபியின் தலைவராக ஒரு நான் பிராமின் போட்டால்தான் கட்சி வளரும் என்ற உண்மையை தாமதமாக புரிந்துகொண்டாலும், தலைவராக ஒரு நான் பிராமினை போட்டுவிட்டு, அவரை சுற்றி இருப்பவர்களெல்லாம் பிராமணர்களாக இருந்தால்? வடிவேலு கொண்டையை மறைக்காமல் வேஷம் போட்ட கதைதான். இது மறுபடியும் மறுபடியும் பிஜேபி என்பது பிராமண ஜனதா பார்ட்டி என்ற பிம்பத்தைத்தான் மக்களிடையே கொண்டு சேர்க்கும்.
தமிழ்நாட்டில் முஸ்லீம் எதிர்ப்புணர்வை குறைத்துக் கொண்டு, அப்படியே பிராமண தலைவர்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொன்னால்தான் தமிழ்நாட்டில் பிஜேபி கொஞ்சமாவது வளரும்.
இது அநியாயம். ஒரு காலத்தில் பிராமணர்கள் செய்த தவறுக்காக இப்போதிருக்கும் தலைமுறையை புறக்கணிப்பது சரியா என்று கேட்டால், வடமாநிலங்களில் முஸ்லிம்கள் இதே கேள்வியை கேட்பார்கள். அதற்கு என்ன பதிலோ அதேதான் இங்கேயும்.
நீண்டகாலம் வசந்த காலத்தை அனுபவித்தால், இலையுதிர்காலம் என்ற ஒன்றையும் நீண்டகாலம் சந்தித்தே ஆகவேண்டும். இது முஸ்லிம்களுக்கும் பொருந்தும் பிராமணர்களுக்கும் பொருந்தும்.
0 comments:
Post a Comment