!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, May 22, 2012

அரசியலும், கர்ணன் தியரியும்

மீண்டும் ஒரு (புதுக்கோட்டை) இடைத்தேர்தல். மறுபடியும் அரசுக்கு தண்டச் செலவு. இடைத்தேர்தல்கள் ஒரு ஆட்சியின் தலைவிதியை மாற்றாதவரை, இவை தேவையே இல்லை. சிக்கனம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய அரசுக்கு இது மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை. தெரிந்திருக்கும். ஆனால் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது பற்றி பேசுவார்கள்..பேசுவார்கள்...இன்னும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இந்த அனாவசியமான, சம்பிரதாயமான இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் ஒதுங்கிவிட்டன. இருப்பது தேமுதிக மட்டுமே. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் பண மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து போராடுவது சிரமம் என்று புறக்கணித்த கட்சிகள் சமாளித்தாலும், எதற்கு (லாபமில்லாத) செலவு செய்வானேன் என்பதுதான் முக்கியமான காரணம்.

Sunday, May 13, 2012

இந்தியாவின் வறுமையும், MLM தியரியும்

2005 ல் நான் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். ASIA TIMES என்ற இணைய இதழில் சூடாக கருத்து மோதல் நடந்து கொண்டிருந்தது. ஆர்வமாக கவனித்தேன். அதில் ஒரு சீனன் இந்தியாவை மேலை நாடுகளோடு ஒப்பிட்டும், நம் நாட்டின் ஜாதி அமைப்பை பற்றியும் விமர்சிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கோவம் வந்தது. அதுவரை எதுவும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இந்த அர்த்தமற்ற விமர்சனம் என்னை தூண்டியதால் பதில் எழுதினேன்.

என்னுடைய ஆங்கிலமோ சுயம்பு. ஆங்கில நாவல்கள் படித்தும், டிவி கேட்டல் மூலமாகவும் கற்றது. எழுத வரவில்லை. நானும் அந்த முயற்சில் கொஞ்சம் எம்பி எம்பி பார்த்து, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் இது கோபத்தை தூண்டி விட, வார்த்தைகளும் வேகமாக வந்து விழ, இலக்கணத்தை பற்றி கவலைப்படாமல் எழுதி அனுப்பினேன். அது அதிக திருத்தங்கள் இல்லாமல் பிரசுரமாகி, பரவாயில்லை பாஸாயிட்டோம் என திருப்தியையும் கொடுக்க, அது தொடர்கதையானது.

கடந்த பதிவில் இந்தியாவை மேலை நாடுகளுடன் ஓப்பிட்டு நண்பர் வவ்வால் பின்னோட்டம் இட்டிருந்தார். அது அந்த முதல் கடிதத்தை நினைவுபடுத்தியது. அந்த கடிதத்தில் நான் இப்படி முடித்தேன்.

Tuesday, May 1, 2012

வரும் முன் காப்போம் !

இந்த வாரம் கல்வித்துறை குறித்த செய்திகளை மேய்ந்ததில் இதை கவனித்தேன். ஆசிரியர் வேலைக்கு இந்த ஆண்டு 25000 பேர் தேர்வு செய்யப்பட போகிறார்களாம். இதற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் 6 லட்சம் பேர். இங்கே புள்ளி விவரத்தை விட்டுவிடுவோம். அரசின் எந்த ஒரு துறையிலும் வேலை வாய்ப்பு என்றால், அங்கே போட்டி கடுமையாக இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

அரசுத் துறையில் வேலை என்றால் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். இன்றைய செய்தியை பாருங்களேன். பண்ருட்டியில் ஒருவர், அதுவும் ஸ்டேஷன் மாஸ்டர், குடி போதையில் பணியில் இருந்திருக்கிறார். பணம் எண்ணக் கூட முடியவில்லையாம். அந்த அளவுக்கு அரசுத் துறைகள் உங்களுக்கு பாதுகாப்பை தருகிறது.

Monday, April 23, 2012

பணக்கார பிரபு யாரும் இல்லையா?

திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவியது இன்றைய கல்வி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இதில் பணம் நோக்கமாக இல்லை. தான் வெற்றியாளனாக வர வேண்டும் என்ற வெறி மாணவர்களுக்கு வராமல் ஆசிரியர்களுக்கு வர, அதையும் அவர்கள் குறுக்கு வழியில் அடைய முயற்சித்திருக்கிறார்கள். இதுதான் செய்தி.

இது ஒரு போலித்தனமான பெருமை என்றாலும், இந்த வியாதி பலரை பிடித்து ஆட்டுவதும் நிஜம். அரசியல்வாதிகள் பணம் கொடுத்து கூட்டத்தை காட்டுகிறார்கள். நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே படங்களை ஓட்டி, தங்களை வெற்றி வீரராக காட்டிக் கொள்கிறார்கள். இதெல்லாம் எந்த வகை? இதில் பெருமை மட்டுமில்லை, சில லாபமும் இருக்கிறது. 

ரஜினியின் சந்திரமுகி கூட 800 நாட்கள் தொடர்ந்து `ஓடி` சாதனை படைத்ததாம்! ஆனால் அது சாதனைக்காகவே ஓட்டப்பட்டது என்று எப்போதோ படித்தேன். இத்தனைக்கும் அவர் வெற்றியாளர். அவருக்கும் இது போன்ற போலித்தனம் தேவைபடுகிறது.

Tuesday, April 17, 2012

ஒரு முட்டாளும், ஒரு அப்பாவியும்..

சில நாட்களுக்கு முன் கவனித்த செய்தி இது. பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் IPL மேட்ச் பார்க்க ஃப்ரீ டிக்கெட் கேட்டதாகவும், அதற்கு இவர்கள் மறுத்ததால் மைதானத்தை சுத்தம் செய்ய மறுத்ததாகவும் டைம்ஸ் நவ் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பபட்டடது.

அது தொடர்பான விவாதத்தில், அர்னாப் ஏதோ ஒரு செக்க்ஷ்னை சொல்லி, `இப்படி கேட்பது குற்றமாகும்` என மிரட்ட, அந்த பக்கம் இருந்த அரசியல்வாதி (துணை மேயர்), அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். கூடவே, `பத்திரிகையாளர்களும் கவர் வாங்குவதில்லையா?` என அவர்களையும் வம்புக்கு இழுத்தார்.

ஒரு பக்கம் சட்டத்தின் மீது பயமின்மை, இன்னொரு பக்கம் தான் செய்யும் தவறை நியாயபடுத்த, `நீ மட்டும் யோக்கியமா?` என கேள்வி. இதுதான் இன்றைய அரசியல் என்பதை இந்த பேட்டி நிரூபித்தது. .