திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது. தீபம் அணைந்துவிட்டிருக்கலாம், ஆனால் செய்திகளில் இன்னும் சில வாரம் எரியும். கடந்த ஆண்டே இதை கவனித்தேன். இந்த ஆண்டு அது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு என்பதும், இங்கே பிஜேபி வளர துடிக்கிறது என்பதும் புரிகிறது.
இதில் அரசியல் இருப்பதும் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் யார் எந்த நோக்கத்துக்காக போராடினாலும், நேரம் காலம் பார்த்து போராடினாலும் நியாயம் யார் பக்கம் என்பதையும் கவனிக்க வேண்டுமல்லவா.
உடனடியாக எழுத வேண்டாம் என்று செய்திகளை கவனித்தேன். அதில் ஒரு விஷயம். 100 ஆண்டுகாலமாக பிள்ளையார்தான் இந்த தீபத்திற்கு சாட்சியாக இருக்கிறார். இப்போது தீடிரென்று ஏன் மாற்றவேண்டும்? மேம்போக்காக பார்த்தால் நியாயமாக தெரியும். அதையே திருப்பி கேட்டால்.
