!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label hindi. Show all posts
Showing posts with label hindi. Show all posts

Saturday, December 20, 2025

விஜய் ரசிகர்களாகும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


நவோதயா பள்ளிகள் தேவையா?

பள்ளிகள் தேவைதான், ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற சேவைகள்/ கல்வி எப்போதும் தேவையில்லை. அங்கே இறுதி பலன் என்பது கொடுப்பவனின் நோக்கமாகத்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.

சமீபத்தில் மாரிதாஸ் காணொளி ஒன்றை கவனித்தேன். அதில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது, எனவே வேறு வழியில்லை, தமிழக அரசு நவோதயா பள்ளிகளை அனுமதித்தாக வேண்டும் என சந்தோஷமாக மேளம் அடித்திருந்தார். அதோடு விட்டால் பரவாயில்லை. இந்த திட்டத்தை தடுப்பதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை இந்த திமுக அரசு, அதாவது கலைஞரும், ஸ்டாலினும் தடுத்தார்கள், இனி அது நடக்காது என சொல்லியிருந்தார்.

திமுகவை திட்டுங்கள் அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. `நீ விளக்கு பிடிச்சாதான் திட்டுவேன்` என்றால் நான் அதற்கும் தயார். அந்த அளவுக்கு அது ஒரு மோசமான கட்சி என்பதுதான் என் கருத்து.

Wednesday, March 19, 2025

அமைச்சர்கள் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஏன் இந்தி படிக்கிறார்கள்?


கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.

இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.

இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.

Monday, March 3, 2025

WE WILL LEARN HINDI ONLY IF WE NEED !

வழக்கமாக நான் இந்த காப்பி-பேஸ்ட் வேலையை செய்வதில்லை. ஆனால் QUORA இணையதளத்தில் இதை படிக்க நேர்ந்தபோது இதை பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்த காலத்தில் படிக்கும்போது கல்வி இந்த அளவுக்கு சுமையாக இல்லை. இப்போது எட்டாவது படிக்கும்போதே பத்தாவது கல்விக்கான பாடத்தையும் இப்போதே படிக்க வேண்டும் என்ற அளவுக்கு பெற்றோர்களின் மனநிலை போய்விட்டது. டியூஷன் என்பது மக்கு பிள்ளைகளுக்காக என்று இருந்த நிலைமை மாறி, பாடத்திட்டங்கள் அதிகமாகிவிட்டதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க இந்த டியூஷன் தேவைப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு கல்வி வந்துவிட்டது.

இது தவிர, கம்ப்யூட்டர் மற்றும் இன்ன பிற துறைகள் என கல்வி விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், கூடுதலாக ஒரு மொழி என்பது மாணவர்களுக்கு சிரமம்தானே?

இன்றைய பெற்றோர்கள் அவர்கள் சுமக்காத ஒரு சுமையை தன் பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். இது என்ன நியாயமோ?   

Saturday, March 1, 2025

இங்கே எல்லோரும் அமித்ஷாதான்



இந்த மும்மொழி பிரச்சினை காரணமாக பல ஆங்கில காணொளிகளை கவனித்தேன். இந்தி மொழிக்கு ஆதரவாக வாதாடும் பல அதிபுத்திசாலிகளை, இது குறிப்பாக வடக்கன்ஸ், கவனிக்க நேரிடுகிறது. இவர்கள் அடிமுட்டாள்கள் என அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நான் அவர்களை திட்டத்தான் போகிறேன்; வெறுக்கப்போவதில்லை. காரணம் சிறுவயதிலிருந்தே இப்படிப்பட்ட மனிதர்களை நிறைய பார்த்துவிட்டதால் அந்த மனநிலை எனக்கு வந்துவிட்டது.

சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், மாமா ஆதரவில் சில வருடம் அவர்கள் வீட்டிலே இருந்தேன். அங்கேதான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு அமித்ஷாவை பார்த்தேன். தற்போது எப்படி இந்தி திணிப்பு நடக்கிறதோ அதேபோல் அப்போது எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது.