நவோதயா பள்ளிகள் தேவையா?
பள்ளிகள் தேவைதான், ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற சேவைகள்/ கல்வி எப்போதும் தேவையில்லை. அங்கே இறுதி பலன் என்பது கொடுப்பவனின் நோக்கமாகத்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.
சமீபத்தில் மாரிதாஸ் காணொளி ஒன்றை கவனித்தேன். அதில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது, எனவே வேறு வழியில்லை, தமிழக அரசு நவோதயா பள்ளிகளை அனுமதித்தாக வேண்டும் என சந்தோஷமாக மேளம் அடித்திருந்தார். அதோடு விட்டால் பரவாயில்லை. இந்த திட்டத்தை தடுப்பதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை இந்த திமுக அரசு, அதாவது கலைஞரும், ஸ்டாலினும் தடுத்தார்கள், இனி அது நடக்காது என சொல்லியிருந்தார்.
திமுகவை திட்டுங்கள் அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. `நீ விளக்கு பிடிச்சாதான் திட்டுவேன்` என்றால் நான் அதற்கும் தயார். அந்த அளவுக்கு அது ஒரு மோசமான கட்சி என்பதுதான் என் கருத்து.


