இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். மோசமான ட்வீட்களை ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட, நானும் படித்து தொலைக்க, இவர்களை பொதுவெளியில் சாத்த வேண்டும் என்று ஒரு பதிவில் கருத்தும் சொல்லிவிட்டேன்.
அப்புறம் இது குறித்து கருத்து சொல்வது (கடமை!) என்ற முடிவுக்கு வர, இருதரப்பு வாதங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
இனி பிரச்சினையை பாப்போம். சின்மயியிடம் சிலர் கருத்துக்கள் கேட்க, அவர் மறுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் சொல்லிய வேறு சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்கி இருக்கிறது. இது போக வேறு சில விஷயங்களும் இருக்கிறது.
