பதிவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. காரணத்தை சொன்னால் அது புலம்பலில் போய் முடியும். எனவே அது வேண்டாம். நேரடியாகவே பதிவுக்கு போய்விடுவோம்.
லைப்ரரி
இங்கே (அகமதாபாத்) வந்து ஓராண்டு முடிந்த பிறகுதான் லைப்ரரியை தேட ஆரம்பித்தேன். நேரத்தை கொலை செய்ய வேண்டுமே, அதுதான் காரணம். மனிதர்களுடன் பழகமுடியவில்லை. அரை மணி நேரம் பேசினால் 6 கேள்விகள் கேட்கிறார்கள். அதில் 5 கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. புத்தகம்தான் நல்ல துணையாக இருக்கிறது. இணையம் கண் வலியை கொடுப்பதால், லைப்ரரிதான் சரி என அதை தேட ஆரம்பித்தேன்.
