!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, May 14, 2011

ஜனநாயக நாடுகளின் சர்வாதிகாரமும், சர்வாதிகாரிகள் விரும்பும் ஜனநாயகமும்.



தீவிரவாதப்பாதையில் செல்பவர்களால்  தங்கள் நோக்கத்தை அடையவும் முடியாது அதேசமயம் அவர்களுக்கு அழிவும் நிச்சயம் என்பதை ஒசாமாவின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ஒசாமா விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நேர்மையானவராக இருந்தும் அவருடைய ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெறவில்லையா? தேர்தல் செலவினங்கள், கூட்டணி ஆட்சி என்று பல நிர்பந்தங்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு இருகிறதே! அதேபோல் பாகிஸ்தான் அரசியலையும் நாம் கொஞ்சம் யதார்த்தமாக புரிந்து கொள்ள முயற்சிப்போம். அவர்களுக்கும் பல நிர்பந்தங்கள் இருக்கலாம்.  

தவறான பாதையில் சென்று விட்ட பிறகு, சினிமாவில் சில வில்லன்கள் திருந்துவது போல் திடீரென்று திருந்திவிட முடியாது. மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரும். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்காவின் கடந்த கால தேவைக்காகவோ இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்துவிட்ட பாகிஸ்தான், திடீரென்று அதை அறுத்துவிட முடியாது. விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே இருதரப்பையும் திருப்தி செய்யும் போக்கை பாகிஸ்தான் கடைப்பிடித்து வந்தது. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா, கடைசியில் அது வந்தேவிட்டது.

இந்த பதிவு ஒசாமா இறந்ததை பற்றி அல்ல. மேலும் பல ஒசாமாக்கள் உருவாகாமல் தடுப்பதை பற்றி.  

Monday, May 2, 2011

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.



நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி ஆறு மாதம் ஆகிவிட்டது. சிறைகள் குற்றவாளிகளை தண்டிக்காமல்/திருத்தாமல், அவர்களை வளர்த்து விட்டுகொண்டிருந்ததை பார்த்த போது இதைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்ற வெறி இருந்தது. இந்தியாவில் தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதே அபூர்வம். அப்படியே தண்டனை கிடைத்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிக்கும் விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சிறையைப்பற்றி நாம் தெரிந்து கொண்டதை எழுதுவோம் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சிறையைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது எனக்கும் போரடித்தது. அத்துடன் தேர்தலும் வந்துவிட, எனது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. எனவே அரசியல் குறித்தும் எனது பார்வைகளை பகிர்ந்துகொண்டேன். தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் எனது சிறை வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். சிறை வாழ்கையில் எழுதுவதற்கு பல அனுபவங்கள் இருக்கிறது. அதில் ஓன்று இங்கே.

Tuesday, April 19, 2011

இந்திய ஜனநாயகம்: இந்த சீர்திருத்தம் மிகமிக அவசியம்.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட எண்பதை தொட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விழிப்புணர்வால் வந்த சதவிகீதமா, அல்லது பணம் பாதாளம் வரை பாய்ந்ததன் பலனா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியும். 

காரணங்கள் எதுவாக இருந்தாலும் நாம் நல்லதையே நினைப்போம். தேர்தல் கமிஷனின் வேலை மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வகை செய்வதும், முறைகேடுகளை தடுப்பதும், பணம் சிலருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான். அந்த வகையில் தேர்தல் கமிஷன் தன் கடமையை முடிந்த வரை முறையாகச் செய்துவிட்டது.

Tuesday, April 12, 2011

தேர்தல்: முட்டாள்களை அடையாளம் காண ஒரு வழி.

அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டார்கள். இனி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம். ஆனால் இப்போதும் சிலர், `ஆமா, இவங்க ஊழல் பண்ணி பணம் சம்பாதிப்பதற்கு நாம எதுக்கு ஓட்டு போடணும்?` என்று அபத்தமான வாதம் செய்கிறார்கள். இப்படி வாதம் செய்பவர்கள் படித்தவர்கள் என்பதுதான் கொடுமை. இதிலிருந்து ஓன்று தெரிகிறது. கல்வி அறிவு என்பது வேறு. பொது அறிவு என்பது வேறு என்று. இந்தியாவில் கல்வி அறிவு வளரும் வேகத்தில் பொது அறிவு வளரவில்லை. இவர்கள் ஓட்டு போடாததால் மிக மோசமானவர்கள் அதிகாரத்துக்கு வர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை இந்த படித்த மேதாவிகளுக்கு யார் புரிய வைப்பது?

உங்கள்  மகனை ஒரு நல்ல தரமான கல்லூரியில் சேர்க்க விரும்புகிறீர்கள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நீங்கள் உங்கள் மகனை கல்லூரிக்கு அனுப்பமாட்டீர்களா என்ன? கிடைப்பதில் சிறந்ததை தேர்ந்தேடுப்பதுதானே நடைமுறை  வழக்கம். ஆனால் தேர்தலில் மட்டும் மக்கள் இது போல் சிந்திப்பதில்லை. காரணம், தன் மகனின் எதிர்காலத்தில் ஒரு வருடம் கூட பாழாகிபோகக்கூடாது என்று நினைப்பவர்கள், அப்படி ஒரு அக்கறையை தேசத்தின் மீது காட்டுவதில்லை.

Friday, April 8, 2011

அணு மின்சாரம்: நோகாமல் நுங்கு தின்ன முடியுமா?

இது ஒரு நேரம்கெட்ட பதிவு. அணு உலை விபத்திற்கு பிறகு, அதன் பாதிப்பை இன்னும் முழுதாக அலசமுடியாத நிலையில் , அணு உலைகளுக்கு ஆதரவாக யாரும் எழுத மாட்டார்கள்.  இருந்தாலும் கல்கியில் ஞாநி அவர்களின் அணுஉலைகள் பற்றிய `பிருமாண்டமான இலவசம் வருகிறது! உஷார் !!` என்ற கட்டுரையை படித்தவுடன் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே எழுதிவிட்டேன். 
   

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு அணு மின் நிலையங்கள் விபத்தில் சிக்கிய பிறகு, இப்படி ஒரு ஆபத்தான பாதையில் நாம் போகவேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைய நமது தேவைக்காக பல தலைமுறைகளை சிக்கலில் விட்டுவிட்டு செல்ல நமக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படுகிறது.

நியாயமான கேள்விதான் இது. ஆனால், ஒரு ஊதாரி தகப்பனாக நாம் நமது பரம்பரை சொத்தை காலி பண்ணிவிட்டு, பிள்ளைகளை நிதி ஆதாரம் இல்லாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்லும் உரிமை மட்டும் நமக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏனென்றால் நாம் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையை அப்படியே தொடர்ந்தால், எதிர்கால சந்ததியருக்கு எரிபொருள் இல்லாமல் மாட்டுவண்டியும், கைவிசிறியும் கூடவே பூமியை வாழ முடியாத அளவுக்கு வெப்பமாகவும் மாற்றிவிட்டுப் போகப்போகிறோம்.