மத்திய, மாநில அரசுகள், புதிய தொழிற்சாலைகளின் தேவைக்காகவும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நிலங்களை கையகப்படுத்தும் போது, "விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது' என, சில அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துவது துரதிர்ஷ்டம்.
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Saturday, October 23, 2010
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா?
தேவையா நில உச்சவரம்பு சட்டம் ?
தினமலர் - இது உங்கள் இடம்
(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது)
(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது)
நம் நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். அனேகமாக தற்போது உணவுதானிய பொருட்களின் விலையேற்றத்திற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .
அபராதத்தை அதிகரியுங்கள்
தினமலர் 15-07-2009 இதழில் (சிறையில் இருந்தபோது )வெளியான கடிதம்.
`நீதிமன்றங்களில், லட்சகணக்கில் வழக்குகள் தேங்கி நிற்பதாலும், வழக்கை நடத்த செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும், ஏழை மக்களை பொறுத்தவரையில் நீதி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க, நாம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு பல் வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: குற்றம் சாட்டப்பற்றவர் கைது செய்யபட்ட பின் 15 நாட்களுக்கு ஒரு
ஆஸ்திரேலியாவில் அடி வாங்குவதை தடுக்கலாம்...
தினமலர் 21-06-09 இதழில் வெளியான கடிதம்
(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது)
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் , இங்கே இந்தியாவில் கல்லூரிகளில் சட்டவிரோதமாக லட்சகணக்கில் நன்கொடைகள் வாங்குவதும் மத்திய அரசின் மோசமான கல்வி கொள்கையை காட்டுகிறது .
கல்வியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வரும் வேளையில் , அதற்க்கு தகுந்தாற்போல் கல்விநிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு தவறிவிட்டது .
மிக அதிகப்படியான நன்கொடைகளை தவிர்க்கவும் மற்றும் தரமான கல்வியை தேடியும், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை நாடுவதை மத்திய அரசு தடுக்கவில்லை . ஆகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையே இந்தியாவில் நேரடியாக அல்லது இந்திய நிறுவனங்களின் துணையோடு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் .
இதன் மூலம் நமக்கும் அந்நிய செலவாணி மிச்சமாகும்.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்களை நான் இணையதளம் மூலம் ஆராய்ந்திருக்கிறேன் .இன்றைய வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களின் வளர்ச்சிக்காக பாராம்பரிய தொழிலையோ அல்லது இயற்கை ஆதாரங்களையோ நம்பி இருக்கவில்லை .
மாறாக, இன்றைய சூழ்நிலைக்கு எந்த துறையில் முதலீடு செய்தால் லாபம் என கணித்து அதன்படி செயல்பட்டு வெற்றி கண்டிருக்கின்றன.
கல்வியை ஒரு லாபமளிக்கும் துறையாக கணித்து, அதன்முலம் ஆஸ்திரேலியர்கள் பெருமளவு அன்னிய செலாவணியை ஈட்டுவது, அவர்களுடைய புத்திசாலி தனத்தைக் காட்டுகிறது .
இந்தியாவும், இயற்கை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா போன்ற துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அன்னிய செலாவணியை ஈட்டவும், வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, இத்துறைகளில் கூடுதல் கவனத்தையும் முதலீடுகளையும் செய்யவேண்டும் .
நியாயமற்ற செயல் !
தினமலர் 13-03-2009 இதழில் வெளியான கடிதம்.
Subscribe to:
Posts (Atom)




