முதலில் நல்லவரை பார்த்துவிடுவோம். இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன். சமீபத்திய ஒரு மேடை பேச்சில் நீதிபதிகளையும், அவர்களது தீர்ப்புகளையும் விமர்ச்சிப்பது தவறில்லை, தாராளமாக அதை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். இவரது மடியில் கனமில்லை. எனவே இப்படி ஒரு துணிச்சலான கருத்து. சரி ஏதோ சில நல்லவர்களாவது நீதித்துறையில் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுவோம்.
ஆனால் நம் நாட்டில் நல்லவர்கள் என ஒரு வித்தியாசமான புது வகை ரகம் உருவாகியிருக்கிறது. இவர்களின் தியரி அல்லது கொள்கை என்னவென்று பார்த்தால் அது நமக்கு மயக்கத்தை தரும். இவரும் அப்படி இருப்பாரோ என ஒரு சந்தேகம்.
