முகநூலில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். சமீபத்தில்தான் கவனித்தேன். அதாவது மோடி அடிக்கடி கோவிலுக்கு போகிறாராம். அதை தொலைக்காட்சிகள் அடிக்கடி காட்டுகிறார்களாம். இதை வைத்து ஒரு மேதாவி எழுதிய கருத்தை, இந்த ஜேம்ஸ் வசந்தன் எனும் இன்னொரு மேதாவி அவருடைய முகநூலில் பகிர்ந்திருந்தார். வழக்கம்போல் ஜேம்ஸ் வசந்தனின் அடிவருடிகள், அதாவது சிறுபான்மை சிந்தனையாளர்கள், வந்து அவர்களுடைய கருத்துக்களையும் வாந்தி எடுத்திருந்தார்கள்.
அமெரிக்காவில் அதிபர் சர்ச்சுக்கு போவதை காட்டமாட்டார்களாம், இஸ்லாமிய நாடுகளில் மன்னர்கள்/ஷேக்குகள்/ மசூதிக்கு போவதை காட்டமாட்டார்களாம். அந்த அளவுக்கு அவர்கள் சமதர்ம கொள்கையை கடைபிடிப்பவர்களாம். இதுதான் அந்த பதிவின் முக்கிய கருத்து. ஆனால் இந்தியாவில் மதவாதம் எப்படி இருக்கிறது பாருங்கள் என எல்லோரும் கோரஸாக வருத்தப்பட்டிருந்தார்கள்.
