!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, March 26, 2013

இலங்கை: இங்கேயும், அங்கேயும்


தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு ஆங்கில இணையதளத்தில் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.  நமக்கு சரிவராத ஒரு மொழியில் எதற்கு  கஷ்டப்பட்டு கருத்து சொல்லணும் என்பதால் அதில் ஆர்வம் குறைந்தது. ஆனால் இலங்கை பிரச்சினை குறித்த கருத்துக்களை வட இந்திய ஊடகங்களில் படித்தபோது அப்படி இருக்க முடியவில்லை.

பல  வட இந்தியர்கள், `தமிழர்களுக்கு அங்கே மரியாதை இல்லையென்றால் விசாவை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டியதுதானே` என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

Monday, March 11, 2013

ரயில்வே: இப்படியும் அப்படியும்

கடந்த சில மாதமாக எழுத முடியவில்லை. ஒரு உறவினருக்கு உதவியாக ஆஸ்பிடல் போகும் வேலை வர, பதிவுகள் தடைபட்டது. பின்னர் வழக்கமாக அவ்வப்போது வரும் மனச்சோர்வு ஆட்கொள்ள, பதிவுகள் நின்றுவிட்டது. அதன்பிறகு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரயில்வே துறை குறித்த ஒரு விவாதத்தை கவனித்தபோதுதான்.

இதை சன் நியுஸில் கவனித்தேன். ரயில்வே துறை லாபகரமாக நடக்கிறது; (கடந்த காலங்களில்) 10,000 கோடி லாபம் பார்த்திருக்கிறது; அரசுக்கு டிவிடெண்டாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

லாபம்?

வழக்கம் போல் இது அரைகுறை புள்ளி விவரம். லாபம் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிட வேண்டும் என்று வரைமுறை இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படுபவை.

Thursday, January 10, 2013

போலீசின் `எல்லை`


எனக்கு மொபைலில் ஒரு மெசேஜ் வந்துது. வழியில் எங்கேயாவது பறவைகள் அடிபட்டு கிடந்தால், உடனே எங்களுக்கு போன் பண்ணுங்க என்று. இங்கே குஜராத்தில் இந்த மாதம் காத்தாடி திருவிழா என்பதால் பறவைகள் அடிபடும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த கவலை.

ஆனால் எனக்கு டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே அந்த பெண்ணும், அவர் நண்பரும் ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு போனார்களாம். உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டும் என்றோ அல்லது குறைந்த பட்சம் அவர்களுக்கு உடை கொடுக்க வேண்டும் என்றோ யாருக்கும் தோன்றவில்லை.

Friday, January 4, 2013

பதிவு எழுதுவதால் வந்த தலைவலி


பக்க விளைவுகள். சமீபகாலமாக நான் அதிகம் கவலைப்படுவது இதைப் பற்றித்தான். ஏதாவது ஒரு செயலில் நாம் இறங்கி அதில் தோற்றுப்போய் தலை முழுகினாலும், விட்ட குறை தொட்ட குறை என சில விஷயங்களாய் அது நம்மை தொடரும். தற்போது எனக்கு வந்திருக்கும் தலைவலிகள் அந்த வகை. 

ஷேர் மார்கெட் 

ஆரம்பகாலத்தில் ஷேர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தபோது பல உபதேசங்கள் கிடைத்தது. `ஏதாவது இடத்தை வாங்கிப் போடுங்க, பின்னால நல்ல விலை போகும்` என்பது அதில் ஓன்று.

ஆனால் அப்போது நான் ஷேர் மார்க்கெட்டில் ருசி கண்டுவிட்டேன். அந்த சமயம் square d software என்ற ஷேர் புது வெளியீடாக வந்தது. நான் 300௦௦ ஷேர் விண்ணப்பிக்க 300ம் கிடைத்து.

Friday, December 28, 2012

சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால் பணம்


கிரானைட் வழக்கில் கைது செய்யப்பட்ட பி ஆர் பழனிச்சாமி அனைத்து வழக்குகளிலும் பெயில் கிடைத்து வெளியில் வந்துவிட்டாராம். இது சமீபத்தில் படித்த செய்தி. இவர் மீது 35 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் வரக்கூடுமாம்.

பொதுவாக ஒருவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. இதை வலியுறுத்தி ஒரு பதிவும் போட்டிருக்கிறேன். ஐந்துக்கு மேல் போனால் காப்பு உறுதி என்ற பயம் ஓரளவுக்காவது குற்றவாளிகளை கட்டுபடுத்தும்.