!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, February 22, 2025

மோடிக்கு நேரம் சரியில்லை



மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.

இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.

Thursday, February 13, 2025

பெரியாரும், மணியம்மையும், இந்து மதமும்


பெரியார் குறித்த ஒரு பதிவு எழுத ஆரம்பித்த போது அவ்ருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்த பல விஷயங்களை கவனித்தேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் பெரியார் ஆதரவாளர்கள், தற்குறிகள் என பல விதமாக இருக்கிறார்கள். தற்குறிகள் என்றால், ஒருவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் தவறே செய்யவில்லை என மூடி மறைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.

நான் அப்படி அல்ல. இந்த வியாதி எல்லா சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடமும் இருக்கிறது. எனக்குத்தான் அதில் எதை நம்புவது என தெரியாமல் மண்டை காய்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல விஷயங்களை கவனித்ததில் முக்கியமாக எனக்கும் உறுத்தியது, முதிய வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததுதான். 

தற்போது நாம் பாதுகாப்பான, நாகரீகமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  நமக்கு அந்த திருமணம் அநாகரிகமாக தெரியலாம். ஆனால் நாம் பல விஷயங்களை எதார்த்தமாக கவனிப்பதில்லை. இங்கே நாம் கடந்தகால மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும்.

Sunday, February 2, 2025

சீமானை கைவிட்ட ஈழப் போராளிகள்

 

சீமானை பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, அதை வெளியிட்ட பிறகு, பல வீடியோக்களை, மன்னிக்கவும் காணொளிகளை காண நேரிடுகிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதில் எது உண்மை எது பொய்  என்று குழப்பும் வரும் அளவுக்கு புதுப்புது தகவல்கள் வருகிறது. இவற்றில் சில ஏற்கனவே வெளிவந்தவை. அவற்றை நான் தற்போதுதான் கவனித்தேன்.

கடந்த பதிவில் சீமான் - பிரபாகரன் போட்டோ எடிட் செய்யப்பட்ட ஓன்று என்று அதை எடிட் செய்தவரே சொல்லிவிட்டார், அப்படியிருக்கையில் அந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அதை உண்மை என சீமான் நிரூபிக்க போராடுகிறார் என்றால் அவர் பிரபாகரனை சந்திருக்கமாட்டார் என்று எழுதியிருந்தேன்.

Tuesday, January 28, 2025

பெரியார் எனும் மாபெரும் தலைவன்


இந்த மாதம் சீமானின் பெரியார் புராணம்தான் பரபரப்பாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்தை கவனித்து என்னுடைய பார்வையில் கருத்து சொல்லவேண்டுமென்றால், இங்கே பெரியார் தமிழ்நாட்டில் ஹீரோ நம்பர் 1 என்றால் அதே தமிழ்நாட்டில் கழிசடை நம்பர் 1 என்றால் அது சீமான்தான். இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி என்று கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். அனால் அது பல பக்கத்துக்கு போக்கும் என்பதால் முடிந்த வரை சில விஷயங்கள் இங்கே.

அம்மாவின்/மனைவியின் அருமை அவர்கள் போனபிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் பெரியாரின் அருமையை அவர் போனபின்தான் தமிழக மக்கள் அறுவடை செய்கிறார்கள்/உணர்கிறார்கள். இதில் நான் சற்று கூடுதலாகவே உணர்கிறேன். காரணம் நான் அகமதாபாத்தில் இருப்பதால். அகமதாபாத் என்றில்லை நீங்கள் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்துக்கு சென்று அங்கே சில காலம் வாழ்ந்தால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியும் மற்ற பல விஷயங்களில் தமிழகம் பெற்றிருக்கும் முன்னேற்றமும் உங்களுக்கு புரியும். அதுவும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உங்களுக்கு இருந்து பல விஷ்யங்களை ஒப்பிட்டு பார்க்கும் பகுத்தறிவும் இருந்தால்.

Thursday, January 23, 2025

ஒரு நல்லவரும் ஒரு கெட்டவனும்


முதலில் நல்லவரை பார்த்துவிடுவோம். இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன். சமீபத்திய ஒரு மேடை பேச்சில் நீதிபதிகளையும், அவர்களது தீர்ப்புகளையும் விமர்ச்சிப்பது தவறில்லை, தாராளமாக அதை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். இவரது மடியில் கனமில்லை. எனவே இப்படி ஒரு துணிச்சலான கருத்து. சரி ஏதோ சில நல்லவர்களாவது நீதித்துறையில் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுவோம்.

ஆனால் நம் நாட்டில் நல்லவர்கள் என ஒரு வித்தியாசமான புது வகை ரகம் உருவாகியிருக்கிறது. இவர்களின் தியரி அல்லது கொள்கை என்னவென்று பார்த்தால் அது நமக்கு மயக்கத்தை தரும். இவரும் அப்படி இருப்பாரோ என ஒரு சந்தேகம்.