If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Monday, May 19, 2025
துருக்கிக்கு ஏன் இந்த வேலை?
இந்த வாரம் செய்திகளில் அங்கே இங்கே என மேய்ந்ததில் கவனித்தவை இவை.
துருக்கி பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால், `பாய்காட் துருக்கி` என ஒரு நடவடிக்கை இந்திய தேசபக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்காக நம்ம ஆட்கள் செய்யும் அளப்பறைகள்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் அங்கே இருக்கும் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் ரொம்பவே கொழுப்பு உள்ளவர்கள் என இங்கே வட இந்திய மீடியாவில் வரும் கருத்தை கவனித்திருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான், சிந்து போன்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
Tuesday, May 13, 2025
இந்தியா பாகிஸ்தான் போர் - யார் ஜெயித்தது?

இந்த கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். ஏனென்றால் இங்கே முதல் பலி உண்மை. பல உண்மைகள் சில ஆண்டுகளுக்கு பின்தான் வெளிவரும். நம்முடைய வேலை செய்திகளை படித்து, கவனித்து, உணர்ந்து குத்துமதிப்பாக கணிப்பதுதான். அதுதான் இங்கே.
எனக்கு முதல் குழப்பம் ஏற்பட்டது வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் கராச்சி பங்கு சந்தை 3 சதவிகிதம் உயர்ந்ததுதான். அப்போது இரண்டு தரப்பிலும் சண்டை இருந்தது. இங்கே பாகிஸ்தான் பலவீனமாக இருந்தால் ஷேர் மார்க்கெட் ஏன் உயரப்போகிறது? இது புரியவில்லை. இந்தியாவில் இது இறங்குமுகமாக இருந்தாலும், அது எனக்கு போலியாகத்தான் தெரிந்தது.
Sunday, May 4, 2025
காஷ்மீர் மாறி வருகிறதா
சமீபகாலமாக பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இது குறித்து நிறைய கவனிக்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட செய்திகள் தெரிகிறது. அதில் நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி, காஷ்மீரும் அதன் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது மூன்று விஷயங்கள். இந்த மூன்றும் தன்னிச்சையாக அதன் போக்கில் நிகழ்ந்தவை. ஆனாலும் இந்த மூன்றும் ஒன்றுடன் ஓன்று தொடர்புடையவை. இவற்றில் ஒரு தியரி வேலை செய்யவில்லை என்றால் மற்ற இரண்டு தியரியும் எந்த பயனும் தராது.
முதல் மாற்றம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இது மோடி செய்த மிகபெரிய நல்ல செய்தி. அங்கே மக்கள் சுதந்திர மற்றும் தீவிரவாத மனநிலையில் இருந்தார்கள். வளர்ச்சி வேண்டும் என்றால் வேலை வாய்ப்பு வேண்டும். அரசும் பொதுத்துறை மூலம் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது. அது முட்டாள்தனமும் கூட. எல்லை பகுதி மற்றும் சண்டைகள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் தனியார் வருவதும் சிரமம். காஷ்மீர்களிடமும் பணம் இல்லை. இது ஒரு சிக்கலான நிலை.
Wednesday, April 23, 2025
இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை
தற்போது இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை மீண்டும் வெடித்திருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை எழுத நினைத்து நினைத்து நின்றுவிட்டது. இந்த முறை அதையும் பார்த்துவிடுவோம்.
அதாவது பெரும்பாலும் மனிதர்கள் வெளுத்ததெல்லாம் சுண்ணாம்பு என நினைக்கும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் நிதானமாக கவனித்தால் இங்கே நியாயம் இளையராஜா பக்கம் இருப்பது தெரியும்.
இங்கே வெளிப்படையாக தெரிவது இளையராஜா பக்கம் நியாயம் இல்லை என்பது. அதாவது அவர் இசையமைத்த படங்களுக்கு காப்புரிமை பெறவில்லையாம், எனவே அவருக்கு இப்படி பணம் கேட்க உரிமையில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் வாதம். ஆனால் இதைத்தாண்டி மனசாட்சி என்று ஓன்று இருக்கிறதல்லவா? சட்டம் சில விஷயங்களை வலியுறுத்தினாலும் பல விஷயங்களில் சட்டமே சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவறு செய்தவர்களை தண்டிக்காமல் விட்ட சம்பவங்களும் உண்டு. இது அந்த மாதிரியான வகை.
Thursday, April 17, 2025
தமிழ்நாட்டில் பிஜேபி ஏன் வளரமுடியவில்லை?
வரலாறுதான் காரணம். பொதுவாக நாம் படித்த வரலாறு ஒன்றாகவும், அதேசமயம் நடந்த வரலாறு மற்றும் நாம் கவனிக்காத வரலாறு வேறு விதமாக இருக்கும். இங்கே நாம் அந்த கதையைத்தான் பார்க்கப்போகிறோம்.
இங்கே பிஜேபியின் தலைவலிக்கு இரண்டே தியரிதான் காரணம். ஓன்று, வடமாநிலங்களில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு. இந்துக்கள் கொஞ்சம் அலட்சியமாக இருந்ததால் இந்தியா இஸ்லாமியர்களின் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 900 ஆண்டுகள் அடிமையாக இருந்தது.
இது எல்லோருக்கும் தெரிந்த வரலாறு. ஆனால் நடைமுறையில் இந்த உண்மை அப்படியே இல்லை. முக்கியமாக கடற்கரை பகுதிகளான மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா பிரிசிடெண்சி என இந்த பகுதிகளை மட்டும் பிரிட்டிஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்ற பகுதிகளை அவர்கள் உள்ளூர் தலைகளுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுவிட்டார்கள். அதாவது princely states என 500கும் மேற்பட்ட சிறிய, பெரிய என பல தலைகள் தனி ஆவர்த்தனம் செய்துவந்தன. மத்தியில் பிஜேபி அரசு, மாநிலத்தில் திமுக அரசு என்பதுபோல்.
Wednesday, March 19, 2025
அமைச்சர்கள் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஏன் இந்தி படிக்கிறார்கள்?
கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.
இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.
இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.
Tuesday, March 11, 2025
மோடிஜி, இதுதான் சரியான நேரம்
மும்மொழி கொள்கைக்கு பிறகு டிலிமிடேஷன் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியிருக்கிறது. இதன் முக்கியமான தலைவலி வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக பெருகியிருப்பதுதான். மேம்போக்காக பார்த்தால் வட மாநிலத்தவர்கள் முட்டாள்களாக தெரியும். ஆனால் நிஜம்?
இங்கே வெளிப்படையாக தெரியும் காரணம் வறுமை. இன்றைய சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் நாளையை பற்றி யோசிக்கமாட்டான். தென் மாநிலங்களில் கடற்கரை இருப்பதால் இந்த மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி வந்தாலே அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நம்மை தள்ளிவிட்டுவிடும். எனவே நாம் இங்கே அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம்; அவர்கள் துரதிருஷ்டசாலிகள். அவ்வளவுதான்.
Monday, March 3, 2025
WE WILL LEARN HINDI ONLY IF WE NEED !
வழக்கமாக நான் இந்த காப்பி-பேஸ்ட் வேலையை செய்வதில்லை. ஆனால் QUORA இணையதளத்தில் இதை படிக்க நேர்ந்தபோது இதை பதிய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்த காலத்தில் படிக்கும்போது கல்வி இந்த அளவுக்கு சுமையாக இல்லை. இப்போது எட்டாவது படிக்கும்போதே பத்தாவது கல்விக்கான பாடத்தையும் இப்போதே படிக்க வேண்டும் என்ற அளவுக்கு பெற்றோர்களின் மனநிலை போய்விட்டது. டியூஷன் என்பது மக்கு பிள்ளைகளுக்காக என்று இருந்த நிலைமை மாறி, பாடத்திட்டங்கள் அதிகமாகிவிட்டதால் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க இந்த டியூஷன் தேவைப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு கல்வி வந்துவிட்டது.
இது தவிர, கம்ப்யூட்டர் மற்றும் இன்ன பிற துறைகள் என கல்வி விரிவடைந்துகொண்டே போகும் நிலையில், கூடுதலாக ஒரு மொழி என்பது மாணவர்களுக்கு சிரமம்தானே?
இன்றைய பெற்றோர்கள் அவர்கள் சுமக்காத ஒரு சுமையை தன் பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். இது என்ன நியாயமோ?
Saturday, March 1, 2025
இங்கே எல்லோரும் அமித்ஷாதான்
இந்த மும்மொழி பிரச்சினை காரணமாக பல ஆங்கில காணொளிகளை கவனித்தேன். இந்தி மொழிக்கு ஆதரவாக வாதாடும் பல அதிபுத்திசாலிகளை, இது குறிப்பாக வடக்கன்ஸ், கவனிக்க நேரிடுகிறது. இவர்கள் அடிமுட்டாள்கள் என அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நான் அவர்களை திட்டத்தான் போகிறேன்; வெறுக்கப்போவதில்லை. காரணம் சிறுவயதிலிருந்தே இப்படிப்பட்ட மனிதர்களை நிறைய பார்த்துவிட்டதால் அந்த மனநிலை எனக்கு வந்துவிட்டது.
சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், மாமா ஆதரவில் சில வருடம் அவர்கள் வீட்டிலே இருந்தேன். அங்கேதான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு அமித்ஷாவை பார்த்தேன். தற்போது எப்படி இந்தி திணிப்பு நடக்கிறதோ அதேபோல் அப்போது எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது.
Saturday, February 22, 2025
மோடிக்கு நேரம் சரியில்லை
மோடிக்கு நேரம் சரியில்லை. அது நன்றாகவே தெரிகிறது. கடந்த முறை பைடன் ஆட்சியில் அமெரிக்கா சென்றவர் அப்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அந்த காட்சியை பார்த்தேன். அமெரிக்க எம்பிகளுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும் ஒரு கல்லூரி விரிவுரையாளரை போல் பேசினார். தன்னம்பிக்கை நாலாபக்கமும் தெரிந்தது. AI என்றால் அமெரிக்க இந்திய நட்புறவு மட்டுமில்லை, இன்னொரு AI யும் இப்போது முக்கியமாக பேசப்படுகிறது, அது இந்த செயற்கை நுண்ணறிவு என வார்த்தைகளால் விளையாடினார்.
இப்போது நிலைமை தலைகீழ். காரணம் புரிகிறது. அப்போது சாதுவான பைடன் இருந்தார். இங்கே மோடி தொடர்ந்து வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருந்ததால், மோடியிடம் ஒரு தன்னம்பிக்கை அல்லது இறுமாப்பு என ஏதோ ஓன்று இருந்தது. இப்போது நிலைமை தலைக்கீழ். அமெரிக்காவில் அதே அந்த இறுமாப்போடு டிரம்ப் இருக்க, இங்கே மெஜாரிட்டியை இழந்து, இது நமது இறுதி கால அரசியல் என்பதால் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் மோடி இருக்கிறார். எனவே இந்த நிதான போக்கு புரிந்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.
ஆனால் நேரம் சரியில்லை என்றால் நீங்கள் எவ்வளவுதான் நிதானமாக இருந்தாலும், சனீஸ்வரன் ஏதோ ஒரு வகையில் உங்களை கவிழ்த்துவிடுவார். அது மோடிக்கும் இனிமேல் நடக்கும்.
Thursday, February 13, 2025
பெரியாரும், மணியம்மையும், இந்து மதமும்
பெரியார் குறித்த ஒரு பதிவு எழுத ஆரம்பித்த போது அவ்ருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்த பல விஷயங்களை கவனித்தேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் பெரியார் ஆதரவாளர்கள், தற்குறிகள் என பல விதமாக இருக்கிறார்கள். தற்குறிகள் என்றால், ஒருவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் தவறே செய்யவில்லை என மூடி மறைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.
நான் அப்படி அல்ல. இந்த வியாதி எல்லா சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடமும் இருக்கிறது. எனக்குத்தான் அதில் எதை நம்புவது என தெரியாமல் மண்டை காய்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல விஷயங்களை கவனித்ததில் முக்கியமாக எனக்கும் உறுத்தியது, முதிய வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததுதான்.
தற்போது நாம் பாதுகாப்பான, நாகரீகமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு அந்த திருமணம் அநாகரிகமாக தெரியலாம். ஆனால் நாம் பல விஷயங்களை எதார்த்தமாக கவனிப்பதில்லை. இங்கே நாம் கடந்தகால மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும்.
Sunday, February 2, 2025
சீமானை கைவிட்ட ஈழப் போராளிகள்
சீமானை பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, அதை வெளியிட்ட பிறகு, பல வீடியோக்களை, மன்னிக்கவும் காணொளிகளை காண நேரிடுகிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதில் எது உண்மை எது பொய் என்று குழப்பும் வரும் அளவுக்கு புதுப்புது தகவல்கள் வருகிறது. இவற்றில் சில ஏற்கனவே வெளிவந்தவை. அவற்றை நான் தற்போதுதான் கவனித்தேன்.
கடந்த பதிவில் சீமான் - பிரபாகரன் போட்டோ எடிட் செய்யப்பட்ட ஓன்று என்று அதை எடிட் செய்தவரே சொல்லிவிட்டார், அப்படியிருக்கையில் அந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அதை உண்மை என சீமான் நிரூபிக்க போராடுகிறார் என்றால் அவர் பிரபாகரனை சந்திருக்கமாட்டார் என்று எழுதியிருந்தேன்.
Tuesday, January 28, 2025
பெரியார் எனும் மாபெரும் தலைவன்
இந்த மாதம் சீமானின் பெரியார் புராணம்தான் பரபரப்பாக இருக்கிறது. இந்த பஞ்சாயத்தை கவனித்து என்னுடைய பார்வையில் கருத்து சொல்லவேண்டுமென்றால், இங்கே பெரியார் தமிழ்நாட்டில் ஹீரோ நம்பர் 1 என்றால் அதே தமிழ்நாட்டில் கழிசடை நம்பர் 1 என்றால் அது சீமான்தான். இப்படி சுருக்கமாக சொன்னால் எப்படி என்று கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். அனால் அது பல பக்கத்துக்கு போக்கும் என்பதால் முடிந்த வரை சில விஷயங்கள் இங்கே.
அம்மாவின்/மனைவியின் அருமை அவர்கள் போனபிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் பெரியாரின் அருமையை அவர் போனபின்தான் தமிழக மக்கள் அறுவடை செய்கிறார்கள்/உணர்கிறார்கள். இதில் நான் சற்று கூடுதலாகவே உணர்கிறேன். காரணம் நான் அகமதாபாத்தில் இருப்பதால். அகமதாபாத் என்றில்லை நீங்கள் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்துக்கு சென்று அங்கே சில காலம் வாழ்ந்தால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியும் மற்ற பல விஷயங்களில் தமிழகம் பெற்றிருக்கும் முன்னேற்றமும் உங்களுக்கு புரியும். அதுவும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் உங்களுக்கு இருந்து பல விஷ்யங்களை ஒப்பிட்டு பார்க்கும் பகுத்தறிவும் இருந்தால்.
Thursday, January 23, 2025
ஒரு நல்லவரும் ஒரு கெட்டவனும்
முதலில் நல்லவரை பார்த்துவிடுவோம். இவர் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன். சமீபத்திய ஒரு மேடை பேச்சில் நீதிபதிகளையும், அவர்களது தீர்ப்புகளையும் விமர்ச்சிப்பது தவறில்லை, தாராளமாக அதை செய்யுங்கள் என சொல்லியிருக்கிறார். இவரது மடியில் கனமில்லை. எனவே இப்படி ஒரு துணிச்சலான கருத்து. சரி ஏதோ சில நல்லவர்களாவது நீதித்துறையில் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுவோம்.
ஆனால் நம் நாட்டில் நல்லவர்கள் என ஒரு வித்தியாசமான புது வகை ரகம் உருவாகியிருக்கிறது. இவர்களின் தியரி அல்லது கொள்கை என்னவென்று பார்த்தால் அது நமக்கு மயக்கத்தை தரும். இவரும் அப்படி இருப்பாரோ என ஒரு சந்தேகம்.
Tuesday, January 14, 2025
சவுக்கு சங்கரும், ஞானசேகரனும்
என்னய்யா தலைப்பு இது என்று கேள்வி கேட்காதீர்கள். இங்கே இந்த இரண்டு பேர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் அல்லது காவல்துறை அவர்களை அணுகும் விதத்தில் ஒரு முக்கியமான முரண்பாடு இருக்கிறது. அதற்காகத்தான் இந்த தலைப்பு.
முதலில் சவுக்கு சங்கர். இவர் கடந்த வருடம் ஐபிஸ் அருண் அவர்களை பற்றி, அவர் பெண் காவலர்களை தவறாக பயன்படுத்துகிறார் என ஆவேசமாக பேட்டி கொடுத்தார். அந்த வீடியோ எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் மீது வழக்கு தேவை என்பதை நானும் உணர்ந்தேன். அவர்மீது உடனடியாக வழக்கும் பதியப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் போடப்பட்ட விதம் அயோக்கியத்தனம் என்ற அளவுக்கு இருந்தது.
Saturday, January 4, 2025
யார் அந்த நீதிபதி?
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை செய்திதான் தற்போது பரபரப்பு. நானும் கவனிக்கிறேன். தொடர்ந்து நாட்டு நடப்பு செய்திகளை கவனிப்பவர்களுக்கு இது ஒரு பழகிப்போன செய்தி. இது இந்த வருடம். அடுத்த வருடம் இதே போல் ஒரு பரபரப்பு பாலியல் வன்கொடுமை வரப்போகிறது. காரணம், இங்கே பல விஷயங்களை பேசுவதற்கு/விவாதிப்பதற்கு/குரல் கொடுப்பதற்குதான் மனிதர்கள் இருக்கிறார்களே தவிர, இதை முடிவுக்கு கொண்டுவரும் தலைவர்கள்தான் இல்லை.
Subscribe to:
Posts (Atom)