காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்து விட்டது.உண்மையில் இது எனக்கும் சந்தோஷமான செய்திதான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நடந்துவிட்டது.
ஆனால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை வைத்து பலரும் தங்கள் விருப்பம் போல் அர்த்தம் கொடுத்துக் கொள்கின்றனர். ஒருவேளை நானும் அப்படி இருக்கலாம். இருந்தாலும் இது எனது அலசல்.
வெளிப்பார்வைக்கு திமுக ஏதோ மிகத்திறமையாக செயல்பட்டு காங்கிரசின் மூன்றாவது அணி திட்டத்தை முறியடித்து விட்டதாவும், காங்கிரசை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் கருத்துக்கள் பரப்படுகிறது. ஆனால் நிஜம்?
காங்கிரஸ் உண்மையிலேயே மூணாவது அணி அமைக்க முயற்சி செய்ததா?




