இந்தியா போன்ற சுதந்திரமான ஜனநாயக நாட்டில் இவையெல்லாம் நிரந்தரத் தலைவலி. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் மறைமுகமாக நிலங்களை வாங்கி ஊழல் செய்கின்றன என்பதும் உண்மை.
சில சீன காணொளிகளைக் கவனித்தேன். அங்கே எல்லாத் துறைகளிலும் பிரமாதமான வளர்ச்சி. ஆனால் அரசை எதிர்த்துப் போராட்டங்கள் என்பதே கிடையாது. தியான்மென் சதுக்கம் கொடுத்த அடி, இந்தத் தலைமுறையையும் பயமுறுத்தி வைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, அங்கே டிஃப்ளேஷன் (Deflation) சில ஆண்டுகளாக இருக்கிறதாம். அதாவது, விலைவாசி ஏறி வருவதைப் போல, சீனாவில் அது இறங்குமுகமாக இருக்கிறதாம். அது இன்னும் குறையவில்லை. அங்கே இருக்கும் முகேஷ் அம்பானி போன்றவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணித்தால் எப்படி இருக்கும்?
